கைவல்யம் - வேதாந்தம்

வேதம் குறித்த உண்மை விளக்கம்

வியாழன், 22 செப்டம்பர், 2022

குருமூர்த்தியே, ஓடாதே நில்! மனுதர்மம் சொல்வது என்ன?


குருமூர்த்தியே, ஓடாதே நில்!
  September 21, 2022 • Viduthalai

மின்சாரம்

இந்த வார 'துக்ளக்' இதழில் (28.9.2022 பக்கம் 7) இவ்வாறு எழுதியுள்ளார்.

"சூத்திரனை வேசி மகன் என்று மனுஸ்மிருதி கூறுவதான வாதம் தவறு. அப்படி எங்கும் கூறப்படவில்லை. மனுதர்மம் அத்தியாயம் 8 - ஸ்லோகம் - 415, ஏவலர்களாக பணிபுரியத்தக்கவர்கள் எழு வகையினர் யாவர் என்றே விளக்குகிறது.

போர்க் கைதிகள், பக்தித் தொண்டு செய்ய வந்தவர்கள், வைப்பாட்டியின் மகன், விலை கொடுத்து வாங்கப்பட்ட அடிமைகள், பிறரிடமிருந்து பெறப்பட்ட அடிமைகள், பரம்பரையாகப் பணி செய்பவர்கள், அபராதத் தொகையை வேலை செய்து தீர்ப்பவர்கள் என்பது அந்த ஏழு வகை. இந்தப் பட்டியலில் வைப்பாட்டியின் மகன் என்று இருப்பதை 'வேசியின் மகன்' என்று கருதிக் கொண்டும் ஏவலர்கள் என்பதை சூத்திரர்கள் என்று நினைத்துக் கொண்டும் ராசா பிதற்றியிருக்கலாம். பஞ்சமன், தீண்டத்தகாதவன் என்பதெல்லாம் அவரின் கற்பனை."

- என்று தன் மனம் போன போக்கில் கிறுக்குகிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள்.

நாம் எதைச் சொன்னாலும் ஆதாரத்தை எடுத்துக்காட்டும் அறிவு நாணயம் உள்ளவர்கள்.

உண்மையிலேயே மனுதர்ம சாஸ்திரம் என்ன சொல்லுகிறது?

யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடி யாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குல வழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன் - என தொழிலாளிகள் எழு வகைப்படுவர்.

(மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415).

'பார்த்தீர்களா? மனுதர்மத்தில் தொழிலாளர்களைப் பற்றி தானே சொல்லியிருக்கிறது. இவர்கள் சூத்திரர்கள் என்று கூறுவது எப்படி' என்று அவசரப்பட வேண்டாம் முந்திரிக்கொட்டையாக! 

அதே எட்டாம் அத்தியாயம் 417ஆம் சுலோகம் அந்தத் தொழிலாளர்கள் யார் என்பதை மட்டை இரண்டு கீற்றாகக் கிழித்தும் சொல்லி விட்டது. அது இதோ:

பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன எழுவித தொழிலாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம். யஜமானனெடுத்துக் கொள்ளத்தக்க பொருளையுடைய அந்தச் சூத்திரர் தன் பொருளுக்குக் கொஞ்சமுஞ் சொந்தக்காரரல்ல.

ஆதாரம்: திருவைந்திரபுரம் கோமாண்டூர் இளையவல்லி இராமாநுஜாசாரியரை புதுவை நா. முத்துரங்க செட்டியார் கேட்டுக் கொண்டபடி, அவர் தமிழில் மொழி பெயர்த்து வசன ரூபமாகச் செய்த தருமநூலை செட்டியார் சகோதரராகிய முத்துகோவிந்த செட்டியார்.

பு.க. சுப்பராய முதலியாரால் பிழைத்திருத்துவித்த சுத்த பிரதிக்கிணங்க, சென்னை ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. (1919) இதன் விலை ரூ.2லு.

உண்மை இவ்வாறு இருக்க மனுதர்மம் எட்டாம் அத்தியாயம் 415ஆம் சுலோகத்தில் கூறப்பட்டுள்ள வாசகங்களைத் தங்களுக்கே உரித்தான திரிபுதனத்தின் அடிப்படையில் பொருள் மாறும் சொல்லாடல்களைப் பயன்படுத்தி இருப்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

தன்னுடைய தேவடியாள் மகன் என்று இருப்பதை வைப்பாட்டி மகன் என்று திருத்துவது ஏன்?

இதைவிட பித்தலாட்டம் என்ன தெரியுமா?

இங்கே தெரிந்து  கொள்ள வேண்டியது சூத்திரர் களை வைப்பாட்டி மக்கள் அல்லது தேவடியாள் மக்கள் என்று சொல்வது மனுதர்மமே தவிர, ஆ. இராசா அல்ல - என்பதை திருவாளர் குருமூர்த்தி அய்யர் ஒப்புக் கொண்டு விட்டாரே!

உண்மை இவ்வாறு இருக்கும்போது மானமிகு ஆ. இராசாமீது அவதூறு பரப்புவது கடைந்தெடுத்த பித்தலாட்டமா இல்லையா? அப்பட்டமான பொய்யா இல்லையா? இதற்குப் பெயர்தான் பார்ப்பனீயம் என்பது. 

குருமூர்த்திகள் எழுதியுள்ளபடியே பார்த்தாலும் மனி தர்களை இப்படி இழிவுபடுத்துவதை ஏற்க முடியுமா?

நான்கு வர்ணங்களும் வாழ்வு முறைக்கு ஏற்ப வரையறுக்கப்பட்டவையாம்.

மேலே  கூறப்பட்ட ஏழு வகைத் தன்மை கொண்ட சூத்திரனுக்குத்தான் இவ்வளவு கேவலமான வரையறைகளா?

அந்தப் பிர்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தார்க்கு இம்மைக்கும், மறுமைக் கும் உபயோகமான தருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார் (மனு - அத்தியாயம் ஒன்று, சுலோகம் 87)

பிர்மா படைக்கும் போதே பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்று படைத்துவிட்ட பிறகு, வாழ்வு முறைக்கு ஏற்பவும், குண நலன்களுக்கு ஏற்பவும் அமைந்திருப்பதுதான் வர்ண தர்மம் என்று சாதிக்க முயலுவது பார்ப்பனப் புத்தி தானே! இம்மைக்கு மட்டுமல்லவாம். மறுமைக்கும் இதே நிலைதானாம் - எவ்வளவு ஜாதி ஆணவத் திமிரின் உச்சம்!

"நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப் பட்டவை; அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ணதர்ம உற்பத்தியாளனாகிய என்னால் கூட முடியாது"

-இவ்வாறு கூறுவது பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் (கீதை அத்தியாயம் 4 - சுலோகம் 13).

அவசரப்படாதீர்கள். அவாளின் முகத்திரையை பகவான் கிருஷ்ணனின் ஆயுதத்தைக் கொண்டே கிழிப்போம்!

"பெண்களும் வைஸ்யர்களும் சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்" (கீதை அத்தியாயம் 16 - சுலோகம் 44)

ஒரு கடவுளின் வாயிலிருந்து எவ்வளவு சாக்கடைத் தனமான சொற்கள்.

ஆகப் படைக்கும் போதே இந்த வருணங்களை ஏற்படுத்தி விட்ட பிறகு - வருணம் என்பது பிறப்பின் அடிப்படையில் அல்ல, குணம் கர்மங்களில் அடிப் படையில் என்பதே என்று புளுகுவது எவ்வளவு அயோக்கியத்தனம் - போக்கிரித்தனம்! 

பிர்மாதான் படைத்தான் நான்கு வருணங்களை என்று மனு கூறுகிறது. கிருஷ்ணன்தான் படைத்தான் என்று கீதை கூறுகிறது. ஏனிந்த முரண்பாடு? 

வேறு ஒன்றும் இல்லை. தந்தை பெரியார் என்ற சகாப்தத் தலைவர் தோன்றி ஆரியப் பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளையும், தில்லுமுல்லுகளையும், ஜாதி ஆணவத் திமிரையும் தோலுரித்துத் தொங்க விட்ட நிலையில், அவர்களின் சாஸ்திரத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லும் திராணி இல்லை.

திரிபு வேலை செய்து, உள் குத்து செய்து எதையாவது உளறித் தப்பிக்கும் தந்திரம் என்பதல்லாமல் வேறு என்ன?

குருமூர்த்தி கூட்டமே சரக்கு இருந்தால் மிளகு முனை அளவுக்கு அறிவு நாணயமிருந்தால் ஆதாரத் தோடு மறுப்பு சொல்லுங்கள் பார்க்கலாம்!

எதிர் பார்க்கலாமா?

சரக்கு இருந்தால் அவிழ்த்து விடு! இல்லையேல் சலாம் போட்டு ஓடி விடு!


இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:39 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: குருமூர்த்தி, துக்ளக், பதிலடி, மனுதர்மம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

கைவல்ய சாமியார்

கைவல்ய சாமியார்

வேதம்

வேதம்
Powered By Blogger

சிறப்புடைய இடுகை

கிறிஸ்தவம் இஸ்லாம் பற்றி பெரியார் விமர்சிக்கவில்லையா!

 கிருஸ்துவமதத்தலைவர் ஏசு கிருஸ்து  என்பவர் 2000 ஆண்டுகளுக்கு முன் தகப்பனில்லாமல், பரிசுத்த ஆவிக்குப் பிறந்தாராம். ஆகவே அவர் கடவுளுக்கு மகனாம...

இந்த வலைப்பதிவில் தேடு

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

  • -மனுதர்மம்
  • :துக்ளக்
  • அண்ணல் அம்பேத்கர்
  • அய்யப்பன்
  • அரக்கர்
  • அறிக்கை
  • அறிவுக்கரசு
  • ஆசிரியர் பதில்
  • ஆட்சி
  • ஆண்
  • ஆபாசம்
  • ஆய்வு-1
  • ஆய்வு-2
  • ஆய்வு-3
  • ஆய்வு-4
  • ஆரிய வேதம்
  • ஆரியம்
  • ஆரியர் வருகை
  • ஆரியர்களின் தீ
  • இந்து தர்மம்
  • இந்து நாளேடு
  • இந்து மதம்
  • இந்துமதம்
  • இரு பிறப்பு
  • இருக்கு வேதம்
  • இலக்கியம்
  • இஸ்லாம்
  • உஞ்சவிருத்தி
  • உத்தர கீதை
  • உபநயனம்
  • எரிப்பு
  • ஏவாள்
  • ஒழுக்கக்கேடு
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • கடவுள்
  • கதை
  • கந்தன்
  • கல்வி
  • கலாச்சாரம்
  • கலைஞர்
  • கவிஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • காந்தி
  • காயத்ரிமந்திரம்
  • கி.வீரமணி
  • கிரகபிரவேசம்
  • கிருத்துவம்
  • கிருஷ்ணன்
  • கீதை
  • குங்குமம்
  • குணம்
  • கும்பிடுதல்
  • குரான்
  • குருமூர்த்தி
  • குழந்தை திருமணம்
  • கைவல்யம்
  • கோத்திரம்
  • கோரக்ஷணை
  • கௌதம மஹரிஷி
  • சங்க இலக்கியம்
  • சங்கரர்
  • சங்கராச்சாரி
  • சடங்குகள்
  • சண்டாளர்
  • சவரம்
  • சனாதன தர்மம்
  • சனாதனம்
  • சாமி கைவல்யம்
  • சாமியார்
  • சிரார்த்தம்
  • சிருங்கேரி சங்கராச்சாரியார்
  • சிலை
  • சீர்திருத்தம்
  • சுக்ல யஜுர்
  • சூத்திரன்
  • சோழர்காலம்
  • தமிழ் வேதம்
  • தமிழ்க் கடவுள்
  • தர்ம சூத்திரம்
  • தலையங்கம்
  • தஸ்லிமா
  • தாத்தாச்சாரியார்
  • தாலி
  • தானம்
  • திதி-தர்ப்பணம்
  • திராவிடர்
  • திராவிடர்களின் தீபம்
  • திருமண மந்திரம்
  • திருமணம்
  • திருவிளையாடல்
  • திவசம்
  • தினமணி
  • தினமலர்
  • தீட்டு
  • தீண்டாமை
  • துக்ளக்
  • துவேஷி
  • தேவர்
  • தொழில்
  • ந.சி.கந்தையாபிள்ளை
  • நவராத்திரி
  • நாத்திகவாதம்
  • நாராயணன்
  • பக்தர்கள்
  • பக்தி
  • பகவத் கீதை
  • பகவத்கீதை
  • பசு
  • பசு இறைச்சி
  • பசுவதை
  • பஞ்சமர்
  • படிப்பு
  • படைப்பு
  • பதிலடி
  • பதிலடி பக்கம்
  • பதிலடிப் பக்கம்
  • பதிலடிப் பக்கம்:
  • பரம்பொருள்
  • பலி
  • பாக்கள்
  • பார்ப்பனர்
  • பார்ப்பான்
  • பிச்சை
  • பிரம்ம முகூர்த்தம்
  • பிரம்மா
  • பிராமண தர்மம்
  • பிராமணர்
  • பிராமணன்
  • பிறப்பு
  • புத்தம்
  • புராணம்
  • புனிதம்
  • பூணூல்
  • பெண்
  • பெண்கள்
  • பெரியபுராணம்
  • பெரியார்
  • பெரியார் படம்
  • பேதங்கள்
  • பேதம்
  • பைபிள்
  • பொய் பிரச்சாரம்
  • பொருள்
  • பொள்ளாச்சி
  • பௌத்தம்
  • மதக்குறி
  • மதம்
  • மந்திரங்கள்
  • மந்திரம்
  • மயிலாடன்
  • மனு நீதி
  • மனுசாஸ்திரம்
  • மனுதர்மம்
  • மனுதரும சாஸ்திரம்
  • மனுஸ்மிருதி
  • மாட்டிறைச்சி
  • மாட்டுக்கறி
  • மாதவிடாய்
  • மாமிசம்
  • மிரட்டல்
  • மின்சாரம்
  • மீமாம்சம்
  • மொட்டை
  • மொழி
  • யாகம்
  • ராமானுஜ தாத்தாச்சாரியார்
  • ராமானுஜர் தாத்தாச்சாரியார்
  • ரிக் வேதம்
  • ரிக்வேதம்
  • ரிஷி
  • வர்ண தர்மம்
  • வர்ணம்
  • வர்ணாசிரம தர்மம்
  • வர்ணாசிரமம்
  • வருணம்
  • வருணாசிரமம்
  • வள்ளலார்
  • விபச்சாரி மகன்
  • விவேகானந்தர்
  • விஜயபாரதம்
  • வேத பண்பாடு
  • வேதங்கள்
  • வேதங்கள் - பேதங்கள்
  • வேதம்
  • வேதம் பசுவதை
  • வேறுபாடு
  • வைணவம்
  • வைரமுத்து
  • ஜகத்குரு
  • ஜாதி
  • ஸ்டாலின்
  • ஸ்மிருதிகள்
  • ஸநாதனதர்மம்

பிரபலமான இடுகைகள்

  • தாய்க்கு திவசம் செய்ய புரோகிதன் சொல்லும் மந்திரம்
    தாய்க்கு திவசம் செய்யப்போகிறான் ஒரு பாமரன். அப்போது புரோகிதன் சொல்லும் மந்திரம் என்னவென்றால், என்மே மாதா ப்ரவது லோபசரதி அன்னவ் வ்ர...
  • நகரத்தார்களும், வாணிய செட்டியார்களும் பூணூல் அணிந்திட தகுதி உண்டு என்று பிரிவியூ கவுன்சில்வரை சென்று தோற்றது தெரியுமா?
    மனுதர்மம்பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்ட அரிய தகவல் சென்னை, நவ.14- நகரத்தார்களும், வாணிய செட்டி யார்களும்...
  • பிராமண போஜனமும் சட்டிச் சோறும்        
    நூல்:     பிராமண போஜனமும் சட்டிச் சோறும்         (இடைக்காலத் தமிழகத்தில் வைதீகமும்         சாதி உருவாக்கமும்) ஆசிரியர்: ஆ.சிவசு...
  • யார் அந்த சண்டாளர்கள்?
    சண்டாளர்கள் தாழ்த்தப்பட்டவர்களா? என்று கேட்போருக்கு... யார் அந்த சண்டாளர்கள்? துரோகம் செய்தவனை கொலை பாதகனை, பத்தினிகளை வேட்டையாடுபவனைதான் ...
  • சூத்திரனுக்குக் கல்வி கொடாதே! - மனு
    கட்டுமா கீழ் ஜாதிக்காரர்கட்கு அறிவைப் புகட்டக் கூடாது. அப்படி ஓர் ஆசிரியன் சூத்திரனுக்கு கல்வி புகட்ட முயற்சித்தால் அவன் கடும் தண்டனைக்கு உள...
  • மன்னர் ஆட்சிகளும் மனுதர்ம சாஸ்திரமும் - பொறியாளர் ப. கோவிந்தராசன் B.E., M.B.A., M.A.
    முன்னுரை:- நல்லாட்சி நடத்திய மவுரியப் பேரரசர் அசோகரின் அருமை பெருமைகளை உலகுக்குப் பறை சாற்றும் வண்ணம் இந்தியத் தேசியக் கொடியில் அசோகச்...
  • பார்ப்பானும் மாட்டுக்கறியும்!
    *"பார்ப்பானும்  மாட்டுக்கறியும்"* ⚫ ஆரிய பிராமணன் பசுமாட்டை வெட்டி சமைத்து சாப்பிடுவதற்கு கூர்மையான வாள், கோடரி பயன்படுத்தினார்கள்...
  • திருமண வைபங்களில் ஆபாச வேத மந்திரங்கள் ஓதப்படுகின்றன.
    வைதீக திருமண வைபங்களில் வேத மந்திரங்கள் ஓதப்படுகின்றன. இதில் மிக மிக கொச்சையான ஆபாசமான மந்திரங்களும் அந்தச் சடங்குகளின் போது ஓதப் படுவது வைத...
  • ஆபாச திருமண மந்திரங்கள்
    #திருமணம் 'சோமஹ ப்ரதமோவிவேத கந்தர்வவிவிதே உத்ரஹத்ருதியோ அக்னிஸடேபதிஸ துரியஸதேமனுஷ்ய ஜாஹ'''' இந்த மந்திரம் மணமகளை நோக்...
  • குழந்தை பெற்றுக்கொள்வதற்காக புணர உறவுமுறை தேலையில்லை!
    1927இல் பாலக்கோட்டில், காம கோடி பீடாதிபதி ஜகத்குரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், காந்தியாரிடம், இந்து அரிஜன ஆலயப் பிரவேசத்தில் சாஸ்...

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (2)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
  • ►  2024 (27)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (6)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (1)
  • ►  2023 (29)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (4)
    • ►  செப்டம்பர் (10)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (1)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2022 (7)
    • ►  டிசம்பர் (1)
    • ►  அக்டோபர் (2)
    • ▼  செப்டம்பர் (1)
      • குருமூர்த்தியே, ஓடாதே நில்! மனுதர்மம் சொல்வது என்ன?
    • ►  ஜூலை (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2021 (21)
    • ►  ஜூலை (1)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (3)
  • ►  2020 (25)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (1)
  • ►  2019 (53)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (17)
    • ►  ஜனவரி (6)
  • ►  2018 (45)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (7)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (12)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (19)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (3)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2016 (23)
    • ►  நவம்பர் (7)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (5)
    • ►  ஜூலை (3)
    • ►  மே (4)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2015 (22)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (2)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.