வியாழன், 23 பிப்ரவரி, 2023

கைவல்ய சாமியார்

* சுயமரியாதை இயக்கத்தின் மிகப் பெரிய சிந்தனையாளராகத் திகழ்ந்தவர்.
* பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இன்றைய கேரளாவின் கள்ளிக் கோட்டையில் பிறந்த தமிழர்.வசதியான குடும்பத்தில் பிறந்த இவரின் தந்தை,சகோதரர்கள் வேதங்களை கற்றவர்கள்.
* இவர் இடுப்பு வேட்டியைத் தவிர,சாப்பாட்டைத் தவிர,வேறு எதையும் விரும்பியதில்லை,வைத்துக் கொண்டிருந்ததும் இல்லை என்கிறார் தலைவர் பெரியார்.
* கள்ளிக்கோட்டை,பாலக்காடு மதுரை,திருச்சி,முதலிய ஊர்களில் 18-வருடங்கள் வாழ்ந்து இறுதியில் மனவிரக்தியில் கோவை வந்து சேர்ந்தார்.
* இந்தியா முழுவதும் சாமியாராக சுற்றுப் பிரயாணம் செய்தவர்.
* பார்ப்பன கொள்கைகளை தர்க்க ரீதியாக எதிர்த்து பேசி வாதாடும் வல்லமை பெற்றவர்.
* சங்கராச்சாரி கோவை மாவட்டத்தில் சுற்றுப் பிரயாணம் செய்யும் பொழுது, அந்தந்த இடங்களில் அவரை எதிர்த்து பிரச்சாரம் செய்து வந்தவர்.
* பார்ப்பன எதிர்ப்பு பார்ப்பனமத எதிர்ப்பு,
* ஆணாதிக்க எதிர்ப்பு,தாழ்த்தப் பட்டோர் விடுதலை ஆகியவற்றில் உறுதியாக இருந்த கைவல்யம்.
* குடி அரசு தொடங்கிய முதல் இரண்டு ஆண்டுகளிலேயே அதில் எழுதியவர்.
* திராவிடன்,புரட்சி,ஏடுகளிலும்,பிற சுயமரியாதை இயக்க ஏடுகளிலும் தொடர்ந்து எழுதி வந்தவர்.
* தமிழ் இலக்கியங்களிலும்,புராண சாத்திரங்களிலும் ஆழ்ந்த புலமை கொண்டவர்.
* தந்தை பெரியாருடன் 1903-களில் நடந்த முதல் சந்திப்பு இருவருக்கும் அதிருப்த்தி ஏற்படும் படி இருந்தது.
* ஜாதி மத சாஸ்திர சம்பந்தமான அயிப்பிராயங்களில் ஒற்றுமையினால் நெருங்கிய சிநேகிதர்கள் ஆனார்கள் தந்தை பெரியாரும்  கைவல்யமும்.
* ஏளம்பள்ளி ஜமீன்தார் வீட்டு திருமணத்திற்கு தந்தை பெரியாருடன் கைவல்யமும் சென்றிருந்தார்.
* தந்தை பெரியார் தண்ணீர கேட்க,பரிமாறிய பார்ப்பான் பெரியாரிடம் கீழே இருந்த டம்ளரை எடுத்தான்.                                                            

பார்ப்பன சமையல்காரன்,சூத்திரன் குடித்த டம்ளரை கையில் எடுத்து விட்டாயே!என்று பரிமாறிய பார்ப்பானைப் பார்த்து கோபமாக்க் கேட்டான்.
* சாப்பிட்டுக் கொண்டிருந்த கைவல்யம் எச்சில் கையாலேயே சமையல்கார  பார்ப்பானை செவுளில் அறைந்து,யாராடா சூத்திரன்?என்று கேட்க சிறிது கலகமானது.

* பிறகு அந்தப் பார்ப்பான் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.
* இன்னும் இது மாதிரி சம்பவங்களில் நாங்கள் கலந்து இருந்ததுண்டு என்று-கைவல்யம் கட்டுரைகளை நூலாக்கி வெளியிட்டு -இந்த நிகழ்வுகளை குறித்து எழுதியிருக்கிறார்;
* தந்தை பெரியார்.
* பின் நாளில் 1980-களில் தோழர் இராமமூர்த்தி ‘சங்கமித்ரா’என்ற புனைப் பெயரில் விடுதலையில் கட்டுரைகள் எழுதிய போது ,கைவல்யத்தின் நினைவாக சங்கமித்ரா
* ‘சின்ன கைவல்யம்’என்றே அறிமுகப்படுத்தப்பட்டார்.
- பன்னீர்செல்வம் முகநூல் பக்கம்