செவ்வாய், 13 ஜூன், 2017

பெண்களைக் கேவலப்படுத்தும் இந்து மதம்


(மனுதர்மம் கூறும் இழிக் குப்பைகள் இங்கே... இங்கே... ஆதாரத்தோடு)
மனுதர்மம் என்ன கூறுகிறது?
இதோ.....
சுலோகம்: அத்தியாயம் 5
147) பாலியமாகவிருந்தாலும், யௌவனமாக இருந் தாலும், வார்த்திபமாகவிருந்தாலும் ஸ்திரிகள் தன்றன் வீடுகளிலும் தன் மனம் போனபடி ஒரு காரியத்தையும் செய்யக்கூடாது.
148)       பாலியத்தில் தகப்பன் ஆஞ்ஞையிலும், யௌ வனத்தில் கணவன் ஆஞ்ஞையிலும், கணவனிறந்த பின்பு பிள்ளைகள் ஆஞ்ஞையிலும் இருக்க வேண்டி யதே  யல்லது ஸ்திரிகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக்கூடாது.
154)       கணவன் துர்ராச்சாரமுள்ளவனாகவிருந்தா லும், அந்நிய ஸ்திரி லோலனாயிருந்தாலும், நற்குண மில்லா தவனாயிருந்தாலும் பதிவிரதையான  ஸ்திரியா னவள் அவனை தெய்வத்தைப் போற் பூசிக்க வேண்டியது.
162)       ஸ்திரிக்குத் தன் கணவனைவிட மற்றொரு வனால் உண்டாக்கப்பட்ட பிள்ளையும் சாஸ்திரத் தினாலொப்புக் கொள்ளப்பட்ட பிள்ளையன்று. உண்டு பண்ணுகிறவனுக்கும் உபயோகமில்லை. பதிவிரதா ஸ்திரிகளுக்கு இரண்டாவது விவாகமும் ஒரு சாஸ்த்திரத்திலுஞ் சொல்லப்படவில்லை.
163)       தாழ்ந்தவனான தன் புருஷனை நீக்கி உயர்ந்த வனான மற்றொருவனை எந்த ஸ்திரியடைகிறாளோ அவள் நிந்திக்கப்படுவாள். மற்றொருவனோடு சேர்ந்தவளென்றுஞ் சொல்லப்படுகிறாள். ஒருவராலும் கொண்டாடப்பட மாட்டாள்.
164)       ஸ்திரி விபச்சாரஞ் செய்கிறதினால் உலகத்தில் நிந்திக்கப்படுகிறதுமல்லாமல் இறந்த பின் குள்ளநரியாகவும் பிறந்து வெண்குட்டம் முதலிய கர்ம வியாதியையும் அனுபவிக்கிறாள்.
ஒன்பதாவது அத்தியாயம்
14)          மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத் தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக வேண்டி அவர்களைப் புணருகிறார்கள்.
15)          மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையா மனமும், நண்பின்மையும், இயற்கையாகவுடைய வராதலால் கணவனாற் காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக்கின்றார்கள்.
17)          படுக்கை, ஆசன அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.
18)          மாதர்களுக்கு ஜாதகர்ம முதலியவை மந்திரத்தோடு கிடையாது. மனச்சுத்தியுங் கிடையாது. பாவத்தைப் போக்குகிற மந்திரோபதேசமுமில்லை. ஆகையால் அபரிசுத் தாளாயிருக்கிறார்கள்.
19)          மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷ முள்ளவர்களென்று அநேக சுருதிகளிலுஞ் சாஸ்திரங் களிலுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன. அதற்கு திருஷ் டாந்திரமாக அந்த விபச்சாரத்துக்கு சுருதியில் சொல்லிய பிரயாச் சித்தத்தைத் கேளுங்கள்.
30)          கணவன் சொற்படி நடவாதவள் உலகத் தாரால் நிந்திக்கப்பட்டு நரியாய்ப் பிறந்து பாவப் பிணியால் வருந்துவாள்.
46)          கணவன் மனையாளைத் தள்ளிவிட்டாலும், விற்றாலும் அந்த மனையாள் தன்மை அவளை விட்டு நீங்காது. இப்படி இவர்களுக்கு பிரமன் சிருஷ்டி காலத்திலேயே ஏற்படுத்தியிருக்கிற சாசுவதமான தருமத்தை நாமறிந்திருக்கிறோம். ஆதலாலிவ்விதமான பிறன் மனையாளிடத்தில் பிறந்த பிள்ளையும் உபயோகப்படமாட்டான்.
60)          ஒருவனுக்கு நிலமில்லாமல் வித்துள்ளவனா யிருந்தால் மற்றுமொருவனையடைந்து உன்னிலத்தில் நான் பயிரிடுகிறேன். அப்பயிர் நம்மிருவருக்கும் பொதுவாயிருக்கட்டுமென்று ஏற்பாடு செய்து கொண்டு பயிரிடுகிறார்ப்போல் ஒருவன் மனை யாளிடத்தில் மனையாளில்லாத  மற்றொருவன் பிள்ளையையும் உண்டு பண்ணலாம். அந்த வேற்பாடு இல்லாவிட்டால் உடையவனைச் சாருமென்பது பிரத் திய கூலமாகவே யிருக்கிறது. ஏனெனில் பிஜத்தை விட நிலமுயர்ந்த நல்ல விஷயத்தைப் போல் மாதர் விஷயத்திலும், கணவனும் மற்றொருவனும், பயிரைக் குறித்தாற்போல் புத்திரவுற்பத்தியைக் குறிக்கும் ஏற்பாடு செய்து கொண்டால் அதில் விளைகிற தானியம்போல் பிறந்த பிள்ளையும் இருவருக்கும் சொந்தமாகவிருப் பதை உலகத்திற் கண்டிருக்கிறோம்.
59)          பிள்ளையில்லாமல் அந்தக்குலம் நசிக்கிறதாக விருந்தால் அப்போதந்த ஸ்திரி தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழுதலை முறைக்குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல் லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ளலாம்.
60)          விதவையிடத்தில் பெரியோர்களின் அனு மதிப் பெற்றுக் கொண்டு புணரப்போகிறவன் தன் தேகமெங்கும் நெய்யைப் பூசிக்கொண்டு இரவில் இருட்டான இடத்தில் அவளைப் புணர்ந்து ஒரே பிள்ளையை உண்டுபண்ண வேண்டியது. இரண்டாம் பிள்ளையை ஒரு போதும் உண்டு பண்ணக்கூடாது.
69)          ஒரு பெண்ணை ஒருவனுக்குக் கொடுக்கிறதா உண்மையாக வாக்குத்தானம் செய்த பின் அந்த வான் இறந்துபோனால் அவன் தம்பி அல்லது அண்ணன் விவாகம் செய்து மேற்சொல்லும் விதிப்படி இருக்க வேண்டியது.
70)          அவனந்தப் பெண்ணை விதிப்படி விவாகஞ் செய்து வெள்ளை வஸ்திரமுடையவளாயும், திரிகரண சுத்தியுடையவளாயு மிருக்கச் செய்து, ருதுஸ்நாள மானவுடன் ஒரு நாள் புணர்ந்து மறுபடி ருதுகாலம் வனாயிற் பார்த்து கருப்பமுண்டாகாவிடில் கருப்பமுண் டாகிறவரையில் அந்தந்த ருதுஸ்நானமானவுடன் ஒவ்வோர் நாள் புணர வேண்டியது.
77)          கணவனை மனைவி பகைத்தால் அவன் ஒரு வருஷம் வரையிலும் பார்த்து அவள் வணங்காவிடில் அவளுக்குத் தான் கொடுத்த ஆடையாபரணம் முதலியவற்றை வாங்கிக் கொண்டு  அவளோடு பேசுதலும், புணர்தலும் ஒழிக்க ஜீவனத்துக்காகக் கொடுத்தது கலாத் தக்கதன்று.
78)          கணவன் சூதாடுகிறவனாயிருந்தாலும், குடிய னாகவிருந்தாலும், நோயாளியாக இருந்தாலும், அவ னுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யா விட்டால் அவனுக்கு அலங்காரம் வஸ்த்திரம் படுக்கை இவைகளைக் கொடாமல் மூன்று மாதம் நீக்கி வைக்க வேண்டியது.
81)          மலடியான மனைவியை எட்டு வருஷத்திற்கு மேலும், சாப்பிள்ளை பெறுபவளை பத்து வருஷத் திற்கு மேலும், பெண்ணையே பெறுபவளை பதினொரு வருஷத்திற்கு மேலும், தீங்கு சொல்பவளை அப்பொழு தேயும் நீக்கி வேறு விவாகம் செய்து கொள்க. இந்த மனைவியர்களுக்கு மனமகிழ்ச்சிப் பொருள் கொடுக்க வேண்டியதில்லை.
88)          குலம், நல்லொழுக்கம் இவைகளாலுயர்ந்தவ னாயும், பெண்ணுக்குத் தக்க ரூபமுள்ளவனாயும், தன் ஜாதிக்குத் தக்க ஜாதியுள்ளவனாயுமிருக்கிறவானுக்கு தனது பெண் எட்டு வயதுக்குட்பட்டிருந்தாலும், விதிப்படி விவாகம் செய்து கொடுத்து விடலாம்.
94)          முப்பது வயதுள்ளவரன் அழகான பன்னி ரெண்டு வயதுள்ள பெண்ணையும், இருபத்திநாலு வயதுள்ள பெண்ணையும், இருபத்திநாலு வயதுள்ள வரன் எட்டு வயது பெண்ணையும் விவாகம் செய்து கொள்ளலாம். இதற்கு முன் விவாகம் செய்து கொள்ள அவசரப்பட்டால் வேதமோதல் முதலிய தர்ம காரியம் கெடும். அதனால் பின்பு துக்கப்படுவான்.
பாரதத்தில் பெண்ணடிமைக் கருத்துகள்
பெண்கள் பாப ஜென்மங்கள், அவர்களுக்கு ஒழுக் கம் கிடையாது. பாதுகாக்கும் அளவுக்குத்தான் அவர்களிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியும்.
“மத்தளம், சூத்திரர், விலங்குகள், பெண்கள் தண்டிக் கப்பட வேண்டியவர்கள்”. இராமன், சுந்தரகாண்டம்.
1. அஸ்வமேதிக பர்வம், அத்யாயம் - 99
புகழ் பெற்ற உத்தமி (பக்கம் 282)
ருதுவாதற்கு முன் பிராம்மம் முதலான விவாஹங் களுள் (ஒன்றால்) விதிப்படி விவாஹம் செய்யப்பட்ட வளுமான கன்னிகையானவள் புகழ் பெற்ற உத்தமியாவாள்.
2. குருதாரம், பரதாரத்தைப் புணருதல்
வியாசர் - தருமருக்கு
சாந்தி பர்வம் - அத்தியாயம் 83, பக்கம் 12-113
குருவின் கட்டளைப்படி குருதாரத்தைச் சேருவதால் மனிதன் குற்றமுள்ளவனாக மாட்டான்.
தமையன் பதிதனாகவும், ஸந்யாசியாகவும் போய் விட்டால் தம்பிக்கு பாரிவித்தியமென்னும் தோஷ மாகாது. தர்மநிமித்தம் ஸ்திரிகளின் வேண்டுகோளின்படி அவர்களைச் சேருதல் பரதாரத்தைச் சேர்ந்த பாவமாகாது.
3. பெண் உரிமை மறுத்தல்
ஆதிபர்வம் - அத்யாயம் 94, பக்கம் 341
சகுந்தலை
இளமையில் பிதா காப்பாற்றுகிறான். பருவகாலத்தில் கொழுநன் காப்பாற்றுகிறான். முதிர்ந்த பிராயத்தில் புத்திரன் காப்பாற்றுகிறான். ஸ்திரி ஸ்வந்திரமாய் இருக்கத்தக்கவள் அல்லள்.
4. பெண்கள் உறவினர்களிடம்
நெடுங்காலம் வசிக்கலாகாது
ஆதிபர்வம் - அத்யாயம் 96, பக்கம் 352
சகுந்தலை
பெண்கள் தம்மைச் சேர்ந்த உறவினர்களிடம் நெடுங்காலம் வஸிப்பது புகழையும் ஒழுக்கத்தையும் தர்மத்தையும் கெடுக்கும். அதில் எனக்கு இஷ்ட மில்லை (உடன்பாடில்லை).
5. துஷ்யந்தன் பெண்களை ஏசியது
ஆதிபர்வம் - அத்யாயம் 98, பக்கம் 365
உலகத்தில் பெண்களனைவரும் கொடியவர்கள்; காமத்தை முக்கியமாகக் கொண்டவர்கள். எல்லாப் பெண்களும் அயலாருக்குட்படுகிறவர்கள். எல்லாரும் கோபத்தை மேற்கொண்டவர்கள். பெண்களெல்லாரும் பொய் சொல்லுகிறவர்கள். கண்ணுவரைப்பற்றி நீ பேசத்தகாது. உன் தாயாராகிய மேனகை தயை யற்றவள் வியபிசாரி அவள் உன்னை இமயமலைச் சரிவில் நிர்மாலியத்தைப்போல் எறிந்துவிட்டாள் அல்லவா?
நிர்மாலியம் = தேவதைகள் பூஜித்து கழித்த பொருள் - குப்பை
6. பாண்டு குந்திக்குக் கூறிய (அ)தர்மம்
ஆதிபர்வம் - அத்யாயம் 128 பக்கம் 469-470)
ராஜபுத்திரியே! பதிவ்ரதையே! ஒவ்வொரு ருதுகாலங் களில் மட்டும் ஸ்திரி கணவனை மீறி நடக்கக் கூடா தென்பதே தர்மமென்றும், மற்ற காலங்கள் எல்லாவற் றிலும் பெண் தன் இஷ்டப்படி நடப்பதற் குரியவளென் றும் தர்மந்தெரிந்தவர்கள் அறிகின்றனர். ஸாது ஜனங்கள் இவ்வாறாகவே பழைய காலத்துத் வதர்ம மிருப்பதாக நிச்சயித்திருக்கின்றனர். ராஜபுத்திரியே! தர்மமோ அதர்மமோ எதைப் பாரியைக்குப் பர்த்தா சொல்வதோ அதை அவள் செய்ய வேண்டுமென்று வேதந்தெரிந்தவர்கள் நிச்சயித்திருக்கின்றனர்.
என் கட்டளையினால் தவத்திற் சிறந்த பிராம் மணனைக்கொண்டு குணங்கள் நிரம்பின புத்திரங்களை உண்டாக்கிக் கொள்வதற்கு உரியவளாகிறாய்!
ஸாது ஜனம்: பார்ப்பனர்
7. புருஷனில்லா ஸ்திரி
கணவனுக்கு முன் இறக்கும் பெண்
ஆதிபர்வம் - அத்யாயம் 172, பக்கம் 641-642
தரையிற் போடப்பட்ட மாம்ஸத்தைப் பறவைகள் எவ்வாறு விரும்புகின்றனவோ அவ்வாறே புருஷனில் லாத ஸ்திரியை எல்லா ஜனங்களும் விரும்புகின்றனர். பிராமணோத்தமரே! புருஷனில்லாமல் கெட்டவர்களால் விரும்பப்பட்டு மனம் தடுமாறும்படி செய்யப்பட்ட நான் ஸாதுஜனங்கள் ஒப்பினமார்க்கத்தில் நிற்கச் சக்தியுள்ள வளாக மாட்டேன். நாதரே! துஷ்டஜனங்கள் (கெட்ட) மிகுந்த இவ்வுலகத்தில் பெண் ஜன்மம் இழிவானது. கன்னிகையாயிருக்கும் போது தாய் தந்தையர் வசத்திலும், விவாகமானபின் (திருமணம்) பர்த்தாவின் வசத்திலும், இவர்களில்லாதபோது புத்திரன் வசத்திலும் இருக்கவேண்டும். ஸ்வதந்திரையான ஸ்திரி இகழப் பட்டவள். நெய்யில் நனைக்கப்பட்ட வஸ்திரத்துண்டு நாய்களால் எப்படியிழுக்கப் படுகிறதோ அப்படி பெண்களுக்கு நாதனில்லாமலிருப்பது (கணவன்) துஷ்டர்களுக்கு (கெட்டவர்) வாயில் திறந்துவிட்டது போல் அல்லவா?
ஓ! பிராமணரே! கணவனுக்குமுன் பரலோகமடைவது புத்ரனுள்ள ஸ்திரிகளுக்குப் பெரும்பாக்கிய மென்று தர்சாஸ்திரஜ்ஞர்கள் அறிகின்றனர். இவ்வுலகத்தில் புத்திரர்கள் வசத்தில் திரிவது விரும்பத்தக்கதன்று. எவள் மஞ்சள், மை, புஷ்பம்பூ முதலிய ஸ்மங்கலி லக்ஷ ணங்களோடு கூடியவளாயிருந்து பர்த்தாவின் பாதங் களில் மனம் வைத்து அவன் கொடுத்த தர்ப்பண ஜலத் தைப் பானஞ்செய்பவளாகப் பர்த்தா முன்னிலையில் மரணமடைகிறாளோ அவள் பார்வதிலோகத்தை அடைகிறாள். பார்வதிக்குத் தோழியாயிருந்து அந்தப் பர்வதராஜ கன்னிகையுடன் கூட மகிழ்ந்திருக்கிறாள்.
கீதை என்ன சொல்லுகிறது?
பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் (Born out of the womb of sin) “மாம் ஹி பார்த்த வ்யாபாச்ரித்ய யேஸ்பி ஸ்யு: பாப-யோனய: ஸத்ரியோ வைச்யாஸ்-ததா சூத்ராஸ்-தே பி யாந்தி பராங்கதிம்”
(அத். 9 - சுலோகம் 32)
இந்துமதத்தில் பெண்கள் நிலை
* ஒரு கணவன் தன் மனைவியைத் தனக்குத் தொண்டு செய்யவும், பிள்ளைகளைப் பெறவும் கடவுளால் கொடுக்கப்பட்டவள் என்று அதர்வன வேதத்தில் உள்ள ஒரு பாட்டிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
* மனிதனுக்கு இன்பத்தை அளிக்கவே-காம வேட் கையைத் தணிக்கவே பெண்கள் பிறந்திருக்கிறார்கள் என்று உபநிஷதர்கள் நினைத்து வந்திருக்கிறார்கள்.
* பெண்ணாய்ப் பிறப்பதைவிட கெட்ட பிறப்பு வேறு எதுவுமில்லை. எல்லாக் கேடுகளுக்கும் வேர் பெண்களே.
- பாரதம், அனுசான்ய பருவம்.
பெண்ணைவிடப் பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகிற நெருப்பு போன்றவள்; பெண் மாய்கை (வஞ்சக) குணமுள்ளவள், க்ஷவரக்கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவைகள் எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின் தன்மையில் இருக்கின்றன.
ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர் களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்கமாட்டாள்.
- பாகவத ஸ்கந்தம் 4-14-42.
இப்பொழுது சொல்லுங்கள் - பெண்களைக் கேவலப்படுத்தும், இழிவுப்படுத்தும் இந்த இந்து மத சாஸ்திரங்களை எரிக்கவேண்டுமா - வேண்டாமா?
- தொகுப்பு : மின்சாரம்
-விடுதலை ஞா.ம.,11.2.17