சனி, 9 பிப்ரவரி, 2019

குருமூர்த்தியாரே ஓடாதே நில்! ஒழுக்கமுள்ள ஒரே ஒரு கடவுள் உண்டா உங்களிடத்தில்?

மின்சாரம்

"இங்கிலாந்தில் நமது சுவாமிகள் (விவேகானந்தர்) மகா பண்டிதர் மாக்ஸ் முல்லருடன் தர்க்கம் செய்கையில் முல்லர் 'இந்துக்கள் மதத்தை ஆராய்ச்சி செய்யுமிடத்து சுவாசமிடும் நுரையிரல் எரிந்து விடும்' என்றார்" என்று கைவல்யம் அவர்கள் குறிப்பிடுகின்றார் (கைவல்ய சாமியார் கட்டுரைத் தொகுதி எண் 2 - பக்கம் 21).

இது ஏதோ மேம்போக்காகச் சொன்னதல்ல. இந்துக் களின் கடவுள்கள் எந்தத் தரத்தில், காட்டுமிராண்டித்தனத்தில், ஆபாசத்தில், ஒழுக்கக் கேட்டில் உழன்று, திரண்டு உருக்குலைந்து கிடக்கின்றன என்பதற்கு இதோ ஒரு பட்டியல்.

(1). சூரியனுடைய ரத சாரதியின் பெயர் அருணன். இவன் இருகால்களும் அற்ற முடவன். தாயால் அவயங் காக்கப்பட்ட முட்டையிலிருந்து இவன் பிறந்தவன். இவன் இந்திர சபை வினோதங் காண்பதற்கு என்று பெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான். இதனால் வாலி என்பவன் பிறந்தான். இந் நிகழ்ச்சியால் அருணன் வேலைக்குத் தாமதித்துவர, சூரியன் காரணம் கேட்டு, நடந்ததையறிந்து, மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வரவேண்டி, அவன் அப்படியே வர, அவனைச் சூரியன் புணர்ந்தான். இதனால் சுக்ரீவன் பிறந்தான்.

(2). நாரதர் என்னும் மகரிஷி ஒரு நாள் பெண் வேடம் தாங்கியிருக்க அதைக் கண்ட கிருஷ்ண பரமாத்மா நாரதனைக் கண்டு மோகித்துப் புணர, அதன் பயனாய் 60 பிள்ளைகள் நாரதருக்குப் பிறந்தன.

(3). தவ வலிமை மிக்க பஸ்மாசுரன் சிவன் தலையில் கையை வைத்து அழித்துவிட நாடியபோது, மகாவிஷ்ணு மோகினி வேடம் பூண்டு பஸ்மாசூரனை மயக்கி, அவன் கையை அவன் தலையிலேயே வைத்து எரிந்து போகுமாறு செய்தபின், அந்த மோகினி வேடத்திலிருந்த விஷ்ணுவை, உயிருக்குப் பயந்து அய்வேலங்காயில் ஒளிந்திருந்த சிவன் மோகித்துப் புணர, அதன் பலனாக அரிஹர புத்திரன் பிறந்தான்.

இவை ஆணை ஆண் புணரும் வழக்கத்தைக் காட்டுபவை அல்லவா?

(4). பரமசிவன் பார்வதியுடன் வனத்தில் உலாவச் சென்றிருந்தபோது, அங்கிருந்த சித்திரகூடத்தில் ஆண்-பெண் யானைகள் கலவி செய்வதைப் போன்ற ஓவி யத்தைப் பார்த்துக் காமவெறி கொண்டு, பக்கத்தில் இருந்த பார்வதியைப் பெண் யானையாக்கிப் புணர்ந்து, கணபதியைப் பெற்றான்.

(5) சூரியன் பெட்டைக் குதிரையாயிருந்த சஞ்சிகையைக் கூடியதன் பயனாக, அஸ்வினி தேவர்கள் பிறந்தனர்.

(6) பிரமன் திலோத்தமையைப் படைத்து, அவளழகைக் கண்டு மோகிக்க, அவள் பிரமன் செயல் கண்டு பயந்து பெண் மானுருக் கொண்டு ஓட, பிரமன் அவளைத் துரத்திக்கொண்டு போய்ப் புணர்ந்தான்,

(7) பிரமன், ஒரு நாள் காமவெறி உச்சமடைந்தவனாய் வனத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தபோது, ஒரு புதரில் பெண் கரடி ஒன்றிருக்கக் கண்டு அதனுடன் புணர, அதன் பலனாக ஜாம்பவந்தன் பிறந்தான்,
(8) பாரிஷதன் என்பவனின் மனைவி வபுஷ்டமை என்பவள் மீது இந்திரன் காமங்கொள்ள, அவள் அவனுக்கு இணங்காமற் போக, இந்திரன் எப்படியாவது அவளைச் சேர்ந்தேயாகவேண்டும் என்று எண்ணிச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். அச்சமயம் பாரிஷதன் அஸ்வமேதம் நடத்தினான். யாக குதிரையுடன் யாக கர்த்தாவின் மனைவியைப் புணரவைப்பது அஸ்வமேதத்தின் முக்கியச் சடங்கு ஆகையால், தான் யாக குதிரையாக இருந்தால் பாரிஷதன் மனைவியாகிய வபுஷ்டமையிடத்து யாகப் புரோகிதர்களே சேர்த்து வைப்பார்கள். ஆகையால் தான் யாக குதிரையாக வேண்டுமென்று இந்திரன் உறுதி செய்து கொண்டான். அதன்படி அஸ்வமேதம் நடந்தபோது, இந்திரன் யாகக் குதிரையைக் கொன்று அதனுடலில் தான் புகுந்துகொண்டான். யாக முறைப்படி யாககர்த்தாவாகிய பாரிஷதனின் மனைவியாகிய வபுஷ்டமையின் பெண் குறியில் யாக ஆண் குதிரையின் குறியை யாகப் புரோகிதர்கள் சேர்த்து வைத்த சமயத்தில் இந்திரன் தம் காம எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டான்.

9). அஸ்வமேதம், அஜமேதம் போன்ற யாகங்களில் யாக கர்த்தாவின் பத்தினியை, யாக மிருகத்துடன் புணர வைக்கும்  வேலையை பாக்கர்த்தாவும், யாகப் புரோகி தர்களும் சேர்ந்து செய்வர்.

10). பூமியைப் பாய் போலச் சுருட்டிக் கொண்டு கடலில் போய் ஒளித்த இரண்யாஷனைப் பன்றி வேடத்தில் சென்று விஷ்ணு கொல்ல, இப்பன்றியைக் கண்டு பூதேவி மோகித் துக் கலவிசெய்ய, இதன் பலனாக நரகாசுரன் பிறந்தான்.

இவை மிருகப் புணர்ச்சி செய்யும் வழக்கத்தைக் காட்டுபவை அல்லவா?

(11). பிரமன் சரஸ்வதியைப் படைத்தான். அவளழகைக் கண்டு மோகித்து, அவள் பயந்தோடியும் விடாமல் அவளைப் புணர்ந்து தம் மனைவியாக்கிக் கொண்டான். தாம் படைத்த மகளையே இவ்வாறு மனைவியாக்கிக் கொண்டதைப் பரிகசித்த முனிவர்களாகிய மரீச புத்திரர் 6 பேர்களையும் சினந்து அசுரர்கள் ஆகுமாறு சபித்தான். இதேபோன்று இந்திரன் வேண்டுகோளின் மீது திலோத் தமையைப் படைத்து அவளையும் மோகித்துக் கூடினான்.

(12). பிரமன் இதே போன்று தாமரை மலரிலிருந்து பத்மை என்ற பெண்ணைப் படைத்து அவளைப் புணர முயல, அவள் எவ்வளவோ கெஞ்சியும் விடாமல் அவளைப் பலவந்தமாகக் கற்பழிக்க, அவள் அதனால் கருக்கொள்ள, தேவர்கள் இதையறிந்து நையாண்டி செய்ய, இதைச் சகிக்காத பிரமன் மீண்டும் அவளைப் புணர்ந்து அவள் கருவிலிருந்த தன் விந்துவைத் தன் ஆண் குறி மூலம் உறிஞ்சி இழுத்து விட்டான்.

இவை மகளைத் தகப்பனே புணரும் வழக்கத்தைக் காட்டுவதல்லவா?

(13). பெற்ற தாய் மீது மோகங்கொண்டு, அதற்குப் பாதகமாயிருக்கும் தந்தையைக் கொன்று, தாயுடன் கலவி செய்து இன்ப வாழ்வு நடத்திய ஒரு பார்ப்பனப் பைய னுக்குப் பரமசிவன் முக்தியளித்ததாகத் திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

இது தாயை புணர்ந்தாலும் முக்தி நிச்சயமென்பதன் மூலம் தாயைப் புணரும் வழக்கத்தைக் காட்டவில்லையா?

(14). தாருகாவனத்து ரிஷிபத்தினிகள் அழகிகள் என்ப தற்காகப் பரமசிவன் அவர்களை மயக்கிப் புணர்ந்து அவர்கள் கற்பை அழித்தான்.

(15). பிரமனோ தன் பேர்த்தியாகிய தாக்ஷாயணியின் அழகைக் கண்டு மோகித்து வீர்யத்தை விட்டான். பரமசிவன் மனைவியாகிய பார்வதி தேவி மீது பிரமன் காமமுற்றுப் பரமசிவனைப் போல் 5 தலைகளுடன் சென்று அவளை அணைத்தான்; கவுரி கல்யாணத்தில் அவள் தொடையழகைக் கண்டு காமுற்று விந்தை விட்டான். அசுவமேத யாகம் செய்யத் தொடங்கி அதற்கு வந்திருந்த தேவபத்தினிகளைக் கண்டு காமமுற்று வீரியம் விட்டான்.

(16). இந்திர சபையில் ஊர்வசி நடனமாட பிரமன் அவளைப் பார்த்து மோகித்து வீரியத்தை வெளியே விட்டான்.

(17). துரோணரின் மனைவி கிருபியின் அழகினை அறிந்த பரமசிவன் அவள் மீது காமவெறி கொண்டு, அவளை நிர்வாணமாக்கி நிற்க வைத்துப் பார்த்து வீரியத்தைவிட, அதன் பலனாக அஸ்வத்தாமன் பிறந்தான்.

(18). கவுதம முனிவர் மனைவி அகலிகை அழகி எனக் கேள்விப்பட்ட இந்திரன், இரவு நடுச்சாமத்தில் முனிவரை ஏய்த்து வெளியேறச் செய்து, அம் முனிவர்போல இந்திரன் வேடம் பூண்டு, அகலிகையைப் புணர்ந்தான். இதே போன்று அவரவரின் கணவர்களைப் போன்று நடித்து, இந்திரத் துய்மன் மனைவியையும், தேவசன்மன் மனைவி யையும், கவி முனிவர் மனைவியையும், பாரிஷதன் மனைவியையும் கற்பழித்தான்.

(19). அக்னி பகவானின் மருமகளை எமதரும பகவான் கண்டு மோகித்து, அவள் கணவன் இல்லாத சமயத்தில் அவளைப் புணர்ந்தான்.

20). அக்னி பகவான் சப்தரிஷிகளின் யாகத்திற்குச் சென்று அந்த ரிஷிகளின் மனைவிகள் மீது மையல் கொண்டான். சுதரிசனை என்பவளைப் பலாத்காரத்தினால் மணந்தான்.

(21). சலந்திரன் மனைவி விருந்தை மீது மகாவிஷ்ணு மோகங்கொண்டு, சலந்திரனைச் சூதால் கொன்று, அவனைப் போன்று வேடம் பூண்டு, விருந்தையைக் கற்பழித்தான்.

(22). அனசூயை அழகி என்று கேள்விப்பட்டு அவளைக் கற்பழிக்கவென்று - பிர்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும் மூர்த்திகளும் புறப்பட்டுச் சென்று அவளை நிர்வாண மாக்கினர்.

இவை பிறர் மனைவிகளைக் கண்டு காமுறுதலும் கற்பழித்தலுமான செயலைக் காட்டவில்லையா?

(23). திரவுபதி மகா பதிவிரதைகளுள் ஒருத்தி, இவளுக்கு 5 கணவர்கள். இவர்கள் போதாதென்று 6ஆவதாகக் கர்ணன் என்பவனையும் மோகித்தாள்.

(24), மகா பதிவிரதைகளுள் மற்றொருத்தி தாரை. இவள் தேவகுரு  பிரகஸ்பதியின் மனைவி. இவள் தன் கணவன் ஊரில் இல்லாத சமயத்தில், தன் கணவரி.டம் படிக்க வந்திருந்த சந்திரன் என்னும் மாணவனை மோகித்து, அவனுடன் கலவி செய்து, நீண்ட நாள் வரை அவனுக்கு ஆசை நாயகியாய் இருந்து புதன் என்ற குழந்தையைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பிரகஸ்பதியின் மனைவி யானாள்.

(25). கவி முனிவர் மனைவி முகுந்தைக்கு ருக்மாங்கதன் மீது மோகம் வந்தது. அவனோ இவளைச் சேர மறுத்து விட்டான். அவளுக்கு ருக்மாங்கதன் மீது மட்டற்ற மய்யல் ஏற்பட்டு அதே விகாரத்திலிருக்கையில், இதையறிந்த இந்திரன் ருக்மாங்கதன் போல வேடம் பூண்டு அவளைப் புணர்ந்து மகிழ்வித்தான்.
இவை பிற புருஷரை இச்சிக்கும் குணத்தைக் காட்டவில்லையா?

(26). ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விஷ்ணுவின் அவதாரங் களில் ஒருவர். இவர் சிறு பிள்ளையிலேயே வெண்ணெய் திருடி மத்தால் அடி பட்டவர். வளர்ந்து பருவ வயதைய டைந்தவுடன் பெண் சாயல் எந்த வீட்டில் காணப்பட்டாலும் சரி, உடனே திருட்டுத்தனமாக - அப்பெண்ணைக் கூடியவர். இவ்வாறாகச் சுமார் 60,000 பெண்களைத் திருட்டுத்தனமாக அவர்களுடைய கணவர்கள் அறியாமல் - கலவி செய்தவர். 
இவை திருட்டுச் செயலைக் கற்பிப்பவையாக இல்லையா?

(27). தேவர்கள் சுராபானம்-சோமபானம் செய்தனர் என்பதாக இதிகாச - புராணங்கள் கூறுகின்றன.
இது மது அருந்துதலைக் காட்டுவதாக இல்லையா?

(28). கிருஷ்ண பரமாத்மாவின் ஆதரவு பெற்றவர்களும், இந்திராதி தேவர்களின் புதல்வர்களுமான தர்மர் ஆகியோர் தங்களின் மனைவி உள்பட எல்லாவற்றையும் சூதாட்டத்தில் வைத்துத் தோற்று, அதன் பலனாகச், சூதாட்டத்தில் தோற்கப்பட்ட பொருளாகிய திரவுபதையை, இராஜசபையில் வைத்துச் சேலையை அவிழ்த்து, மானபங்கம் செய்தனர்-சூதாட்டத்தில் வென்றவர்கள்.
இது சூதாடுவதைக் கற்பிக்கவில்லையா?

(29), கொலையைக் கற்பிக்கும் சம்பவங்கள் பல: 
காம வெறியால் விருந்தையின் கணவனை விஷ்ணு கொன்றான்.

(30). தக்க பருவமடையாத-ருதுவாகாத மச்சகந்தி என்னும் பெண்ணைப் பட்டப்பகலில் நடு ஆற்றில் படகில் பராசரமுனி காமமுற்றுக் கற்பழித்து விட்டான்.

(31). இதே போன்று குந்தி பருவமடையாத சிறுமியா யிருக்கையில் சூரியன் காமுற்றுக் கற்பழித்து விட்டான்.
இவை சின்னஞ்சிறுமிகளையும் விடாமல் புணரும் புத்தியைக் காட்டவில்லையா?

(32). வால்மீகி பாம்புப் புற்றில் பிறந்தார். அஸ்வத்தாமன் குதிரை வயிற்றில் பிறந்தார். மாண்டவ்யர் தவளையிடம் பிறந்தார். சவ்னகன் நாயிடம் பிறந்தார். கவுதமர் பசுவினிடம் பிறந்தார். அகஸ்தியர் பானையில் பிறந்தார். காங்கேயன் கழுதையிடம் பிறந்தார். பிரமன் தாமரையில் பிறந்தார். இலஷ்மி கடலில் பிறந்தாள். பார்வதி மலைக்குப் பிறந்தாள். மச்சகந்தி மீனிடம் பிறந்தாள். கணபதி யானைக்குப் பிறந்தார். விரலில் கங்கை பிறந்தாள். கொட்டாவியில் சிந்தூரன் பிறந்தான். தும்மலில் குபன் பிறந்தான். கண்ணீரில் வாநரன் பிறந்தான். உரோமத்தில் உரோமாஞ்சன் பிறந்தான்.
இவை அறிவுக்குப் பொருந்தாத பிறப்புகளாக இல்லையா?

இவ்வாறாக ஆணை ஆண் புணர்வதும், மிருகப் புணர்ச்சி செய்வதும், மகளைத் தந்தை புணர்வதும், பெற்ற தாயைத் தனயன் புணர்வதும், பிறர் மனைவிகள் மீது மோகங்கொண்டு கற்பழிப்பதும், பிற புருஷர் மீது காமுற்றுக் கூடுவதும், திருட்டு, மது அருந்துதல், சூதாடுதல், கொலை செய்தல், பருவமெய்தாக் கன்னிப் பெண்களைக் கற் பழித்தல், அறிவுக்குப் பொருந்தாத விபரீதங்களைக் கூறுதல் ஆகிய திருவிளையாடல்கள் இன்றும் ஆரியர் களுடைய புராண - இதிகாச - சாஸ்திரங்களில் மலிந்து கிடப்பதைக் காணலாம்.

என்ன குருமூர்த்தி மீtநீ களே! இவை போதுமா, இன்னும் வேண்டுமா?

இவைதான் உங்கள் தெய்வங்களா? தெய்வ நூல்களா? இவற்றை இன்று வரை இம்மியளவும் பிசகாமல் தூக்கிச் சுமக்கின்றீர்களே - தெய்வாம்சம் என்று கண்ணில் ஒத்திக் கொள்கிறீர்களே - இதன் மூலம் உங்கள் தகுதி, தரம், ஒழுக்கம், பண்பாடு எந்தத் தரத்திலிருக்கிறது என்பது விளங்கவில்லையா?

இவற்றை நம்பும், மதிக்கும், தொழும், கடைபிடிக்கும் உங்களிடம் நல்லொழுக்கத்தை எதிர்பார்க்க முடியுமா?

தனி மனிதனைத் தொடர்ந்து சமூகத்தில் நல்லொழுக் கத்தை, கலாச்சாரத்தை சீரழிப்பது, வாழையடி வாழையாக வந்த குருதியில் குமிழுகின்ற மரபணுக்களில் கலந்த இந்தக் கேடு கெட்ட இந்துத்துவக் குணாம்சங்கள் தானே காரணம்? உங்களின் ஜெகத் குருக்களே மடத்துக்கு வந்த பெண்ணின் கையைப்பிடித்து இழுக்கவில்லையா?

இந்த இலட்சணத்தில் இந்த ஆபாசங்களை, அரு வருப்பை, ஒழுக்க மீறல்களை, மனிதத் தன்மைக்கு எதிரான வைகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து மனமாற்றம் செய்து வருகின்ற, பகுத்தறிவுச் சிந்தனையை ஊட்டுகின்ற ஓர் இயக்கத்தை - அதன் தோற்றுநரைத் தூற்றுவது சரியானதுதானா? அந்தத் தூற்றல்காரர்களைத் தோலுரிப்பது நல்லோரின் கடமையல்லவா?

எதையும் தலை கீழாகப் புரட்டிப் பேசுவதுதான் குரு மூர்த்திகளே உங்கள் புத்தியா? ஓடாதே நில்லும் - நாளையும் சாட்டை சுழலுகிறது.

- விடுதலை நாளேடு, 27.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக