மனுஸ்மிருதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனுஸ்மிருதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 மார்ச், 2020

சூத்திரனுக்குக் கல்வி கொடாதே! - மனு

கட்டுமா கீழ் ஜாதிக்காரர்கட்கு அறிவைப் புகட்டக் கூடாது. அப்படி ஓர் ஆசிரியன் சூத்திரனுக்கு கல்வி புகட்ட முயற்சித்தால் அவன் கடும் தண்டனைக்கு உள்ளாக்கக் கடவன். ஒரு பார்ப்பான் சூத்திரனுக்கு கல்வி கொடுத்தால் பிற பார்ப்பனர்கள் அவனை ஜாதிக் கட்டுப் பாடு செய்ய வேண்டும். அந்த பார்ப்பான் ஒரு சண்டாளனைப் போல் நடத்தப்பட வேண்டும். ஊர் கடத்தப்பட வேண்டும். கல்வி கற்ற சூத்திரர்களையும் ஊரைவிட்டே விரட்ட வேண்டும் என்று கூறுகிறது ஸ்கந்தபுராணம் (விஸ்வ காண்டம் அத். 19 பிரம்ம காண்டம் அத்,10.)

வேதத்தைப் பயில்வதற்கும், கேட்பதற்கும் தண்டனை!

வேதத்தினின்றும் சூத்திரர்களை தள்ளியே வைக்க வேண்டும் என்று வேதச் சூத்திரங்கள் கூறுகின்றன.

"ஒரு சூத்திரன் வேத மந்திரங்களை காதால் கேட்க நேர்ந்திடின் அவன் காதுகளில் உருக்கிய உலோ கத்தினை ஊற்ற வேண்டும். அவன் வேத மந்திரங்களை ஓதினால் அவன் நாக்குகளை வெட்ட வேண்டும். அவன் சில வேதங்களை மனப் பாடம் செய்திருந்தானேயானால் அவனை கோடரியால் வெட்ட வேண்டும்”.

- (கவுதம தர்ம சூத்திரம் 2/3/4)

"ஒரு சூத்திரன் ஒரு பார்ப்பான் அமரும் இடத்தில் அமர நினைத் தாலோ, தூங்க நினைத்தாலோ அல்லது பார்ப்பான் நடக்கும் தெருக்களில் நடக்க எண்ணினாலோ அல்லது பார்ப்பனனுக்கு ஒப்பாக பேச நினைத்தாலோ அந்தச் சூத்திரன் பல்வேறு ஆக்கினைக்கு உட்பட வேண்டும்."

- (கவுதம தர்ம சூத்திரம் 2/3/4)

பாணினி (Panini) என்ற புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியன் தன் 'அஸ்டாத்யாயி” என்ற நூலில் எழுதுகிறான் - "ஒரு மரியாதைக் குரிய மனிதரை ஒரு சூத்திரன் வணக்கம் செலுத்தும்போது அவர் திருப்பி வணக்கம் சொல்லத் தேவையில்லை. ஆனால் மற்ற ஜாதிக்காரர்கட்கு அப்படி செய்தல் வேண்டும்.

- (அஸ்டாத்யாயி 8.2.1983)

நாட்டிய சாஸ்திரப்படி சூத்திரர் கள் நாட்டிய மேடையில் உள்ள நீல தூணின் பக்கத்தே மேடையின் வட கிழக்கு திசையில் அமர வேண்டும்.

(Sanscrit Drama P. 386).

சூத்திர வேடம் புரிபவர் நீல நிற உடையணிந்திருக்க வேண்டும்.

- (Sanscrit Drama P. 394, 395)

"சமஸ்கிருத நாடக கதாநாயகர்கள் உயர் ஜாதியில் பிறந் தோராயிருத்தல் வேண்டும்”

- (Sahitya Darpan 3/30)

"மகாகாவியங்கள், இதிகாசங்கள், கதைகள் அனைத்தும் கடவுளரைப்பற்றியும் (அ) சத்திரிய ரைப்பற்றியும் (அ) உயர் குல வழி வந்தோரைப்பற்றியதாகவும் இருக்க வேண்டும்."

- (Sahitya Darpan 3/316)

"நாடக பாத்திரங்கள் பேச வேண்டிய மொழியைக்கூட மிகத் துல்லியமாய் இன்ன ஜாதி இன்ன மொழிதான் பேச வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

உயர் ஜாதியினர் சமஸ்கிருதத்திலும், கீழ் ஜாதியினர் பிராகிருதத் திலும், மிகக் கீழ் ஜாதியினர் பைசாச (அ) மகாதி மொழியிலும் பேச வேண்டும்”

- (தாசரூபகம் 2/64-65)

தீண்டாமை

சூத்திரர்கள் தொட்டால் மேல் ஜாதியினர் தீட்டாகி விடுவர் என்று இந்து சமய சாத்திரங்கள் கூறுகின்றன. சூத் திரன் நிழல்கூட தீட்டு ஏற்படுத்தும் ஆகையால் அதினின் றும் விலகியிருக்க வேண்டும் என்றும் சாத்திரங்கள் கூறு கின்றன.

"ஒரு துப்புரவுத் தொழிலாளியை, ஒரு பெண்ணை அவள் மாத விடாய் காலத்தில் உதிரப் பெருக்கு அதிகமாகும் நாள்களில், சமீபத்தில் மகப்பேறுற்ற தாயை, ஒரு பிணத்தை, ஒருவன் தொடுவதால் அது அவனைத் தீட்டாக்குகிறது. தீட்டு நீங்க அவன் குளிக்க வேண்டும்”

- சம்வார்த ஸ்மிருதி

இவைகளிலெல்லாம் திருப்தியுறாத இந்து மத சாத்திரங் கள் ஒரு சூத்திரன் ஒரு உயர் ஜாதி இந்து வைப் பார்த்தாலே அந்த பார்வை அந்த உயர்ஜாதி இந்துவை தீட்டாக்கும் என்று சொல்லும் அளவிற்கு இந்துமத சாத்திரங்கள் சென் றிருக்கின்றன.

"ஒரு தோட்டியை பார்த்ததால் உண்டான தீட்டை கழுவ சூரியனைப் பார்க்க வேண்டும்”

(பராஷர் ஸ்மிருதி 6/24)

"பனியா, கிரதர், காயஸ்தர், சண்டாளர் முதலியோர் தீண்டப்படாதோர். சாதாரணமாக இவர்களுடன் உரை யாடல் கூட பார்ப்பனமேல் ஜாதி இந்துக்களை தீட்டுண் டாக்கும். இத்தீட்டு தலை முழுகுவதால் கழியும். தீண்டப் படாதோரை பார்த்தால் உண்டான தீட்டை சூரியனைப் பார்த்து கழிக்கலாம்”

- வியாச ஸ்மிருதி (1/22/12)

இந்துமத சாஸ்திரங்கள் சூத்திரர்களின் உப-ஜாதி களைப் பற்றி மிகக் கொடுமையாய் பேசுகின்றன.

மனுஸ்மிருதியில் 10-வது அத் தியாயத்தில் காணப்படும் பின்வரும் செய்திகள் தான் நாய்க் கறி உண்ணும் சூத்திரர் களிடம், சண்டாளர்களிடம் காட்டப்பட்ட கொடூர ஆக்கி னைகட்கு அத்தாட்சி பத்திரமாய் இலங்குகின்றன.

(மனுஸ்மிருதி அத். 10; சுலோகம்-151-56)

"சண்டாளர் மற்றும் ஸ்வபாச்சர்களின் குடியிருப்புகள் ஊரின் வெளி எல்லையில் கிடக்க வேண்டும்”

- (சுலோ -51)

"நாய் மற்றும் கழுதைகளையே தம் உடைமையாகவும், இறந்தோர் உடலின்மீது போடப்பட்ட துணிகளையே ஆடையாகவும் கொள்ள வேண்டும்”

- (சு-52)

"வெண்கல ஆபரணங்களையே அணிதல் வேண்டும், உடைந்த மட் பாண்டங்களையே சமைக்க உபயோகிக்க வேண்டும்”

- (சு-53)

"சண்டாளன் தன் சேவகத்திற்குப்பின் எங்கும் நில்லா மல் தன் வசிப்பிடம் செல்ல வேண்டும்”

- (சு.54)

"உடைந்த மட்பாண்டங்களில் தான் சூத்திரனுக்கு உணவளிக்க வேண்டும். அதையும் ஒரு சேவகன் மூலமே செய்ய வேண்டும்".

- (சு.55)

"இரவு நேரங்களில் சண்டாளன் கிராமத்திலோ, நகரத் திலோ நட மாடக் கூடாது. சண்டாளன் பணியில் ஈடுபடும் போது அரசாங்க முத்திரையை கட்டிக் கொள்ள வேண்டும். நாதியற்ற பிணங்களை அப்புறப்படுத்தலும், தண்டனைக் குட்பட்ட குற்றவாளிகளை கொலை செய்வதும் சண்டாள ரின் பணிகளில் அடங்கும்” (சு.56)

- (மனுஸ்மிருதி 10.51-10:56)

 - விடுதலை ஞாயிறு மலர் 22 2 20

செவ்வாய், 7 ஜனவரி, 2020

இந்து மதத்தில் திராவிடர் நிலை (மனு)

05.04.1947 குடிஅரசிலிருந்து....

இஸ்லாம் என்றால் நாணி கோணி, கோபம் கொள்ளும் திராவிட இந்து (சூத்திர) தோழனே! இந்து மதம் என்றால் என்ன? அதில் உன் நிலை என்ன என்று ஊன்றிப் பார்.

இந்துமதம் என்னும் மாத்திரையில் (மருந்து மாத்திரை) இது ஒரு உரைப்பு.

இந்து மதம் என்பது வேதமதமாகும். ஏனெனில் இந்து மதத்திற்கு வேதம்தான் பூர்வாதாரமாகும் என்று சொல்லப்படுகிறது.  ஆனால் அந்த வேதத்தின் தன்மையைப் பற்றிச் சிறிது சிந்திப்போம்.

1. சூத்திரன் சமீபத்தில் இருக்கும்போது வேதம் ஓதக் கூடாது. (அத்.4, சு.99)

2. பாபிகள் அருகில் இருக்கும்போது வேதம் ஓதக் கூடாது. (அத் 4 சு.109)

3. நாய், கழுதை இவைகள் அழும்போது வேதம் ஓதக் கூடாது. (அத் 4, சு.115)

இவைகளிலிருந்து ஒரு இந்து சூத்திரனுக்கும் (திராவிடனுக்கும்) வேதத்திற்கும் உள்ள சம்பந்தமும் சூத்திரன் வேத மதத்தில் மதிக்கப்படும் தன்மையும், இஸ்லாம் என்றால் கோணும் இந்து திராவிடர்கள் தெரிந்து கொள்ளலாம்.

இது மற்றொரு உரைப்பு:

பொழுது விடியாமல் இருக்கும்போதும், பொழுதுபோன பின்பும் பிராமணன் சூத்திரனுடன் வழி நடக்கக் கூடாது. (அ.4 சு.140)

பிராமணன் தனக்கு (சூத்திரனுக்கு) விரோதம் செய்தாலும், தான் (சூத்திரன்) பிராமணனுக்கு விரோதம் செய்யக் கூடாது.

நீதி விசாரணை

பிராமணகுலத்தில் பிறந்து கர்மானுஷ்டானமில்லாத பிராமணர் ஆனாலும் அவன் நீதி விசாரணை செய்யலாம்.

சூத்திரன் ஒருபோதும் நீதி விசாரணையோ, தீர்ப்போ செய்யக் கூடாது. (அ.8, சு.20)

எந்தத் தேசத்தில் நீதி தர்ம விசாரணையைச் சூத்திரன் செய்கிறானோ அந்தத் தேசம் முழுவதும் துன்பத்தில் ஆழ்ந்து போகும் (அ.8 சு. 21)

இதிலிருந்து சூத்திரர்கள் (திராவிடர்கள்) ஏன் நீதி நிர்வாக இலாகா தலைமைக்கு நியமிக்கப்படுவதில்லை என்பதும், சூத்திரர் அல்லாத முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஏன் நியமிக்கப் படுகிறார்கள் என்பதும் நன்றாய் விளங்குகிறதல்லவா?

சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டியது. (அ.8, சு. 270)

சூத்திரன் பிராமணனைப் பெயர் ஜாதி சொல்லி இகழ்ச்சி யாகத் திட்டினால் சூத்திரன் வாயில் 10 அங்குலமுள்ள எஃகுவைக் காய்ச்சி எரிய எரிய வைக்க வேண்டியது. (அ. 8 சு.271)

பிராமணனுக்கு நீ இதைச் செய்ய வேண்டுமென்று கட்டளை இடுகிற சூத்திரனுடைய வாயிலும், காதிலும் எண்ணையைக் காய்ச்சி ஊற்ற வேண்டியது. (அ. 8 சு. 272).

பிராமணன், சத்திரியன், வைசியன் ஆகிய மூன்று பேர்களில் யாரையாவது சூத்திரன் அடித்தால் எந்த இடத்தில் அடித் தானோ சூத்திரனுடைய அந்த இடத்தை சேதித்துவிட வேண் டியது. (அ.8. சு. 279)

- விடுதலை நாளேடு 3.1. 20

வியாழன், 24 அக்டோபர், 2019

இது தான் மனு(அ)தர்மம்!

யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்?

10.03.1935  - குடிஅரசிலிருந்து...

மனு தர்ம சாஸ்திரம் என்பது நமது மதத்திற்கே ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் அனுஷ்டிக்கப் பட்டு வருவதும், அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற சிவில் கிரிமினல் சட்டத்திட்டங்களால் அனுசரிக்கப்பட் டதுமாகும். அதிலுள்ள நீதிகளும், விதி களும். எந்தவிதமான ஒழுங்கு முறையில் முன்னோர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு மக்கள் அடிமைப் படுத்துவதற்காக அமைக்கப்பட்டு இருக்கின்றன என்பதை யாரும் உணர்ந்துகொள்ளுவது அவசிய மாகும். ஆதி திராவிட சமூகம் முதல், சகல அடிமைப்படுத்தப்பட்ட சமுகத்தார்கள் வரை இந்த மனுதர்மத்தை நீதியாகக் கொண்ட இப்படிப்பட்ட கொடுமையான இந்துமதத்தில் இருப்பதைவிட பிற மதத்தில் சேர்ந்து தங்களுக்கு விடுதலை யைத் தேடிக் கொள்வது சரியா? பிசகா? என்பதையும் அல்லது இம்மாதிரியான அநீதியான சட்டத் திட்டங்கள் அமைந் துள்ள இந்து மதத்திலேயே அடிமைப் பட்டாகிலும் வாழ வேண்டுமா என் பதையும் கீழ்வரும் மனுதர்ம விதிகளைப் படித்து முடிவு செய்து கொள்ளும்படி கோருகிறோம்.

1.            பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது.  - அத்தியாயம் 8, சுலோகம் 20

2.            சூத்திரர் நிறைந்த தேசம் எப் பொழுதும் வறுமை உடையதாய் இருக்கும். அ.12, சு.43.

3.            சூத்திரனாகவும், மிலேச்சனா கவும், பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி. அ.12. சு43.

4.            ஸ்திரீகள் புணர்ச்சி விஷயத் திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை. அ.8. சு.112.

5.            நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்ய வேண்டிய பிராமணனைச் சத்திய மாகச் சொல்லுகிறேன் என்று சொல்ல செய்யவேண்டும். பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனைப் பழுக்கக் காய்ச் சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர் போகாமலும் இருந்தால் அவன் சொன் னது சத்தியம் என உணர வேண்டும்.- அ. 8. சு. 113-115.

6.            சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும்.  - அ.8. சு. 271.

7.            சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்.  - அ.8  சு.271.

8.            பிராமணனைப் பார்த்து, நீ இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லு கிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண் ணெய்யைக்  காய்ச்சி ஊற்ற வேண்டும். அ.8  சு.272.

9.            சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்திலுட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்.   - அ.8  சு.281.

10.          பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமணரல்லாதாரைக் கொன் றவனுக்கு பாவமில்லை.  -  அ.8.  சு.349.

11.          சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர் போகும் வரையும் தண்டிக்க வேண்டும். பிராமணன் கொலை குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும், எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும். - அ.8 சு.380

12.          அரசன் சூத்திரனை பிராமணர் முதலிய உயர்ந்த ஜாதிக்கு பணிவிடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும். - அ.8.சு.410.

13.          பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப்பட்டிருக்கிறான். - அ. 8  சு.413

14.          பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்ற லாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான் - அ.8.சு.417.

15.          சூத்திரன் பொருள் சம் பாதித்தால், அது அவனுடைய எஜமா னாகிய பிராமணனுக்குச் சேர வேண்டு மேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது. - அ. 9  சு. 416

16.          பிராமணனால் சூத்திர ஸ்திரீக்குப் பிள்ளை பிறந்தால் அப் பிள்ளைக்குத் தந்தை சொத்தில் பங் கில்லை.  - அ.8  சு. 155.

17.          பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்திரவதை செய்து, கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தம் இஷ்டப்படி கொள்ளையிடலாம். - அ.9  சு.248.

18.          பிராமணன் மூடனானாலும் அவனே மேலானதெய்வம்.  - அ.9  சு. 317

19.          பிராமணர்கள் இழி தொழில் களில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத்தக் கவர்கள் ஆவர்கள். - அ. 9 சு.319.

20.          பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவனாதலால் அவன் பிராமணனுக்குத் துன்பம் செய்தால் அவனைச் சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும். - அ.9 சு.320.

21.          சூத்திரனுக்கு பிராமணப்பணி விடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாத விடத்தில் சத்தி ரியனுக்கும், சத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண் டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன், பிராமணன் கேட்டு கொடுக்காவிட்டால், களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு. - அ.11.  சு.12.

- விடுதலை நாளேடு 18 10 19

வெள்ளி, 11 அக்டோபர், 2019

இந்து மதத்தில் திராவிடர் நிலை

இஸ்லாம் என்றால் நாணி கோணி, கோபம் கொள்ளும் திராவிட இந்து (சூத்திர) தோழனே! இந்து மதம் என்றால் என்ன? அதில் உன் நிலை என்ன என்று ஊன்றிப் பார்.
இந்துமதம் என்னும் மாத்திரையில் (மருந்து மாத்திரை) இது ஒரு உரைப்பு.
இந்து மதம் என்பது வேதமதமாகும். ஏனெனில் இந்து மதத்திற்கு வேதம்தான் பூர்வாதாரமாகும் என்று சொல்லப்படுகிறது.  ஆனால் அந்த வேதத்தின் தன்மையைப் பற்றிச் சிறிது சிந்திப்போம்.
1. சூத்திரன் சமீபத்தில் இருக்கும்போது வேதம் ஓதக் கூடாது. (அத்.4, சு.99)
2. பாபிகள் அருகில் இருக்கும்போது வேதம் ஓதக் கூடாது. (அத் 4 சு.109)
3. நாய், கழுதை இவைகள் அழும்போது வேதம் ஓதக் கூடாது. (அத் 4, சு.115)
இவைகளிலிருந்து ஒரு இந்து சூத்திரனுக்கும் (திராவிடனுக்கும்) வேதத்திற்கும் உள்ள சம்பந்தமும் சூத்திரன் வேத மதத்தில் மதிக்கப்படும் தன்மையும், இஸ்லாம் என்றால் கோணும் இந்து திராவிடர்கள் தெரிந்து கொள்ளலாம்.
இது மற்றொரு உரைப்பு:
பொழுது விடியாமல் இருக்கும்போதும், பொழுதுபோன பின்பும் பிராமணன் சூத்திரனுடன் வழி நடக்கக் கூடாது. (அ.4 சு.140)
பிராமணன் தனக்கு (சூத்திரனுக்கு) விரோதம் செய்தாலும், தான் (சூத்திரன்) பிராமணனுக்கு விரோதம் செய்யக் கூடாது.
நீதி விசாரணை
பிராமணகுலத்தில் பிறந்து கர்மானுஷ்டான மில்லாத பிராமணர் ஆனாலும் அவன் நீதி விசாரணை செய்யலாம்.
சூத்திரன் ஒருபோதும் நீதி விசாரணையோ, தீர்ப்போ செய்யக் கூடாது. (அ.8, சு.20)
எந்தத் தேசத்தில் நீதி தர்ம விசாரணையைச் சூத்திரன் செய்கிறானோ அந்தத் தேசம் முழுவ தும் துன்பத்தில் ஆழ்ந்து போகும் (அ.8 சு. 21)
இதிலிருந்து சூத்திரர்கள் (திராவிடர்கள்) ஏன் நீதி நிர்வாக இலாகா தலைமைக்கு நியமிக்கப்படுவதில்லை என்பதும், சூத்திரர் அல்லாத முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஏன் நியமிக்கப்படுகிறார்கள் என்பதும் நன்றாய் விளங்குகிறதல்லவா?
சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டியது. (அ.8, சு. 270)
சூத்திரன் பிராமணனைப் பெயர் ஜாதி சொல்லி இகழ்ச்சியாகத் திட்டினால் சூத்திரன் வாயில் 10 அங்குலமுள்ள எஃகுவைக் காய்ச்சி எரிய எரிய வைக்க வேண்டியது. (அ. 8 சு.271)
பிராமணனுக்கு நீ இதைச் செய்ய வேண்டு மென்று கட்டளை இடுகிற சூத்திரனுடைய வாயிலும், காதிலும் எண்ணையைக் காய்ச்சி ஊற்ற வேண்டியது. (அ. 8 சு. 272).
பிராமணன், சத்திரியன், வைசியன் ஆகிய மூன்று பேர்களில் யாரையாவது சூத்திரன் அடித்தால் எந்த இடத்தில் அடித்தானோ சூத்திரனுடைய அந்த இடத்தை சேதித்துவிட வேண்டியது. (அ.8. சு. 279)
கையினாலாவது, தடியினாலாவது அடித்தால் சூத்திரனின் கையையும் வெட்டிவிட வேண்டும் (அ.8. சு. 280)
பிராமணனுடைய ஆசனத்தில் உட்கார்ந்த சூத்திரனை இடுப்பில் சூடு போட்டாவது, ஆசன பாகத்தில் சிறிது அறுத்தாவது ஊரைவிட்டு விரட்டி விட வேண்டும். (அ.8 சு. 281)
சூத்திரன் பிராமணன்மீது எச்சிச் துப்பினால் சூத்திரனின் உதட்டை அறுத்துவிட வேண்டும். (அ.8. சு. 282)
இந்த மாத்திரை எப்படி வேலை செய்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டு பிறகு இன்னம் இரண்டு உரைப்பு உரைக்கலாம்.

விடுதலை நாளேடு, 11.10.19

சனி, 27 ஜூலை, 2019

இந்து மதத்தில் திராவிடர் நிலை

05.04.1947 - குடிஅரசிலிருந்து...

இஸ்லாம் என்றால் நாணி கோணி, கோபம் கொள்ளும் திராவிட இந்து (சூத்திர) தோழனே! இந்து மதம் என்றால் என்ன? அதில் உன் நிலை என்ன என்று ஊன்றிப் பார்.

இந்துமதம் என்னும் மாத்திரையில் (மருந்து மாத்திரை) இது ஒரு உரைப்பு. இந்து மதம் என்பது வேதமதமாகும். ஏனெனில் இந்து மதத்திற்கு வேதம்தான் பூர்வாதாரமாகும் என்று சொல்லப் படுகிறது.  ஆனால் அந்த வேதத்தின் தன்மையைப் பற்றிச் சிறிது சிந்திப்போம்.

1. சூத்திரன் சமீபத்தில் இருக்கும்போது வேதம் ஓதக் கூடாது. (அத்.4, சு.99)

2. பாபிகள் அருகில் இருக்கும்போது வேதம் ஓதக் கூடாது. (அத் 4 சு.109)

3. நாய், கழுதை இவைகள் அழும்போது வேதம் ஓதக் கூடாது. (அத் 4, சு.115)

இவைகளிலிருந்து ஒரு இந்து சூத்திரனுக்கும் (திராவிடனுக்கும்) வேதத்திற்கும் உள்ள சம்பந்தமும் சூத்திரன் வேத மதத்தில் மதிக்கப்படும் தன்மையும், இஸ்லாம் என்றால் கோணும் இந்து திராவிடர்கள் தெரிந்து கொள்ளலாம்.

இது மற்றொரு உரைப்பு

பொழுது விடியாமல் இருக்கும்போதும், பொழுதுபோன பின்பும் பிராமணன் சூத்திரனுடன் வழி நடக்கக் கூடாது. (அ.4 சு.140)

பிராமணன் தனக்கு (சூத்திரனுக்கு) விரோதம் செய்தாலும், தான் (சூத்திரன்) பிராமணனுக்கு விரோதம் செய்யக் கூடாது.

நீதி விசாரணை

பிராமணகுலத்தில் பிறந்து கர்மானுஷ்டானமில்லாத பிரா மணர் ஆனாலும் அவன் நீதி விசாரணை செய்யலாம்.

சூத்திரன் ஒருபோதும் நீதி விசாரணையோ, தீர்ப்போ செய்யக் கூடாது. (அ.8, சு.20)

எந்தத் தேசத்தில் நீதி தர்ம விசாரணையைச் சூத்திரன் செய்கிறானோ அந்தத் தேசம் முழுவதும் துன்பத்தில் ஆழ்ந்து போகும் (அ.8 சு. 21)

இதிலிருந்து சூத்திரர்கள் (திராவிடர்கள்) ஏன் நீதி நிர்வாக இலாகா தலைமைக்கு நியமிக்கப்படுவதில்லை என்பதும், சூத்திரர் அல்லாத முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஏன் நியமிக்கப்படுகிறார்கள் என்பதும் நன்றாய் விளங்குகிறதல்லவா?

சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டியது. (அ.8, சு. 270)

சூத்திரன் பிராமணனைப் பெயர் ஜாதி சொல்லி இகழ்ச்சியாகத் திட்டினால் சூத்திரன் வாயில் 10 அங்குலமுள்ள எஃகுவைக் காய்ச்சி எரிய எரிய வைக்க வேண்டியது. (அ. 8 சு.271)

பிராமணனுக்கு நீ இதைச் செய்ய வேண்டுமென்று கட்டளை இடுகிற சூத்திரனுடைய வாயிலும், காதிலும் எண்ணையைக் காய்ச்சி ஊற்ற வேண்டியது. (அ. 8 சு. 272).

பிராமணன், சத்திரியன், வைசியன் ஆகிய மூன்று பேர்களில் யாரையாவது சூத்திரன் அடித்தால் எந்த இடத்தில் அடித்தானோ சூத்திரனுடைய அந்த இடத்தை சேதித்துவிட வேண்டியது. (அ.8. சு. 279)

கையினாலாவது, தடியினாலாவது அடித்தால் சூத்திரனின் கையையும் வெட்டிவிட வேண்டும் (அ.8. சு. 280)

பிராமணனுடைய ஆசனத்தில் உட்கார்ந்த சூத்திரனை இடுப்பில் சூடு போட்டாவது, ஆசன பாகத்தில் சிறிது அறுத்தாவது ஊரைவிட்டு விரட்டி விட வேண்டும். (அ.8 சு. 281)

சூத்திரன் பிராமணன்மீது எச்சிச் துப்பினால் சூத்திரனின் உதட்டை அறுத்துவிட வேண்டும். (அ.8. சு. 282)

இந்த மாத்திரை எப்படி வேலை செய்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டு பிறகு இன்னம் இரண்டு உரைப்பு உரைக்கலாம்.

- விடுதலை நாளேடு, 27.7.19

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்? - மனுதர்மம்

10.03.1935  - குடிஅரசிலிருந்து....

யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்?

மனு தர்ம சாஸ்திரம் என்பது நமது மதத்திற்கே ஆதார மாக கையாண்டு வருவதும், நடைமுறையில் அனுஷ்டிக்கப் பட்டு வருவதும், அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற சிவில் கிரிமினல் சட்டத்திட்டங்களால் அனுசரிக்கப்பட்டது மாகும். அதிலுள்ள நீதிகளும், விதிகளும். எந்தவிதமான ஒழுங்கு முறையில் முன்னோர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு மக்கள் அடிமைப் படுத்துவதற்காக அமைக்கப்பட்டு இருக் கின்றன என்பதை யாரும் உணர்ந்துகொள்ளுவது அவசிய மாகும். ஆதி திராவிட சமுகம் முதல், சகல அடிமைப் படுத்தப்பட்ட சமுகத்தார்கள் வரை இந்த மனுதர்மத்தை நீதியாகக் கொண்ட இப்படிப்பட்ட கொடுமையான இந்துமதத்தில் இருப்பதைவிட பிற மதத்தில் சேர்ந்து தங்களுக்கு விடுதலையைத் தேடிக் கொள்வது சரியா? பிசகா? என்பதையும் அல்லது இம்மாதிரியான அநீதியான சட்டத் திட்டங்கள் அமைந்துள்ள இந்து மதத்திலேயே அடிமைப்பட்டாகிலும் வாழ வேண்டுமா என்பதையும் கீழ்வரும் மனுதர்ம விதிகளைப் படித்து முடிவு செய்து கொள்ளும்படி கோருகிறோம்.

1.            பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவ னாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது.  - அத்தியாயம் 8, சுலோகம் 20

2.            சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமை உடையதாய் இருக்கும். அ.12, சு.43.

3.            சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி. அ.12. சு43.

4.            ஸ்திரீகள் புணர்ச்சி விஷயத்திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை. அ.8. சு.112.

5.            நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்யவேண்டிய பிராமணனைச் சத்தியமாகச் சொல்லுகிறேன் என்று சொல்ல செய்யவேண்டும். பிரமாணம் செய்ய வேண்டிய சூத் திரனைப் பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர் போகாமலும் இருந்தால் அவன் சொன்னது சத்தியம் என உணர வேண்டும்.- அ. 8. சு. 113-115.

6.            சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும்.  - அ.8. சு. 271.

7.            சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்.  - அ.8  சு.271.

8.            பிராமணனைப் பார்த்து, நீ இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண் ணெய்யைக்  காய்ச்சி ஊற்ற வேண்டும். அ.8  சு.272.

9.            சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்திலுட் கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்.   - அ.8  சு.281.

10.          பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமண ரல்லாதாரைக் கொன்றவனுக்கு பாவமில்லை.  -  அ.8.  சு.349.

11.          சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர் போகும் வரையும் தண்டிக்க வேண்டும். பிராமணன் கொலை குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும், எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிடவேண்டும். - அ.8 சு.380

12.          அரசன் சூத்திரனை பிராமணர் முதலிய உயர்ந்த ஜாதிக்கு பணிவிடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும். - அ.8.சு.410.

13.          பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப்பட்டிருக்கிறான். - அ. 8  சு.413

14.          பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான் - அ.8.சு.417.

15.          சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானனாகிய பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது. - அ. 9  சு. 416

16.          பிராமணனால் சூத்திர ஸ்திரீக்குப் பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்குத் தந்தை சொத்தில் பங்கில்லை.  - அ.8  சு. 155.

17.          பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்திரவதை செய்து, கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தம் இஷ்டப்படி கொள்ளையிடலாம். - அ.9  சு.248.

18.          பிராமணன் மூடனானாலும் அவனே மேலான தெய்வம்.  - அ.9  சு. 317

19.          பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந் தாலும் பூஜிக்கத்தக்கவர்கள் ஆவர்கள். - அ. 9 சு.319.

20.          பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவ னாதலால் அவன் பிராமணனுக்குத் துன்பம் செய்தால் அவனைச் சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும். - அ.9 சு.320.

21.          சூத்திரனுக்கு பிராமணப்பணிவிடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாத விடத்தில் சத்திரியனுக் கும், சத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண்டும். அதிகமான செல்வமும், பசுக் களும் வைத்திருக்கிறவன், பிராமணன் கேட்டு கொடுக்கா விட்டால், களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு. - அ.11.  சு.12.

22.          சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும், யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம். - அ.11.  சு.13.

23.          யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைத் தண்டிக்கக் கூடாது. - அ.11  சு.20.

24.          பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும். - அ.11  சு.66.

25.          ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும். - அ.11.  சு.131.

25           (அ)       அதுவும் முடியாவிடில் வருண மந்தி ரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது - அ.11.  சு.132.

26.          சத்திரியன் இந்நூலில் (மனுதர்ம சாஸ்திரத்தில்) சொல்லப் பட்டபடி ராஜ்யபாரம் பண்ணுவதே தவமாகும். சூத்திரன் பிராமண பணிவிடை செய்வதே தவமாகும். - அ.11  சு.285.

27.          சூத்திரன் பிராமணனுடைய தொழிலை செய் தாலும் சூத்திரனேயாவான். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்யின் பிராமணனேயாவான். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார். - அ.10. சு.75.

28.          பிராமணரல்லாதவன் உயர்குலத்தோருடைய தொழிலைச் செய்தால் அரசன் அவனது பொருள் முழுவ தையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும். - அ.10  சு.96

29.          சூத்திரன் இம்மைக்கும், மோட்சத்திற்கும் பிராமண னையே தொழ வேண்டும். - அ.10. சு.96.

30.          பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும், உடுத்திக் கிழிந்த ஆடையும், கெட்டுப்போன தானியமும் சூத்திரனுடைய ஜீவனத்துக்கு கொடுக்கப்படும். - அ.10. சு.125

31.          சூத்திரன் எவ்வளவு திறமையுடையவனாகயிருந்தாலும் கண்டிப்பாய் பொருள் சேர்க்கக் கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் அது பிராமணனுக்கு துன்பமாய் முடியும். - அ.10.  சு.129.

32.          மனுவால் எந்த வருணத்தாருக்கு இந்த மனுதர்ம சாஸ்திரத்தால் என்ன தர்மம் விதிக்கப் பட்டதோ, அதுவே வேத சம்மதமாகும். ஏனென்றால், அவர் வேதங்களை நன்றாய் உணர்ந்தவர். - அ.2.  சு.7.

இன்னும் இதைப் போன்று ஆயிரக்கணக்கான அநீதியானதும், ஒரு சாராருக்கு நன்மையும், மறுசாராருக்குக் கொடுமையும் செய்வதுமான விதிகள் மனுதர்மத்தில் நிறைந்திருக்கின்றன. சுருங்கச் சொல்லுங்கால் பிராமணன் என்ற வகுப்பாரைத் தவிர, வேறு எந்த வகுப்பாருக்கும் அதில் யாதொரு நன்மையும் இல்லை என்றே கூறலாம். ஆகையால் தோழர்களே! இந்நூலை மனுதர்மம் என்று கூறுவதா? அல்லது மனுஅதர்மம் என்று கூறுவதா? சற்று யோசித்து முடிவு செய்யுங்கள்.

-  விடுதலை நாளேடு, 19.4.19

வியாழன், 21 பிப்ரவரி, 2019

அக்கப்போரின் அச்சு வடிவமான 'துக்ளக்' ஏடு, பித்தலாட்ட பிரச்சாரத்தின் மொத்த வடிவம்!

மனுதர்மக் கருத்துகளை மாற்றிக் கூறி சோ மோசடி!


மஞ்சை வசந்தன்


இன்று ஆசிரியராய் இருக்கும் குருமூர்த்தி அய்யர் மட்டுமல்ல, அவரின் குருவான சோ இராமசாமியும் அப்பட்டமான பொய்களை அசல் உண்மைபோல ஆலாபனம் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள்.

அப்படி மோசடியாய், பொய்யாய், தப்பாய் எழுது கிறோமே என்று கொஞ்சங்கூட கூச்சநாச்சமில்லாமல் எழுதக் கூடியவர்கள்.

27.02.2019 தேதியிட்ட துக்ளக் இதழில் தருமத்தின் சாரம் என்னும் தொடரில், மனுஸ்மிருதி கூறும் சட்டங் கள் என்னும் தலைப்பில் சோ இராமசாமி எழுதியவை வெளியிடப்பட்டுள்ளன.

அக்கட்டுரையில் சோ எழுதியுள்ளவை: பிராமணன் என்றால் வெறும் பிறப்பால் மட்டும் ஆகாது.

ஸூத்ரோ ப்ரோஹ்மணதாமேதி ப்ராஹ்மணச் சேதி ஸூத்ரதாம்

க்ஷத்ரியாத் ஜாதமேவம் து வித்யாத் வைச்யாத் ததைவ ச

- மனுஸ்மிருதி 10-ஆவது அத்தியாயம், 65-ஆவது ஸ்லோகம்

தன்னுடைய நடவடிக்கையினால் ஒரு சூத்திரன் பிராமணன் ஆகலாம். பிராமணன் சூத்திரன் ஆகலாம். இப்போது நான் கூறிய மாதிரி எல்லாம் வாழ்ந்து, அதை விட மட்டமாக எல்லாம் வாழ்ந்து - க்ஷத்திரியனும், வைசி யனும் இடம் மாறலாம்; க்ஷத்திரியன் வைசியனாகலாம். வைசியன் க்ஷத்திரியனாகலாம். இதெல்லாம் நடத்தை யைப் பொறுத்தது. அவனது குணத்தைப் பொறுத்தது என்று மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். தவிர, பிராம ணனுக்கு உரிய சலுகைகள் குறித்தும் மனுஸ்மிருதியில் சொல்லியிருக்கிறது. என்கிறார் சோ இராமசாமி.

இது அப்பட்டமான மோசடி! தப்பான பித்தலாட்டப் பிரச்சாரம்!

சோ குறிப்பிடும் மனுஸ்மிருதி 10ஆவது அத்தியாயம் 65ஆவது ஸ்லோகத்தில் உண்மையில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்பதை அப்படியே கீழே தருகிறோம்.

மேற்சொன்னபடி பெண்சந்ததி வழியினால் சூத்திரகுலத்தில் ஏழாந்தலைமுறையில் பிராமணனுக்குப் பிறந்தவன் பிராமணனாகிறான். அந்த சூத்திர ஸ்திரீயிடத்திலேயே பிராமணனுக்குப் பிறந்த புருஷசந்ததி சூத்திரத் தன்மையை அடையும். க்ஷத்திரியனுக்கு சூத்திர ஸ்திரீயிடத்தில் பிறந்த பெண்சந்ததி க்ஷத்திரியனையே விவாகஞ் செய்துக் கொண்டுவந்தால் அய்ந்தாவது தலைமுறையில் க்ஷத்திரியத் தன்மையையும், வைசிய னுக்கு சூத்திர ஸ்திரீயிடத்தில் பிறந்த பெண் சந்ததி மூன்று தலைமுறை வரையில் வைசியனை விவாகஞ் செய்து கொண்டுவந்தால் வைசியத் தன்மையையும் அடையும். என்று அந்தச் சுலோகம் சொல்கிறது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ளதற்கும், சோ இராமசாமி கூறியுள்ளதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? மனுதர்மத்தில் கூறியுள்ளதை மாற்றி, இவர் கற்பனையில் மோசடியாக எழுதியுள்ளார்.

அது மட்டுமல்ல மனுஸ்மிருதி 10ஆவது அத்தியாயம் 73ஆவது ஸ்லோகம் என்ன சொல்கிறது தெரியுமா?

பிராமணன் தொழிலைச் செய்தாலும் சூத்திரன் பிராமண ஜாதியாக மாட்டான். ஏனென்றால் அவனுக்கு பிராமண ஜாதித் தொழிலில் அதிகாரமில்லை அல்லவா. சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் சூத்திர ஜாதியாக மாட்டான். ஏனென்றால் அவன் ஹீனத் தொழிலைச் செய்தாலும் அவன் ஜாதி உயர்ந்ததல்லவா. இப்படியே இந்த விஷயங்களை பிரம்மாவும் நிச்சயஞ் செய்திருக்கிறார். என்கிறது மனுதர்மம்.

அதாவது பிராமணன், சூத்திரன் என்ற பிரிவு பிரம் மாவில் செய்யப்பட்டது. அது குணத்தாலோ, செயலாலோ வருவதல்ல என்கிறது.

சோ இராமசாமி சொல்வதற்கு நேர் மாறான கருத்தை மனுநீதி சொல்லியுள்ளது.

மனுஸ்மிருதியில் சொல்லாததை மட்டுமல்ல, மனுஸ்மிருதி சொல்லியுள்ளதற்கு நேர் எதிரான கருத்தை மாற்றி மோசடியாக எழுதி, மனுதர்மத்திற்கு மகத்துவம் உண்டாக்கப் பார்க்கிறார் இந்த பித்தலாட்டப் பேர்வழி.

அது மட்டுமல்ல. 10ஆவது அத்தியாயம் 64ஆவது ஸ்லோகத்தில்,

பிராமணன் விவாகஞ் செய்துகொண்ட சூத்திர ஸ்திரீ யிடத்தில் பிறந்த பெண் பிராமணனையே விவாகஞ் செய்துகொண்டு அவளுக்கும் பெண்ணாகவே பிறந்து அவளுக்கும் பெண்கள் பிறந்து அவர்களும் இவ்வித மாகவே ஏழு தலைமுறைவரையில் பிராமணனையே விவாகஞ் செய்து கொண்டுவந்தால் ஏழாவது தலை முறையில் பிறந்தவர்கள் பிராமண ஜாதியர்களாகிறார்கள். என்கிறது  மனுதர்மம்.

பிராமணனுக்கும், சூத்திரப் பெண்ணுக்கும் பிறப்ப வன்கூட பிராமணன் ஆக முடியாது. ஏழு தலைமுறை பிராமணப் பெண்ணின் வயிற்றில் பிறந்த பிறகுதான் பிராமணனாக முடியும் என்று மனுஸ்மிருதி கூறுகிறது. ஆக பிறப்பின் அடிப்படையில் வருவது பிராமண - சூத்திர வேறுபாடு என்பதை மனுஸ்மிருதி ஆணித் தரமாய் கூறியுள்ள நிலையில் அதை மாற்றி மோசடியான கருத்தை சோ இராமசாமி எழுதியதும், அதை குருமூர்த்தி அய்யர் மறுபதிப்பு செய்வதும் மகத்தான மோசடிச் செயல் அல்லவா?

மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மத்தை திராவிடர் கழகம் எரித்து மக்கள் மனுதர்மத்தை வெறுக்கும்படி செய்யும் நிலையில், மனுதர்மத்திற்கு உயர்வு தந்து அதன் மீது மக்களுக்கு மதிப்புண்டாக்க குருமூர்த்தி அய்யர் முயற்சி செய்கிறார்!

அது மட்டுமல்ல,

10ஆவது அத்தியாயம் 4ஆவது ஸ்லோகம்

நாலு வருணத்தாருக்குள் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் இம்மூவரும் இரண்டுவிதமாகப் பிறப்பதனால் துவிஜாதிகளென்று சொல்லப்படுகிறார்கள். சூத்திரனுக்கு உபநயந முதலிய வில்லாததால் ஒரு ஜாதியாகவேயிருக்கிறான்.  என்கிறது. அதன்படி சூத்திரன் என்றும் சூத்திரன் தான் என்கிறது மனுதர்மம். உண்மை அப்படியிருக்க, சூத்திரனும் நடத்தையால் பிராமணன் ஆகலாம் என்று சோ சொல்வது பித்தலாட்டக் கருத்தல்லவா?

மேலும், அத்தியாயம் 10, ஸ்லோகம் 1-இல்

தன் கருமத்தில் நிலைபெற்ற பிரம்ம க்ஷத்திரிய வைசியர் மூவரும் வேதமோத வேண்டும். அதில் க்ஷத்திரிய வைசியர்களுக்கு பிராமண ணோதிவைக்க வேண்டும். அவ்விருவரும் ஓதிவைக்கக் கூடாது. இது சாஸ்திர நிச்சயம்.

என்கிறது. மனுதர்மம். இதன்படி பிராமணன் தொழிலை மற்றவர்கள் செய்யக் கூடாது. அவர்கள் ஓதி வைக்கக் கூடாது என்றால் அவர்கள் எப்படி பிராமணன் ஆக முடியும்? ஆக, சோ கூறுவது மனுதர்மத்தில் இல்லாத இவரது சொந்த சரக்குகள். மோசடிக் கருத்துகள். இவர்தான் நேர்மைக்கு அடையாளம் என்கிறது பூணூல் கூட்டம்! புரிந்து கொள்ளுங்கள்!

மனு கூறும் தண்டனை பற்றிக் குறிப்பிடும் சோ இராமசாமி பிராமணனுக்குக் கூடுதல் தண்டனை கொடுக்க வேண்டும் என்று மனுஸ்மிருதி சொல்வதாய் எடுத்துக்காட்டுகிறார். ஆனால், மனுதர்மம் உண்மையில் என்ன சொல்கிறது?  கொலைக்குற்றத்திற்கு உரிய தண்டனையை மனுதர்மம் கீழ்க்கண்டவாறு சொல்கிறது.

மனுஸ்மிருதி எட்டாவது அத்தியாயம் 379ஆவது ஸ்லோகம்

பிராமணனுக்குத் தலை மயிரை மொட்டையடிப்பது கொலைத் தண்டமாகும். மற்ற வருணத்தாருக்கு மரண தண்டனை தரவேண்டும் என்கிறது. அதாவது,

பிராமணனன் கொலை செய்தால் அவன் தலைமயிரை மொட்டையடிக்க வேண்டும். மற்ற வருணத்தார் கொலை செய்தால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்கிறது.

இதை மறைத்து மனுஸ்மிருதியை பாராட்டுகிறார் சோ.

அது மட்டுமல்ல, மனுஸ்மிருதியைப் போல ஒரு சிறந்த நூலே இல்லை. இப்படியொரு நூலை இந்தியாவில் ஒருவர் எழுதியிருப்பதை எண்ணி நாம் பெருமைப் படவேண்டும் என்கிறார்.

ஆனால், உண்மையில் மனுதர்மம் பெருமைக்குரிய நூலா? அது மனித தர்மத்திற்கு எதிராகவும், ஆரிய பார்ப் பனர் உயர்விற்கும், நலத்திற்கும், மற்றவர்கள் தாழ்விற் கும், இழிவிற்கும் கருத்து சொல்லும் நூல்.

சான்றாகச் சில:

பிராமணன் பிறவிச் சிறப்பாளன்; தேவரும் மதிக்கத் தக்கவன்; மனிதரில் உயர்ந்தவன்; தேவமந்திரமே அவன் உயர்வுக்குக் காரணம். எனவே அவன் முடிவுப்படி நடக்க. (மனு: 11:84)

பிராமணன் ஞானியாயிருந்தாலும் மூடனாயிருந்தாலும் அவனே மேலான தெய்வம். (மனு: 9:317)

பத்து வயதுள்ள பிராமணனையும், நூறு வயதுள்ள சத்திரியனையும் தகப்பன் - பிள்ளையாக அறிய வேண் டியது. பிராமணன் தகப்பன் மரியாதையும், சத்திரியன் புத்திர மரியாதையும் வகிக்க வேண்டியது. (மனு: 2:135)

கணவன் துராசாரமுள்ளவனாக விருந்தாலும் அந்நிய ஸ்திரீலோலனாயிருந்தாலும் நற்குணம் இல்லாத வனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப் போற் பூசிக்க வேண்டியது! (மனு: 5:154)

கணவன் சூதாடுகிறவனாயிருந்தாலும், குடியனாக விருந்தாலும், நோயாளியாகவிருந்தாலும் அவனுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யாவிட்டால் அவ ளுக்கு அலங்காரம், துணிமணிகள், படுக்கை இவற்றைக் கொடாமல் மூன்று மாதம் நீக்கி வைக்க வேண்டியது. (மனு: 9:78)

மாதர்களின் சுபாவமே மனிதர்கட்குச் சிருங்கார சேஷ்டைகளினால் தோஷத்தையுண்டு பண்ணும். (மனு: 2: 213)

மாதர்கள் கற்பு நிலையின்மையும் நிலையா மனமும் நண்பின்மையும் இயற்கையாக உடையவர்கள்! (மனு: 9:15)

மாதர் ஆடவரிடத்தில் அழகையும் பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மட்டும் முக்கியமாக எண்ணிப் புணருகிறார்கள்! (மனு: 9:14)

ஒருவனின் மனையாளிடத்தில் மனையாளில்லாத மற்றொருவன் பிள்ளையையும் உண்டு பண்ணலாம். (மனு: 9:52)

பிராமணன் சாப்பிட்ட மிச்சம், பழைய துணிகள், ஒதுக்கித் தள்ளும் தானியங்கள், பாத்திரங்கள் இவையே சூத்திரனுக்குரிய கூலி (மனு: 125, அத்-10)

ஆரியர் அல்லாத மற்றவர்கள் கறைப்பட்ட கருப்பையில் பிறந்தவர்கள் (மனு-58, அத்-10)

பெண்களுக்கு சுயவாழ்வு இல்லை. அவர்கள் பிள்ளைப் பருவத்தில் பெற்றோரையும், அடுத்து கணவ னையும், பின் பிள்ளைகளையும் சார்ந்தே வாழ வேண்டும். (மனு - 148, அத்-5)

கணவன் தீயகுணம், செயல் உள்ளவனாக விருந்தாலும், பல பெண்களோடு உறவு கொள்பவனாக இருந்தாலும் பெண்ணானவள் அவனை தெய்வமாக எண்ணிப் பூசிக்க வேண்டும்.(தொழவேண்டும்) (மனு 5: 154)

பிராமணன் சூத்திரனிடத்தில் ஏதாவது பொருள் இருந்தால் அதைப் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் சூத்திரன் பிராமணனுக்கு அடிமையானதால் சூத்திரனுக்கென்று பொருள்கூட உரிமையில்லை. (மனு: 8ஆம் அத்தியாயம், சுலோகம் 417)

கூலி கொடுத்தோ அல்லது கூலி கொடுக்காமலோ சூத்திரனை பிராமணன் வேலை வாங்கலாம். ஏனென் றால், பிராமணனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டே சூத்திரன் பிரம்மாவால் படைக்கப்பட்டிருக்கிறான். (மனு: 8ஆம் அத்தியாயம், சுலோகம் 413)

இப்படிப்பட்ட மனுதர்மம்தான் அரசியல் சட்டம் ஆகவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தப்பித்  தவறி மீண்டும் மோடி வித்தைகள் பலித்து மத்தியில் ஆட்சிக்கு வந்தால், அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்திற்குப் பதில், மனுதர்மம்தான் இந்நாட்டில் அரசியல் சட்டமாகும். அப்படி மனுதர்மம் வந்தால், மேற்கண்ட அவல நிலை தான் வரும்

இம்முயற்சி, இந்த ஆபத்து உடனே தகர்க்கப்பட வேண்டும்! எனவேதான் மனுதர்மம் எரிக்கப்பட வேண்டும்!

- விடுதலை நாளேடு, 21.2.19