வெள்ளி, 14 அக்டோபர், 2022

தை அமாவாசை-திதி-தர்ப்பணம் ( திவசம் செய்கின்ற போது சொல்லப்படும் மந்திரம்)

 

பகுத்தறிவு : தை அமாவாசை-திதி-தர்ப்பணம்

மார்ச் 16-31,2021

தமிழர்கள் செய்ய வேண்டியவை யாவை?

செய்யக் கூடாதவை யாவை?

செய்ய வேண்டியவை :

விளக்கேற்றி வையுங்கள்.

பிறருக்கு உணவளியுங்கள்.

வள்ளல் பெருமானார் இயற்றிய அகவல் பாக்களை வாசியுங்கள் அல்லது ஒலிக்க விடுங்கள்.

செய்யக் கூடாதவை :

பிராமணர்களை வைத்து சமஸ்கிருத மந்திரங்களை ஓத விடாதீர்கள், “அவர்களுக்கு மட்டுமே” தானம் கொடுக்காதீர்கள்.

காரணம். அவர்களின் சமஸ்கிருத மந்திரங்களின் பொருள் இவை.

இறந்த பின்பு நடக்கின்ற சடங்குகளில் சொல்லப்படும் இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம். முதலில் இறந்த தந்தைக்கு திவசம் செய்கின்ற போது சொல்லப்படும் ஒரு மந்திரம்.

“யன்மே மாதா பிரலுலோப சரதி

அனனு விருதா தன்மே ரேதஹ

பிதா விருங்க்தா அபுரண் யோப பத்யதாம்

ரங்கராஜ சர்மனே ஸ்வாஹா

ரங்கராஜ சர்மனே அஸ்மது பித்ரே

இதம் நமம கிருஷ்ண கிருஷ்ண’’

இந்த மந்திரத்தின் பொருள்: “என்னுடைய அம்மா பத்தினியாக இல்லாது இருந்து, என்னை வேறு ஒருவருக்குப் பெற்றிருந்தால், இந்த திவசத்திற்கு உரிமை கோரி என்னுடைய உண்மையான தகப்பனார் வருவார். அப்படி இல்லாத என்னுடைய அம்மாவின் கணவரே இந்த திவசத்தைப் பெறட்டும்.’’ இதுதான் இந்த மந்திரத்தின் பொருள். அதாவது, “திதி கொடுப்பவனுடைய தாய் சில வேளைகளில் சோரம் போய் வேறு யாருக்காவது அவனைப் பெற்றிருக்கலாம்’’ என்று இந்த மந்திரம் சொல்கின்றது.

“உன்னுடைய அப்பா வேறு யாராவதாக இருக்கலாம். நீ அப்பன் பேர் தெரியாதவனாக இருக்கலாம்’’ என்று இந்த புனித மந்திரம் சொல்கின்றது.

தந்தைக்கு திவசம் செய்கின்ற போதுதான் இப்படி என்று நினைக்க வேண்டாம். சமஸ்கிருதம் தாய்க்கு திவசம் செய்கின்ற போதும் வஞ்சகத்தோடுதான் பொருள் கூறுகிறது.

அம்மாவிற்கு திவசம் செய்கின்ற போது சொல்கின்ற ஒரு மந்திரம் இதோ:

“என்மே மாதா ப்ரவது லோபசரதி

அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ பிதா

வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா அவபத்ய நாம”

இதன் பொருள்: “என்னுடைய அம்மா யாருடன் படுத்து என்னைப் பெற்றாளோ தெரியவில்லை. ஒரு நம்பிக்கையில்தான் அவளை என்னுடைய அப்பாவின் மனைவியாகக் கருதுகின்றேன். அந்த அம்மாவிற்கு இந்த திவசம் சென்று சேரட்டும்’’ என்பது.

அருட்பிரகாச இராமலிங்க வள்ளல் பெருமகனார், புரட்சிப் பெரு நெருப்பு… இதன் காரணமாகவே கருமாதி, திதி கூடாது என்கிறார்.

சரி… நாம் நமது அறிவைக் கொண்டு யோசிப்போம்.

“மறுபிறவி” உண்டு என்று நீங்கள் நம்பினால், இறந்தவர் உடனே வேறு தாய்க்குப் பிறந்திருப்பார்தானே?!

உங்கள் நம்பிக்கை அப்படி என்றால் இன்னொரு முறை பிறந்துவிட்ட, உயிரோடு இருக்கும் ஒரு உயிருக்குத் திவசம் செய்கிறீர்களே… இது என்ன நியாயம்?!

எனவே, இறந்த நம் முன்னோர் உருவங்களை மனப்பூர்வமாக வணங்கி நன்றி பாராட்டுவோம். “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’’ எனப் போற்றுவோம்.

இவ்வாறு செய்தால், அவர்கள் பிறப்பெடுத்திருந்தாலும் நம் வழிபாடு நேர்மறையாக அவர்களை வாழ்த்துவதாக அமையும். மாறாக, பிண்டம், திதி, சமஸ்கிருத மந்திரங்கள் வாயிலாக அசிங்கப்படுத்துவது, அவர்களை எதிர்மறையாக ஆக்குவதாகவே அமையும்.

வியாழன், 13 அக்டோபர், 2022

வேற்றுமையின் வித்தே சனாதனம்!

 

“வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றிக் கூறுகிறோம். சனாதனத் தருமமும் அதையேதான் கூறுகிறது. இந் தியாவின் தலைமைத்துவம் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் வளர சனாதனத் தருமம் வழி முறையாக இருக்கும்” என உயர்ந்த பொறுப்பில் இருக்கும் பெரியவர் ஒருவர் முத்து உதிர்த்துள்ளார். அறிந்தே சொல்லப்படும் பொய் என்பதால் அவருக்கு விளக்கம் சொல்லத் தேவையில்லை. தமிழ் நாட்டின் தலைவர்கள் பலரும் அவருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனினும் இதுபோன்ற பொய்களை நம்பும் அப்பாவிகள் உள்ளனர். அவர்களை வைத் துத்தான் பொய்களை விதைத்தும் பரப்பி யும் வருகின்றனர். எனவே, நாம் சனாதனம் என்பதே வேற்றுமையின் வித்துதான் என்பது குறித்து விளக்க வேண்டியுள்ளோம்.

இதுபற்றி அறிந்து கொள்ளும் முன்னர் நாம் ஆரியப் புரட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆரிய நூல்கள் யாவையுமே மனிதர்களிடையே வேறுபாட்டை விதைத்து வலியுறுத்துவனவாகவும் ஆரி யரை மட்டும் உயர்த்துவனவாகவும், பெண் களையும் பிறரையும் இழிவு படுத்துவன வாகவும் உள்ளன. அதே நேரம், இதற்குப் பெருமை சேர்க்க வேண்டும் எனக் கருதிய சிலரால் மிகுதியாகத் தமிழ்மொழியில் இருந்தும் பாலி மொழி முதலிய பிற மொழி களில் இருந்தும் நல்ல கருத்துகள் பல இடைச்செருகல்களாகச் சேர்க்கப்பட்டுள் ளன. ஆரியத்தை உயர்த்த எண்ணும் பொழுது இந்த இடைச்செருகல்களை ஆரியக் கருத்துகள்போல் கூறிப் பேசுவர். அவற்றில் இருந்து தமிழ்  முதலிய பிற மொழி இலக்கியங்கள் கடன் வாங்கியுள்ளன என்றும் பேசுவர். இதனை அறிஞர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சமற்கிருத இலக்கியங்கள் பேரளவி னவை என்பதைக் காட்டுவதற்காகப் பாலி மொழி நூல்களையும் பிராகிருத மொழி நூல்க ளையும் மொழிபெயர்த்துக் கொண்டு அல் லது அவற்றின் அப்பட்டமான தழுவல் களை எழுதிவைத்துக் கொண்டு மூலங் களை அழித்துவிட்டு அவையெல்லாம் சமற்கிருத நூல்கள் என்று பொய்யான வரலாற்றை உருவாக்கியுள்ளனர் - பேராசிரியை சுகுமாரி

வேதங்களில் வன்முறையும் அதிகார வெறியும் போற்றப்படுகின்றன.   - வெண்டி தோனிகர் (Wendy Doniger)

வேதங்களின் அடிப்படை இலட்சியம் விலங்குத்தனமானது -  சில்வியன் இலவி (Sylvian Levi)

சமற்கிருத இலக்கியங்களைப் பிற மொழி இலக்கியக் காலங்களுக்கு மூத்ததா கவும் முதன்மையானதாகவும் காட்ட முயன்ற மோசடிகளால் தான் காலக் குழப் பம் ஏற்பட்டுள்ளது - ஆர்தர் மக்குடானல்(Arthur A. Macdonell)

சமற்கிருத நூல்கள் இழிகாமத்தையே இயம்புகின்றன! - தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

இவை சனாதன நூல்கள் பற்றிய சில கருத்துகளாகும்.

“இந்து மதம் அல்லது வேத மதம் என்றும் அழைக்கப்படும் சனாதன தர்மம் 1960853110 வருட வரலாற்றைக் கொண்டுள் ளது. இந்தியாவின் சிந்து சமவெளி நாகரிகம் (மற்றும் நவீன பாகித்தான் பகுதி) இந்து மதத்தின் பல தடயங்களைக் கொண்டுள் ளது” என்று இல்லாத தொன்மையைக் கூறுவதுபோல் இழிவான கருத்துகளை மறைத்து இல்லாத சிறப்பையும் கூறுவது சமற்கிருதர்களின் பொய்யான வாதமாகும்.

எனவே, சனாதனவாதிகள் அறிந்தே சொல்லும் பொய்களையும் அதனை உண் மையென நம்பிப் போற்றி எழுதப்படும் தவறான தகவல்களையும் நம்பிச் சனா தனத்தைப் பாராட்டவும் வேண்டா; ஏற்க வும் வேண்டா.

தருமம் என்பது, அறியாதார்க்கு அவரின் பசி, வறுமை முதலான துயரத்தைப் போக்கத் தருவது. அறம் என்பது மனத்தில் மாசில்லாமல் இருப்பது. எனவே, நல் லொழுக்கங்களின்படி வாழ்வது.  சமற் கிருதத்தில் குறிப்பிடும் தருமம் என்றால் “விதிமுறைகள்” என்பது பொருள். சனா தனத் தருமம் என்றால் சனாதன விதிமுறை கள் எனப்பொருள்; தமிழுடன் குழப்பிக் கொண்டு சனாதன அறம் என எண்ணக் கூடாது. ‘தருமம்’ என்றால் சிலர் கடமை என்றும் பொருள் கொள்வர். அங்ஙன மாயின்  சனாதனத் தருமம் என்றால் சனா தனக் கடமை  - ஜாதிகளுக்குரிய கடமைகள் - என்னும் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சனாதனத் தருமம் என்றால் அவரவர் ஜாதி என்ன என்ன கடமையைச் செய்ய வேண்டும் என்று வேதங்களில் விதிக்கப் பட்டுள்ளதோ அவற்றை எப்போதும் தவறாமல் செய்ய வேண்டும் என்று பொருள். எனவே, ஜாதி வேற்றுமையை வகுத்துக்கொண்டு அதற்கேற்பக் கடமை களைச் செய்ய வேண்டும் என்று சொல்லும் சனாதனம் எங்ஙனம் வேற்றுமையில் ஒற்றுமையை உரைப்பதாகும்?

நால்வருணத்தை வலியுறுத்தி அவற் றிற்கான தனித்தனி விதிமுறைகளையும் கடமைகளையும் வலியுறுத்தும், இல்லாத ஜாதிகளைப் புகுத்தி அச்ஜாதிகளில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சனாதனத்தைத்தான் உயர் அறம் எனப் பொய்யாகப் பரப்பி வருகின்றனர்.

சிலர், சங்க இலக்கியம் வலியுறுத்தும் அறக்கோட்பாடுகளும் சனாதன தருமம் கூறும் அறமும் ஒன்று;  திருக்குறளின் அறக்கருத்துகள் சனாதன தருமத்தை எதி ரொலிக்கின்றன என்றெல்லாம்  பொய்மூட் டையை அவிழ்த்து விடுகிறார்கள். சனாத னம் என்பது அறமே அல்ல. அவ்வாறிருக்க அதை அறம் என்பதும் அதைத் தமிழ் அறத்துடன் ஒப்பிட்டு இணையாகக் கூறு வதும் எங்ஙனம் ஏற்புடைத்து?

“கடமையைச் செய்! பயனை எதிர் பாராதே!” என்ற உயர்ந்த(!) உண்மையைக் கீதை உரைப்பதாக உலகெங்கும் பரப்பி வருகிறார்களே. அந்தப் பொய் ஒன்றே ஆரியத்தின் புரட்டை உணர வைக்கப் போதுமானது. கீதை கூறுவது, அவரவர் ஜாதிக்கேற்ற கடமையைச் செய்ய வேண் டும்.  ஒவ்வொரு ஜாதிக்கடமைகளுக்கும் தக்கப் பயனுண்டு. கீழ்ச்ஜாதிக்காரன் மேல்ஜாதிக்கடமைக்குரிய பயன் சிறப்பை அறிந்து அக்கடமையைச் செய்ய எண்ணக் கூடாது. அவன் ஜாதிக்குரிய கடமை தரும் பயனைத்தான் ஏற்க வேண்டும். இல்லை யேல் வரும் பிறவியில் துன்பம் விளையும் எனச் ஜாதிக்கேற்ற கடமைகளை அச்சுறுத்தி வலியுறுத்துகிறது.

சனாதனம் என்றால் நிலையானது என்று பொருள் என்றும் இந்துவியத்தைக் கூறுதற்கு இந்துக்களால் பயன்படுத்தப்படும் சொல் என்றும் கூறுகின்றனர்.

வேதங்களிலும் உடநிடதங்களிலும் மனுசுமிருதியிலும் கீதையிலும் சனாதனம் குறித்துக் கூறப்படுகின்றன.

நீண்ட தொலைவு பயணம் மேற் கொண்ட ஒருவரின் மனைவி அவனுடைய உறவினர் அல்லது பணியாளரிடம் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்பது அருத்த சாத்திரம் கூறும் சனாதனம். 

இம்மை மாறி மறுமை ஆயினும்

நீயாகியர் என்கணவனை

யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே

(குறுந்தொகை : 49) என்று “எத்தனைப் பிறவிகள் ஆனாலும், நாமே கணவன் மனைவி” என்பது தமிழ் கூறும் இல்லற அறம். இரண்டும் ஒன்றாகுமா?

அருத்தசாத்திரத்தைப் பொறுத்தவரை சனாதனமாகிய குலத் தருமமே நீதியாகும். பிராமணன் எந்த வகைக் குற்றத்திற்காகவும் தண்டிக்கத்தக்கவன் அல்லன் என்கிறது அது. அரச தருமம் நால்வகைப்பட்ட வரு ணாசிரமத் தருமத்தைப் போற்ற வேண்டும் என்கிறது. ஒருவன் பல மகளிரை மணந்து கொள்ளலாம் என்றும் தன் மனைவியிடத்து வேறு ஒருவன் மூலம் புதல்வனைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறுகிறது.

இந்தச் சனாதனமும் நடுவுநிலைமை யையும் பிறன்மனை விழையாமையையும் வலியுறுத்தும் தமிழறமும் ஒன்றாகுமா?

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி.   (திருக்குறள் - 118)

என, யார், எவர் என்ற வேறுபாடின்றி, செல்வர்-ஏழை என்னும் செல்வப்பாகுபாடு, உயர்ஜாதி-கீழ்ஜாதி என்றெல்லாம் இல்லாத ஜாதிப்பாகுபாடு உயர்பதவியர் - கீழ்ப் பதவியர் என்ற பதவிவேறுபாடு என்று எப்பாகுபாடும் பார்க்காமல் சமமாக நோக்க வேண்டும் என்னும் தமிழறத்துடன் சனா தனத்தை ஒப்பிடத்தான் முடியுமா?

வேதம் ஓதுகிறவர்களைக் கடவுள் எனச் சொல்வதன் மூலம் வேதம் ஓதும் பிராமணர்களைக் கடவுளாகத் திரிக்கிறது (அருத்தசாத்தரம்) சனாதனம். பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும் (திருக்குறள்) என்கிறது தமிழறம். இரண்டும் எப்படி இணையாகும்?

நெஞ்சு பொறுக்காத வஞ்சகச் செயல் களைச் செய்ய வழி கூறுவதே (அருத்த சாத்திரம்) சனாதனம்.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க் கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை. (திருக் 

குறள் 317)

என மனத்தளவிலும் வஞ்சகத்தை எண்ணக்கூடாது என்பது தமிழறம். இரண்டையும் ஒப்பிடத்தான் முடியுமா?

பெண்கள் இழிவானவர்கள்(மனுநீதி, தரும சூத்திரங்கள், அருத்த சாத்திரம், காமசூத்திரம், பகவத்துகீதை முதலியன) என்பது சனாதனம்.

“பெண்ணின் பெருந்தக்க யாவுள?” (திருக்குறள் 54) என்று பெண்மையைப் போற்றுவது தமிழறம். இரண்டையும் ஒப் பிடுவது முறையாகுமா?

“புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர்”(மனு 2.214) எனப் பெண் களைக் காமப்பித்தர்களாகக் காட்டுவது சனாதனம். “பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் கூறப் படுவனவற்றைக் கேட்பீராக” (மனு9.19) எனப் பெண்களை ஒழுக்கங்கெட்டவர்க ளாகக் கூறுவதும் சனாதனம்தான்.

“நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்

செவிலிக்கு உரியவாகும் என்ப” (தொல் காப்பியம், 1099) என்றும்

“செறிவும்  நிறைவும்  செம்மையும்  செப்பும்

அறிவும்   அருமையும்  பெண் பாலான”     (தொல்காப்பியம்,1155)

என்றும் பெண்ணைச் சிறப்பிப்பது தமிழறம். இரண்டும் எங்ஙனம் ஒன்றாகும்?

இவ்வாறு நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

மக்களிடையே மாறுபாட்டையும் வேறு பாட்டையும் விதைத்து அல்லொழுக்கத் தைப் பரப்பும் சனாதனம் எவ்வாறு நம் மண்ணிற்கு ஏற்ற பண்பாடாகத் திகழ முடியும்? நம் மண்ணிற்கு என்றில்லை, உலகில் உள்ள யாவர்க்குமே மக்களில் ஒரு பகுதியினரைக் கடவுள் நிலையில் உயர்த்தி யும்  பிற பகுதியினரையும் பெண்களையும் இழிபிறப்பாகக் கூறும் சனாதனம் என்றுமே ஏற்றதாக அமையாது.

எனவே, தருமம் என்ற சொல்லில் மயங்கி சனாதனத்தைப் போற்றித் திரிய வேண்டா!தமிழறத்திலிருந்து தடம் புரள வேண்டா!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பி னும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

(திருவள்ளுவர், திருக்குறள் 423)

- இலக்குவனார் திருவள்ளுவன்

நன்றி: அகரமுதல