வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

மனுதர்மத்தை கொளுத்த வேண்டும் ஏன்?

காலில் பிறந்தவன் சூத்திரன்


அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப் பாற்றுவதற்காக தன் முகம், தோள், துடை, பாதம் இவை களினின்று  உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும் மறுமைக்கும் உப யோகமான கருமங்களைத் தனித்தனியாய் பகுத்தார்.                                                                                                       -

(அத்யாயம் 1 :சுலோகம் 87 )

முதல் படிப்பு பிராமணனுக்கே


பிராமணனுக்கு ஓதுவித்தல், ஓதல், எக்கியஞ் செய்தல் எக்கியஞ் செய்வித்தல், தானங்கொடுத்தல், தானம் வாங் குதல் ஆகிய இவ் ஆறு தொழிலையும் ஏற்படுத்தினார். -

( அத்யாயம் 1 : சுலோகம் 88 )

சூத்திரனுக்கு அடிமைத்தொழில்


சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றி பணிசெய்வதை முக்கியமான தரும மாய் ஏற்படுத்தினார். இதனால் அவனுக்கு தான முதலிய வையுண்டென்று தோன்றுகிறது.

- ( அத்யாயம் 1 : சுலோகம் 91 )

சூத்திரனுக்கு தாழ்வான பெயர் சூட்டுக


பிராமணனுக்கு மங்களத்தையும்; க்ஷத்திரியனுக்கு பலத்தையும்; வைசியனுக்கு பொருளையும்; சூத்திரனுக் குத் தாழ்வையும் காட்டுகிறதான பெயரை இடவேண் டியது.

- ( அத்யாயம் 2 : சுலோகம் 31 )

பிராமணனுக்குக் சர்ம்மவென்பதையும்; க்ஷத்திரி யனுக்கு வர்மம் என்பதையும்; வைசியனுக்கு பூதி யென்பதையும் சூத்திரனுக்குத் தாசனென் பதையும் தொடர்ப்பேராக இடவேண்டியது.

- ( அத்யாயம் 2 : சுலோகம் 32 )

கீழ்ஜாதி - சூத்திரனுக்கு பூணூல் உரிமை இல்லை.


பூணூல் கூட பல வகை (அடுக்குப்படி)


பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், க்ஷத்திரி யனுக்கு க்ஷணப்ப நூலாலும், வைசியனுக்கு வெள்ளாட்டின் மயி ராலும் மூன்றுவடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது.

- ( அத்யாயம் 2 : சுலோகம் 44 )

சூத்திரன் தொட்டால் உணவு அசுத்தம் பன்றி மோத்தலினாலும், கோழி சிறகின் காற்றினாலும், நாய் பார்வையினாலும், சூத்திரன் தொடுதலாலும் பதார்த்தம் அசுத்தமாகின்றது.

- ( மூன்றாம் அத்தியாயம்: சுலோகம் 241)

சூத்திரனுக்கு சோறு போட்டால் நரகம் எவன் சிரார்த் தஞ்செய்து மிகுந்த அந்ந முதலியவற்றை சூத்திரனுக்குப் போடுகிறானோ அந்த மூடன் கால சூத்திரமென்னும் நரகத்தில் தலைகீழாக விழுகிறான்.

- ( அத்யாயம் 3 : சுலோகம் 249)

சூத்திரன் என்றால் பெருமையா? யுத்தத்தில் ஜெயித்துக்கொண்டு வரப்பட்டவன், பத்தி யினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக் கப்பட்டவன், குலவழியாக தொன்றுதொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன், என தொழிலாளிகள் எழுவகைப்படுவர்.

- ( அத்யாயம் 8 : சுலோகம் 415)

சூத்திரனுக்கு எதுவும் சொந்தமில்லை


பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன எழுவித தொழிலாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம். யஜமாநனெடுத் துக் கொள்ளத்தக்க பொருளையுடைய அந்தச் சூத்திரர் தன்பொருளுக்குக் கொஞ்சமுஞ் சொந்தக்காரரல்ல.

- ( அத்யாயம் 8: சுலோகம் 417)

விபசாரத்திற்கு அனுமதி?


ஒருவனுக்கு நிலமில்லாமல் வித்துள்ளவனாயிருந் தால் மற்றுமொருவனையடைந்து உன்னிலத்தில் நான் பயிரிடுகிறேன், அப்பயிர் நம்மிருவருக்கும் பொது வாயிருக்கட்டுமென்று ஏற்பாடு செய்து கொண்டு பயிரிடு கிறாற்போல், ஒருவன் மனையாளிடத்தில் மனை யாளில்லாத மற்றொருவன் பிள்ளை யையும் உண்டு பண்ணலாம். அந்த வேற்பாடு இல்லாவிட்டால் உடைய வனைச் சாருமென்பது பிரத்தியக்ஷமாகவேயிருக்கிறது. ஏனெனில், பீஜத்தைவிட நிலமுயர்ந்ததல்லவா.

- ( அத்யாயம் 9 : சுலோகம் 52)

மனுதர்மம் எரிந்த வரலாறு


1922 திருப்பூர் காங்கிரசு மாநாட்டை ஒட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் இவற்றுக்குப் பாதுகாப்பாய் உள்ள இராமாயணத்தையும் மனு ஸ்மிருதியையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும்.


1901ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்கூட சூத்திரர்கள் என்ற விவரம் தரப்பட்டு இருந்தது.


1927இல் சென்னையில் கூடிய பார்ப்பனர் அல்லாத இளைஞர்களின் முதல் மாநில மாநாட்டில் ஜே.எஸ்.கண்ணப்பர், அரசு பதிவேடுகளிலிருந்து 'சூத்திரன்' என்ற சொல் நீக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைத்தார்.


1927 திசம்பர் 4 அன்று வடார்க்காடு மாவட்டம், குடியாத்தத்தில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் மனுதர்ம சாஸ்திர நூல் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.


1927 திசம்பர் 25 அன்று அம்பேத்கர் தலைமையில் மராட்டிய மாநிலத்தில் மகத் நகரில் மனுதர்மம் எரிக்கப்பட்டது.


வரும் 17.05.1981 அன்று திராவிடர் கழக சார்பில் நாடெங்கும் மனுதர்மத்தை திராவிடர் கழகம் எரித்து சாம்பலாக்கியது. 10.03.2017அன்று திராவிடர் கழக மகளிரணியினரே முற்றிலும் பங்கேற்று தமிழ்நாடெங்கும் மனுதர்ம எரிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.


07.02.2019 அன்று மனுதர்ம எரிப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. சூத்திர இழிவுப்பட்டம் ஒழிய பெண்ணடிமை ஒழிய கொளுத்துவீர்! கொளுத்துவீர்!! மனுதர்மத்தை!


பிராமணனையே தொழவேண்டும்


சூத்திரன் சுவர்க்கத்திற்காவது, ஜீவநத்திற்காகவாவது அல்லது இரண்டிற்குமாவது, பிராமணனையே தொழ வேண்டும். இவன் பிராமணனை யடுத்த சூத்திரனென்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே அவனுக்குப் பாக்கியம்.

- ( அத்யாயம் 10 : சுலோகம் 122)

சூத்திரன் அதிகம் பொருள் சம்பாதிக்கக் கூடாது.

சூத்திரன் பொருள் சம்பாதிக்கத்தக்கவனாயிருந்தாலும் குடும்பத்திற் குபயோகமானதைவிட மிகவுமதிக பொருளைச் சம்பாதிக்கக் கூடாது. அப்படி சம்பாதித்தால் தன்னாலுபசரிக்கத்தக்க பிராமணாளையே ஹிம்சை செய்ய வேண்டிவரும்.

- ( அத்யாயம் 10  : சுலோகம் 129)

பெண் அடிமைத்தனம்


பெண் சுயவிருப்பத்தில் வாழக்கூடாது. சிறுவயதில் தந்தைக் கட்டுப்பாட்டிலும், பருவ வயதில் கணவன் கட்டுப்பாட்டிலும், கணவன் இறந்தபின் பிள்ளைகள் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும். எப்போதும் தன் விருப்பத்தில் அவள் வாழக்கூடாது.

- (அத்யாயம் 5 - சுலோகம் 148)

கணவன் மோசமானவனாய், கொடியவனாய் இருந்தாலும், பிற பெண்களோடு உறவு கொண்டு அலை பவனாயினும், நன்னடத்தை, நற்குணம் இல்லாதவனா யினும், பத்தினிப் பெண் என்பவள் அக்கணவனையே தெய்வமாக வழிபட்டு வாழவேண்டும்!

- (அத்யாயம் 5 - சுலோகம் 154)

கொலைத் தொழில் புரிந்த மற்ற ஜாதிக்காரர்களைத் தூக்கில் போட வேண்டும், பிராமணன் கொலைக் குற்றம் செய்வானேயானால், அவனது தலை மயிரை மொட்டை யடித்தலே தண்டனையாகும்.

- (அத்யாயம் 8 - சுலோகம் 379)

பெண்கள் பெரும்பாலும் விபசாரிகள் என்று அநேக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

- (அத்யாயம் 9 - சுலோகம் 19)

ஆணுறுப்பு,பெண்ணுறுப்பு இவற்றில் ஆணுறுப்பே உயர்ந்தது.

- (அத்யாயம் 9 - சுலோகம் 35)

மற்றவன் மனைவியிடத்தில் மனைவியில்லாத வேறொருவன் உடலுறவு கொண்டு பிள்ளை பெறலாம்!

- (அத்யாயம் 9 - சுலோகம் 52)

விதவையிடத்தில் பெரியோர்களினநுமதி பெற்றுக் கொண்டு புணரப்போகிறவன் தன்தேகமெங்கும் நெய்யைப் பூசிக்கொண்டு இரவில் இருட்டானவிடத்தில் அவளைப் புணர்ந்து ஒரே பிள்ளையை யுண்டுபண்ண வேண்டியது இரண்டாம் பிள்ளையை ஒருபோதும் உண்டு பண்ணக்கூடாது.

- ( அத்யாயம் 9 : சுலோகம் 60)

கணவன் சூதாடுகிறவனாய் இருந்தாலும், குடிகாரனா யிருந்தாலும், நோயாளியாக இருந்தாலும், மனைவி அவனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். இல்லை யென்றால் அவளுக்கு ஆடை, அலங்காரம், படுக்கை தராமல் விலக்கி வைக்க வேண்டும்.                                                                                                                      -

(அத்யாயம் 9 - சுலோகம் 78)

முப்பது வயது ஆண், அழகான 12 வயது பெண்ணையும், இருபத்து நான்கு வயது ஆண் எட்டு வயதுள்ள பெண்ணையும் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.   -

(அத்யாயம் 9 - சுலோகம் 94)

பெண்களையும், பிராமணர் அல்லாதாரையும் கொல் லுதல் பாதகமாகாது

(மனு அத்தியாயம் 11, சுலோகம் 65)

-  விடுதலை நாளேடு, 1.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக