வியாழன், 24 செப்டம்பர், 2020

புத்த மார்க்கத்தை மிரட்டும் அக்னி புராணம்

ஒற்றைப்பத்தி-அண்டப் புளுகு!
September 13, 2020 • Viduthalai • மற்றவை

THE AGNI PURANA says that Vishnu incarnated himself as Gautama Buddha, the son of Suddhodana, and preached Buddhism to Asuras who thus rejected the Vedas and were sent to hell... Jayadeva.... states in the GITA GOVINDA that Vishnu incarnated himself as Buddha to show compassion to animals and to put an end to the performance of bloody sacrifices... - Swira Jaiswal while reviewing the book 'Encountering Sivaism - The Deity, the Miliew, the Entourage' in THE HINDU - Sunday Magazine: 6.9.1998.
இதன் தமிழாக்கம் வருமாறு:
சுத்தோதனரின் மகன் கவுதம புத்தராக மகாவிஷ்ணு அவதரித்து, அசுரர்களுக்குப் பவுத்தத்தை உபதேசித்தார்; அதனால் அவர்கள் வேதங்களைப் புறக்கணித்து, நரகத்துக்கு அனுப்பப் பெற்றனர் என அக்னி புராணம் சொல்கிறது. விலங்குகளுக்கு இரங்க வேண்டுமெனக் காட்டவும், உயிர்ப் பலிகளை நிறுத்தவும் விஷ்ணு புத்தாவதாரம் எடுத்ததாக, ஜெயதேவர் தமது கீத கோவிந்தா' எனும் (சமஸ்கிருத) நூலில் கூறுகிறார்.... 06.09.1998 ஆம் நாளிட்ட இந்து' ஞாயிறு மலரில், சிவனியத்துடன் சந்திப்பு - தெய்வம், சூழல், ஊழியர்கள்' எனப் பொருள்படும் Encountering Swaism - The Deity, the Milien, the Entourage  எனும் நூலுக்கு - சுவீர ஜெய்ஸ்வால் எழுதிய திறனுரையிலிருந்து.''

புத்தரையே எத்தகைய மிரட்டல் வாதத்துக்குப் பயன்படுத்துகிறார்கள் பார்த்தீர்களா? அவர்களின் இத்தகு பித்தாலாட்டத்துக்குப் பெயர்தான் ஆன்மிகம்.


எதிர்த்து அழிக்க முடியாததை அழிப்பதற்கு ஆரியம் - பார்ப்பனியம் - இப்படி ஊடுருவல், மோசடி செய்தல், கற்பனைப்படுத்துதல் என்னும் பித்தலாட்டங்களில் ஈடுபடும் என்பதற்கு அவாளின் அக்னிப் புராணமே சாட்சி!


புத்தரின் பஞ்சசீலம் முக்கியமாக பிறன் மனைவியை விரும்பாதே என்பது. இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக கிருஷ்ண அவதாரக் கதை ஆரியப் பார்ப்பனர்களால் இட்டுக் கட்டிப் பரப்பப்பட்டது என்று என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா' கூறுவதை எண்ணிப் பாருங்கள் - பார்ப்பனர்களின் பாஷாணம்'' எத்தகையது என்பது விளங்கும்! 


- மயிலாடன்