மந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 அக்டோபர், 2022

தை அமாவாசை-திதி-தர்ப்பணம் ( திவசம் செய்கின்ற போது சொல்லப்படும் மந்திரம்)

 

பகுத்தறிவு : தை அமாவாசை-திதி-தர்ப்பணம்

மார்ச் 16-31,2021

தமிழர்கள் செய்ய வேண்டியவை யாவை?

செய்யக் கூடாதவை யாவை?

செய்ய வேண்டியவை :

விளக்கேற்றி வையுங்கள்.

பிறருக்கு உணவளியுங்கள்.

வள்ளல் பெருமானார் இயற்றிய அகவல் பாக்களை வாசியுங்கள் அல்லது ஒலிக்க விடுங்கள்.

செய்யக் கூடாதவை :

பிராமணர்களை வைத்து சமஸ்கிருத மந்திரங்களை ஓத விடாதீர்கள், “அவர்களுக்கு மட்டுமே” தானம் கொடுக்காதீர்கள்.

காரணம். அவர்களின் சமஸ்கிருத மந்திரங்களின் பொருள் இவை.

இறந்த பின்பு நடக்கின்ற சடங்குகளில் சொல்லப்படும் இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம். முதலில் இறந்த தந்தைக்கு திவசம் செய்கின்ற போது சொல்லப்படும் ஒரு மந்திரம்.

“யன்மே மாதா பிரலுலோப சரதி

அனனு விருதா தன்மே ரேதஹ

பிதா விருங்க்தா அபுரண் யோப பத்யதாம்

ரங்கராஜ சர்மனே ஸ்வாஹா

ரங்கராஜ சர்மனே அஸ்மது பித்ரே

இதம் நமம கிருஷ்ண கிருஷ்ண’’

இந்த மந்திரத்தின் பொருள்: “என்னுடைய அம்மா பத்தினியாக இல்லாது இருந்து, என்னை வேறு ஒருவருக்குப் பெற்றிருந்தால், இந்த திவசத்திற்கு உரிமை கோரி என்னுடைய உண்மையான தகப்பனார் வருவார். அப்படி இல்லாத என்னுடைய அம்மாவின் கணவரே இந்த திவசத்தைப் பெறட்டும்.’’ இதுதான் இந்த மந்திரத்தின் பொருள். அதாவது, “திதி கொடுப்பவனுடைய தாய் சில வேளைகளில் சோரம் போய் வேறு யாருக்காவது அவனைப் பெற்றிருக்கலாம்’’ என்று இந்த மந்திரம் சொல்கின்றது.

“உன்னுடைய அப்பா வேறு யாராவதாக இருக்கலாம். நீ அப்பன் பேர் தெரியாதவனாக இருக்கலாம்’’ என்று இந்த புனித மந்திரம் சொல்கின்றது.

தந்தைக்கு திவசம் செய்கின்ற போதுதான் இப்படி என்று நினைக்க வேண்டாம். சமஸ்கிருதம் தாய்க்கு திவசம் செய்கின்ற போதும் வஞ்சகத்தோடுதான் பொருள் கூறுகிறது.

அம்மாவிற்கு திவசம் செய்கின்ற போது சொல்கின்ற ஒரு மந்திரம் இதோ:

“என்மே மாதா ப்ரவது லோபசரதி

அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ பிதா

வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா அவபத்ய நாம”

இதன் பொருள்: “என்னுடைய அம்மா யாருடன் படுத்து என்னைப் பெற்றாளோ தெரியவில்லை. ஒரு நம்பிக்கையில்தான் அவளை என்னுடைய அப்பாவின் மனைவியாகக் கருதுகின்றேன். அந்த அம்மாவிற்கு இந்த திவசம் சென்று சேரட்டும்’’ என்பது.

அருட்பிரகாச இராமலிங்க வள்ளல் பெருமகனார், புரட்சிப் பெரு நெருப்பு… இதன் காரணமாகவே கருமாதி, திதி கூடாது என்கிறார்.

சரி… நாம் நமது அறிவைக் கொண்டு யோசிப்போம்.

“மறுபிறவி” உண்டு என்று நீங்கள் நம்பினால், இறந்தவர் உடனே வேறு தாய்க்குப் பிறந்திருப்பார்தானே?!

உங்கள் நம்பிக்கை அப்படி என்றால் இன்னொரு முறை பிறந்துவிட்ட, உயிரோடு இருக்கும் ஒரு உயிருக்குத் திவசம் செய்கிறீர்களே… இது என்ன நியாயம்?!

எனவே, இறந்த நம் முன்னோர் உருவங்களை மனப்பூர்வமாக வணங்கி நன்றி பாராட்டுவோம். “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’’ எனப் போற்றுவோம்.

இவ்வாறு செய்தால், அவர்கள் பிறப்பெடுத்திருந்தாலும் நம் வழிபாடு நேர்மறையாக அவர்களை வாழ்த்துவதாக அமையும். மாறாக, பிண்டம், திதி, சமஸ்கிருத மந்திரங்கள் வாயிலாக அசிங்கப்படுத்துவது, அவர்களை எதிர்மறையாக ஆக்குவதாகவே அமையும்.

செவ்வாய், 6 ஜூலை, 2021

பார்ப்பானையே (கடவுளாக) வணங்க வேண்டும் என்று கூறும் மந்திரங்கள்

பார்ப்பான் தான் கடவுள்; பார்ப்பானையே (கடவுளாக) வணங்க வேண்டும் என்று கூறும் மந்திரங்கள்
‘’பூமியில் பிராமணனாக பிறந்துள்ளேன்(கிருஷ்ணன்).
(ஆஸ்வமேதிக பர்வம், பக்கம்-285)

தெய்வா தீனம் ஜெகத்சர்வம்
மந்த்ரா தீனம் துதெய்வதம்
தன் மந்திரம் பிரம்மாணா தீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபுஜெயத்
(ரிக் வேதம் சுலோகம் 62ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்)
பொருள்: உலகம் கடவுளுக்கு கட்டுப்பட்டது கடவுள்கள் மந்திரங் களுக்கு கட்டுப்பட்டவர்கள். மந்திரங் கள் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டவை. பிராமணர்களே நமது கடவுள் என்ப தாகும்.
இதை சொல்லித்தான் இராமன் சம்பூகனை {தலையை)வெட்டிக் கொன்றான்(இராமாயணப்படி).
-17.11.2013 எனது முகநூல் பதிவு

செவ்வாய், 23 மார்ச், 2021

ஒழுக்கக் கேடான திருமண மந்திரங்கள்

இந்து மதத்தில் ஒழுக்கக்கேட்டிற்கு இரு எடுத்துக் காட்டுகளைக் குற்றக் கூண்டில் நிறுத்தினார் திராவிடர் கழகத் தலைவர். அதற்குச் சாட்சியமாக மறைந்த காஞ்சி சங்கராச்சாரியாரின் ஆலோசகரும், ஒரு நூற்றாண்டை எட்டிப் பிடித்தவருமான அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரை சாட்சிக்கு அழைத்தார்.

இந்து மதம் எங்கே போகிறது?' என்ற அவரின் நூலிலிருந்தே அதையும் எடுத்துக்காட்டினார் (பக்கம் 151-153).

திருமணத்தில் வாத்யார்கள் ஓதும் முரண்பாடான மந்த்ரங்களுக்கு மேலும் உதாரணம் சொல்கிறேன் என போன அத்யாயத்தில் சொல்லியிருந்தேனல்லவா!

அத்தகைய ஒரு மந்த்ரத்தைப் பாருங்கள்.

தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வ

யஸ்ஸாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ

யான ஊரு உஷதி விஸ்ரயாதை

யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்''

இது வேதத்தில் சொல்லப்பட்ட மந்த்ரம். இதை கல் யாண மேடையிலே பெண்ணையும், மாப்பிள்ளையையும் உட்கார்த்தி வைத்து சத்தமாக சொல்கிறார் வாத்யார். இந்த மந்த்ரத்தின் அர்த்தம் புரிந்தால், அந்த வாத்யாரை நீங்கள் வாத்சாயணர் என்றுதான் அழைப்பீர்கள்.

அப்படி என்ன சொல்கிறது இந்த மந்த்ரம்? நான் அவனை கட்டிப் பிடிப்பேன். அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை சரியாகப் பொருந்தச் செய்யுமாறு... தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்....

இந்த மந்த்ரத்தின் அர்த்தத்தை இதைவிட நாகரீகமாக சொல்ல முடியாது. விளக்கமாக நான் சொல்லியிருப்பேன் என்றால்... என் மீதும் என் வயதின் மீதும் உங்களுக்கு இருக்கும் மரியாதை போய்விடும். அப்படிப்பட்ட மந்த்ரம் அது.

என் இஷ்டமித்ரர் ஒருவரது மகளின் கல்யாணம் சமீபத்தில் நடந்தது. அந்த பெண் மகாபுத்திசாலி. சமஸ்கிருதம் பயின்றவள் அவள் மணமேடையிலே உட்கார்ந்திருக்கும் போது

வாத்யார் இந்த மந்த்ரத்தை உரக்கச் சொல்ல....

ஸ்வாமீ....  நிறுத்துங்கோ என்றாள் அவள். வாத்யார் வாயடைத்து விட்டார்.

இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமோ?..... பொண்ணும் மாப்ளையும் துணியில்லாம செய்யுற காரியத்தை.....  நீங்க பல பேர் முன்னாடி சொல்றேளே....

வாத்யார் அதன்பிறகு அந்த மந்த்ரத்தை சொல்ல வில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால், வாத்யார்கள் சடங்குகள் என்ற பெயரில் என்ன அர்த்தம் என்றே தெரியாமல்... பல மந்த்ரங்களை உச்சரித்து வருகிறார்கள் என்பதை சுட்டிக் காட்டத்தான்.

இதுபோல் இன்னொரு மந்த்ரம்

விஷ்ணுர் யோனி கர்ப்பயது தொஷ்டா ரூபானி பீமிசது

ஆரிஞ்சது ப்ரஜாபதி

தாதா கர்ப்பந்தாது.... இதன் அர்த்தம்... இன்னும் ஆபாசம்....!

விஷ்ணுர் யோனி கர்ப்பயது...' எனத் தொடங்கும் இந்த மந்த்ரத்தின் அர்த்தம்தான் என்ன?

பெண்ணானவளின் அந்தரங்க பாகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. யோனி, மத்யமம், உபஸ்தம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கிறது.

அதாவது, விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய தேவதைகள் இம்மூன்று பாகங்களிலும் உட்கார்ந்திருக் கிறார்கள். இவர்கள்தான்... ஆணும், பெண்ணும் தேக ஸம்பந்தம் - உடலுறவு கொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்கிறார்கள். அதாவது.... நாம் தேக ஸம்பந்தம் கொள்வதை கூட விஷ்ணு உள்ளிட்ட தேவதைகள் அருகில் இருந்து, இன்னும் சொல்லப்போனால் அந்த இடத்திலேயே இருந்து கவனிக்கிறார்கள்.''

இவ்வாறு ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதியுள்ளார்.
- தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் உரையின் ஒரு பகுதி
- விடுதலை நாளேடு, 23. 3 .2019

புதன், 23 டிசம்பர், 2020

திருமண வைபங்களில் ஆபாச வேத மந்திரங்கள் ஓதப்படுகின்றன.


வைதீக திருமண வைபங்களில் வேத மந்திரங்கள் ஓதப்படுகின்றன. இதில் மிக மிக கொச்சையான ஆபாசமான மந்திரங்களும் அந்தச் சடங்குகளின் போது ஓதப் படுவது வைதீகத்தை பின்பற்றும் நபர்களுக்கே தெரிவதில்லை.

கன்னிகை ஸ்நானம்,நுகத்தடி வைத்தல்,கூரை உடுத்துதல்,காப்பு,தாரை வார்த்தல்,மாங்கல்ய தாரணம்,பாணிக்ரஹணம்,ஸப்தபதி,ப்ரதாந ஹோமம்,அம்மி மிதித்தல்,லாஜ ஹோமம்,கும்பம்,அருந்ததி பார்த்தல்,கிருஹப் பிரவேசம்(மறுவீடு) இப்படி பல சடங்குகளைக் கொண்டதுதான் வைதீக முறையில் புரோகிதர் அல்லது ஆத்து வாத்தியாரைக் கொண்டு நடைபெறும் திருமணங்கள்.

இப்படியான திருமண சடங்குகளின் போது ரிக் வேதம் பத்தாம் மண்டலம் 85 ஆவது அநுவாகத்தில் உள்ள மந்திரங்கள் ஒதப்படுகின்றன.இந்த மந்திரங்களுக்கான விளக்கங்களை அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் இந்து மதம் எங்கே போகிறது எனும் நூலில் “ஆபாச திருமண மந்திரங்கள்” எனும் தலைப்பில் கட்டுரைகளாக விரிவாக எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையில் உள்ள சில பகுதிகளை கீழே தருகிறேன்;

`விஷ்ணுர் யோனி கர்ப்பயது...’ எனத் தொடங்கும் இந்த மந்த்ரத்தின் அர்த்தம்தான் என்ன?

பெண்ணானவளின் அந்தரங்க பாகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. யோனி, மத்யமம், உபஸ்தம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கிறது.(பெண்கள் சரியாக மதிக்காத போது இப்படிப்பட்ட தேவதைகள் வீட்டை விட்டு வெளியேறிவிடுவர் எனும் மநு தர்ம சாஸ்திர நூலின் ஸ்லோகம் ஒன்றைப் பிடித்துக் கொண்டு மநுவாதிகள் தொடர்ந்து தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் விவாதிக்கின்றனர், வைதீக நூல்களைப் படிப்போருக்கு விளங்கும் தேவர் தேவதைகளின் லட்சணம் என்னவென்று)

அதாவது, விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய தேவதைகள் இம்மூன்று பாகங்களிலும் உட்கார்ந்திருக்கிறார்கள்.

இவர்கள்தான்... ஆணும், பெண்ணும் தேக ஸம்பந்தம் உடலுறவுகொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்கிறார்கள்.

அதாவது... நாம் தேக ஸம்பந்தம் கொள்வதை கூட விஷ்ணு உள்ளிட்ட தேவதைகள் அருகில் இருந்து, இன்னும் சொல்லப்போனால் அந்த இடத்திலேயே இருந்து கவனிக்கிறார்கள்.

இவ்வாறு கவனிக்கும் தேவதைகள் விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய சக்திகள் அவளுக்கு கர்ப்பத்தை உண்டாக்க அருள்புரிய வேண்டும்... என்கிறது இந்த மந்த்ரம்.

நாம் பெண் என்றால் தெய்வம் என்கிறோம். ஆனால், பெண்ணின் ஓர் உறுப்பிலேயே மூன்று தெய்வங்கள் எல்லை பிரித்து உட்கார்ந்து கொண்டிருக்கின்றன என்கிறது இந்த மந்த்ரம்.

இதை நீங்கள் பெண்மையின் உயர்வாகவே எடுத்துக் கொள்ளலாம். `அந்தரங்கம்’ எல்லாம்  ‘அந்தரங்கன் அறிவான்’ என கண்ணதாசன் சொல்லி வைத்ததற்கு முதல் முதன் முன்னோடியாக விளங்கியிருக்கிறது என்றும் வைத்துக் கொள்ளலாம்.இங்கே முக்கியமானதொன்று... வேத திருமணங்கள் பெரும்பாலும் கர்ப்பாதானம் என்றே அழைக்கப்பட்டிருக்கின்றன.

விவாஹம் என்றால் தூக்கிக் கொண்டு ஓடுதல் என்றும், பாணிக்ரஹணம் என்றால் கைப்பிடித்தல்என்றும் பார்த்திருக்கிறோம். வையெல்லாம் எதற்காக? கர்ப்பாதானம் செய்து... குழந்தைகள் பெற்று மகிழ்ந்து வாழத்தானே. அதனால்தான் திருமணத்தை கர்ப்பாதானம் என்றே குறிப்பிட்டது வேதம்.

இதற்காகவே கணவனுக்கும், மனைவிக்கும் மணமேடையில் நிகழும் உரையாடலாக வேதம் இப்படி பதிவு செய்திருக்கிறது.

ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:

பொருள் : ஸோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்.

விளக்கம்: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத் தான் இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு விட்ட பின்பு தான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் என்பது விளக்கமாகும்.

இந்தப் பொருளைத் தரும் மேற்கண்ட மந்திரத்தைத் தான் புரோகிதப் பார்ப்பான் கலியாணத்தை நடத்தி வைக்கும் பொழுது சொல்கிறான்.

மந்திரம்: உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ நம ஸேடா மஸேத்வா அந்யா மிச்ச ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ!

பொருள்: விசுவாசு என்னும் கந்தர்வனே இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.

மந்திரம்: உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வா வஸீந் நமஸ கீர்ப்பிரீடடே அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி

பொருள்: இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்குக் கணவன் இருக்கிறான் அல்லவா? விசுவாவசுவான உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்பதை நீ அறிவாயாக.

விளக்கம்: கலியாணம் நடந்து நான்கு நாள்கள் தம்பதிகள் ஒரே படுக்கையில் படுக்க வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் அவர்கள் உடலுறவு கொள்ளக் கூடாது. நான்கு நாள் கழிந்த பிறகு மேற்கண்ட மந்திரங்களைச் சொல்ல வேண்டும். அதாவது கலியாணமான அந்த மணப் பெண்ணானவள் கந்தர்வன் என்னும் கடவுளோடு ஒரே படுக்கையில் படுத்திருக்கிறாளாம். அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்ட இந்த மணமகன் தன் மனைவியுடன் படுத்து சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கந்தர்வன் என்னும் கடவுளிடத்தில் தன் மனைவியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமாய்க் கெஞ்சுகிறான் என்பதாகும்.

ஆதாரம்: விவாஹ மந்த்ராத்த போதினி.
ஆக்கியோர்: கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் பி.ஓ.எல்.,(பக்கங்கள்:முறையே: 22-59)

இந்த வைதீக சடங்குகளை வைதீகர்கள் அல்லாத அடிமைகளும்,பெருமைக்காக தங்களது இல்லத் திருமணங்களிலும் அதே சடங்குகளைப் பின்பற்றி வருவது கொடுமையிலும் கொடுமை ஆகும்.

வைதீக சனாதனம் என்பதே பொய்யும் பித்தலாட்டமும் ஏமாற்றும் வன்மமும் ஆபாசமும் நிறைந்தது என்பதை இனிமேலாவது உணருங்கள் நண்பர்களே. வைதீக சனாதனம் என்பதில் துளியும் சமத்துவமோ மனித நேயமோ இல்லை என்பது உணருங்கள்.வைதீ அன்பர்களுக்கே இதை உணராமல் இருக்கிறார்கள் என்பதே வேதனையிலும் வேதனை.அறிவியல் வளர்ந்துள்ள இந்த காலத்தில்,வைதீக சனாதன தர்மம் என்பது அர்த்தமற்ற மனித நேயமற்ற, மனத குலத்திற்கு எதிராக சடங்கு குப்பைகளால் கட்டப்பட்டவை என்பதை அனைவரும் உணர்தல் வேண்டும். இந்த விழிப்புணர்வு ஒன்றே நமக்கு சமூக பண்பாட்டு கலாச்சார அரசியல் விடுதலைக்கு வித்திடும்.

ஆதாரங்களால்,தரவுகளால் நம்மை ஆதிக்கம் செலுத்தும் ஆதிக்கவாதிகள் திருந்தியதாய் வரலாறே இல்லை.வைதீகத்திலிருந்து நம்மை நாமே திருத்திக் கொள்வது தான் ஒரே வழி. வைதீக சடங்கு சம்பிரதாயங்களிலிருந்து முதலில் நாம் வெளிவருவோம், நம் குடும்பத்தினரையும் மீட்டெடுப்போம், 
இந்தக் ஆபாசமான சடங்குகள்தான் எங்களது பண்பாடு என மற்றவர்களிடம் சொல்வதை முதலில் நிறுத்துவோம்.அடுத்த நடவடிக்கையாக வைதீகர்களைக் கொண்டு நடத்தப்படும் சடங்குகளை நமது குடும்ப அளவில் தடை செய்வோம். 

குறிப்பு: விவாஹ மந்த்ரார்த்த போதினி நூல் பற்றி அறிந்த நாளிலிருந்து அதை online மூலம் order பண்ண முயற்சித்தேன். Out of stock என்பதால் order பண்ண முடியவில்லை. 
இந்த நூலினை வாசிக்காது அக்னிஹோத்ரம் அவர்கள் எழுதிய திருமண சடங்கு பற்றி பதிவு எழுத வேண்டாம் என்றிருந்தேன்.
அந்தக் குறையினை நண்பர் இலங்கநாதன் குகநாதன் அவர்கள் இன்று தீர்த்து வைத்து விட்டார்.அவரது பக்கத்தில் இந்த நூலினை பதிவிறக்கம் செய்வதற்கான google drive link யை பதிவு செய்திருந்தார்.அந்த link னை தந்துள்ளேன், பதிவிறக்கம் செய்ய விரும்புகிறவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிண்ணூட்டத்தில் சர்சைக்குரிய மந்திர பக்கம் ஒன்றை இணைத்துள்ளேன்.

https://drive.google.com/file/d/1zA3m7-r3YzI0VvJA3QYInqpbcr5QPkde/view
- ஆறாம் அறிவு, தினகரன் செல்லையா முகநூல் பதிவு,1.11.20

புதன், 12 ஆகஸ்ட், 2020

கல்யாண மந்திரம் - மயிலாடன் விளக்கம்

#ஒற்றைப்பத்தி - கல்யாண மந்திரம்

கல்யாண நிகழ்ச்சியில் பார்ப்பனப் புரோகிதர்கள் கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லுகிறார்கள்.

“ஸோம ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித

உத்தர த்ருதீயோ அக்நிஷ்டபதி

துரியஸ்தே மனுஷ்ய ஜா”

‘‘ஸோமன் முதலில் இந்த மணமகளை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் மனித ஜாதியில் பிறந்தவன்.''

(ஆதாரம்: விவாஹ மந்த் ரார்த்த போதினி தொகுத்தவர்: வித்யா விசாரத் ந்யாயரத்ந, நியாயபூஷ்ண கீழாத்தூர் ஸ்ரீனிவாஸாச்சாரியார் - வெளியீடு லிப்கோ பப்ளிஷர்ஸ் (பி)லிட்).

ஆதாரத்தோடு இதை நாம் எடுத்துச் சொன்னால், அடேயப்பா, இந்தப் பார்ப் பனர்களுக்கு மூக்கு வெடித்து மண்டை யில் சொருகுகிறது. தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஒரு திருமணத்தில் இதை எடுத்துச் சொன்னார் என்பதற்காக இன்றுவரை எகிறிக் குதித்துத் தாண்டவ மாடுகின்றனர்.

‘‘வினோதரச மஞ்சரி'' எனும் வீரா சாமி செட்டியார் எனும் பெரும்புலவரால் எழுதப்பட்ட நூலில் ‘‘மகாபண்டிதனை சிறுபிள்ளை வென்றது'' என்ற ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது.

கோலாகலம் என்னும் பெயருடைய வடமொழிப் பண்டிதனைப் பாண்டிய மன்னன் பிருதியாக மரித்து வந்தான், கோலாகலம் சகல சாத்திரங்களையும் கற்ற நிபுணன். தனக்கு நிகராகக் கற்றவர் யாருமில்லை என்னும் செருக்குக் கொண் டவன்.  ‘கற்றது கைம்மண்ணளவு கல் லா தது உலகளவு' என்னும், முது மொழியை அறியாதவன். ‘‘பெருக்கத்து வேண்டும் பணிவு'' என்பது அவனிடத்தில் சிறிதும் இல்லை ‘வல்லவர்க்கு வல்லவர் வையத் தில் உண்டு' - என்பது பழ மொழியன்றோ? பண்டிதர்களை வாதுக்கழைப்பான் அவர் களை வாதில் வென்று அவமானப்படுத் துவான். ‘மேருமலைக்கும் வந்தன்று தாழ்வு' என்றாற்போல் அவன் செருக்கு அழிவதற்கும் ஒரு காலம் வந்தது.

யமுனாசாரியார் அல்லது ஆள வந்தார் என்னும் பெயருடைய, வைணவ மதத்தைச் சார்ந்த இளம்பிள்ளை கோலா கலனோடு வாதிட்டு அவன் செருக்கை அழித்தொழித்தார் என இக்கட்டுரையில் குறிப்பிடப்படுகிறது.

மூன்று வினாக்கள் கோலாகலனைக் கேட்டதாகவும் அவற்றிற்கு அவன் மறுப் புக் கூற முடியாது விழித்தான் எனவும் கூறப்படுகிறது.

மூன்று வினாக்களுக்கும் உங்களால் மறுப்புக் கூற முடியுமா எனக் கோலாகலன் வினவியதாகவும், அதுவும் தம்மால் முடி யும் என ஆளவந்தார் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

மூன்றாவது வினாவிற்கு ஆளவந் தார் கூறும் மறுப்பு கொடுமையிலும் கொடுமை யானது. பாண்டியனின் மனைவி பதிவிரதை என முதலில் கூறி விட்டுப் பின்னர் அவள் பதிவிரதை அல்லள் என மறுப்புக் கூறு கிறார். அம் மறுப்பாவது,

‘‘கரு உற்பத்தியால் சந்திரனுக்கும், விளையாட்டால் கந்தருவனுக்கும், தீபன விர்த்தியால் அக்கினிக்கும் முன்பு கவா தந்திரியப்பட்டுப் பின்பு மணம் செய்து கொள்பவனுக்கு உரியவளாகின்ற கார ணத்தால், நான்கு பதிகளை உடையவள் ஆவாள்.

எந்தப் பெண்ணும் திருமணம் நடக் கும் போது நாலாந்தரமாக ஒருவனுக்கு வாழ்க்கைத் துணை (மனைவி) ஆகிறாள் - என மேற்சொன்ன மந்திரம் கூறுகிறது, இதைவிட என்ன அக்கிரமம் வேண்டும்.

இக்காலத்தில் தமிழர்கள் இல்லத்தில் புரோகிதனைக் கொண்டு திருமணம் செய் யும்போது மேற்சொன்ன மந்திரத்தையே வடமொழியில் கூறுகிறான். தமிழில் இம் மந்திரத்தைச் சொல்வானானால் அவனை நாம் வாளா விடுவோமா? புரோகிதனை வைத்துத் திருமணம் செய்வது எவ்வளவு கேவலமானது என்பதைத் தமிழர்கள் உணர்வார்களாக.

இந்தப் பொருந்தா மந்திரத்தைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் நச் சினார்கினியரும் உடன்பட்டு எழுதுகிறார். அவ்வுரையாவது:

கரணத்தின் அமைந்து முடிந்த காலை'

(கற்பியல் 5)

என்னும் அடிக்கு, ‘‘ஆதிக் காரணமும் அய்யர் யாத்த காரணமும் என்னும் இரு வகைச் சடங்கானும் ஓர் குறைபாடின்றாய், மூன்று இரவின் முயக்கம் இன்றி, ஆன் றோர்க்கு (மதி கந்தருவர் அங்கி) அமைந்த வகையால் பள்ளி செய்து ஒழுகி நான்காம் பகல் எல்லை முடிந்த காலத்து'' - எனப் பொருந்தா உரை எழுதி மேலும் விளக்கம் கூறுகிறார்.

அஃதாவது,

‘‘அது. முதல்நாள் தண்கதிர்ச் செல் வற்கும், இடைநாள் கந்தருவருக்கும், பின் னாள் அங்கியங் கடவுளுக்கும் அளித்து நான்காம் நாள், அங்கியங் கடவுள் எனக்கு நின்னையளிப்ப, யான் நுகர வேண்டிற்று. அங்ஙனம் வேதம் கூறுதலால் எனத் தலைவிக்கு விளக்கம் கூறுதல்" என வேத நெறியை எடுத்துக் கூறுகிறார்.

இக்கருத்துகள் தமிழர்களுக்குத் தேவையா? அய்ந்து நூல்களுக்கு அரிய உரை எழுதிய நச்சினார்க்கினியருக்கு இப்படிப்பட்ட ஆபாசக் கருத்துகளைத் தமிழ் இலக்கணத்தில் நுழைக்க எப்படி எண்ணம் வந்தது?''

இதைச் சொல்லுவது திராவிடர் கழ கத்தார் அல்லர்.  நாம் மேற்குறிப்பிட்ட பெரும் புலவர்  திருமண மந்திரம்பற்றி சொன்னார். தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சொன்னார் என்பதற்காக வானரம்போல் தாவிக் குதிப்பவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்களாம்?

திருப்பி அடிக்க வேண்டுமே தவிர - ஒதுங்கக் கூடாது. சமாதானம் செய்தால் எதிரி ஜெயித்து விடுவான் என்பது தந்தை பெரியார்தம் வாக்கு!

- #மயிலாடன்
-விடுதலை, 9.8.20