வெள்ளி, 9 டிசம்பர், 2022

அட, பஞ்சப் பாண்டவப் புத்திரர்களே! (பதிலடிப் பக்கம்)

 பதிலடிப் பக்கம்

அட, பஞ்சப் பாண்டவப் புத்திரர்களே!

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

தொகுப்பு: மின்சாரம்

‘துக்ளக்'கில் ஒன்னரைப் பக்க நாளேடு என்னும் ஒரு பகுதி  - சகட்டு மேனிக்குப் பொய்ப் புழுக்கைகளை அவிழ்த்துக் கொட்டுவதுதான் அதன் பிழைப்பு.

மனுநீதி காத்த மாவீரன் - ஆ.ராசாவுக்கு வீரமணி பட்டம் என்பது அதன் தலைப்பு அது - எழுதிய பகுதி இதோ: (‘துக்ளக்', 9.10.2022)

"ஹிந்துக்களைப் கேவலப்படுத்திப் பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவுக்கு பெரியார் திடலில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், ‘மனுநீதி காத்த மாவீரன்' என்ற பட்டத்தை வழங்கி வீரமணி பேசியதாவது:

மனுதர்மம்

"மனுதர்மத்தில் சூத்திரர்கள் எப்படியெல்லாம் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதை எடுத்துக் கூறிய ஒரே காரணத்துக்காக ஆ.ராசாவை ஒட்டு மொத்த ஹிந்துக்களும் சேர்ந்து கொண்டு அரசியலிலிருந்தே ஒழித்துக் கட்டப் பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட அநீதி உலகத்தில் எந்த நாட்டிலும் நடக்காது.

பெரியார்

"பெரியார் இருந்திருந்தால், ஹிந்துக்களுக்கு இவ் வளவு சொரணை வந்திருக்குமா? ராசா என்ன தன்னு டைய கருத்தையா சொன்னார்? வர்ணாசிரமத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று பெரியார் சொன்ன தைத் தானே திருப்பிச் சென்னார்?

வகை

"மனுதர்மப்படி ஹிந்துக்கள் எத்தனை வகைன்னு ஹிந்துக்களுக்கே தெரியாது, சூத்திர ஹிந்துக்கள் வேறு, பார்ப்பன ஹிந்துக்கள் வேறு, பா.ஜ.க. ஹிந் துக்கள் வேறு மதச்சார்பற்ற ஹிந்துக்கள் வேறு, மானம் கெட்ட ஹிந்துக்கள் வேறு, ரோஷம் கெட்ட ஹிந்துக் கள் வேறு.

மானம் கெட்ட ஹிந்துக்களைப் பற்றி ராசா பேசி னால், ரோஷம் கெட்ட ஹிந்துக்களுக்கு ஏன் ரோஷம் வருகிறது? சூத்திர ஹிந்துக்களுக்கு சொரணை இல்லை என்று ராசா சொன்னால், பார்ப்பன ஹிந் துக்கள் ஏன் சம்பந்தம் இல்லாமல் தலையிடுகிறார்கள்.

பட்டம்

"நீ ஹிந்துவாக இருக்கும் வரை உனக்கு புத்தி கிடையாது, மூளை கிடையாது, அறிவு கிடையாது, இதை நானோ ராசாவோ சொல்லவில்லை. மனுநீதி கூறுகிறது. வேறு மதத்துக்கு மாறினால் இவை எல்லாமே உடனடியாக வந்துவிடும். எங்களுக்கே அப்படித்தான் வந்தது. இதைத்தான் சுருக்கமாகச் சொன்னார் ராசா. அவரைப் பாராட்ட வக்கில்லாத மோடி அரசு, அவருக்கு எதிராக போராட்டம் நடத்து கிறது. பெரியார் இருந்திருந்தால் ராசாவுக்கு எந்த பட்டத்தை வழங்கியிருப்பாரோ, அதைத்தான் திராவி டர் கழகம் வழங்குகிறது." இதுதான் துக்ளக் கிறுக்கல்கள்.

2022ஆம் ஆண்டில் நம் கண்ணுக்கு எதிரே நடந்த நிகழ்ச்சியைப் பற்றி - இப்படி எல்லாம் அண்டப்புழுகு - ஆகாய புழுகுகளை அவிழ்த்துக் கொட்டுகிறார்கள் என்றால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த அவிட்டுத் திரிகள் எவ்வளவு சாக்கடைக் கும்பியை நனைத்து எழுதிக் குவித்திருப்பார்கள்.

திராவிடர் கழகத் தலைவர் சொல்லாததை எல்லாம், எப்படியோ  எடிட்டர் ஆன ஆடிட்டர் உளறிக் கொட்டியுள்ளார்.

மானங்கெட்ட ஹிந்துக்கள், ரோஷம் கெட்ட ஹிந்துக்கள் என்று ஆ.இராசா சொல்லாததை எல்லாம் குருமூர்த்தி அய்யர் ‘வாள்' ஆவேசமாக அவிழ்த்துக் கொட்டியுள்ளார்.

‘நீ ஹிந்துவாக இருக்கும் வரை உனக்கு புத்தி கிடையாது, மூளை கிடையாது' - இவையும் இராசா சொல்லாத குருமூர்த்தி குருக்கள் வாய் உதிர்த்தவை தான்.

குருமூர்த்திகளுக்கு அப்படி என்ன ஹிந்துக்கள் மீது ஆறாத துவேஷம்? இராசாவின் பெயரைச் சொல்லி இப்படியெல்லாம் ஹிந்துக்களைத் திட்டித் தீர்த்துள்ளார்.

ஆ.இராசா சொன்னது மனுதர்மத்திலிருந்து - அத்தியாயம் 8, சுலோகம் 415, 417லிருந்து.

யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குல வழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன் - இவன்தான் ஏழு வித தொழிலாளியாகிய சூத்திரன் - இவனிடமிருந்து பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம், யஜமான் எடுத்துக் கொள்ளத்தக்க பொருளையுடைய அந்தச் சூத்திரன் தன் பொருளுக்குக் கொஞ்சமும் சொந்தக்காரனல்ல.

அறிவு நாணயம் இருந்தால், ஒழுக்கத்தில் கொஞ்சமேனும் அக்கறை இருந்தால் ஆ.இராசா கூறிய ஆதாரப்பூர்வமான எடுத்துக்காட்டுகள் எல்லாம் பொய்யென்று செல்ல முன்வரட்டுமே பார்க்கலாம்.

பார்ப்பனர் அல்லாதரை சூத்திரர்கள் என்பார்கள் - சூத்திரன் என்றால் தேவடியாள் மக்கள் என்பார்கள், அதைக் கேட்டுக் கொண்டு பேன் குத்திக் கொண்டு இருக்க வேண்டுமா?

அட பஞ்சப் பாண்டவப்புத்திரர்களே, அறிவு நாணயமிருந்தால் ஆதாரத்தோடு மறுத்து எழுது - அல்லது சலாம் போட்டு ஓடிவிடு!

அட, துக்ளக் கூட்டமே

ஆ.இராசா சொல்லாதவற்றை எல்லாம் சொன்ன தாகக் கதைகட்டும் திரவுபதையின் பிள்ளைகளே! நீங்கள் வேண்டுமானால் அபாண்டங்களை அள்ளி வீசலாம்.

நாங்கள் நினைத்தால் உங்கள் புராண இதிகாச கழிசடைகளை வண்டி வண்டியாகக் கொட்ட முடியும். எடுத்துக்காட்டுக்கு இங்கே:

(ஆதாரம்: மத விசாரணை, ஆசிரியர் சுவாமி சிவானந்த ஸரஸ்வதி, பக். 133-138)

விஷ்ணுவின் சதி.

ஒரு காலத்தில் 'நாரத முனிவர் இமயமலையில் கடுந்தவமியற்றிக் கொண்டிருந்தார். இந்திரன் இதைப் பார்த்து பயங்கொண்டு தவத்தைக் கெடுத்துவரும்படி காமனைப் பலதரம் ஏவியும் கோரிய பலன் கைகூட வில்லை. ஆனால் நாரதருக்குத்தான் "தபஸ்வி" என்கிற செருக்கு ஏற்பட்டது. பின்னர் இதைக்குறித்த முழு விவரத்தை யும் சிவபெருமானிடம் தெரிவித்தார். சிவபெருமான் இதற்குச் செவிசாய்த்து பின் நாரதரே! என்னிடம் கூறிய மாதிரி விஷ்ணுவினிடம் கூற வேண்டாம் என்று உபதேசித்தார். பிறகு நாரதர் பிரம லோகம் சென்று பிரமனிடமும் தெரிவித்தார். பிறகு விஷ்ணு வினிடம் சென்று கதை முழுவதும் தெரி வித்துவிட்டு விஷ்ணுவை வணங்கி விடை பெற்றுப் பிரயாணமானார். நாரதர் சென்று கொண்டிருக்கும் வழியில் பெண்களாலும் ஆண்களாலும் நிறையப் பெற்ற இரு நகரங்கள் விஷ்ணுவினால் உண்டாக்கப் பெற்றன. அந்நகரங்களுக்கு அரசனான ‘சீலநிதி' என்பானின் மகள் ஸ்ரீமதி என்பவளுக்கு 'சுயம் வரம்' ஏற்பாடாயிருந்தது. இதற்காகப் பல தேசத்து மன்னர் களும் வந்திருந்தார்கள். நாரதர் இக்கன்னிகைமீது காதல்கொண்டு அவள் தன்னை விரும்புதற்கேற்ற அழகைப்பெற எண்ணி விஷ்ணுவினிடம் திரும்பி வந்து விஷயத்தைத் தெரிவித்து தங்களின் உருவத்தை அடியேனுக்கு அளித்தருளவேண்டும் எனப் பிரார்த் திக்க விஷ்ணு செய்த சதியாவது:-

நாரதமுனிவரின் இத்தகைய வார்த்தையைக்கேட்டு மது சூதனன் (விஷ்ணு) நகைத்தவராய் பரமசிவனு டைய பிரபுத்தன்மையையும் நினைத்து தயவுடன் மறுமொழி பகர்ந்தார். (சு-30)

"முனிவரே; உமது விருப்பத்திற்குரிய இடம் எதுவோ அங்கு செல்வீராக, உமது விருப்பத்தை நான் நிறைவேற்றுவேன். ஏனென்றால் நோயுற்றவனுக்கு வைத்தியன்போன்று நீர் எனக்கு மிகவும் பிரியமுடை யவர் (சு-32)

இவ்வாறு கூறி அந்நாரதருக்கு குரங்கின் முகத் தையும் தனது ஸ்வரூபத்தையும் (சதுர்புஜம் முதலியன) அளித்து மறைந்தருளினார். (சு-32)

சிவபுராணம் ருத்ரஸம்ஹிதா சிருஷ்டி கண்டம்.

அத்தியாயம் 3, சுலோகம் 30-31-32).

சகோதரர்களே! விஷ்ணுவின் சதியைப்பார்த்தீர் களா இவ்வஞ்சகனான விஷ்ணுவின் இனிய மொழி களில் மயங்கிய நாரதர் "அவசரக்கோலம் அள்ளித் தெளி" என்னும் பழமொழிக்கிணங்க ஸ்ரீமதியின் சுயம்வர மண்டபத்தை அடைந்தார் பாவம்! கண்ணாடி யில் தனது முகத்தை முதலில் பார்த்துவிட்டுப் பின்னர் சுயம்வரத்திற்குச் சென்றிருக்கலாகாதா ஓய் நாரதரே! "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்னும் பழமொழி உம்மைப்பற்றி தான் எழுந்தது போலும்.

வாசகர்களே! பின்னர் நடந்ததையும் கேளுங்கள்.

"அழகிய இலக்கணங்களையுடைய அவள் (ஸ்ரீமதி) அச்சுயம்வர மண்டபத்தின் நடுவில் பொன்னி னாலாக்கப் பெற்ற மாலை ஒன்றைக் கையிலேந்தி இலட்சுமிதேவியைப்போல் தோன்றினாள். (சு-45)

விஷ்ணுவின் சரீரமும் குரங்கின் முகமும் உடைய நாரதமுனியைக் கண்ணுற்றுக் கோபங்கொண்டாள். (சு-46)

தன் பார்வையை அந் நாரதனிடத்திலிருந்து திருப்பி சந்தோஷத்தோடு (மற்றொருவனிடம் சென்றாள். (சு-47)

அச்சமயம் அரசவுருவோடு விஷ்ணுவானவர் அங்கு வந்தார். ஆனால் அவளால் மட்டும் விஷ்ணு காணப்பட்டார் வேறு யாரும் பார்க்கவில்லை. (சு-49)

பின்னர் விஷ்ணுவைக் கண்டு மனம் மகிழ்ந்து அக்கட்டழகி அம்மாலையை அவன் கழுத்தில் சாற்றினாள். (சு-50)

(சிவபுராணம் ருத்ரஸம்ஹிதா சிருஷ்டி கண்டம் 

(அத்தியாயம் 3)

வாசகர்களே! விஷ்ணுவானவர் தன்னை நம்பின பக்தசிரோமணியான நாரதமுனியையே இவ்வாறு சதியால் ஏமாற்றினாரென்றால் அத்தகையார் அசுரர் களை ஏமாற்றிக் கொலை செய்தது ஆச்சரியமல்ல. இவ்வாறு ஜனங்களை ஏமாற்றித் துன்புறுத்துவதனாற் போலும் விஷ்ணுவிற்கு "ஜனார்த்தனன்" என்னும் பெயர் வந்தது. (ஜனார்த்தனன் ஜனங்களைத் துன் புறுத்துகிறவன்).

பிறகு அப்பெண்னைத் தூக்கிச் செல்லத் தலைப் பட்டார். அச்சமயம் நாரதர் மிகவும் துக்கித்து தன்னைச் சதிசெய்த அவ்விஷ்ணுவைப் பலவாறு தூற்றி சாபங்கொடுத்தார்,

"அரியே! நீ மிகக்கொடியவன். உலகத்தை வஞ்சிப்பவன். பிறனுடைய ஆனந்தத்தைப் பொறாதவன், துர்ப்புத்தி அழுக்கு படிந்த மனத்தினன். (சு-6)

பண்டு மோகினி வடிவெடுத்து அவர் ஏமாற்றி வாருணியைப் பருகும் செய்தாய். அமிர்தத்தை அவர்களுக்கு கொடுக்கவில்லை (வாருணி-கள்) (சு-7)

ஏமாற்று வித்தையில் உனக்குப் பிரியம் அதிகம். நீ நன்னடத்தையுடைபவனல்லாதிருந்தும் பிரபுவினால் சுவதந்திரனாகச் செய்யப்பட்டிருக்கிறாய் (பிரபு-பரமசிவன்) (சு-9)

அரியே! அதை (உன் வஞ்சனையை) அறிந்த நான் இப்போது உன்னைச் சிக்ஷிக்கின்றேன். ஏனென்றால் இனிமேல் நீ இத்தகைய குற்றத்தைச் செய்யலாகாது. (சு-12)

மாயையால் மயக்குற்ற முனியானவர் இவ்வாறு மொழிந்து சினத்தினால் வெறுப்புற்று தனது பிரம தேஜஸை வெளிப்படுத்திக் கொண்டு விஷ்ணுவைச் சபித்தார். (சு-14)

பெண்ணின் பொருட்டு என்னைத் துன்புறச் செய்தாய். எந்த வுருவுடன் என்னை வஞ்சித்தனையோ அவ்வுருவோடு துக்கத்தை அனுபவிக்கும் மனுஷனா கக் கடவாய். அன்றியும் எந்தப் பிராணியினுடைய முகத்தை எனக்குக் கொடுத்தாயோ அவை அப்போது உனக்கு உதவி செய்யட்டும். (சு-16)

பிறருக்குத் துன்பத்தைத் தரும் நீ பெண்ணைப் பிரிந்து துன் புறுவாயாக, அறியாமையினால் மயங்கிய திரிவாயாக. மனுஷனைப் போன்று (சு-17)

(ருத்ரஸம்ஹிதா சிருஷ்டி கண்டம்.)

அத்தியாயம் 4.

வாசகர்களே! இத்தகைய இழிதன்மையையுடைய விஷ்ணுவை இறைவனாக ஏற்றிப் போற்றுவதனால் அடையும் பயன் யாது? "யதா ராஜா ததா ப்ரஜா' இம்மூதுரையின் அர்த்தப்படிக்குள்ள பிரயோஜனம் தான்,

பிரமதேவனின் மற்றொரு விளையாட்டும் 

காமதேவனுடைய பிறப்பும்,

பிரமதேவர் தனது புத்திரனான நாரதமுனிவரிடம் கூறுகின்றார்:-

ஓ முனியே பிரமதேவனாகிய நான் எப்போது எனது மனதிலிருந்து மரீசி, அத்ரி, புலஹன், புலஸ்தி யன், அங்கிரஸ் க்ரது, வஸிஷ்டன், நாரதன், தக்ஷன், பிருகு என்னும் புத்திரர்களைத் தோற்றிவித்தேனோ அப்போது என் மனதினின்றும் அழகிய பெண் ஒருத்தியும் தோன்றினாள் (சு.18-19)

அவள் சந்த்யா, திவக்ஷாந்தா சாயம்சந்த்யா, ஜபந் திகா முதலிய பெயர்களால் அறியப்படுபவள். முனி களின் மனதையும் மயக்குபவள் (சு-20)

அவளுக்கொப்பாக மற்றொரு அழகி சுவர்க்கம், பூமி, பாதாளம் என்னும் மூவுலகங்களிலும் மூன்று காலங்களிலும் இல்லை. எல்லாக் குணங்களும் நிறைந்தவள். (சு-21)

அவளைக் கண்டதும் எழுந்து நான் என் மனதில் ஏதோ எண்ணினேன், தக்ஷன் முதலிய எனது புத்திசர் களும் யோசனை செய்யத் தொடங்கினார்கள் (சு-22)

 முனிசிரேஷ்டரே! இவ்வாறு எண்ணமிட்டுக் கொண்டிருந்த பிரதமதேவனாகிய என் மனதினின்றும் "காமதேவன்" என்னும் கட்டழகன் பிறந்தான். (சு-23)

நான் அவனுக்கு கட்டளையிட்டதாவது:- ஓ மகனே! நீ உன் உருவத்துடன் ஐந்து வகைப் பூக்களால் ஆக்கப்பெற்ற அம்புகளைத் தாங்கியவனாய் ஆண்களையும் பெண்களையும் மயக்கி "சனாதன சிருஷ்டி"யைச் செய்ய வேண்டும். (சு-37)

நான், வாசுதேவன், புருஷோத்தமனான தானு இம்மூவரும் உன் வயப்படுவார்கள் என்றால் மற்ற உயிர்களைக் குறித்துக் கூறுவானேன். (சு-39)

வாசுதேவன் = விஷ்ணு, தாணு = பரமசிவன்.

(சிவபுராணம் ருத்ரஸம்ஹிதா ஸ்தீகண்டம் அத்தியாயம் 2).

வாசகர்களே! இக்கதையைக் கவனியுங்கள். சிருஷ்டி கர்த்தாவாகிய பிரமதேவன் தான் பெற்ற பெண்ணின்மீது தனக்குற்ற மிருக விருப்பத்தைத் தனது புத்திரனுக்குக் கூறுகிறார். அப்புத்திரன் யாரென்றால் அச்சமயம் தன்னுடன் இருந்தவர்களும் தன்னைப் போன்ற படிற்றொழுக்கத்தினர்களுமான பல பிள்ளைகளுள் ஒருவன். ஆனால் பல்லாண்டு களுக்குமுன் நடந்த இவ்வற்புதம் தமது அரும் புதல்வன் மறந்துபோயிருந்தால் என்செய்வது. மூவுல கங்களுக்கும் "வார்த்தாவிதரணம்" செய்பவரல்லவோ தனது புதல்வரான நாரதர் ஆகையால் நினைப் பூட்டுகிறார் போலும். இப்பிரமதேவனின் அறிவே அறிவு. இவரைக் கடவுளாகக் கூறும் புராணங்களின் பெருமைக்கும் அவைகளைப் படித்து ஆனந்தமுறும் பக்தசிரோமணிகளின் பாக்கியத்திற்கும் ஒப்பும் இணையும் உண்டோ.

எடுத்துக்காட்டுக்குத்தான் இவை. சீண்டினால் உங்கள் ‘ஹிந்து'வின் குப்பை வண்டி பூமிக்கும் வானுக்குமாகக் கொட்டிக் கிடக்கும் நிலை ஏற்படும்!

நீங்கள் கிறுக்குவது பொய்யில் பிறந்த பித்தலாட்டமே! நாங்கள் எழுதுவதோ நீங்கள் எழுதிக் குவித்த ஆதாரங்களின் அடிப்படையில்!

வாழை இலைகள் முள் செடியோடு மோத ஆசைப்பட வேண்டாம்! எச்சரிக்கை!!

வெள்ளி, 14 அக்டோபர், 2022

தை அமாவாசை-திதி-தர்ப்பணம் ( திவசம் செய்கின்ற போது சொல்லப்படும் மந்திரம்)

 

பகுத்தறிவு : தை அமாவாசை-திதி-தர்ப்பணம்

மார்ச் 16-31,2021

தமிழர்கள் செய்ய வேண்டியவை யாவை?

செய்யக் கூடாதவை யாவை?

செய்ய வேண்டியவை :

விளக்கேற்றி வையுங்கள்.

பிறருக்கு உணவளியுங்கள்.

வள்ளல் பெருமானார் இயற்றிய அகவல் பாக்களை வாசியுங்கள் அல்லது ஒலிக்க விடுங்கள்.

செய்யக் கூடாதவை :

பிராமணர்களை வைத்து சமஸ்கிருத மந்திரங்களை ஓத விடாதீர்கள், “அவர்களுக்கு மட்டுமே” தானம் கொடுக்காதீர்கள்.

காரணம். அவர்களின் சமஸ்கிருத மந்திரங்களின் பொருள் இவை.

இறந்த பின்பு நடக்கின்ற சடங்குகளில் சொல்லப்படும் இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம். முதலில் இறந்த தந்தைக்கு திவசம் செய்கின்ற போது சொல்லப்படும் ஒரு மந்திரம்.

“யன்மே மாதா பிரலுலோப சரதி

அனனு விருதா தன்மே ரேதஹ

பிதா விருங்க்தா அபுரண் யோப பத்யதாம்

ரங்கராஜ சர்மனே ஸ்வாஹா

ரங்கராஜ சர்மனே அஸ்மது பித்ரே

இதம் நமம கிருஷ்ண கிருஷ்ண’’

இந்த மந்திரத்தின் பொருள்: “என்னுடைய அம்மா பத்தினியாக இல்லாது இருந்து, என்னை வேறு ஒருவருக்குப் பெற்றிருந்தால், இந்த திவசத்திற்கு உரிமை கோரி என்னுடைய உண்மையான தகப்பனார் வருவார். அப்படி இல்லாத என்னுடைய அம்மாவின் கணவரே இந்த திவசத்தைப் பெறட்டும்.’’ இதுதான் இந்த மந்திரத்தின் பொருள். அதாவது, “திதி கொடுப்பவனுடைய தாய் சில வேளைகளில் சோரம் போய் வேறு யாருக்காவது அவனைப் பெற்றிருக்கலாம்’’ என்று இந்த மந்திரம் சொல்கின்றது.

“உன்னுடைய அப்பா வேறு யாராவதாக இருக்கலாம். நீ அப்பன் பேர் தெரியாதவனாக இருக்கலாம்’’ என்று இந்த புனித மந்திரம் சொல்கின்றது.

தந்தைக்கு திவசம் செய்கின்ற போதுதான் இப்படி என்று நினைக்க வேண்டாம். சமஸ்கிருதம் தாய்க்கு திவசம் செய்கின்ற போதும் வஞ்சகத்தோடுதான் பொருள் கூறுகிறது.

அம்மாவிற்கு திவசம் செய்கின்ற போது சொல்கின்ற ஒரு மந்திரம் இதோ:

“என்மே மாதா ப்ரவது லோபசரதி

அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ பிதா

வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா அவபத்ய நாம”

இதன் பொருள்: “என்னுடைய அம்மா யாருடன் படுத்து என்னைப் பெற்றாளோ தெரியவில்லை. ஒரு நம்பிக்கையில்தான் அவளை என்னுடைய அப்பாவின் மனைவியாகக் கருதுகின்றேன். அந்த அம்மாவிற்கு இந்த திவசம் சென்று சேரட்டும்’’ என்பது.

அருட்பிரகாச இராமலிங்க வள்ளல் பெருமகனார், புரட்சிப் பெரு நெருப்பு… இதன் காரணமாகவே கருமாதி, திதி கூடாது என்கிறார்.

சரி… நாம் நமது அறிவைக் கொண்டு யோசிப்போம்.

“மறுபிறவி” உண்டு என்று நீங்கள் நம்பினால், இறந்தவர் உடனே வேறு தாய்க்குப் பிறந்திருப்பார்தானே?!

உங்கள் நம்பிக்கை அப்படி என்றால் இன்னொரு முறை பிறந்துவிட்ட, உயிரோடு இருக்கும் ஒரு உயிருக்குத் திவசம் செய்கிறீர்களே… இது என்ன நியாயம்?!

எனவே, இறந்த நம் முன்னோர் உருவங்களை மனப்பூர்வமாக வணங்கி நன்றி பாராட்டுவோம். “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’’ எனப் போற்றுவோம்.

இவ்வாறு செய்தால், அவர்கள் பிறப்பெடுத்திருந்தாலும் நம் வழிபாடு நேர்மறையாக அவர்களை வாழ்த்துவதாக அமையும். மாறாக, பிண்டம், திதி, சமஸ்கிருத மந்திரங்கள் வாயிலாக அசிங்கப்படுத்துவது, அவர்களை எதிர்மறையாக ஆக்குவதாகவே அமையும்.

வியாழன், 13 அக்டோபர், 2022

வேற்றுமையின் வித்தே சனாதனம்!

 

“வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றிக் கூறுகிறோம். சனாதனத் தருமமும் அதையேதான் கூறுகிறது. இந் தியாவின் தலைமைத்துவம் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் வளர சனாதனத் தருமம் வழி முறையாக இருக்கும்” என உயர்ந்த பொறுப்பில் இருக்கும் பெரியவர் ஒருவர் முத்து உதிர்த்துள்ளார். அறிந்தே சொல்லப்படும் பொய் என்பதால் அவருக்கு விளக்கம் சொல்லத் தேவையில்லை. தமிழ் நாட்டின் தலைவர்கள் பலரும் அவருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனினும் இதுபோன்ற பொய்களை நம்பும் அப்பாவிகள் உள்ளனர். அவர்களை வைத் துத்தான் பொய்களை விதைத்தும் பரப்பி யும் வருகின்றனர். எனவே, நாம் சனாதனம் என்பதே வேற்றுமையின் வித்துதான் என்பது குறித்து விளக்க வேண்டியுள்ளோம்.

இதுபற்றி அறிந்து கொள்ளும் முன்னர் நாம் ஆரியப் புரட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆரிய நூல்கள் யாவையுமே மனிதர்களிடையே வேறுபாட்டை விதைத்து வலியுறுத்துவனவாகவும் ஆரி யரை மட்டும் உயர்த்துவனவாகவும், பெண் களையும் பிறரையும் இழிவு படுத்துவன வாகவும் உள்ளன. அதே நேரம், இதற்குப் பெருமை சேர்க்க வேண்டும் எனக் கருதிய சிலரால் மிகுதியாகத் தமிழ்மொழியில் இருந்தும் பாலி மொழி முதலிய பிற மொழி களில் இருந்தும் நல்ல கருத்துகள் பல இடைச்செருகல்களாகச் சேர்க்கப்பட்டுள் ளன. ஆரியத்தை உயர்த்த எண்ணும் பொழுது இந்த இடைச்செருகல்களை ஆரியக் கருத்துகள்போல் கூறிப் பேசுவர். அவற்றில் இருந்து தமிழ்  முதலிய பிற மொழி இலக்கியங்கள் கடன் வாங்கியுள்ளன என்றும் பேசுவர். இதனை அறிஞர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சமற்கிருத இலக்கியங்கள் பேரளவி னவை என்பதைக் காட்டுவதற்காகப் பாலி மொழி நூல்களையும் பிராகிருத மொழி நூல்க ளையும் மொழிபெயர்த்துக் கொண்டு அல் லது அவற்றின் அப்பட்டமான தழுவல் களை எழுதிவைத்துக் கொண்டு மூலங் களை அழித்துவிட்டு அவையெல்லாம் சமற்கிருத நூல்கள் என்று பொய்யான வரலாற்றை உருவாக்கியுள்ளனர் - பேராசிரியை சுகுமாரி

வேதங்களில் வன்முறையும் அதிகார வெறியும் போற்றப்படுகின்றன.   - வெண்டி தோனிகர் (Wendy Doniger)

வேதங்களின் அடிப்படை இலட்சியம் விலங்குத்தனமானது -  சில்வியன் இலவி (Sylvian Levi)

சமற்கிருத இலக்கியங்களைப் பிற மொழி இலக்கியக் காலங்களுக்கு மூத்ததா கவும் முதன்மையானதாகவும் காட்ட முயன்ற மோசடிகளால் தான் காலக் குழப் பம் ஏற்பட்டுள்ளது - ஆர்தர் மக்குடானல்(Arthur A. Macdonell)

சமற்கிருத நூல்கள் இழிகாமத்தையே இயம்புகின்றன! - தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

இவை சனாதன நூல்கள் பற்றிய சில கருத்துகளாகும்.

“இந்து மதம் அல்லது வேத மதம் என்றும் அழைக்கப்படும் சனாதன தர்மம் 1960853110 வருட வரலாற்றைக் கொண்டுள் ளது. இந்தியாவின் சிந்து சமவெளி நாகரிகம் (மற்றும் நவீன பாகித்தான் பகுதி) இந்து மதத்தின் பல தடயங்களைக் கொண்டுள் ளது” என்று இல்லாத தொன்மையைக் கூறுவதுபோல் இழிவான கருத்துகளை மறைத்து இல்லாத சிறப்பையும் கூறுவது சமற்கிருதர்களின் பொய்யான வாதமாகும்.

எனவே, சனாதனவாதிகள் அறிந்தே சொல்லும் பொய்களையும் அதனை உண் மையென நம்பிப் போற்றி எழுதப்படும் தவறான தகவல்களையும் நம்பிச் சனா தனத்தைப் பாராட்டவும் வேண்டா; ஏற்க வும் வேண்டா.

தருமம் என்பது, அறியாதார்க்கு அவரின் பசி, வறுமை முதலான துயரத்தைப் போக்கத் தருவது. அறம் என்பது மனத்தில் மாசில்லாமல் இருப்பது. எனவே, நல் லொழுக்கங்களின்படி வாழ்வது.  சமற் கிருதத்தில் குறிப்பிடும் தருமம் என்றால் “விதிமுறைகள்” என்பது பொருள். சனா தனத் தருமம் என்றால் சனாதன விதிமுறை கள் எனப்பொருள்; தமிழுடன் குழப்பிக் கொண்டு சனாதன அறம் என எண்ணக் கூடாது. ‘தருமம்’ என்றால் சிலர் கடமை என்றும் பொருள் கொள்வர். அங்ஙன மாயின்  சனாதனத் தருமம் என்றால் சனா தனக் கடமை  - ஜாதிகளுக்குரிய கடமைகள் - என்னும் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சனாதனத் தருமம் என்றால் அவரவர் ஜாதி என்ன என்ன கடமையைச் செய்ய வேண்டும் என்று வேதங்களில் விதிக்கப் பட்டுள்ளதோ அவற்றை எப்போதும் தவறாமல் செய்ய வேண்டும் என்று பொருள். எனவே, ஜாதி வேற்றுமையை வகுத்துக்கொண்டு அதற்கேற்பக் கடமை களைச் செய்ய வேண்டும் என்று சொல்லும் சனாதனம் எங்ஙனம் வேற்றுமையில் ஒற்றுமையை உரைப்பதாகும்?

நால்வருணத்தை வலியுறுத்தி அவற் றிற்கான தனித்தனி விதிமுறைகளையும் கடமைகளையும் வலியுறுத்தும், இல்லாத ஜாதிகளைப் புகுத்தி அச்ஜாதிகளில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சனாதனத்தைத்தான் உயர் அறம் எனப் பொய்யாகப் பரப்பி வருகின்றனர்.

சிலர், சங்க இலக்கியம் வலியுறுத்தும் அறக்கோட்பாடுகளும் சனாதன தருமம் கூறும் அறமும் ஒன்று;  திருக்குறளின் அறக்கருத்துகள் சனாதன தருமத்தை எதி ரொலிக்கின்றன என்றெல்லாம்  பொய்மூட் டையை அவிழ்த்து விடுகிறார்கள். சனாத னம் என்பது அறமே அல்ல. அவ்வாறிருக்க அதை அறம் என்பதும் அதைத் தமிழ் அறத்துடன் ஒப்பிட்டு இணையாகக் கூறு வதும் எங்ஙனம் ஏற்புடைத்து?

“கடமையைச் செய்! பயனை எதிர் பாராதே!” என்ற உயர்ந்த(!) உண்மையைக் கீதை உரைப்பதாக உலகெங்கும் பரப்பி வருகிறார்களே. அந்தப் பொய் ஒன்றே ஆரியத்தின் புரட்டை உணர வைக்கப் போதுமானது. கீதை கூறுவது, அவரவர் ஜாதிக்கேற்ற கடமையைச் செய்ய வேண் டும்.  ஒவ்வொரு ஜாதிக்கடமைகளுக்கும் தக்கப் பயனுண்டு. கீழ்ச்ஜாதிக்காரன் மேல்ஜாதிக்கடமைக்குரிய பயன் சிறப்பை அறிந்து அக்கடமையைச் செய்ய எண்ணக் கூடாது. அவன் ஜாதிக்குரிய கடமை தரும் பயனைத்தான் ஏற்க வேண்டும். இல்லை யேல் வரும் பிறவியில் துன்பம் விளையும் எனச் ஜாதிக்கேற்ற கடமைகளை அச்சுறுத்தி வலியுறுத்துகிறது.

சனாதனம் என்றால் நிலையானது என்று பொருள் என்றும் இந்துவியத்தைக் கூறுதற்கு இந்துக்களால் பயன்படுத்தப்படும் சொல் என்றும் கூறுகின்றனர்.

வேதங்களிலும் உடநிடதங்களிலும் மனுசுமிருதியிலும் கீதையிலும் சனாதனம் குறித்துக் கூறப்படுகின்றன.

நீண்ட தொலைவு பயணம் மேற் கொண்ட ஒருவரின் மனைவி அவனுடைய உறவினர் அல்லது பணியாளரிடம் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்பது அருத்த சாத்திரம் கூறும் சனாதனம். 

இம்மை மாறி மறுமை ஆயினும்

நீயாகியர் என்கணவனை

யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே

(குறுந்தொகை : 49) என்று “எத்தனைப் பிறவிகள் ஆனாலும், நாமே கணவன் மனைவி” என்பது தமிழ் கூறும் இல்லற அறம். இரண்டும் ஒன்றாகுமா?

அருத்தசாத்திரத்தைப் பொறுத்தவரை சனாதனமாகிய குலத் தருமமே நீதியாகும். பிராமணன் எந்த வகைக் குற்றத்திற்காகவும் தண்டிக்கத்தக்கவன் அல்லன் என்கிறது அது. அரச தருமம் நால்வகைப்பட்ட வரு ணாசிரமத் தருமத்தைப் போற்ற வேண்டும் என்கிறது. ஒருவன் பல மகளிரை மணந்து கொள்ளலாம் என்றும் தன் மனைவியிடத்து வேறு ஒருவன் மூலம் புதல்வனைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறுகிறது.

இந்தச் சனாதனமும் நடுவுநிலைமை யையும் பிறன்மனை விழையாமையையும் வலியுறுத்தும் தமிழறமும் ஒன்றாகுமா?

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி.   (திருக்குறள் - 118)

என, யார், எவர் என்ற வேறுபாடின்றி, செல்வர்-ஏழை என்னும் செல்வப்பாகுபாடு, உயர்ஜாதி-கீழ்ஜாதி என்றெல்லாம் இல்லாத ஜாதிப்பாகுபாடு உயர்பதவியர் - கீழ்ப் பதவியர் என்ற பதவிவேறுபாடு என்று எப்பாகுபாடும் பார்க்காமல் சமமாக நோக்க வேண்டும் என்னும் தமிழறத்துடன் சனா தனத்தை ஒப்பிடத்தான் முடியுமா?

வேதம் ஓதுகிறவர்களைக் கடவுள் எனச் சொல்வதன் மூலம் வேதம் ஓதும் பிராமணர்களைக் கடவுளாகத் திரிக்கிறது (அருத்தசாத்தரம்) சனாதனம். பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும் (திருக்குறள்) என்கிறது தமிழறம். இரண்டும் எப்படி இணையாகும்?

நெஞ்சு பொறுக்காத வஞ்சகச் செயல் களைச் செய்ய வழி கூறுவதே (அருத்த சாத்திரம்) சனாதனம்.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க் கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை. (திருக் 

குறள் 317)

என மனத்தளவிலும் வஞ்சகத்தை எண்ணக்கூடாது என்பது தமிழறம். இரண்டையும் ஒப்பிடத்தான் முடியுமா?

பெண்கள் இழிவானவர்கள்(மனுநீதி, தரும சூத்திரங்கள், அருத்த சாத்திரம், காமசூத்திரம், பகவத்துகீதை முதலியன) என்பது சனாதனம்.

“பெண்ணின் பெருந்தக்க யாவுள?” (திருக்குறள் 54) என்று பெண்மையைப் போற்றுவது தமிழறம். இரண்டையும் ஒப் பிடுவது முறையாகுமா?

“புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர்”(மனு 2.214) எனப் பெண் களைக் காமப்பித்தர்களாகக் காட்டுவது சனாதனம். “பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் கூறப் படுவனவற்றைக் கேட்பீராக” (மனு9.19) எனப் பெண்களை ஒழுக்கங்கெட்டவர்க ளாகக் கூறுவதும் சனாதனம்தான்.

“நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்

செவிலிக்கு உரியவாகும் என்ப” (தொல் காப்பியம், 1099) என்றும்

“செறிவும்  நிறைவும்  செம்மையும்  செப்பும்

அறிவும்   அருமையும்  பெண் பாலான”     (தொல்காப்பியம்,1155)

என்றும் பெண்ணைச் சிறப்பிப்பது தமிழறம். இரண்டும் எங்ஙனம் ஒன்றாகும்?

இவ்வாறு நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

மக்களிடையே மாறுபாட்டையும் வேறு பாட்டையும் விதைத்து அல்லொழுக்கத் தைப் பரப்பும் சனாதனம் எவ்வாறு நம் மண்ணிற்கு ஏற்ற பண்பாடாகத் திகழ முடியும்? நம் மண்ணிற்கு என்றில்லை, உலகில் உள்ள யாவர்க்குமே மக்களில் ஒரு பகுதியினரைக் கடவுள் நிலையில் உயர்த்தி யும்  பிற பகுதியினரையும் பெண்களையும் இழிபிறப்பாகக் கூறும் சனாதனம் என்றுமே ஏற்றதாக அமையாது.

எனவே, தருமம் என்ற சொல்லில் மயங்கி சனாதனத்தைப் போற்றித் திரிய வேண்டா!தமிழறத்திலிருந்து தடம் புரள வேண்டா!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பி னும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

(திருவள்ளுவர், திருக்குறள் 423)

- இலக்குவனார் திருவள்ளுவன்

நன்றி: அகரமுதல


வியாழன், 22 செப்டம்பர், 2022

குருமூர்த்தியே, ஓடாதே நில்! மனுதர்மம் சொல்வது என்ன?

வெள்ளி, 1 ஜூலை, 2022

கூறுவது என்ன? நடப்பது என்ன? (பைபிள் குரான் வேதம்)

 பைபிள்

ஏசு கிறிஸ்து ஒருவன் வலது கன்னத்தில் அடித்தால் இடது கன்னத்தையும் காட்டு என்று தான் கூறியிருக்கிறார் தனது பைபிளில். அந்தப் பைபிளை அன்றாடம் படித்து வருபவர்கள் தான் துப்பாக்கி முதல் அணுக்குண்டு வரை உற்பத்தி செய்து பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றனர்.

குர்ஆன்

முகமது நபி சகல மக்களையும் சமமாகக் கருது என்றுதான் கூறியுள்ளார். அதே குர்ஆனை அன்றாடம்  படித்து வரும் பாகிஸ்தான் மக்கள் தான் மத வெறி கொண்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் அல்லாத மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.

வேதம்

ஹிந்து மத, வேத சாஸ்திரங்களும் சகல ஆத்மாக்களும், கடவுள் அம்சம்தான். ஒரே ஆத்மாதான் எல்லா உடலிலும் இருக்கிறது. ஆகவே அனைவரையும் கடவுளாகத்தான் பாவிக்க வேண்டும் என்று போதிக்கின்றன.

அப்படிப்பட்ட ஹிந்துக்கள் தான் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். மற்றும் இந்து மதத்தைச் சேர்ந்த உயர்ஜாதிப் பார்ப்பனர்கள்தான் உலக உத்தமர் காந்தியாரைக் கொல்லச் செய்தவர்கள்.

 10.4.1948-  குடிஅரசிலிருந்து....          

புதன், 30 மார்ச், 2022

கீதை யாருக்கானது?

 

தெற்கு உத்தரப்பிரதேசம் பாக்பககேரி குள்ளாரா என்ற பகுதியில் உள்ளவர் சாமி யாரிணி யாமினிசாகுஇவர் அப்பகுதி முழுவதும் சுற்றி பகவத் கீதை சொற்பொழிவை நடத்தி வருகிறார்.

இவர் சமீபத்தில்  மகஸ்முந்த் என்ற பகுதியில் சொற்பொழிவாற்றினார்அந் தப்பகுதியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் வாழ்கின்றனர்இவரது சொற்பொழிவில் பார்ப்பனர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

இதனை அடுத்து சாமியார்கள் அமைப்பு "பார்ப்பனர்கள் இல்லாத இடத்தில் பகவத்கீதை சொற்பொழிவை ஆற்றி பெரும் பாவம் செய்துவிட்டார்என்று கூறி அவருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினர்.   மேலும் சாமியார் அமைப்பினர் சிலர் சாமியாரிணியின் ஆசிரமத்திற்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு,  "இனிமேல் சாமியார் வேடம் எல்லாம் போட வேண்டாம்வேண்டு மென்றால் மேடையில் ஆபாச நடனம் ஆடுகூட்டம் சேரும்புனிதமான பகவத் கீதையை பார்ப்பனர்கள் அல்லாத மக்களின் முன்பு கூறியதால் ஹிந்து மதத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதுஎன்று கூறியுள்ளனர்.

 மேலும் "ஆசிரமத்தில் உள்ள பெண்களைக் கடத்தி விபச்சார விடுதியில் விற்றுவிடுவோம்என்றும் கூறியுள்ளனர்.   இதனை அடுத்து யாமினிசாகுகுள்ளாரா பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  பிறகு உள்ளூர் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்  "நான் என்னுடைய 10 வயதில் துறவறம் பூண்டேன்சுமார் 17 ஆண்டுகளாக நாடுமுழுவதும் சுற்றி பகவத் கீதை குறித்து சொற்பொழிவாற்றி வருகிறேன்கடந்த வாரம் பாக்பககேரியில் சொற்பொழிவாற்றினேன்அதிக மக்கள் வந்து எனக்கு ஆதரவு அளித்தனர்இந்த நிலையில் என்மீது பொறாமை கொண்ட சாமியார் அமைப்பு, 'ஒரு பெண் எப்படி பகவத் கீதை சுலோகத்தை உச்சரிக்கலாம்என்று கூறி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.  நான் நடத்திய கூட்டத்தில் பார்ப்பனர்கள் யாருமே இல்லை. 'பார்ப்பனர்கள் இல்லாத மேடையில் நீ எப்படி பகவத் கீதை குறித்து சொற்பொழிவாற்றலாம்என்று கூறி மிரட்டி வந்தனர்.

இந்த நிலையில்எனது ஆசிரமத்தில் உள்ள பெண்களைக் கடத்தி விபச்சார விடுதியில் விற்று விடுவதாக மிரட்டுகின்றனர்மேலும் என்னை சொற்பொழிவாற்றுவதை நிறுத்தி விட்டு, 'அழகாக இருக்கிறாய்ஆகவே ஆபாச நடனம் ஆடுகூட்டமும் அதிகம் கூடும்பணமும் அதிகம் கிடைக்கும்என்று தொலைப்பேசியில் மிரட்டினர்இதனை 'பதிவுசெய்து காவல்துறையில் புகார் கொடுத்துள்ளேன்என்று கூறினார்இதனை அடுத்துசில நாள்கள் மட்டும் ஆசிரமத்திற்கு இரண்டு காவலர்களைப் பாதுகாப்பிற்கு காவல்துறை ஆய்வாளர் நியமித்திருந்தார்.

எல்லோரும் சமஸ்கிருதம் கற்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்மற்றும் பா..கூறிவருகிறதுகருநாடகாஉத்தரப்பிரதேசம்அரியானாகுஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் பகவத் கீதை பாடநூலாக வைக் கப்பட்ட நிலையில் பார்ப்பனர் அல்லாத மக்களிடையே பகவத் கீதை சொற்பொழிவாற்றிய சாமியாரிணி மீது சாமியார் அமைப்பு தீர்மானம் போட்டு மிரட்டல் விடுத் துள்ளது.

இதில் இரண்டு பிரச்சினைகளைப் பார்க்க வேண்டும்.

பகவத் கீதை என்பது பார்ப்பனருக்கானது - மற்றவர்கள் அதிலும் குறிப்பாகப் பெண்கள் பகவத் கீதை சுலோகங்களைச் சொல்லக் கூடாதுபிரச்சாரம் செய்யக் கூடாதுபெண்களும்வைசியர்களும்சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கிறது பகவத் கீதைஇவற்றையெல்லாம் புரிந்து கொண்டுபகவத் கீதையைப் பிரச்சாரம் செய்த பெண்மணியும் சரிஅவர் உபதேசத்தைக் கேட்கக் கூடிய தாழ்த்தப்பட்ட மக்களும்பிற்படுத்தப்பட்ட மக்களும் சரிபகவத் கீதையை தங்களுக்கு எதிரான நூல் என்பதை உணர்ந்து புறக்கணிக்க வேண்டும்.

"ஒரு முட்டாளின் உளறல் கீதைஎன்று கூறினார்அண்ணல் அம்பேத்கர். "பகவத் கீதை படிப்பதைவிட கால் பந்து விளையாடுவது நல்லதுஎன்று அவாள் தரப்பு விவேகானந்தர் கூறியதையும் இந்த இடத்தில் நினை வூட்டுகிறோம்.

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

இது தான் மனு(அ)தர்மம்! யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்? (1,2,3)