சனி, 23 மே, 2020

பெண்களை இழிவாக பேசிய சங்கராச்சாரி

ஆதி சங்கரரின் புகழ் மிக்கதாக மிகைப்படுத்தப்பட்ட “பஜ கோவிந்தம்” பாடலின் மூன்றாவது சுலோகம் இது!

“நாரிஸ்தனபர நாபிதேசம் த்ருஷ்ட்வா மா கா மோஹாவேசம்
 எதன்மான்சவசாதிவிகாரம் மனசி விசிந்தய வாரம் வாரம்”

வெறியூட்டும் இள வனிதையர் தோற்றம்,
வெறுந் தோல்மூடிய சதைகளின் மாற்றம்,
வெறுப்பூட்டும் இந்த உண்மையை உணர்வாய்.
மறவாதிருக்கப் பலமுறைநினைப்பாய்.

“Seeing the seductive female form, do not fall prey to frenzied delusion.That (female form) is (but) a modification of flesh and fat.Think well thus in your mind again and again.”

இதன் பொருள் பெண்கள் மோசமானவர்கள் அவர்களை நம்பக்கூடாது என்பதுதான்.இப்படி
பெண்களைப் பற்றி மோசமாக எழுதியவரைத்தான் இந்து வைதீகப் பெண்மணிகள் அவதார புருஷராக பூசித்து வருகிறார்கள்.

பௌத்தம் கூறிய சூன்யவாதத்தை மயாவாதம் எனக் காப்பியடித்து எழுதப்பட்டதுதான் சங்கரரின் அத்வைதம்.
- dinakaran chellish, முகநூல் பதிவுகள், 23.5.20

திங்கள், 18 மே, 2020

உஞ்ச விருத்தி’க்கும் பிச்சை எடுப்பதற்கும் என்ன வேறுபாடு

ஆசிரியர் விடையளிக்கிறார்: ‘உஞ்ச விருத்தி’க்கும் பிச்சை எடுப்பதற்கும் என்ன வேறுபாடு
May 16, 2020 • Viduthalai • மற்றவை

கேள்வி 1: ‘உஞ்ச விருத்திக்கும்‘ பிச்சை எடுப்ப தற்கும் என்ன வேறுபாடு?

- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்.

பதில் : உஞ்சி விருத்திக்கும் பிச்சை எடுப்பதற்கும் உள்ள வேறுபாடு பற்றிய விரிவான விளக்க விடை இதோ: அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதிய ‘ஹிந்து மதம் எங்கே போகிறது?‘ என்ற நூலில் (57ஆம் பக்கத்தில்)

“.... சங்கரர், சந்நியாசிகள் எப்படி வாழ வேண்டும் என கடும் நிபந்தனைகளை தனக்கும் விதித்துக் கொண்டு, தன்னைப் பின்பற்றும் அதாவது சந்நி யாசத்தைப் பின்பற்றும் சீடர்களுக்கும் அதை உபதேசித்தார்.

சந்நியாசியானவன் தனக்கென எதுவும் வைத்தி ருக்கக் கூடாது. தனக்கு உணவு தேவையென்றால்கூட பொருட்களை வாங்கி அவன் சமைக்கக் கூடாது. நமக்கென்று உலகில் எதுவும் இல்லை என்பதோடு - மற்றவர்களிடம் பிச்சை வாங்கி உண்பதுதான் சந்யாசி பண்பாடு.

சந்யாசி அக்னியைக் கூட தேவைக்காக நெருங்ச்கக் கூடாது. ஒவ்வொரு வீடாய் போய் பிச்சையெடுக்க வேண்டும். அதில் கிடைப்பவற்றை சாப்பிட்டுக் கொள்ள வேண்டும் என்ற சங்கரர் ‘சந்யாச ஸ்மிருதி’ வகுத்த விதியைக் கடுமையாகப் பின்பற்றினார்.

கடிகாரச் சுற்றுப்படி: 
உ.வெ.சாமிநாதையர், ஆதிசங்கரர், அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், மதுரைத் தமிழ்ப் பேரகராதி

‘சந்யாச ஸ்மிருதி’யா அது என்ன சொல்கிறது?

ஆசையைத் துறந்த சந்யாசிகள் எப்படி, எப்படி வாழ வேண்டும், வாழக் கூடாது என்பவற்றை வகுத்ததுதான் ‘சந்யாச ஸ்மிருதி’

“பததீ அஸோவ் ஸ்வயம்

பிக்‌ஷ ஹீ யஸ்ய ஏதது

த்வயம் பவேது”

சந்நியாசியானவன் பணத்தைக் கையால் தொட்டால்கூட அது மிகப் பெரிய பாவம்.

- சந்யாச ஸ்மிருதி.

‘உஞ்ச விருத்தி’ என்பதற்கு மதுரைத் தமிழ்ப் பேரகராதி (உ.வே.சுவாமிநாதய்யர் தொகுத்து 1937இல் வெளியானது. இ.மு.கோபாலகிருஷ்ண கோன் வெளியீடு) சொல்லும் பொருள் என்ன?

‘உரலருகிலும் வயலிலும் ஒவ்வொரு தானியமாய் பொறுக்குதல்’ என்று பொருள் கூறுகிறார்.

எவர் வீடு வீடாகச் சென்று உணவு கேட்கிறாரோ,

அவர் சந்நியாச ஸ்மிருதிப்படி - பிச்சை யெடுக்கிறார் என்பதே சரியானது.

எவர் உரல் அருகிலும் வயலிலும் தானியம், அதுவும் ஒவ்வொரு தானியமாக பொறுக்குபவரோ, அவரே - உஞ்சி விருத்தியார்.

பொதுவாக சந்நியாசிகள் மட்டுமல்ல, பிராமணர்கள் என்பவர் உண்மையில் பிராமண - வர்ணாசிரமப்படி ஒழுக வேண்டுமானால் அவர்கள் மநுதர்மப்படி பிச்சை யெடுத்தே வாழவேண்டும். இதை மனுதர்மம் மட்டுமல்ல, காஞ்சி சந்திரசேகரந்திர சரஸ்வதி என்று அழைக்கப்படும் ‘மூத்த பெரியவாள்’ ‘மகா பெரியவாள்’ தெய்வத்தின் குரலில் தனது உரையிலும் கூறியுள்ளார்!

ஏன் கும்பகோணத்தில் ஒரு தெருவுக்கே ‘பிச்சை பிராமணர் தெரு’ என்றே பெயர் இன்னும் இருக்கிறதே!

எனவே சந்நியாசிகளுக்கும் பிச்சைதான் உரியதர்மம் - உஞ்ச விருத்தி அல்ல; பிற்கால நடைமுறையில் பார்ப்பனர்கள் பெறுவதற்கு ‘பிச்சை’ என்ற பெயரை மாற்றி உஞ்ச விருத்தியாக்கி விட்டார்களே என்பது நமக்குத் தெரியாத ஒன்றா?