திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 மார்ச், 2021

ஒழுக்கக் கேடான திருமண மந்திரங்கள்

இந்து மதத்தில் ஒழுக்கக்கேட்டிற்கு இரு எடுத்துக் காட்டுகளைக் குற்றக் கூண்டில் நிறுத்தினார் திராவிடர் கழகத் தலைவர். அதற்குச் சாட்சியமாக மறைந்த காஞ்சி சங்கராச்சாரியாரின் ஆலோசகரும், ஒரு நூற்றாண்டை எட்டிப் பிடித்தவருமான அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரை சாட்சிக்கு அழைத்தார்.

இந்து மதம் எங்கே போகிறது?' என்ற அவரின் நூலிலிருந்தே அதையும் எடுத்துக்காட்டினார் (பக்கம் 151-153).

திருமணத்தில் வாத்யார்கள் ஓதும் முரண்பாடான மந்த்ரங்களுக்கு மேலும் உதாரணம் சொல்கிறேன் என போன அத்யாயத்தில் சொல்லியிருந்தேனல்லவா!

அத்தகைய ஒரு மந்த்ரத்தைப் பாருங்கள்.

தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வ

யஸ்ஸாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ

யான ஊரு உஷதி விஸ்ரயாதை

யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்''

இது வேதத்தில் சொல்லப்பட்ட மந்த்ரம். இதை கல் யாண மேடையிலே பெண்ணையும், மாப்பிள்ளையையும் உட்கார்த்தி வைத்து சத்தமாக சொல்கிறார் வாத்யார். இந்த மந்த்ரத்தின் அர்த்தம் புரிந்தால், அந்த வாத்யாரை நீங்கள் வாத்சாயணர் என்றுதான் அழைப்பீர்கள்.

அப்படி என்ன சொல்கிறது இந்த மந்த்ரம்? நான் அவனை கட்டிப் பிடிப்பேன். அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை சரியாகப் பொருந்தச் செய்யுமாறு... தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்....

இந்த மந்த்ரத்தின் அர்த்தத்தை இதைவிட நாகரீகமாக சொல்ல முடியாது. விளக்கமாக நான் சொல்லியிருப்பேன் என்றால்... என் மீதும் என் வயதின் மீதும் உங்களுக்கு இருக்கும் மரியாதை போய்விடும். அப்படிப்பட்ட மந்த்ரம் அது.

என் இஷ்டமித்ரர் ஒருவரது மகளின் கல்யாணம் சமீபத்தில் நடந்தது. அந்த பெண் மகாபுத்திசாலி. சமஸ்கிருதம் பயின்றவள் அவள் மணமேடையிலே உட்கார்ந்திருக்கும் போது

வாத்யார் இந்த மந்த்ரத்தை உரக்கச் சொல்ல....

ஸ்வாமீ....  நிறுத்துங்கோ என்றாள் அவள். வாத்யார் வாயடைத்து விட்டார்.

இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமோ?..... பொண்ணும் மாப்ளையும் துணியில்லாம செய்யுற காரியத்தை.....  நீங்க பல பேர் முன்னாடி சொல்றேளே....

வாத்யார் அதன்பிறகு அந்த மந்த்ரத்தை சொல்ல வில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால், வாத்யார்கள் சடங்குகள் என்ற பெயரில் என்ன அர்த்தம் என்றே தெரியாமல்... பல மந்த்ரங்களை உச்சரித்து வருகிறார்கள் என்பதை சுட்டிக் காட்டத்தான்.

இதுபோல் இன்னொரு மந்த்ரம்

விஷ்ணுர் யோனி கர்ப்பயது தொஷ்டா ரூபானி பீமிசது

ஆரிஞ்சது ப்ரஜாபதி

தாதா கர்ப்பந்தாது.... இதன் அர்த்தம்... இன்னும் ஆபாசம்....!

விஷ்ணுர் யோனி கர்ப்பயது...' எனத் தொடங்கும் இந்த மந்த்ரத்தின் அர்த்தம்தான் என்ன?

பெண்ணானவளின் அந்தரங்க பாகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. யோனி, மத்யமம், உபஸ்தம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கிறது.

அதாவது, விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய தேவதைகள் இம்மூன்று பாகங்களிலும் உட்கார்ந்திருக் கிறார்கள். இவர்கள்தான்... ஆணும், பெண்ணும் தேக ஸம்பந்தம் - உடலுறவு கொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்கிறார்கள். அதாவது.... நாம் தேக ஸம்பந்தம் கொள்வதை கூட விஷ்ணு உள்ளிட்ட தேவதைகள் அருகில் இருந்து, இன்னும் சொல்லப்போனால் அந்த இடத்திலேயே இருந்து கவனிக்கிறார்கள்.''

இவ்வாறு ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதியுள்ளார்.
- தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் உரையின் ஒரு பகுதி
- விடுதலை நாளேடு, 23. 3 .2019

புதன், 23 டிசம்பர், 2020

திருமண வைபங்களில் ஆபாச வேத மந்திரங்கள் ஓதப்படுகின்றன.


வைதீக திருமண வைபங்களில் வேத மந்திரங்கள் ஓதப்படுகின்றன. இதில் மிக மிக கொச்சையான ஆபாசமான மந்திரங்களும் அந்தச் சடங்குகளின் போது ஓதப் படுவது வைதீகத்தை பின்பற்றும் நபர்களுக்கே தெரிவதில்லை.

கன்னிகை ஸ்நானம்,நுகத்தடி வைத்தல்,கூரை உடுத்துதல்,காப்பு,தாரை வார்த்தல்,மாங்கல்ய தாரணம்,பாணிக்ரஹணம்,ஸப்தபதி,ப்ரதாந ஹோமம்,அம்மி மிதித்தல்,லாஜ ஹோமம்,கும்பம்,அருந்ததி பார்த்தல்,கிருஹப் பிரவேசம்(மறுவீடு) இப்படி பல சடங்குகளைக் கொண்டதுதான் வைதீக முறையில் புரோகிதர் அல்லது ஆத்து வாத்தியாரைக் கொண்டு நடைபெறும் திருமணங்கள்.

இப்படியான திருமண சடங்குகளின் போது ரிக் வேதம் பத்தாம் மண்டலம் 85 ஆவது அநுவாகத்தில் உள்ள மந்திரங்கள் ஒதப்படுகின்றன.இந்த மந்திரங்களுக்கான விளக்கங்களை அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் இந்து மதம் எங்கே போகிறது எனும் நூலில் “ஆபாச திருமண மந்திரங்கள்” எனும் தலைப்பில் கட்டுரைகளாக விரிவாக எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையில் உள்ள சில பகுதிகளை கீழே தருகிறேன்;

`விஷ்ணுர் யோனி கர்ப்பயது...’ எனத் தொடங்கும் இந்த மந்த்ரத்தின் அர்த்தம்தான் என்ன?

பெண்ணானவளின் அந்தரங்க பாகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. யோனி, மத்யமம், உபஸ்தம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கிறது.(பெண்கள் சரியாக மதிக்காத போது இப்படிப்பட்ட தேவதைகள் வீட்டை விட்டு வெளியேறிவிடுவர் எனும் மநு தர்ம சாஸ்திர நூலின் ஸ்லோகம் ஒன்றைப் பிடித்துக் கொண்டு மநுவாதிகள் தொடர்ந்து தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் விவாதிக்கின்றனர், வைதீக நூல்களைப் படிப்போருக்கு விளங்கும் தேவர் தேவதைகளின் லட்சணம் என்னவென்று)

அதாவது, விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய தேவதைகள் இம்மூன்று பாகங்களிலும் உட்கார்ந்திருக்கிறார்கள்.

இவர்கள்தான்... ஆணும், பெண்ணும் தேக ஸம்பந்தம் உடலுறவுகொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்கிறார்கள்.

அதாவது... நாம் தேக ஸம்பந்தம் கொள்வதை கூட விஷ்ணு உள்ளிட்ட தேவதைகள் அருகில் இருந்து, இன்னும் சொல்லப்போனால் அந்த இடத்திலேயே இருந்து கவனிக்கிறார்கள்.

இவ்வாறு கவனிக்கும் தேவதைகள் விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய சக்திகள் அவளுக்கு கர்ப்பத்தை உண்டாக்க அருள்புரிய வேண்டும்... என்கிறது இந்த மந்த்ரம்.

நாம் பெண் என்றால் தெய்வம் என்கிறோம். ஆனால், பெண்ணின் ஓர் உறுப்பிலேயே மூன்று தெய்வங்கள் எல்லை பிரித்து உட்கார்ந்து கொண்டிருக்கின்றன என்கிறது இந்த மந்த்ரம்.

இதை நீங்கள் பெண்மையின் உயர்வாகவே எடுத்துக் கொள்ளலாம். `அந்தரங்கம்’ எல்லாம்  ‘அந்தரங்கன் அறிவான்’ என கண்ணதாசன் சொல்லி வைத்ததற்கு முதல் முதன் முன்னோடியாக விளங்கியிருக்கிறது என்றும் வைத்துக் கொள்ளலாம்.இங்கே முக்கியமானதொன்று... வேத திருமணங்கள் பெரும்பாலும் கர்ப்பாதானம் என்றே அழைக்கப்பட்டிருக்கின்றன.

விவாஹம் என்றால் தூக்கிக் கொண்டு ஓடுதல் என்றும், பாணிக்ரஹணம் என்றால் கைப்பிடித்தல்என்றும் பார்த்திருக்கிறோம். வையெல்லாம் எதற்காக? கர்ப்பாதானம் செய்து... குழந்தைகள் பெற்று மகிழ்ந்து வாழத்தானே. அதனால்தான் திருமணத்தை கர்ப்பாதானம் என்றே குறிப்பிட்டது வேதம்.

இதற்காகவே கணவனுக்கும், மனைவிக்கும் மணமேடையில் நிகழும் உரையாடலாக வேதம் இப்படி பதிவு செய்திருக்கிறது.

ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:

பொருள் : ஸோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்.

விளக்கம்: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத் தான் இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு விட்ட பின்பு தான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் என்பது விளக்கமாகும்.

இந்தப் பொருளைத் தரும் மேற்கண்ட மந்திரத்தைத் தான் புரோகிதப் பார்ப்பான் கலியாணத்தை நடத்தி வைக்கும் பொழுது சொல்கிறான்.

மந்திரம்: உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ நம ஸேடா மஸேத்வா அந்யா மிச்ச ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ!

பொருள்: விசுவாசு என்னும் கந்தர்வனே இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.

மந்திரம்: உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வா வஸீந் நமஸ கீர்ப்பிரீடடே அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி

பொருள்: இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்குக் கணவன் இருக்கிறான் அல்லவா? விசுவாவசுவான உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்பதை நீ அறிவாயாக.

விளக்கம்: கலியாணம் நடந்து நான்கு நாள்கள் தம்பதிகள் ஒரே படுக்கையில் படுக்க வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் அவர்கள் உடலுறவு கொள்ளக் கூடாது. நான்கு நாள் கழிந்த பிறகு மேற்கண்ட மந்திரங்களைச் சொல்ல வேண்டும். அதாவது கலியாணமான அந்த மணப் பெண்ணானவள் கந்தர்வன் என்னும் கடவுளோடு ஒரே படுக்கையில் படுத்திருக்கிறாளாம். அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்ட இந்த மணமகன் தன் மனைவியுடன் படுத்து சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கந்தர்வன் என்னும் கடவுளிடத்தில் தன் மனைவியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமாய்க் கெஞ்சுகிறான் என்பதாகும்.

ஆதாரம்: விவாஹ மந்த்ராத்த போதினி.
ஆக்கியோர்: கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் பி.ஓ.எல்.,(பக்கங்கள்:முறையே: 22-59)

இந்த வைதீக சடங்குகளை வைதீகர்கள் அல்லாத அடிமைகளும்,பெருமைக்காக தங்களது இல்லத் திருமணங்களிலும் அதே சடங்குகளைப் பின்பற்றி வருவது கொடுமையிலும் கொடுமை ஆகும்.

வைதீக சனாதனம் என்பதே பொய்யும் பித்தலாட்டமும் ஏமாற்றும் வன்மமும் ஆபாசமும் நிறைந்தது என்பதை இனிமேலாவது உணருங்கள் நண்பர்களே. வைதீக சனாதனம் என்பதில் துளியும் சமத்துவமோ மனித நேயமோ இல்லை என்பது உணருங்கள்.வைதீ அன்பர்களுக்கே இதை உணராமல் இருக்கிறார்கள் என்பதே வேதனையிலும் வேதனை.அறிவியல் வளர்ந்துள்ள இந்த காலத்தில்,வைதீக சனாதன தர்மம் என்பது அர்த்தமற்ற மனித நேயமற்ற, மனத குலத்திற்கு எதிராக சடங்கு குப்பைகளால் கட்டப்பட்டவை என்பதை அனைவரும் உணர்தல் வேண்டும். இந்த விழிப்புணர்வு ஒன்றே நமக்கு சமூக பண்பாட்டு கலாச்சார அரசியல் விடுதலைக்கு வித்திடும்.

ஆதாரங்களால்,தரவுகளால் நம்மை ஆதிக்கம் செலுத்தும் ஆதிக்கவாதிகள் திருந்தியதாய் வரலாறே இல்லை.வைதீகத்திலிருந்து நம்மை நாமே திருத்திக் கொள்வது தான் ஒரே வழி. வைதீக சடங்கு சம்பிரதாயங்களிலிருந்து முதலில் நாம் வெளிவருவோம், நம் குடும்பத்தினரையும் மீட்டெடுப்போம், 
இந்தக் ஆபாசமான சடங்குகள்தான் எங்களது பண்பாடு என மற்றவர்களிடம் சொல்வதை முதலில் நிறுத்துவோம்.அடுத்த நடவடிக்கையாக வைதீகர்களைக் கொண்டு நடத்தப்படும் சடங்குகளை நமது குடும்ப அளவில் தடை செய்வோம். 

குறிப்பு: விவாஹ மந்த்ரார்த்த போதினி நூல் பற்றி அறிந்த நாளிலிருந்து அதை online மூலம் order பண்ண முயற்சித்தேன். Out of stock என்பதால் order பண்ண முடியவில்லை. 
இந்த நூலினை வாசிக்காது அக்னிஹோத்ரம் அவர்கள் எழுதிய திருமண சடங்கு பற்றி பதிவு எழுத வேண்டாம் என்றிருந்தேன்.
அந்தக் குறையினை நண்பர் இலங்கநாதன் குகநாதன் அவர்கள் இன்று தீர்த்து வைத்து விட்டார்.அவரது பக்கத்தில் இந்த நூலினை பதிவிறக்கம் செய்வதற்கான google drive link யை பதிவு செய்திருந்தார்.அந்த link னை தந்துள்ளேன், பதிவிறக்கம் செய்ய விரும்புகிறவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிண்ணூட்டத்தில் சர்சைக்குரிய மந்திர பக்கம் ஒன்றை இணைத்துள்ளேன்.

https://drive.google.com/file/d/1zA3m7-r3YzI0VvJA3QYInqpbcr5QPkde/view
- ஆறாம் அறிவு, தினகரன் செல்லையா முகநூல் பதிவு,1.11.20

புதன், 12 ஆகஸ்ட், 2020

கல்யாண மந்திரம் - மயிலாடன் விளக்கம்

#ஒற்றைப்பத்தி - கல்யாண மந்திரம்

கல்யாண நிகழ்ச்சியில் பார்ப்பனப் புரோகிதர்கள் கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லுகிறார்கள்.

“ஸோம ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித

உத்தர த்ருதீயோ அக்நிஷ்டபதி

துரியஸ்தே மனுஷ்ய ஜா”

‘‘ஸோமன் முதலில் இந்த மணமகளை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் மனித ஜாதியில் பிறந்தவன்.''

(ஆதாரம்: விவாஹ மந்த் ரார்த்த போதினி தொகுத்தவர்: வித்யா விசாரத் ந்யாயரத்ந, நியாயபூஷ்ண கீழாத்தூர் ஸ்ரீனிவாஸாச்சாரியார் - வெளியீடு லிப்கோ பப்ளிஷர்ஸ் (பி)லிட்).

ஆதாரத்தோடு இதை நாம் எடுத்துச் சொன்னால், அடேயப்பா, இந்தப் பார்ப் பனர்களுக்கு மூக்கு வெடித்து மண்டை யில் சொருகுகிறது. தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஒரு திருமணத்தில் இதை எடுத்துச் சொன்னார் என்பதற்காக இன்றுவரை எகிறிக் குதித்துத் தாண்டவ மாடுகின்றனர்.

‘‘வினோதரச மஞ்சரி'' எனும் வீரா சாமி செட்டியார் எனும் பெரும்புலவரால் எழுதப்பட்ட நூலில் ‘‘மகாபண்டிதனை சிறுபிள்ளை வென்றது'' என்ற ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது.

கோலாகலம் என்னும் பெயருடைய வடமொழிப் பண்டிதனைப் பாண்டிய மன்னன் பிருதியாக மரித்து வந்தான், கோலாகலம் சகல சாத்திரங்களையும் கற்ற நிபுணன். தனக்கு நிகராகக் கற்றவர் யாருமில்லை என்னும் செருக்குக் கொண் டவன்.  ‘கற்றது கைம்மண்ணளவு கல் லா தது உலகளவு' என்னும், முது மொழியை அறியாதவன். ‘‘பெருக்கத்து வேண்டும் பணிவு'' என்பது அவனிடத்தில் சிறிதும் இல்லை ‘வல்லவர்க்கு வல்லவர் வையத் தில் உண்டு' - என்பது பழ மொழியன்றோ? பண்டிதர்களை வாதுக்கழைப்பான் அவர் களை வாதில் வென்று அவமானப்படுத் துவான். ‘மேருமலைக்கும் வந்தன்று தாழ்வு' என்றாற்போல் அவன் செருக்கு அழிவதற்கும் ஒரு காலம் வந்தது.

யமுனாசாரியார் அல்லது ஆள வந்தார் என்னும் பெயருடைய, வைணவ மதத்தைச் சார்ந்த இளம்பிள்ளை கோலா கலனோடு வாதிட்டு அவன் செருக்கை அழித்தொழித்தார் என இக்கட்டுரையில் குறிப்பிடப்படுகிறது.

மூன்று வினாக்கள் கோலாகலனைக் கேட்டதாகவும் அவற்றிற்கு அவன் மறுப் புக் கூற முடியாது விழித்தான் எனவும் கூறப்படுகிறது.

மூன்று வினாக்களுக்கும் உங்களால் மறுப்புக் கூற முடியுமா எனக் கோலாகலன் வினவியதாகவும், அதுவும் தம்மால் முடி யும் என ஆளவந்தார் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

மூன்றாவது வினாவிற்கு ஆளவந் தார் கூறும் மறுப்பு கொடுமையிலும் கொடுமை யானது. பாண்டியனின் மனைவி பதிவிரதை என முதலில் கூறி விட்டுப் பின்னர் அவள் பதிவிரதை அல்லள் என மறுப்புக் கூறு கிறார். அம் மறுப்பாவது,

‘‘கரு உற்பத்தியால் சந்திரனுக்கும், விளையாட்டால் கந்தருவனுக்கும், தீபன விர்த்தியால் அக்கினிக்கும் முன்பு கவா தந்திரியப்பட்டுப் பின்பு மணம் செய்து கொள்பவனுக்கு உரியவளாகின்ற கார ணத்தால், நான்கு பதிகளை உடையவள் ஆவாள்.

எந்தப் பெண்ணும் திருமணம் நடக் கும் போது நாலாந்தரமாக ஒருவனுக்கு வாழ்க்கைத் துணை (மனைவி) ஆகிறாள் - என மேற்சொன்ன மந்திரம் கூறுகிறது, இதைவிட என்ன அக்கிரமம் வேண்டும்.

இக்காலத்தில் தமிழர்கள் இல்லத்தில் புரோகிதனைக் கொண்டு திருமணம் செய் யும்போது மேற்சொன்ன மந்திரத்தையே வடமொழியில் கூறுகிறான். தமிழில் இம் மந்திரத்தைச் சொல்வானானால் அவனை நாம் வாளா விடுவோமா? புரோகிதனை வைத்துத் திருமணம் செய்வது எவ்வளவு கேவலமானது என்பதைத் தமிழர்கள் உணர்வார்களாக.

இந்தப் பொருந்தா மந்திரத்தைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் நச் சினார்கினியரும் உடன்பட்டு எழுதுகிறார். அவ்வுரையாவது:

கரணத்தின் அமைந்து முடிந்த காலை'

(கற்பியல் 5)

என்னும் அடிக்கு, ‘‘ஆதிக் காரணமும் அய்யர் யாத்த காரணமும் என்னும் இரு வகைச் சடங்கானும் ஓர் குறைபாடின்றாய், மூன்று இரவின் முயக்கம் இன்றி, ஆன் றோர்க்கு (மதி கந்தருவர் அங்கி) அமைந்த வகையால் பள்ளி செய்து ஒழுகி நான்காம் பகல் எல்லை முடிந்த காலத்து'' - எனப் பொருந்தா உரை எழுதி மேலும் விளக்கம் கூறுகிறார்.

அஃதாவது,

‘‘அது. முதல்நாள் தண்கதிர்ச் செல் வற்கும், இடைநாள் கந்தருவருக்கும், பின் னாள் அங்கியங் கடவுளுக்கும் அளித்து நான்காம் நாள், அங்கியங் கடவுள் எனக்கு நின்னையளிப்ப, யான் நுகர வேண்டிற்று. அங்ஙனம் வேதம் கூறுதலால் எனத் தலைவிக்கு விளக்கம் கூறுதல்" என வேத நெறியை எடுத்துக் கூறுகிறார்.

இக்கருத்துகள் தமிழர்களுக்குத் தேவையா? அய்ந்து நூல்களுக்கு அரிய உரை எழுதிய நச்சினார்க்கினியருக்கு இப்படிப்பட்ட ஆபாசக் கருத்துகளைத் தமிழ் இலக்கணத்தில் நுழைக்க எப்படி எண்ணம் வந்தது?''

இதைச் சொல்லுவது திராவிடர் கழ கத்தார் அல்லர்.  நாம் மேற்குறிப்பிட்ட பெரும் புலவர்  திருமண மந்திரம்பற்றி சொன்னார். தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சொன்னார் என்பதற்காக வானரம்போல் தாவிக் குதிப்பவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்களாம்?

திருப்பி அடிக்க வேண்டுமே தவிர - ஒதுங்கக் கூடாது. சமாதானம் செய்தால் எதிரி ஜெயித்து விடுவான் என்பது தந்தை பெரியார்தம் வாக்கு!

- #மயிலாடன்
-விடுதலை, 9.8.20

சனி, 15 பிப்ரவரி, 2020

செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

ஆரிய விவாகம் பற்றி அண்ணல் அம்பேத்கர் என்ன சொல்லுகிறார்?



(டாக்டர் பி.ஆர். அம் பேத்கர் எழுதிய ‘காங்கிரசும் காந்தியும் தீண்டத்தகாதவர் களுக்குச் செய்ததென்ன?’ என்ற நூலின் பக்கம். 205-206).

The Aryans took pride if his wife was in the keeping of a Deva and was impregnated by him. The mention is in the Mahabharata and in the Harivamsha of sons born to Arya women from Indra, Yama, Nasatya, Agni, Vayu and other Devas is so frequent that one is astounded to note the scale on which such illicit intercourse between the Devas and the Arya women was going on.
In course of time the relations between the Devas and the Aryans became stabilized and appears to have taken the form of feudalism. The Devas exacted two boons from the Aryans.
The first boon was the Yajna which were periodic feasts given by the Aryans to the Devas in return for the protection of the Devas in their fight against the Rakshasas.
The second boon claimed by the Devas against the Aryans was the prior right to enjoy Aryan woman. This was systematized at a very early date. There is a mention of it in the Rig- Veda in X. 85.40. According to it - the first right over an Arya female was that of Soma, second of Gandharva, third of  Agni and lastly of the Aryan. Every Aryan woman was hypothecated to some Deva who had a right to enjoy her first on becoming puber. 
(Dr. Babasaheb Ambedkar: Writings and Speeches
- Vol. IV, p. 302)

இதன் தமிழாக்கம் வருமாறு:

“ஆரியர்கள், தங்கள் மனைவியரைத் தேவர்கள் வைத்துக் கொள்வதையும், தேவர்களால் கர்ப்பமாக்கப் படுவதையும் தங்களுக்குக் கிடைத்த கவுரவமாகக் கருதினார்கள். இந்திரன், யமன், நசத்யா(Nasatya) அக்னி, வாயு முதலிய தேவர்கள் மூலம் ஆரியப் பெண்கள் பிள்ளைகளைப் பெற்றனர் என்ற குறிப்பை மகாபாரதத்திலும் ஹரிவம்சத்திலும் காணலாம்.

தேவர்களுக்கும் ஆரியப் பெண்களுக்குமிடையே முறைகேடான உடலுறவு அடிக்கடி நிகழ்ந்தது. நாளடைவில் தேவர்களுக்கும், ஆரியர்களுக்கும் இடையே உறவு வலுப்பட்டது. அது நிலப்பிரபுத்துவமாக வடிவம் பெற்றது. தேவர்கள் ஆரியர்களிடமிருந்து இரண்டு வரங்களைப் பெற்றார்கள்.

ராட்சசர்களுக்கு எதிராகத் தேவர்கள் போர்செய்து, ஆரியர்களைப் பாதுகாத்ததற்காக, ஆரியர்கள் தேவர் களுக்கு அவ்வப்போது யக்ஞம் நடத்தி விருந்து படைக்க வேண்டும் என்பது முதல் வரம்.

ஆரியப் பெண்களை அனுபவிக்கும் முதல் உரிமை தங்களுக்கு வேண்டும் என்று தேவர்கள் ஆரியர்களைக் கேட்டார்கள். இது இரண்டாவது வரம். மிகப் பழங்காலத்திலேயே இது நடைமுறைக்கு வந்துவிட்டது. ரிக்வேதத்தில் (X-85-40) இதுபற்றிய குறிப்பு காணப்படுகிறது.

அதன்படி ஓர் ஆரியப் பெண்ணை அனுபவிக்கும் முதல் உரிமை சோமனுக்கு; இரண்டாவது உரிமை கந்தர் வனுக்கு; மூன்றாவது அக்கினிக்கு; கடைசி உரிமை ஆரி யனுக்கு. ஒவ்வொரு ஆரியப் பெண்ணும் பூப்படைந்தவுடன் யாராவது ஒரு தேவனிடம் அவன் அனுபவிப்பதற்காக ஒப்படைக்கப்படுவாள்”.

(நூல்: டாக்டர் அம்பேத்கர் எழுத்துக்களும் பச்சுக்களும்- தொகுதி - 4 பக்கம் 302)

மேற்கண்டவாறு அம்பேத்கர் அவர்கள் குறித்துள்ள மைக்கு ஏற்ப, ஆரியப் பெண்களுக்கு வழமையாக இருந்ததை மந்திரங்களாக்கி, இதரர்களுக்கு குறிப்பாக, “சூத்திரர்களுக்கும்“ திருமண காலத்தில் புரோகிதர் கூறுகிறார்.

“சோம ப்ரதமோ

விவிதே கந்தர்வோ

விவித உத்தர:

த்ருத்யோ அக்நிஷ்டேபதி

துரியஸ்தே மனுஷ்யஜா:”

ஆரியப் பண்பாடும் ஒழுக்கமும் இவ்வளவு மோசமாக இருப்பதைத் தமிழர்களோ தன்மானமுள்ள எவருமோ ஏற்க முடியுமா? அதை ஒழிப்பதற்கே சுயமரியாதைத் திருமணத்தைத் தந்தை பெரியார் அவர்கள் தோற்றுவித்தார்!

(கி.வீரமணி அவர்கள் எழுதிய “சுயமரியாதைத் திருமணம் - தத்துவமும், வரலாறும் “- எனும் நூலிலிருந்து)

-  விடுதலை நாளேடு, 6.2.19

புதன், 20 ஜூன், 2018

ஸ்மிருதி ஆசிரியர்கள்

பெண்ணை ருது காலத்திற்கு முன்பு தக்க வரனுக்குக் கல்யாணம் செய்து கொடாத தந்தையும், மனைவியை ருது காலத்தில் புணராத கணவனும், கணவன் இறந்த பின்பு தாயைக் காப்பாற்றாத பிள்ளையும் நிந்திக்கப்படுவர்.


மனு - அத்தியாயம் 9

குலம், நல்லொழுக்கம் இவைகளால் உயர்ந்தவனாயும், பெண்ணுக்குத் தக்க ரூபம் உடையவனாயும் இருக்கிற வனுக்குத் தனது பெண் 8 வயதுக்கு உட்பட்டு இருந்தாலும் விதிப்படி விவாகம் செய்து கொடுத்து விடலாம்


மனு - அத்தியாயம் 9

ஒரு புருஷன் 18 வயதில் கிரமப்படி 7 வயதுள்ள பெண்ணை விவாகம் செய்து கொள்ள வேண்டும்


- தேவலர்

30 வயதுள்ள புருஷன் 10வயதுள்ள ஸ்தீரியை விவாகம் செய்ய வேண்டும்                                   - பிரகஸ்பதி


25 வயதுள்ள துவிஜன் (இரு பிறப்பாளன்) 8 வயதுள்ள கன்னிகையை விவாகம் செய்ய வேண்டும். 30 வயதுக்குட் பட்டவன் 9 வயது ரோகிணியை விவாகம் செய்ய வேண்டும். 10 வயதுக்குப் பிறகு அவள் காந்தாரி ஆகின்றாள். தீர்க்காயுசை வேண்டுகின்றவன் அப்பேர்ப்பட்ட பெண்ணை அவள் பிரவிடை ஆவதற்கு (பூப்பு எய்துவதற்கு) முன்னாள் விவாகம் செய்யக்கடவன்


- ஆஸ்வலாயனர்

8 வயதுப் பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் சுவர்க்க லோகத்தையும், 9வயது பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் வைகுண்டத்தையும், 10 வயது பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் பிரம்ம லோகத்தையும் அடைகின்றான். அதற்கு மேற்பட்டுப் பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் ரௌரவாதி நரகத்தை அடைகின்றான்.


- பராசரர்

மற்றும் ஒரு தர்ம சாஸ்திரம் தன் மகளுக்கு முதல் மாத விலக்கு ஏற்படுவதற்கு முன் மணம் முடித்து வைக்காத தந்தை கருச்சிதைவு செய்த பாவத்தை அடைகின்றான் என்று கூறுகின்றது.


நாற்பத்தெட்டியாண்டு பிரம்மச்சரியங்காத்தாற்குப் பன்னீராட்டை பிராயத்தாளை அணிகலன் அணிவித்துக் கொடுப்பது. கொடாவிடின் ஓரிரு துக்காட்சி ஒருவனைச் சாராது கழிந்த விடத்து ஒரு பார்ப்பனக் கொலையோடு ஒக்கும் என்பது; அதனை அறநிலை என்பது என்று களவியல் உரைகாரர் கூறுகின்றார்.


இராமகிருஷ்ண பரமஹம்சர்


இராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவி சாரதா மணியம்மையார் ஆவார். அந்த அம்மையாருக்கு 5 வயது இருக்கும்போதே, கி.பி.1858இல் இராமகிருஷ்ணருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றார்.


காந்தியார்  - கஸ்தூரிபாய் மணம்


அதிகம் போவானேன்! காந்தியாருக்கும் கஸ்தூரி பாய்க்கும் இவர்களுக்கு 7 வயதாக இருக்கும்போதே திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்துப் 13ஆம் வயதில் மணம் நடந்தேறி இருக்கிறது.


காந்தியார் அவர்களே பிற்காலத்தில் தமது சரித்திரத்தை எழுதும் போது அதில் 13ஆவது வயதில் எனக்குத் திருமணம் ஆயிற்று என்பதை எழுதும்போதே எனது உள்ளம் மிகவும் துன்பப்படுகின்றது. இன்று நான் என் கண் முன்னால் பன்னிரண்டு, பதின்மூன்று வயதுக் குழந்தைகளைப் பார்க்கின்றேன். என் திருமணத்தைப் பற்றிய ஞாபகம் வரும் போது என்மீதே எனக்கு இரக்கம் தோன்றுகின்றது. என்னைப் போன்ற கெட்ட நிலைக்கு ஆளாகாமல் அவர்கள் இதுவரை இருக்கின்றார்களே என்பதற்காக அவர் விருப்பம் உண்டா கின்றது. 13 வயதில் நடந்த திருமணத்தைச் சரி என்று ஸ்தாபிக்க நீதி பொருந்திய எந்தவிதத் தர்க்கமும் என் மண்டையில் நுழைய முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.


பால்மணம் மாறாத பச்சிளங் குழந்தைகளுக்கும் திருமணம்


இக்குழந்தை மணமானது பிற்காலத்தில் எல்லா வகுப்பாரிடமும் பரவி எவ்வளவு மோசமான நிலைக்கு வந்து விட்டதென்றால் பால் மணம் மாறாத பச்சிளங் குழந்தைகளுக்கும் கூடத் திருமணம் செய்து வைக்கும் நிலைக்குக் கொண்டுபோய் விட்டு விட்டது.


1921ஆம் ஆண்டில் நமது நாட்டு ஜனத் தொகைக் கணக் கெடுப்பின் படி, கீழ்க்காணும் புள்ளி விவரங்கள்  தெரியவரு கின்றன. ஒரு வயதுக்குக் குறைந்த வயது முதல்  5 வயது வரை உள்ள பெண்கள் 20,369 பேர்களுக்கும், 5 முதல் 10 வயது வரையில் உள்ள பெண்கள் 1,23,472 பேர்களுக்கும், 10 வயது முதல் 15 வயது வரையில் உள்ள பெண்கள் 11,76.063 பேர் களுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.


(வரலாற்றில் குழந்தை - 14.8.71, திருமணம் புலவர் கோ.இமயவரம்பன்-  உண்மை - 14.8.1971 )

ஆஜ்மீர் - மெர்வாராத் தொகுதியில் இருந்து டில்லிச் சட்டசபைக்கு தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான ராய் சாகிப், ஹரி பிலாஸ் சாரதா (Rai Sahib, Hari bilas sarada) என்னும் அறிஞர் 1-2-1927இல் இந்துக் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் திருமண வயதுச் சீர்திருத்த மசோதா என்பதாக ஒரு திட்டம் இந்தியச் சட்டச்சபையின் ஆலோசனைக்குத் கொண்டு வந்து பிரேரேபித்தார்.


வைதீகப் பார்ப்பனர்களும் மத வெறியர்களும் கடுமை யாக எதிர்க்கலானார்கள். 1928ஆம் ஆண்டு ஜூன் மாதம், சம்மத வயதுக்கமிட்டி (The Age Consent Committee) சிம்லாவில் கூடியது. பச்சை வருணாசிரமவாதிகளான எம்.கே.ஆச்சாரியார், திரு.டி.வி. கிருஷ்ணசாமி அய்யங்கார் போன்ற பார்ப்பனர்கள் எல்லாம் சிம்லாவில் இருந்த அரசாங்கத்தின்   உள்நாட்டு மெம்பரைச் (Home Member) சந்தித்துக் குழந்தை மணச்சட்டம் கொண்டு வருவதைத் தடைசெய்ய வேண்டும் என்று முறையிட்டுக் கொண்டனர்.


சங்கராச்சாரியின் தந்தி


அப்போது இருந்த சங்கராச்சாரியர் 12 வயதுக்குப் பிறகு பெண்களுக்குத் திருமணம் செய்தால் மதமே கெட்டுப் போகும் என்று வைசிராய்க்குத் தந்தி கொடுக்கச் செய்தார்


-  விடுதலை ஞாயிறு மலர், 5.5.18