சனி, 9 பிப்ரவரி, 2019

ரிஷி புங்கவர்களின் பிறப்புத் தன்மை

வேத சாஸ்திரங்களை உண்டாக்கின முனிவர்கள், ரிஷி புங்கவர்களின் பிறப்புத் தன்மை

இந்தரிஷிகளின் மூலம் (பிறப்பு) எல்லாம்இயற் கைக்கு மாறானதும், ஆபாசமும் அசிங்கமும் நிறைந்த வையாகவும் அறிவுக்குப் பொருந்தாதனவாகவும் உள்ளன. எடுத்துக்காட்டாக,

கலைக்கோட்டு ரிஷி     -      மானுக்கும்

கவுசிகர்           -      குயத்திக்கும்

ஜம்புகர்           -      நரிக்கும்

வால்மீகி          -      வேடனுக்கும்

அகஸ்தியர்        -      குடத்திற்கும்

வியாசர்          -      செம்படத்திக்கும்

வசிஷ்டர்         -      ஊர்வசிக்கும்

நாரதர்            - வண்ணாத்திக்கும்

காதனசல்லியர்          -      விதவைக்கும்

மதங்கர்           -      சக்கிலிச்சிக்கும்

மாண்டவியர் -    தவளைக்கும்

சாங்கியர் -  பறைச்சிக்கும்

காங்கேயர்        -      கழுதைக்கும்

சவுனகர்          -      நாய்க்கும்

கணாதர்          -  கோட்டானுக்கும்

கர் (சுகர்)          -  கிளிக்கும்

ஜாம்புவந்தர்       -      கரடிக்கும்

அஸ்வத்தாமன்    -      குதிரைக்கும் பிறந்தனராம்.

இந்த முனிவர்களின் பிறப்பு யோக்கியதை இது தான். காட்டுமிராண்டி காலத்து மக்கள் அறிவுகூட இதைவிட பண்பட்டதாகத்தான் இருக்கும். அதனி னும் கீழானதாகத்தான், இந்த முன்னோர்கள் - ரிஷி புங்கவர்களின் மூலம் என்றால் நம் இழிவுக்கும் மடமைக்கும் வேறு அளவுகோல் வேண்டுமா? என்று தந்தை பெரியார் கேட்டார்.
- ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உரையின் பகுதி

-  விடுதலை நாளேடு, 14.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக