யாகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 மார்ச், 2021

மனுதர்ம சாஸ்திரமும் யாகமும்

வியாழன், 25 பிப்ரவரி, 2021

குடியரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள் - 30 ஆடுகள்

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

யாகத்தை எதிர்க்கும் நாம் அரக்கர்களாம் சூத்திரர்களாம்!

08.05.1948  - குடிஅரசிலிருந்து....

நம்மவர் தென்னாட்டில் பெரும் பகுதியாகவும், வடநாட்டில் ஆரியர் பெரும் பகுதியாகவும் இருப்பது வட நாட்டிலிருந்த திராவிடர்கள் ஆரிய எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் தென்னாட்டை நோக்கி வந்து இருக்கவேண்டும் என்பதைத்தான் காட்டுகிறது. ஆரியர்களின் முக்கிய சடங்காகிய யாகத்தை எவன் பழித்தானோ, கெடுத்தானோ அவனே ஆரியர்களால் அரக்கனென்றும், இராட்சத னென்றும் கூறப்பட்டான். ஆகவே, யாகத்தில் உயிர்ப்பலி கூடாது, அத்தியாவசியமான பொருள்கள் நெருப்பில் போட்டு எரிக்கப்படக் கூடாது என்று கூறும் நம்மைத்தான், அரக்கர் என்கின்றனர் இந்த அன்னக்காவடிப் பார்ப்பனர். இன்றும் நாம் யாகத்தைத் தடுக்கிறோம். பழிக்கிறோம். ஜீவஹிம்சை கூடாது என்று கெஞ்சிக் கூத்தாடிச் சர்க்காருக்கு விண்ணப்பித்துக் கொண்டு யாகங் களின் மீது தடையுத்தரவு வாங்கி வருகிறோம்.

யாகம் என்றால் என்ன? என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். ஆடு, மாடு தின்ன ஆசைப்படும் சில பிராமணப் பைசாசங்கள் ஒன்று கூடிக்கொண்டு, அவற்றின் இரத்தம் வெளிப்பட்டால் ருசி கெட்டுவிடும் என்பதற்காக, அவற்றை வெட்டிக் கறி செய்யாமல், அவை களைக் கட்டிப் போட்டு, அவற்றின் விதைகளைக் கிடுக்கிக் கொண்டு கசக்கிக் கசக்கிச் சாக வைப்பார்கள். ஒரு ஆடோ, மாடோ இவ்விதம் சாக வைக்கப்பட பல மணிநேரங்கூட ஆகலாம். ஆனாலும், அகோர மாமிச பிண்டங்களான இந்த யாகப் பிசாசுகளுக்கு அதுபற்றிக் கவலை யேது? இவ்வாறு உயிர்வதை செய்யப்பட்ட மிருகத்தை யாக குண்டத்தி லிட்டு, அதில் நெய்யூற்றி வேக வைத்துத் தின்பதுதான் மனுதர்ம சாஸ்திரப்படி செய்யப்படும் யாகம். இப்படிப்பட்ட கோரவதை கூடாது என்று தடுத்தவர்கள்தான் ஆரியரால் அரக்கராக சித்தரிக்கப் பட்டனர்.

சூத்திரனுக்கு யாகம் செய்யும் உரிமை கிடையாது. யாகத்தை வெறுப்பவன் சூத்திரன். ஆகவே, யாகத்தை வெறுக்கும் திராவிடராகிய நாம் ஆரிய சாஸ்திரப்படி சூத்திரர்தான். ஆரியன் ஏது? சூத்திரன் ஏது? என்று நம்மைக் கேட்கிறார்கள் சில அப்பாவி மக்கள். சட்டம் கூறுமா சூத்திரன் இல்லையென்று? சூத்திரன், பிராமணன் இல்லை யென்றால், கோயிலில் மணியடிக்கும் தொழில் ஒரே ஜாதிக்காரன் வசமே இருக்கக் காரணமென்ன? கோயில் அர்ச்சகர்கள் யார்? அவர்கள் ஏன் சமஸ்கிருதம் ஓதுகிறார்கள்? சமஸ்கிருதம்தான் தேவ பாஷை, மற்றவை மிலேச்ச பாஷை, நீச்ச பாஷை என்று ஆரிய சாஸ்திரம் கூறியிருப்பதை நீ அறிவாயா? திடுதிடுவென்று நாலு ஜாதியாரும் கோயிலுக்குள் போவோம், சற்றிருங்கள் என்று கூறி, பிராமணத் தோழன் உங்களைத் தாண்டிக் கொண்டு மூலஸ் தானத்திற்குள் போய்விடுகிறானா இல்லையா பாருங்களேன்? இதைப் பார்த்த பிறகும் எந்தத் தோழனாவது பிராமணன் சூத்திரன் இல்லை என்று கூறுவானாயின் அவன் அறிவு மலையேறி விட்டது என்றுதானே கூறவேண்டும். ஏன் இந்த உயர்வு தாழ்வுக் கொடுமையை இன்னும் மூடி வைக்கப் பார்க்கிறீர்கள்? உள்ளதை மூடி வைத்தால் அது புரை ஓட ஆரம்பித்துவிடும் என்பதை நீங்கள் அறியீரோ!

-  விடுதலை நாளேடு, 19.4.19

புதன், 3 ஏப்ரல், 2019

யாகம் செய்வதற்காகத் திருடலாமாம்!



‘பெல்’ ஆறுமுகம்


‘தினமலர்’ போன்ற பார்ப்பனர்கள் எங்கே மனுதர்மம் இருக்கிறது? என்று கேள்வி கேட்டு நாம்தான் ஏதோ இல்லாத மனுதர்மத்தைப் பற்றி பிழைப்பில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதுபோல் எழுதி வருகிறது. அப்படி எழுதிய தினமலர், ஒரு சில நாட்களிலேயே நாகசாமி என்கிற பார்ப்பன பித்தலாட்டப் பேர்வழி எழுதிய 'மனுதர்மத்தின் சாரம்தான் திருக்குறள்' என்ற நூலுக்கு ஆய்வுரை எழுதுகிறது. இரட்டை வேடம் போடுவது அவர்களுக்குக் கைவந்த கலை.

துக்ளக்கில் திருவாளர் சோ அவர்கள் மனுதர்மத்தின் பெருமைகளை விலாவாரியாக எழுதி இருந்தார். அதனை அவருக்குப் பிறகு ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ள திருவாளர் குருமூர்த்தி அவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். 20.2.2019 துக்ளக்கில் தர்மத்தின் சாரம் என்ற தலைப்பில் 'மனுதர்மம் கூறும் சட்டங்கள்' என்ற கட்டுரை வெளி வந்துள்ளது.

மனுதர்மம் மாதிரி ஒரு எக்ஸலண்ட் டாக்குமென்ட் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் இப்படி ஒருவர் எழுதி இருக்கிறாரே என்று எல்லோரும் பெருமைப்பட வேண்டும் என்று எழுதி விட்டு பல்வேறு கப்சாக்களை சோ அவர்கள் அள்ளி வீசுகிறார்.

அந்த கப்சாக்களில் ஒன்று "தன்னுடைய நடவடிக்கையினால் ஒரு சூத்திரன் பிராமணன் ஆகலாம். பிராமணன் சூத்திரன் ஆகலாம். இதெல்லாம் அவனது நடத்தையைப் பொறுத்தது என்று எழுதிவிட்டு அதற்கு ஆதாரமாக ஒரு ஸ்லோகத்தைச் சொல்லி இருக்கிறார் சோ.மனுதர்மம் பத்தாவது அத்தியாயம் 65ஆவது சுலோகம் இவ்வாறு சொல்வதாக அதில் எழுதுகிறார். சுலோகம் என்பதைக்கூட ச்லோகம் என்கிறார். ஆனால் உண்மையில் அந்த சுலோகம் பிறப்பின் அடிப் படையைத்தான் பிராமணன் ஆவதற்குக் கூறுகிறதே தவிர சோ கூறுவதுபோல் குணத்தை எங்கேயும் கூறவில்லை. 1919ஆம் ஆண்டு இராமானுஜாச்சாரியார் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்ட அசல் மனுதர்ம சாஸ்திரம், சோ கூறும் அதே பத்தாவது அத்தியாயம் ஸ்லோகம் 64 என்ன கூறுகிறது தெரியுமா?

"பிராமணன் விவாகஞ் செய்துகொண்ட சூத்திர ஸ்திரீயிடத்தில் பிறந்த பெண் பிராமணனையே விவாகஞ்செய்து கொண்டு அவளுக்கும் பெண்ணாகவே பிறந்து அவளுக்கும் பெண்கள் பிறந்து அவர்களும் இவ்விதமாகவே ஏழு தலைமுறையில் பிராம ணனையே விவாகஞ்செய்து கொண்டு வந்தால் ஏழாவது தலைமுறையில் பிறந்த வர்கள் பிராமண சாதியாகிறார்கள்'' என்றுதான் அந்த ஸ்லோகம் சொல்கிறது.

இதில் பிறப்புத்தான் வருணத்தைத் தீர்மானிக்கிறதே அன்றி எங்கே குணம் வருகிறது? பிராமணன்தான் கணவன். ஆனாலும் அந்த பிராமணனுக்கு சூத்திரப் பெண் மூலமாகப் பிறக்கும் பிள்ளை பிராமணனாக ஆக முடியாது. ஏழு தலைமுறைக்கும் பெண்ணாகவே பிறந்து அந்த ஏழு பெண்களும் பிராமணனையே திருமணம் செய்து ஏழாவது தலைமுறையில் பிறப் பவன்தான் பிராமணன் ஆவான் என்றால் அது நடக்கிற காரியமா? ஏழு தலைமுறையில் இடையிலே மூன்றாவது தலைமுறையோ நான்காவது தலை முறையோ பெண் பிறக் காமல் ஆண் பிள்ளை பிறந்து விட்டால் அவன் பிராமணன் ஆக முடியாது என்பதுதானே இதன் பொருள்? ஏழு தலை முறை என்றால் அதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும்? ஒரு தலைமுறைக்கு பதினைந்து ஆண்டுகள் என்று வைத்துக் கொண்டாலே 100 ஆண்டுகளுக்கும் மேல் ஆகுமே! நூறு ஆண்டுகளுக்குமேல் இதனை யார் கணக்கில் வைத்துக் கொள்வது. எத்தனாவது தலைமுறை என்று சான்றளிப்பது யார் ?இது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்?

ஆக பிறப்பின் அடிப்படையில் யாருமே பிராமணன் ஆக முடியாது என்பதுதான் இதன் உண்மைப் பொருளே அன்றி குணம் என்பதற்கு இதில் இடம் கிடையாது. இந்த 64ஆவது சுலோகத்தை சோ அவர்கள் சொல்லாமல் 65ஆவது சுலோகத்தை எடுத்துச் சொல்கிறார். இது அதைவிடப் பெரிய பித்தலாட்டம். அந்த 65ஆவது சுலோகம் என்ன கூறுகிறது என்றால் சூத்திரப் பெண்ணை பிராமணன் மணந்தால் அவன் ஏழு தலைமுறைக்குப் பின் பிராமண ஜாதியாகிறான் என்று கூறும் அந்த சுலோகம் ஒரு சூத்திரப் பெண்ணை சத்திரியன் இதேபோல் விவாகஞ் செய்தால் அய்ந்தாவது தலைமுறையில் அவன் சத்திரியன் ஆகிறான் என்றும் வைசியன் அதேபோல சூத்திரப் பெண்ணை மணந்தால் மூன்றாவது தலைமுறையில் வைசியன் ஆகிறான் என்றும் தான் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலும் ஒரு குலத்துக்கு ஒரு நீதிதான் சொல்லப்பட்டிருக் கிறதே தவிர குணத்தின் அடிப்படையில் ஒருவன் பிராமணனாகவோ சத்திரியன் ஆகவோ வைசியன் ஆகவோ ஆக முடியாது என்பதுதான் மனுதர்மத்தின் சாரம். இதனை இன்றும்கூட நியாயப்படுத்தி ஒரு கூட்டம் நம்மை ஏய்த்துக் கொண்டிருக்கிறது.

அத்துடன் அதே கட்டுரையில் சோ மேலும் எழுதுகிறார், அதாவது மனுதர்மம் பிராமணனுக்கு கடுமையான தண்டனை விதிக்கிறது. சூத்திரன் குற்றம் செய்தால் அவனுக்கு எட்டு மடங்கு தண்டனையும் வைசியனுக்கு பதினாறு மடங்கும், சத்திரி யனுக்கு முப்பத்திரண்டு மடங்கும், பிராமண னுக்கு 64 மடங்கு அல்லது 128 மடங்கு தண்டனை விதிக்கிறது. அதனால் பிராமண னுக்குத்தான் கடுமையான தண்டணையை மனுதர்மம் விதிக்கிறது. அதனால் மனு பிராமணர்களுக்கு சலுகை காட்டுகிறது என்பது தவறான வாதம் என்று சோ வியாக்கியானம் செய்கிறார். அதற்கு ஆதார மாக எட்டாம் அத்தியாயம் 337, 338 ஆவது சுலோகத்தைக் காட்டுகிறார். அதிலேயும் சோ வார்த்தை ஜாலம் செய்திருக்கிறார். அந்த ஸ்லோகம் என்பது வெறுமனே குற்றம் என்பதற்கான தண்டனை அல்ல. என்ன குற்றம் என்பது அதில் தெளிவாகச் சொல்லப்பட்டி ருக்கிறது. என்ன குற்றம் என்றால் திருட்டுக் குற்றம். அந்தத் திருட்டுக் குற்றத்திற்குத்தான் வர்ணத்திற்குத் தகுந்தாற்போலத் தண்டனை என்றும் அதிலே பார்ப்பானுக்குத்தான் அதிகபட்சத் தண்டனை என்றும் அதனால் பார்ப்பனர்கள் ரொம்பப் பாவம் என்பது போலவும் மனு தர்மம் பார்ப்பனர் களுக்கு சலுகை தருவதை விட தண்டனைதான் விதித்திருக்கிறது என்று புலம்புகிறார்.

ஆனால் அதே மனுதர்மம் பார்ப்பனர்கள் திருடுவதை ஒரு குற்றமாகவே கூறவில்லை என்பதுதான் உண்மை . அதே எட்டாவது அத்தியாயம் 417ஆவது சுலோகம் என்ன சொல்கிறது தெரியுமா?

பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன ஏழுவிதமான தொழிலாளியான சூத்திரர் இடத்தினின்று பொருளை வலிமையினாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறது.

ஒருவன் பொருளை வலிமையினால் எடுத்துக் கொள்ளலாம் என்றால் அதற்கு என்ன பொருள்? திருட்டுத்தானே! ஆனால் சூத்திர னுடைய பொருளை வலிமையினால் எடுத்துக் கொள்ள மனுதர்மம் பார்ப்பானுக்கு உரிமை அளித்திருக்கிறது. இதுதான் மனு பார்ப்பன ருக்கு விதிக்கும் தண்டனையா?

அது மட்டுமல்ல, திருட்டு தொடர்பாகவே மேலும் மனு என்ன கூறுகிறது தெரியுமா?

யாகம் செய்வதற்காக பார்ப்பான் திருடலாம் என்கிறது மனு. 11ஆவது அத்தியாயம் 12ஆவது சுலோகம் என்ன சொல்கிறது என்றால் வைசியன் வீட்டில் இருந்து யாகஞ் செய்கிற பொருளை கேட்டும் கொடாவிடில் வலிமை செய்தாவது, அல்லது களவு செய்தாவது கொண்டு வரலாம் என்கிறது. அதே நேரத்தில் சூத்திரன் பொருள் வைத்திருந்தால் அவனிடம் கேட்க வேண்டியதில்லை. அவனைக் கேட்காமலும் வலிமையினாலும் அவன் பொருளை யாகம் செய்யக் கொண்டு வரலாம் என்று பார்ப்பனருக்கு சலுகை வழங்குகிறது. அதே அத்தியாயம் 21ஆவது சுலோகம் என்ன தெரிவிக்கிறது என்றால் அவ்வாறு திருடி வந்து யாகம் செய்கிற பிராமணனை அரசன் தண்டிக்கக் கூடாது. மாறாக அத்தகைய பார்ப்பனர்களுக்கு அரண்மனையிலிருந்து அந்த பிராமணனுக்கு போதுமான ஜீவன் விருத்தியை அதாவது அவனுக்கு போதுமான செல்வத்தைக் கொடுத்துக் காப்பாற்ற வேண்டும் என்கிறது.

திருட்டுக் குற்றத்திற்கு பார்ப்பானுக்கு அதிகப்படியான தண்டனை என்று சொல்கிற மனுதர்மம் பார்ப்பான் திருடுவதற்கு விதி விலக்குகளை அளிக்கிறது. மற்றவர்களுக்கு அவ்வாறு எந்த சலுகையும் வழங்கவில்லை. மாறாக ஒரு குற்றத்திற்கு சூத்திரனுக்கு மரண தண்டனை விதிக்கச் சொல்லும் மனுதர்மம் அதே குற்றம் செய்கிற பார்ப்பானுக்கு தலையை மொட்டை அடித்தால் போதும் என்றும் அவனுக்கு அவனுடைய செல்வத்தை எல்லாம் கொடுத்து நாடு கடத்த வேண்டும் என்று மட்டுமே கூறுகிறது. இதுதான் மனு பார்ப் பனர்களுக்கு விதிக்கும் கடும் நிபந்தனைகளா?

இப்படியெல்லாம் இவர்கள் பேசுவார்கள் என்பதனால்தான் இதற்கான பதிலை அண் ணல் அம்பேத்கர் அவர்கள் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பே தோலுரித்து அதனைத் தீயிட்டுப் பொசுக்கி அம்பலப்படுத்தி இருக்கிறார். பார்ப்பனியத்தின் வெற்றி என்ற தனது கட்டுரையில் சோ போன்றவர்களுடைய இந்த வியாக்கியானங்களுக்கு பதில் அளித் துள்ளார்.

மனு சாஸ்திரத்தில் பிராமணர்களுக்கு கஷ்டமான நியமங்களை எல்லாம் சொல்லி இருக்கிறது என்பது பற்றி அண்ணல் கூறுவது என்னவென்றால் " பிராமணனுக்கு வறுமையும் சேவையும் தான் இலட்சியமாக இருக்க வேண்டும் என்று மனு கூறுவதாக முடிவு செய்வது வேண்டுமென்றே மிகையாக இட்டுக் கட்டிக் கூறும் ஒரு கட்டுக்கதை" என்று கூறு கிறார். அதற்கு பல்வேறு உதாரணங் களைக் கூறுகிறார்.

மனு பிராமணர்களுக்கு விதித்திருக்கும் கடுமையான தண்டனை என்ன தெரியுங்களா?

''ஒரு பிராமணன் மூன்று உலகங்களின் மக்களையும் கொன்றிருந்தால்கூட, ரிக், யஜூர், சாம, வேதத்தை உபநிஷத்துடன் சேர்த்து மூன்றுமுறை ஓதினால் எல்லாப் பாவங்களிலும் இருந்தும் அவன் முற்றிலும் விடுதலை பெறுகிறான்” என்று மனு அத்தியாயம் 11 ஸ்லோகம் 261,262 கூறுவதாக அண்ணலே எடுத்துரைக்கிறார். ஆகா, எவ்வளவு கஷ்ட மான நிபந்தனை பார்த்தீர்களா? வேதங்களை ஓதுவது அவ்வளவு பெரிய கஷ்டமா? உன் பிழைப்பே அதுதானே அய்யா?

(தொடரும்)

 - விடுதலை ஞாயிறு மலர் 23. 3. 2019

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

நூல்: மானம் மானுடம் பெரியார்!

நூல்:    மானம் மானுடம் பெரியார்!
ஆசிரியர்: சு.அறிவுக்கரசு
வெளியீடு: நாம் தமிழர் பதிப்பகம்,
ஜி-4, சாந்தி அடுக்ககம், 3, ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு,
    ராயப்பேட்டை, சென்னை - 14
பக்கம்: 440            விலை: ரூ.300/-
ஆரியப் பார்ப்பனர்கள் வேதம் கற்றனர்,  வேள்விகள் செய்தனர்; வேள்விகளால் நாம் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்றெல்லாம் கதையளந்தனர். கல்வியறிவில்லாதத் தமிழ் மன்னர்கள் நம்பினர். பார்ப்பனரைப் பணிந்தனர். வேதங்கள் என்றால் என்ன? வேள்விகள் என்றால் என்ன? வேள்வி எனும் சொல் தமிழாக இருந்தாலும் மூலம் சமஸ்கிருதத்தில் யாகம் (யக்ஞம்) என்பதாகும்.
நான்கு மறை என்பார்கள். பார்ப்பனர் தவிர மற்றையோர் தெரிந்துகொள்ளலாகாது என்று மறைத்து வைக்கப்பட்டமையால் மறை எனப்பட்டது. எழுத்து வடிவில் இல்லாததால் மறைப்பதும் வசதியாக இருந்துவிட்டது. 10,522 பாடல்கள் கொண்டது ரிக் வேதம். 1984 பாடல்கள் கொண்டது யஜுர் வேதம். 1875 பாடல்கள் கொண்டது சாமவேதம். அதர்வ வேதத்தில் 5977 பாடல்கள் உள.
ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஆரியப் பார்ப்பனர்கள் சிந்து சமவெளிக்கு வந்து சேர்ந்தபோது சிந்து நதியைக் கண்டு வாயைப் பிளந்து பாடிய பாடல்கள் (ரிக்) கொண்டது ரிக் வேதம். அங்கு வாழ்ந்த திராவிடர்கள் கட்டியிருந்த கோட்டைகளையும் பெரிய வீடுகளையும் கண்டு நாடோடி வாழ்க்கை முறையைக் கொண்டிருந்த ஆரியர்கள் ஆச்சரியத்தில் சொன்னவை ரிக் வேதத்தில் நிறைய. திராவிடர்களை எதிர்க்கவும் முடியாமல், மேலே செல்லவும் முடியாமல் இருந்தவர்கள் இந்திரக் கடவுளை உதவிக்குக் கூப்பிட்ட பாடல்கள் ரிக் வேதம். கையாலாகாதவனுக்குத் துணை கடவுள்தானே!
வேள்வி எனப்படும் யாகச் சடங்குகளின்போது முணுமுணுக்கும் பாடல்களே யஜுர் வேதம். இது வெள்ளை யஜுர் (சுக்ல யஜுர்) என்றும் க்ருஷ்ண யஜுர் (கருப்பு யஜுர்) எனவும் இரண்டு பாகம். சாம வேதம் என்பது பூர்வாச்சிக, உத்தரார்ச்சிக என்று இரு பிரிவுகளாக உள்ளது. இவையும் வேள்விகள் செய்யும்போது சொல்லப்பட வேண்டியவை. மந்திர, தந்திரங்களுக்குப் பயன்படும் பாடல்கள் கொண்டது அதர்வ வேதம். அச்சமும், அறியாமையும் கொண்ட மனிதன் கற்பித்துக் கொண்டவை கடவுள், பேய், பூதம், பாவம், புண்ணியம் போன்றவை. இவற்றைக் கட்டுப்படுத்தும் சக்தி இந்த மந்திரங்களுக்கு உண்டு என்று ஏமாற்றினர் ஆரியர்கள்.
பொது ஆண்டு (கி.பி) 1400இல்தான் சாயனாச்சாரி என்பார் எழுத்து வடிவில் ரிக் வேதத்தை எழுதினார். இதற்கு விளக்கமும் எழுதினார். கேட்பதிலும் மனனம் செய்வதிலும் பொழுதைக் கழித்த ஆரியப் பார்ப்பனர்கள், தம்மையல் லாதவர்கள் வேதத்தைக் கேட்பதையும் மனனம் செய்திட முயற்சிப்பதையும் தடுத்து விட்டனர். வேதம் படிப்பவர் பக்கத்தில் உட்கார்ந்தால் உட்காரும் பகுதியை அறுத்தல், வேதம் படிப்பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றிக் கெடுத்தல் போன்ற கொடுந் தண்டனைகள் உண்டென்று கூறி நடைமுறைப்படுத்தினர். இந்த வேதங்களின் கதைப்படி அண்டத்தில் (யுனிவர்ஸ்) சொர்க்கம், மத்திய ஆகாயம், பூமி எனும் மூன்று மட்டுமே கொண்டதாம். ஒவ்வொன்றுக்கும் பதினொன்று எனும் வீதத்தில் மொத்தம் முப்பத்து மூன்று கடவுள்களாம். பின்னாளில்இது எப்படி 33 கோடியாக வளர்ந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை. இந்த 33 கடவுள்களில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பக்தர்கள். பக்தர்களுக்குள் ஏற்பட்ட போட்டி, பொறாமை, குழுச் சண்டைகள். இவற்றின் பாதிப்புகள் கடவுள்களின் மீதும் பிரதிபலித்த நிலை. இவையெல்லாம் ரிக்வேதப் பாடல்களில் காணக்கிடக்கின்றன.
எந்தக் கடவுளாக இருந்தாலும் அவை மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவையாம். அந்த மந்திரங்கள் பார்ப்பனர்களுக்குக் கட்டுப்பட்டவையாம். ரிக் வேதக் கடவுள்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது சோமதேவன். இதை வாழ்த்திப் பாடும் பாடல்கள் 120க்கும் மேல் இருக்கின்றன. அதிகமாகப் பாடப்பெற்ற தேவன்களில் இந்திரன், வருணனுக்கடுத்து சோமன் மூன்றாவது. சோமதேவன் என்பது சோமபானம்.
சோமக் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகைச் சாராயமே, சோமபானம்! இது அழியாத் தன்மையைத் தருமென்றும் இதைக் குடித்தால் ஒளியை நோக்கிக் கொண்டு செல்லும் என்றும் பாடல்கள் கூறுகின்றன. “சோம பானம் குடித்தோம், ஒளியில் நுழைந்தோம், தேவர்களைக் கண்டோம்’’ என்றே ரிக் வேத மண்டலம் 3 சூக்தம் 48இல் எழுதிவைத்துப் படிப்போரைக் குடிக்கத் தூண்டுகிறது. சோமன் பசுவைத் தருகிறான், குதிரையைத் தருகிறான், புத்திரனைக் கொடுக்கிறான். அவனே போரில் வெற்றியைத் தேடித் தருவான் என்றெல்லாம் சாராயத்தின் சக்தியை ரிக் வேதம் பாடுகிறது. (ரிக் வேத முதல் மண்டலம் சூக்தம் 91)
சோமபானம் தயாரிப்பதை ரிக்வேதம் விவரித்துக் கூறுகிறது. ‘ஸ்ஷ்ப’ எனப்படும் செடியைப் பறித்து இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில், கழுவிச் சுத்தப்படுத்த வேண்டும். இதை ஆஸ்வினம் என்கிறது வேதம். இரண்டாம் நாள் இரவிலும் நீரில் ஊற வைத்து மறுநாள் மதியம் எடுத்துக் கழுவ வேண்டும். இது ஸாஸ்வதம் என்கிறது வேதம். மூன்றாம் இரவிலும் ஊறவைத்து காலையில் எடுத்துச் சுத்தம் செய்ய வேண்டும். இது அய்ந்தரம் என்கிறது வேதம். (சோமச் செடியை முதல்நாள் ஒரு பசுவின் பாலைக் கொண்டும், இரண்டாம் நாள் இரு பசுக்களின் பாலைக் கொண்டும், மூன்றாம் நாள் மூன்று பசுக்களின் பாலைக் கொண்டும் சுத்தம் செய்ய வேண்டுமாம். தற்காலத்தில் ஹஷீஸ், கஞ்சா தயாரிப்பைப் போலப் போதைக்காக சோமச் செடியைப் பயன்படுத்தியுள்ளனர் ஆரியர்கள். அவர்கள் தான் தற்காலத்தில் ஒழுக்கசீலர்களாகக் காட்டிக் கொள்கின்றனர்.
அடுத்து ஆரியர்களின் போதைக்கு உதவியது சுராபானம். சுராபானம் தவிர வேறு எதையும் குடிக்கக் கூடாது எனப் பார்ப்பனர்களுக்குத் தடையே உண்டு. தானியங்களைப் பொடித்துக் கலக்கிப் புளிக்கவைத்துத் தயாரிக்கப்படும் மதுவே சுரா. அரிசியைப் புளிக்கவைத்து மது தயாரிக்கும் பழக்கம் இந்தியப் பழங்குடிகளிடம் இன்றளவும் உண்டு. அரிசியைப் புளிக்கவைத்து விஸ்கி போன்ற உயர்வகை மது தயாரிப்பது ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ளது.
இத்தகைய சுரா பானத்தை அருந்தியோர் சுரர் எனப்பட்டனர். இந்தப் பானத்தை அருந்த மறுத்தோரும் பார்ப்பனர் அருந்துவதைத் தடுத்தோரும்தான் “அசுரர்’’ என்றழைக்கப்பட்டனர். திராவிடர்களை அசுரர் என்றே பார்ப்பன இதிகாசங்கள் கூறும்.
சோம, சுரா போதைகளைப் போதித்த வேதம் யாகங்களைப் பற்றிக் கூறுவதைப் பார்த்தால் மிகவும் கீழ்த்தரமான, காட்டு விலங்காண்டிகளாகவே ஆரியப் பார்ப்பனர் இருந்துள்ளனர். அரசரின் அதிகாரப் பரவலுக்கும் ஆட்சிப் பிரதேசத்தை விரிவுபடுத்துவதற்கும் போருக்கு மாற்றாக வைத்த யாகம் அஸ்வமேதம். சுக்ல யஜுர் வேதம் இதனை விரிவாகக் கூறுகிறது. கறுப்பு நிறக் குதிரையை அவிழ்த்து விடுவார்கள். அது சுதந்தரமாகச் சஞ்சரிக்கும். மேயும், போர்வீரர்கள் நடந்தும், குதிரையிலும் கறுப்புக் குதிரையைப் பின் தொடர்வார்கள். யாராவது அதைப் பிடித்துக் கட்டிவிட்டால், சண்டை மூளும் அல்லது இரு நபர்களுக்கிடையே பலப்பரிட்சை நடக்கும். முடிவில் கறுப்புக் குதிரை கொண்டு வரப்படும்.
அழகான ஒரு வயதுக் குதிரையான அதனை அத்வர்யு, பிரம்மா, உத்காதா, ஹோத்ரு போன்ற புரோகிதர்கள் பின்தொடர்ந்து வருவர். மன்னனும் நானூறுக்கும் மேற்பட்ட இளம் பெண்களும் உடன் வருவர். யாகம் நடக்கும் இடத்திற்கான கிழக்கு வாசல் வழியாக மன்னனின் மனைவி வருவாள். வெட்டிக் கொல்லப்பட்ட கறுப்புக் குதிரையின் மீது தன் மனைவியைக் கணவனான மன்னனே படுக்க வைப்பான். இறந்த குதிரையுடன் அரசி உடலுறவு கொள்வாள். குதிரையின் குறியைத் தன் குறிக்குள் செலுத்திக் கிடப்பாள். மன்னன் பாடல்களைச் சொல்லிக் கொண்டு இருப்பான். பின்னர் புரோகிதர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே அரசியைப் பார்த்து ஆபாசமாகப் பாடுவார்கள். நானூறு பெண்களில் நூறு சத்திரியப் பெண்கள் இதற்குப் பதிலளித்துப் பாடுவார்கள். மற்றொரு புரோகிதனின் பாட்டுக்கு மற்றொரு குழு சூத்திரப் பெண்கள் நூறு பேர் பதில் பாட்டு பாடுவார்கள். இன்னொரு புரோகிதனுக்கு சத்திரியர்களின் ஆசை நாயகிகளாகிய நூறு பெண்களும் பதில் கூறுவார்கள். ஒரு புரோகிதனின் கிண்டல் பாட்டுக்கு நூறு இளவரசிகள் பதிலளித்துப் பாடுவார்கள். புரோகிதன் பாட்டும் சரி, பதில் பாடல்களும் சரி எல்லாமே ஆபாசத்தின் உச்சம். எழுதக் கூசும் சொற்கள். இதுதான் புனித வேதம்.
அசுவமேத யாகத்தைப் பொது ஆண்டு 300இல் சீலவர்மன் என்பான் நடத்தியதற்கு ஆதாரமான பொருள்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. 1958இல் இந்தியத் தொல்பொருள் அலுவலக இணை இயக்குநராக இருந்த டி.என்.ராமச்சந்திரன் கண்டுபிடித்துள்ளார். யாக மேடையைக் கட்டிய செங்கற்களில் சீலவர்மன் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதை இவர் தெரியப்படுத்தியுள்ளார்.
யாகத்தின் அடுத்த கட்டமாக பொன், வெள்ளி, வெண்கலத்தினால் செய்யப்பட்ட மூன்று கத்திகளால் அரசி குதிரையைத் துண்டு துண்டாக வெட்டுகிறாள். ரத்தம், கொழுப்பு முதலியவற்றைப் பிரித்தெடுத்துத் தேவதைகளுக்கு அர்ப்பணிக்கின்ற சடங்கைப் புரோகிதர்கள் செய்கின்றனர். பிறகு மன்னன் தலையில் பொன், காளை மாட்டுத் தோலை வைத்து சடங்குகளைச் செய்கின்றனர். மூன்று நாள்கள் சடங்கு செய்த பிறகுதான் மன்னன் குளிக்கிறான். இந்த யாகத்தை தசரதன் மகன் ராமன் செய்தான் என்கிறது ராமாயணம். இவனது யாகக் குதிரையைப் பிடித்துக் கட்டிய இரு சிறுவர்கள்தான் லவ, குசன்! சீதையின் மகன்கள். ராமனின் துரோகக் கதையை அம்பலப்படுத்தியவர்கள் என்பது வால்மீகி ராமாயணம். நம் காலத்தில் அசுவமேதம் செய்தவன் ஜெயசிம்மன் எனும் ராஜபுதன மன்னன். ஆம், ஜெய்ப்பூர் நகரைக் கட்டிய அதே ஜெயசிம்மன் (பொது ஆண்டு 1734_35)தான்.
பெண்ணையும், ஆணையும் அம்மண கோலத்தில் பந்தலின் மேல் உடலுறவு கொள்ள வைத்து, சம்போகத்தின் போது வழியும் சுக்கில சுரோகிதச் சொட்டுகள் நேராக யாக குண்டத்தில் விழுவதுபோல் அமைத்துப் புரோகிதன் கீழே அமர்வது புண்டரீக யாகம் எனப்படும். அய்காஹி மகாப்ரதம் எனும் இந்த யாகம் சென்ற நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் பார்ப்பனர்கள் நடத்தச் செய்தனர்.
பசுவைக் கொன்று பசுவின் நெய்யை முன்னோர்க்கு அவிஸ் ஆக அளிப்பது கோமேதகம் எனப்படும் யாகம். யாகம் முடிந்த பின் பசு மாட்டிறைச்சியை பங்கு பெற்றவர்கள் அனைவரும் உண்பர்.
புருஷமேதம் என்பது மனிதர்களைக் கொன்று நடத்தப்பட்ட யாகம். இந்த வகைகளை சதபத பிராமணம் விவரிக்கிறது. சுக்லயஜுர் வேத சம்ஹிதை, க்ருஷ்ண யஜுர் வேதத்தின் தைத்ரிய பிராமணம், ரிக்வேத அய்த்ரேய பிராமணம் போன்றவற்றில் புருஷமேத யாகம் பற்றிய விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இந்த யாகத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன் ஆசைப்பட்டதை யெல்லாம் அனுபவிப்பான். யாக நாளன்று ராஜபத்தினி அசுவமேதத்தில் எவ்வாறு குதிரையோடு உறவு கொண்டாளோ அதே மாதிரி இம்மனிதனுடன் உறவு கொள்வாள்.
பிறகு அவன் கழுத்தை அறுத்துக் கொன்றுவிடுவர். இது ஏதோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை இருந்த காட்டுவிலங்காண்டித்தனம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. பொது ஆண்டு 1841இல் வங்காளத்திலும் தமிழ்நாட்டிலும் 240 மனிதர்களை புருஷமேதத்தில் கொன்று தள்ளியிருக்கின்றனர் என்பதை கேம்பிரிட்ஜ் ஷார்ட் ஹிஸ்டரி _ பாகம் 3 _ பக்கம் 564இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசித்திரமான யாகம் ஒன்றும் உண்டு. தன்னைத்தானே பலியாக்கிச் செய்யும் யாகம் ஸர்வமேதம் என ரிக்வேதம் கூறுகிறது. சொர்க்கத்தில் இடம் பிடிப்பதற்காகத் தன்னையே பலியாக்கிக் கொள்வதாம். சொர்க்கம் என்பதே மதங்களின் பித்தலாட்டக் கற்பனை. இதனை நம்பிச் சாகிறார்கள் என்றால்... மதம் என்ன பாடுபடுத்துகிறது பாருங்கள்! ரிக் வேதம் மண்டலம் 10 சூக்தம் 31இல் யாகம் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
ஆடுகளுடன் உடல் உறவு கொள்வதையும், காளை மாட்டுடன் உடல் உறவு கொள்வதையும் ரிக் வேதம் பரிந்துரைப்பதாக  ‘பழமையான பாரதம்’ எனும் நூலில் மலையாள அறிஞர் ஏ.அய்யப்பன் குறித்துள்ளார்.
இப்பழக்கம் இருந்ததால்தான் பிரிட்டிஷார் எழுதித் தந்து இன்றளவும் இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் இந்தியன் பீனல்கோடு எனும் சட்டத்தில் விலங்குப் புணர்ச்சிக்கு என்ன தண்டனை என்று குறிக்கப்பட்டுள்ளது. உடன் பிறந்த அண்ணன் தங்கைக்குள்ளோ, அக்கா தம்பிக்குள்ளோ உடல் உறவு கொள்ளும் ஒழுங்கீனத்தை ரிக் வேதம் பரிந்துரைக்கிறது. எடுத்துக்காட்டாக, எமனின் சகோதரி எமனைத் தன்னுடன் உடலுறவு கொள்ள அழைக்கும் உரையாடல் “இந்தியாவின் ஆத்மா’’ எனும் நூலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. தந்தை தன் மகளைக் கர்ப்பம் அடையச் செய்த கேடு அதர்வ வேதம் கூறுகிறது. குடும்பம், சமூகம், உறவுகள் போன்றவை நாகரிகமடையாத கால வேதங்களை இன்றைக்கும் கட்டி அழலாமா? வேதகாலப் பெருமைகளைப் பேசும் பேர்வழிகளை மனிதர் எனக் கொள்ளலாமா? மனிதகுல எண்ணிக்கையில் சரி பாதி அளவுக்கு இருக்கும் பெண்களுக்கு வேதகாலத்தில் மரியாதையே இல்லாத நிலை, சாதாரண அசையும் பொருட்கள் போலக் கருதப்பட்ட நிலை. பிள்ளை பெற்றுத் தரும் கருவியாக மட்டுமே கருதப்பட்ட நிலை. பெண்கள் அறிவில் குறையுள்ளவர்கள். ஆதலால் அவர்களைப் படிக்க வைக்கக் கூடாது என்றே ரிக்வேதம் மண்டலம் 8 சூக்தம் 33 அறிவிக்கிறது. வேதகால அறிவு இப்பிரபஞ்சம் சொர்க்கம், மத்திய ஆகாயம், பூமி எனும் மூன்றடுக்கு கொண்டது என்கிறது.
இந்திய விடுதலைக்காக வெள்ளையர் மீது வெடிகுண்டு வீசிய வீரர் வங்காளத்து அரவிந்தகோஷ். பிரிட்டிஷாரின் காவல்துறை இவரைக் கைது செய்யத் தேடியதும் பயந்துபோய் பதுங்கிப் புதுச்சேரியில் தங்கித் தப்பித்த மகாவீரர் இவர்! புதுச்சேரியில் இந்துமதச் சாமியார் வேடம் போட்டு வேதப் பெருமைகளைப் பேசிய ஆள். சாதாரண மக்கள் புரிந்துகொள்ள முடியாத அர்த்தங்கள் வேதங்களில் மறை பொருளாக வைக்கப்பட்டுள்ளன என்கிற அபார கருத்தை வெளியிட்ட மேதாவி இவர். அக்கருத்துகளை இவர் புரிந்துகொண்டார் என்பதற்கும் ஆதாரமில்லை. பின் எப்படி கூறினார்? சும்மா பேசுவதுதானே சாமியார்களின் வேலை!
“வேதமென்றும் வேள்வியென்றும்
    விளம்புகின்ற கூட்டந்தனை
விறகொடித்து வருவதுபோல்
    விலாஎலும்பு ஒடித்து வருக’’
என கவிஞர்_கலைஞர் கருணாநிதி 1945இல் எழுதியது போன்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்!
மாறாக, வேதங்கள் பழம்பெரும் இலக்கியங்கள் எனக் கருதிக் கொண்ட பிரிட்டிஷார் பார்ப்பனரைப் பக்கத்தில் இருத்திக் கொண்டனர். பதவிகளில் அமர்த்திப் பயன்படுத்திக் கொண்டனர். ஆயிரம் ஆண்டுக்காலம் படிக்காமல் இருந்துவிட்ட தமிழர் தூர நின்றனர். வந்தேறிய ஆரிய இனத்தவர் வேளாண்மையும் தெரியாததால் உழைத்துப் பிழைக்க வழியில்லாது கையில் தர்ப்பைப் புல்லைப் பிடித்துக் கொண்டு யாகம் என ஏமாற்றி யோகம் பெற்றனர். பார்ப்பனர் அல்லாதார் பெருமூச்சு விட்டனர். யஜனம், யாஜனம் எனும் இரண்டுதான் பார்ப்பனரின் தொழில்கள். யாகம் செய்வது, யாகம் செய்விப்பது என இரண்டே தொழில்கள்தான். அவற்றைப் பொழுது போக்குக்காகச் செய்து கொண்டே, அரசுப் பதவிகளில் அமர்ந்துகொண்டு விட்டனர்.
-உண்மை இதழ், 16-31.12.17