திங்கள், 26 மார்ச், 2018

பிராமண போஜனமும் சட்டிச் சோறும்        


நூல்:     பிராமண போஜனமும் சட்டிச் சோறும்        
(இடைக்காலத் தமிழகத்தில் வைதீகமும்         சாதி உருவாக்கமும்)
ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்
வெளியீடு: நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை-600 098.
தொலைபேசி: 044-26251968, 26258410, 26241288
www.ncbhpublisher.in  email:info@ncbh.in   
விலை: ரூ.75/-
பிராமண போஜனம்
தமிழ்க் கல்வெட்டுகளை அவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் ஆராய்ந்து வகைப்படுத்தினால் கொடையை மையமாகக் கொண்ட கல்வெட்டுகளே மிகுதியாக இருப்பதைக் காண முடியும். நிலம், பொன், பணம், உலோகப் படிமங்கள், ஆடு, மாடு என்பன கொடைப் பொருளாக விளங்கியுள்ளன. மனிதர்களையும்கூட அடிமைகளாகக் கோவிலுக்குக் கொடையாக வழங்கியுள்ளனர். இவைதவிர பொருட்கள், நிலங்கள் மீதானசில வரிகளும் கொடையாக வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரிவிலக்கும் வழங்கப்பட்டது.
மன்னர்கள், மன்னர் குடும்பத்தினர், வணிகர், கைவினைஞர், நில உரிமையாளர் என்போர் கொடை வழங்குவோராக விளங்கியுள்ளனர். விதிவிலக்குப் போன்று குடிஊழியம் செய்வோரும் கொடை வழங்கியுள்ளனர். பெரும்பாலும் சைவ, வைணவக் கோவில்களும், சமண, பௌத்தப் பள்ளிகளும் இவர்களிடம் இருந்து கொடை பெற்ற அமைப்புகளாக விளங்கியுள்ளன. புதிதாக அமைக்கப்படும் நீர் நிலைகள் ஊர்ப் பொதுவாக வழங்கப்பட்டன. இவை தவிர பிராமணர்களுக்குக் கொடை வழங்கிப் பேணும் வழக்கமும் நிலவியுள்ளது.
பிராமணக் கொடை
பிராமணர்களுக்குக் கொடை வழங்கல் மிகப் பெரிய புண்ணியச் செயல் என்று மனுதர்மம் (3:98) பின்வருமாறு குறிப்பிடுகிறது:
கல்வி தவம் முயன்ற வேதியர்க்களித்தல் தீயிலிட்டுச் செய்த ஓமம் போல் ஒளிர்விடும். மேலும் இம்மையில் நோய், பகை, ராஜ பீடை இவற்றால் உண்டான அச்சத்தினின்றும், மறுமையில் நரகத்தினின்றும் விடுவிக்கும்.
பிராமணர்களுக்கு வழங்கும் கொடையானது இம்மைக்கும் மறுமைக்கும் உதவும் என்ற நம்பிக்கையை உருவாக்குவதுடன் மட்டுமின்றி, பிராமணர்களுக்கு மன்னர்கள் கொடை வழங்க வேண்டியதை வலியுறுத்தி மனு(3:79) மேலும் கூறுவது வருமாறு:
பெரும் காணிக்கைகளுக்குரிய அஸ்வமேத முதலிய வேள்விகளை நடத்தி அந்தணர்க்கான அறச் சாலைகளை நியமித்து கொடை வழங்க வேண்டியது.
மனுதர்மத்தின் செல்வாக்கு மன்னர் ஆட்சிக்காலத் தமிழகத்தில் நிலை பெற்றிருந்தது. பிரமதேயம், சதுர்வேதிமங்கலம் என்ற பெயரிலான பிராமணக் குடியிருப்புகள் மன்னர்களால் உருவாக்கப்பட்டன. இதுகுறித்து செப்பேடுகளும் கல்வெட்டுகளும் விரிவான செய்திகளைக் குறிப்பிடுகின்றன.
பிராமண போஜனம்
நிலம் தவிர உணவும் கொடைப்பொருளாக விளங்கியுள்ளது. வழிபாட்டின்போது உணவு படைத்து வழிபடுவது சைவ, வைணவ சமய மரபு. இதைத் திருஅமுது செய்தல் என்று கூறுவர். இவ்வாறு திருஅமுது செய்யவும், சிவனடியார், பயணம் செய்வோர், பிராமணர் ஆகியோரின் பசி போக்கவும் உணவுக் கொடை வழங்கப்பட்டது. இவற்றுள் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட உணவுக் கொடை பிராமண போஜனம் எனப்பட்டது.
இப்பிராமண போஜனமானது மூன்று வகையில் நிகழ்ந்துள்ளது. முதலாவது நாள்தோறும் நிகழ்த்தப்படுவது. இதை நிசிதம் (ஏற்பாடு) என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இரண்டாவது அம்மாவாசையன்று நிகழ்வது. மூன்றாவது கோவில் திருநாட்களின்போது நிகழ்வது.
வழங்கிய முறை
பிராமண போஜனத்திற்குரிய செலவுத் தொகையை நிலம், பொன், பணம் ஆகிய மூன்று வடிவங்களில் வழங்கியுள்ளனர். நிலத்தில் இருந்து கிட்டும் நெல் உணவுக்கான அரிசிக்கும் உணவு தொடர்பான இதர செலவுகளுக்கும் பயன்பட்டுள்ளது. பொன், பணம் ஆகியன வட்டிக்கு விடப்பட்டு அவ்வட்டித் தொகையில் இருந்து உணவு வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்திலுள்ள பிரமமதேசம் ஊரிலுள்ள சிதம்பரேஸ்வரர் கோவில் கல்வெட்டொன்று அம்மாவாசைதோறும் பிராமணர்களுக்கு உணவளிப்பதைக் குறிப்பிடுகிறது. இதற்காக இருகழஞ்சுப்பொன் முதலீடாக வைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு உணவளிக்க கோவிலின் கணப்பெருமக்கள் (சபை உறுப்பினர்கள்) ஒத்துக் கொண்டுள்ளனர். (தெ.இ.க.30:142)
வழங்கியோரும் வழங்கியதன் நோக்கமும்
மன்னர்கள், மன்னர் குடும்பத்தினர், அரசு அதிகாரிகள் ஆகியோரும், குடிமக்களும் மேற்கூறிய முறைகளில் பிராமண போஜனத்திற்கான செலவுத் தொகையை வழங்கியுள்ளனர்.
இவர்களள் சிலர் குறிப்பிட்ட நோக்கம் எதுவுமின்றி புண்ணியம் கிட்டும் என்ற நம்பிக்கையில் கொடை வழங்கியுள்ளனர். சிலர் இறந்தோரின் ஆன்ம அமைதிக்காக வழங்கியுள்ளனர். சிலர் குறிப்பிட்ட விழா நாளையும், சிலர் தம் பிறந்த நாளையும் மையமாகக் கொண்டு வழங்கியுள்ளனர். பிராமணர்களுக்கு உணவு வழங்கியதன் அடிப்படை நோக்கம் மறுமை வாழ்வுக்குப் புண்ணியம் கிட்டும் என்பதுதான்.
பிராமணர்களில், வேதம் வல்லோருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற குறிப்பும் சில கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது. சான்றாக ராஜகேசரிவர்மன் என்ற சோழ மன்னனின் 23ஆவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டொன்று கற்றறிந்த, வேதமறிந்த 12 பிராமணர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்த செய்தியைக் கூறுகிறது. இக்கல்வெட்டின்படி பிரம்மாதி ராஜா என்பவன் 200 கழஞ்சு பொன்னை ஊர்ச்சபையிடம் வைப்புத் தொகையாக வழங்கியுள்ளான். இத்தொகையில் இருந்து கிட்டிய வட்டியில் இருந்து உணவு வழங்கப்பட்டுள்ளது. (தெ.இ.க.3:11:1).
நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள குத்தாலத்தில் கிடைத்துள்ள கல்வெட்டில் (கி.பி.992) சாமவேதம், தைத்திரிய சாண்டியோக சாமவேதம் வல்லார்க்கு உணவு வழங்கியதைக் குறிப்பிடுகிறது. (மேலது: 170). வேதக்கல்வியை ஊக்குவிப்பதும் வேதம் வல்லாரைப் பேணுவதும் பிராமணப் போஜனத்தின் நோக்கமாக இருந்துள்ளமை இச்செய்திகளால் புலப்படுகிறது. பல்லவர்களின் செப்புப் பட்டயங்கள் சிலவற்றில்,
பிராமணர்களின் சொத்து கொடிய விஷம். மற்ற விஷம் விஷமல்ல. அந்த விஷம் ஒருவனையே கொல்லும். பிராமணன் சொத்தோ புத்திர பௌத்திரர்களையும் கொல்லும் என்ற காப்புரைத் தொடர் இடம் பெற்றுள்ளது. இத்தொடர் பிராமணர்களுக்குப் பல்லவ மன்னர்களால் வழங்கப்பட்ட பிரம்மதேயக் கொடைச் செப்பேட்டில் இடம் பெற்றுள்ளது. பிராமணரின் சொத்துக்குப் பாதுகாப்பு அரணாக இக்காப்புரையை அமைத்துள்ளனர். இதன் தாக்கம் பிற்காலச் சோழர் காலத்திலும் இருந்துள்ளது. பிராமணருக்கு உரிமையான சொத்தைப் பறிமுதல் செய்தாலும், அச்சொத்தின் பயன்பாடு பிராமணர்களுக்கு மட்டுமே கிட்ட வேண்டும் என்ற நடைமுறை இருந்துள்ளது.
முதலாம் இராஜராஜசோழனின் அண்ணான இரண்டாம் ஆதித்த கரிகாலன் சோழநாட்டின் வட்டாரத் தலைவர்களால் கொலை செய்யப்பட்டான். முதலாம் இராஜராஜன் ஆட்சிக்கு வந்தவுடன் இக்கொலையுடன் தொடர்புடைய பிராமணர்களின் நிலங்களைப் பறிமுதல் செய்து விலைக்கு விற்றான். அதை விலைக்கு வாங்கியவர்கள் அதிலிருந்து வரும் வருவாயைப் பயன்படுத்தி காட்டுமன்னார் கோவிலில் உள்ள சிவன் கோவிலில் நாள்தோறும் பிராமணர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்தனர். (A.R.E.1921:97 பத்தி 31.)
வழங்கப்பட்ட உணவு
பிராமணபோஜனத்தைக் குறிப்பிடும் கல்வெட்டுகளில், வழங்கப்பட்ட உணவு குறித்தும் சில குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. மேலே குறிப்பிட்ட ராஜசேகரவர்மனின் 23ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் 12 பிராமணர்களுக்கான நண்பகல் உணவில் சோறுடன் ஆழாக்கு (அரைக்கால் படி) நெய், அய்ந்து வகைக்கறி, அய்ந்து உழக்குத் தயிர் ஆகியனவும் இரண்டு பாக்கும், வெற்றிலையும் வழங்கப்பட்டுள்ளன. சமையல் செய்வாருக்கும், விறகிடுவாருக்கும் தனியாக ஊதியம் வழங்கப்பட்டுள்ளது (தெ.இ.க.3 பகுதி.1). கோவிலில் உணவுச் சாலை ஒன்றை நிறுவி 25 பிராமணர்களுக்கு உணவளிக்க செம்பியன் மாதேவி, ஏற்பாடு செய்துள்ளார். இதன் பொருட்டு 12 வேலி நிலத்தை வழங்கியுள்ளார். இந்த நிலத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலத்தில் இருந்து ஆண்டுதோறும் 1590 கலம் நெல் கிடைத்துள்ளது. இதில் 937 கலம் ஒரு தூணி (நான்கு மரக்கால்), ஒரு பதக்கு (இரண்டு குறுணி) நெல்லைக் கொண்டு சோறும், காய்கறி, நெய், தயிர், பலவகைக் கறிகள், வெற்றிலைப் பாக்கு ஆகியனவும் நாள்தோறும் வழங்கப்பட்டுள்ளன. விறகும் இக்கணக்கில் அடங்கும். சமையல் செய்பவருக்கு நாள்தோறும் ஒரு குறுணி (இரண்டு நாழி) நெல் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. (தெ.இ.க.வீவீவீ & வீஸ்: 151)
காஞ்சன் தாமோதரன் என்பவன் வேதம் வல்ல பிராமணருக்கு நண்பகல் உணவளிக்க எழுபது கழஞ்சு பொன்னை திருச்சி மாவட்டம் திருவெள்ளரை கோவிலின்மூலபரிஷத்திடம் (சிவன் கோவில் நிருவாகத்தை நடத்தி வந்த சபை) கி.பி.985இல் வழங்கியுள்ளான். இது தவிர தாலம், வட்டில் ஆகிய சமையல் பாத்திரங்களையும் வழங்கியுள்ளான். நாள்தோறும் 18 நாடுறி குத்தல் படியரிசி சமைக்கப்பட்டதுடன், கும்மாயம் (சிறுபயிறு பருப்பிட்டுச் செய்யும் இனிப்புப் பண்டம்) ஆழாக்கு நெய், பழம் 2, காய்கறி, புளிக்கறி, நாழி தயிர், பொறிக்கறி, வெற்றிலை ஆகியனவும் வழங்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள திருவெறும்பியூர் ஆழ்வார் கோவிலில் உள்ள 955ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் வேளாண் வீர நாராயணன் என்ற செம்பியன் வேதிவேளார் என்பவன் 15 பிராமணர்கள் நாள்தோறும் உள்ள, சத்திரம் அமைத்துள்ள செய்தி இடம்பெற்றுள்ளது. இச்சத்திரத்தில் உணவு வழங்க ஆகும் செலவிற்காக இரண்டு வேலி, ஏழு மா அளவுள்ள நிலம் வழங்கியுள்ளான். இச்சத்திரத்தில் இரு நாழி அரிசி, கறிகாய்கறி ஒன்று, புளிக்கறி ஒன்று, புழுக்குக்கறி ஒன்று, நெய் அரைப்படி ஆகியவற்றுடன் வெற்றிலை, பாக்கு இரண்டும் வழங்கப்பட்டுள்ளன. (தெ.இ.க.13: 110).
இதே கோவிலில் உள்ள 985ஆம் ஆண்டுக் கல்வெட்டு திருப்பேர்பாலாசிரியன் என்பவன் நாலு மா நிலம் வழங்கி, பிராமணன் ஒருவனுக்கு நாள்தோறும் இருநாழி அரிசியும், காய்கறி ஒன்றும், நெய் அரைப்படியும், புளிக்கறி, புழுக்குக்கறியுடன் உரிஅளவு தயிரும், இரண்டு வெற்றிலைப் பாக்கும் வழங்க ஒழுங்கு செய்துள்ளான்.(தெ.இ.க.13:138).
இதே கோவிலுக்கு 985ஆம் ஆண்டில் ஆறு மா நிலத்தைக் கொடையாக திருப்பேர் பாப்பானி காரிநக்கன் என்பவன் வழங்கியுள்ளான். இந்நிலத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நில வருவாயைக் கொண்டு வேதம் வல்ல பிராமணன் ஒருவனுக்கு நாள்தோறும் திருவெறும்பியூராழ்வார் கோயிலில் உள்ள சத்திரத்தில் இருநாழி அரிசிச் சோறும், காய்கறி ஒன்றும், நெய் அரைப்படியும், புளிக்கறி புழுக்குக்கறியும், தயிர் உரியும், இரண்டு வெற்றிலைப் பாக்கும் வழங்கியுள்ளான். (தெ.இ.க.13:139-). விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் உள்ள உலகாபுரம் (உலகமாதேவிபுரம்) என்ற கிராமத்தில் உள்ள சிதைவடைந்த சிவன் கோவிலில் கி.பி.988ஆம் ஆண்டுக் காலத்தியக் கல்வெட்டு ஒன்றுள்ளது. கங்கன் அம்பலவன் கண்டராதித்தான் என்ற சோழ அரசு அதிகாரி 56 பிராமணர்களுக்கு உணவளிக்க 19 வேலி நிலம் விலைக்கு வாங்கிக் கொடையாக வழங்கிய செய்தி இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. இந்நிலத்தின் வருவாயைக் கொண்டு சோறுடன் நாலுகறி ஒருமுட்டை அளவு (சிறு கரண்டி அளவு) நெய், நாழி அளவு மோர் ஆகியவற்றுடன், அய்ந்து வெற்றிலையும் பாக்கும் வழங்கியுள்ளனர். (தெ.இ.க.13:61).
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகில் உள்ள ஊர் உடையார் கோயில். இங்குள்ள அனந்தீஸ்வரர் கோவிலில் 985ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்றுள்ளது. உத்தமசந்திரன் என்ற செம்பியன் பல்லவதரையன் மூன்று பிராமணர்களுக்கு இக்கோவிலில் நண்பகல் உணவளிக்க முக்காலே இரண்டு (பரப்பளவு குறிப்பிடப்படவில்லை). நிலம் விலைக்கு வாங்கிக் கொடையாக வழங்கியுள்ளான். இந்நிலத்தின் வருவாயைக் கொண்டு இருநாழி பழவரிசியும் (குத்தி நீண்ட நாட்கள் ஆன அரிசி), ஆழாக்கு பருப்பும், காய்கறி ஒன்றும், புளிக்கறி ஒன்றும், அக்காரலட்டு (இனிப்பு லட்டு) இரண்டும், வாழைப்பழம் இரண்டும், பொரிக்கறி ஒன்றும், தயிர் நாழியும், நான்கு பாக்கும், பத்து வெற்றிலையும் வழங்கப்பட்டுள்ளன.
இவை தவிரஅடுவான் (சமைப்பவன்) ஊதியன் வழங்கவும், விறகு, உப்பு, காயம் ஆகியன வாங்கவும் ஒழுங்கு செய்யப்பட்டது (தெ.இ.க.13:91).
நாள்தோறும் உணவு வழங்க இயலாதவர்கள் சில குறிப்பிட்ட நாட்களில் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். சேலம் நகரில் உள்ள சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் இவ்வுண்மையை வெளிப்படுத்துகின்றன.
மணிக்கிராமம் என்ற பெயரிலான வணிகக் குழுவைச் சேர்ந்த மஞ்சன் மணிய மராத்தான் என்பவன் இக்கோவிலில் அய்ந்து கழஞ்சுப் பொன்னை முதலீடாக வைத்துள்ளான். இதிலிருந்து ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு இருபத்தைந்து அந்தணர்களுக்கு மாசித் திருநாளில் உணவு வழங்கப்பட்டுள்ளது. (கிருட்டிணன் 2001: 130)
செல்வனடிகள் என்பவன் நாற்பது பொன் கொடையாக வழங்கியுள்ளான். இதில் இருந்து கிடைக்கும் வட்டியில் மாசிமகத் திருவிழாவின்போது இருபத்தி அய்ந்து அந்தணர்களுக்கு சோறுடன் மூன்று கறி, அரைப்படி நெய், தயிர், வெற்றிலைப் பாக்கு ஆகியன வழங்கப்பட்டன (மேலது: 131).
திருச்செங்கோடு மலைமேல் நாகர் குன்றுக்கு மேற்கில் உள்ள பாறையில் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டொன் றுள்ளது. இக்கல்வெட்டு இளங்கோனடிகள் என்பவனின் மனைவி மூரிக்காமக்கனார் என்பவள் வழங்கிய கொடையைக் குறிப்பிடுகிறது. இப்பெண் திருச்செங்கோட்டுப் பன்னிரண்டு நாட்டுப் பெருமக்களிடம் இருபது கழஞ்சுப் பொன்னை வழங்கியுள்ளான். இதில் இருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு ஏகாதசி நாளில் இருபது பிராமணர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. (மேலது: 168).
இதுபோல் திருவாதிரைதோறும் இருபது அந்தணர்களுக்கு உணவு வழங்க இருபது கழஞ்சு பொன் வழங்கப்பட்ட செய்தியை இதே பகுதியில் உள்ள 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு குறிப்பிடுகிறது (மேலது: 170). துவாதசி, திருவாதிரை, திருவோணம் ஆகிய விழா நாட்களிலும் பிராமண போஜனம் நடத்தக் கொடை வழங்கப்பட்டதை பத்து, 13ஆம் நூற்றாண்டுக் கால கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.பெரிய அளவில் முதலீடு செய்து அதிக எண்ணிக்கையிலான பிராமணர்களுக்கு நாள்தோறும் உணவு வழங்கும் முறையில் இருந்து ஒன்று, இரண்டு, மூன்று எனக் குறைந்த எண்ணிக்கையிலான பிராமணர்களுக்குக் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் உணவு வழங்கும் முறையானது, அதிகப் பொருள்வளம் இல்லாதோறும் இச்செயலில் ஈடுபட்டதன் வெளிப்பாடாக அமைந்துள்ளது. சில கல்வெட்டுகள் இருபது பிராமணர்களுக்கு உணவு வழங்குவதைக் குறிப்பிட்டாலும் வழங்கும் நாள் ஒருநாள்தான் (தெ.இ.க.13: 243).
பிராமண போஜனத்தின் விளைவு
மறுமை குறித்த நம்பிக்கையின் தூண்டுதலால் மக்கள் கோவில்களை மையமாகக் கொண்டு பல கொடைச் செயல்களை மேற்கொண்டுள்ளனர். கோவிலுக்கு பொன் அணிகலன்கள், உலோகப் படிமங்கள், பாத்திரங்கள் ஆகியனவற்றை வழங்கியுள்ளனர். கோவிலில் சந்திவிளக்கு, நந்தாவிளக்கு எரிக்க கால்நடைகளையும், நிலங்களையும் கொடையாக வழங்கியுள்ளனர். இவ்வரிசையில் பிராமண போஜனமும் இணைகிறது.
இவை அனைத்திலும் காணப்படும் பொதுவான தன்மை குடிமக்களின் உபரிப்பணம் இவற்றில் முதலீடாக இடப்பட்டதுதான். தமிழ்நாட்டிலும் அயல் நாடுகளிலும் செயல்பட்ட தமிழ் வணிகக் குழுக்களும், இவற்றின் உறுப்பினர்களான வணிகர்களும், நெசவாளர், உலோகத் தொழில் புரிவோர் ஆகிய கைவினைஞர்களும், கால்நடை வளர்ப்போர், நிலவுடைமையாளர் ஆகியோரும் தம்மிடம் இருந்த உபரிப் பணத்தை பிராமணர்களுக்கு உணவு வழங்குவதில் முடக்கியுள்ளனர்.
இம்முதலீடு இவ்வுலக வாழ்வுக்குப் பயன் தராத முதலீடாக அமைந்தது. ஆதாயம் எதுவும் தராத இயங்கா முதலீடாக (dead capital)  இம்முதலீடுகள் அமைந்து சமூக வளர்ச்சிக்குத் துணை புரியாது போய்விட்டது. வருவாய் ஈட்டும் துறைகளில் உபரியை முதலீடு செய்திருந்தால் பொருளியல் வளர்ச்சி மிகுந்திருக்கும். அல்லது நலத்திட்டங்களில் முதலீடு செய்திருந்தால் மக்கள் பயன் பெற்றிருப்பர். பிராமணரை மையமாகக் கொண்டு பிராமண போஜனம் மறுமையைக் கருதியே வழங்கப்பட்டதால் இம்மைக்கு உதவாமல் போய்விட்டன. இதனால் சமூக வளர்ச்சி தடைபட்டுப் போனது.
சான்றாதாரம் தென்னிந்திய கல்வெட்டுகள்.

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...
நூல்:     பிராமண போஜனமும் சட்டிச் சோறும்         (இடைக்காலத் தமிழகத்தில் வைதீகமும்         சாதி உருவாக்கமும்)
ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்
வெளியீடு: நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098.
    தொலைபேசி: 044-26251968, 26258410, 26241288
    ஷ்ஷ்ஷ்.ஸீநீதீலீஜீuதீறீவீsலீமீக்ஷீ.வீஸீ  மீனீணீவீறீ:வீஸீயீஷீ@ஸீநீதீலீ.வீஸீ  
        விலை: ரூ.75/-
பிராமண போஜனம்
தமிழ்க் கல்வெட்டுகளை அவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் ஆராய்ந்து வகைப்படுத்தினால் கொடையை மையமாகக் கொண்ட கல்வெட்டுகளே மிகுதியாக இருப்பதைக் காண முடியும். நிலம், பொன், பணம், உலோகப் படிமங்கள், ஆடு, மாடு என்பன கொடைப் பொருளாக விளங்கியுள்ளன. மனிதர்களையும்கூட அடிமைகளாகக் கோவிலுக்குக் கொடையாக வழங்கியுள்ளனர். இவைதவிர பொருட்கள், நிலங்கள் மீதானசில வரிகளும் கொடையாக வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரிவிலக்கும் வழங்கப்பட்டது.
மன்னர்கள், மன்னர் குடும்பத்தினர், வணிகர், கைவினைஞர், நில உரிமையாளர் என்போர் கொடை வழங்குவோராக விளங்கியுள்ளனர். விதிவிலக்குப் போன்று குடிஊழியம் செய்வோரும் கொடை வழங்கியுள்ளனர். பெரும்பாலும் சைவ, வைணவக் கோவில்களும், சமண, பௌத்தப் பள்ளிகளும் இவர்களிடம் இருந்து கொடை பெற்ற அமைப்புகளாக விளங்கியுள்ளன. புதிதாக அமைக்கப்படும் நீர் நிலைகள் ஊர்ப் பொதுவாக வழங்கப்பட்டன. இவை தவிர பிராமணர்களுக்குக் கொடை வழங்கிப் பேணும் வழக்கமும் நிலவியுள்ளது.
பிராமணக் கொடை
பிராமணர்களுக்குக் கொடை வழங்கல் மிகப் பெரிய புண்ணியச் செயல் என்று மனுதர்மம் (3:98) பின்வருமாறு குறிப்பிடுகிறது:
கல்வி தவம் முயன்ற வேதியர்க்களித்தல் தீயிலிட்டுச் செய்த ஓமம் போல் ஒளிர்விடும். மேலும் இம்மையில் நோய், பகை, ராஜ பீடை இவற்றால் உண்டான அச்சத்தினின்றும், மறுமையில் நரகத்தினின்றும் விடுவிக்கும்.
பிராமணர்களுக்கு வழங்கும் கொடையானது இம்மைக்கும் மறுமைக்கும் உதவும் என்ற நம்பிக்கையை உருவாக்குவதுடன் மட்டுமின்றி, பிராமணர்களுக்கு மன்னர்கள் கொடை வழங்க வேண்டியதை வலியுறுத்தி மனு(3:79) மேலும் கூறுவது வருமாறு:
பெரும் காணிக்கைகளுக்குரிய அஸ்வமேத முதலிய வேள்விகளை நடத்தி அந்தணர்க்கான அறச் சாலைகளை நியமித்து கொடை வழங்க வேண்டியது.
மனுதர்மத்தின் செல்வாக்கு மன்னர் ஆட்சிக்காலத் தமிழகத்தில் நிலை பெற்றிருந்தது. பிரமதேயம், சதுர்வேதிமங்கலம் என்ற பெயரிலான பிராமணக் குடியிருப்புகள் மன்னர்களால் உருவாக்கப்பட்டன. இதுகுறித்து செப்பேடுகளும் கல்வெட்டுகளும் விரிவான செய்திகளைக் குறிப்பிடுகின்றன.
பிராமண போஜனம்
நிலம் தவிர உணவும் கொடைப்பொருளாக விளங்கியுள்ளது. வழிபாட்டின்போது உணவு படைத்து வழிபடுவது சைவ, வைணவ சமய மரபு. இதைத் திருஅமுது செய்தல் என்று கூறுவர். இவ்வாறு திருஅமுது செய்யவும், சிவனடியார், பயணம் செய்வோர், பிராமணர் ஆகியோரின் பசி போக்கவும் உணவுக் கொடை வழங்கப்பட்டது. இவற்றுள் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட உணவுக் கொடை பிராமண போஜனம் எனப்பட்டது.
இப்பிராமண போஜனமானது மூன்று வகையில் நிகழ்ந்துள்ளது. முதலாவது நாள்தோறும் நிகழ்த்தப்படுவது. இதை நிசிதம் (ஏற்பாடு) என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இரண்டாவது அம்மாவாசையன்று நிகழ்வது. மூன்றாவது கோவில் திருநாட்களின்போது நிகழ்வது.
வழங்கிய முறை
பிராமண போஜனத்திற்குரிய செலவுத் தொகையை நிலம், பொன், பணம் ஆகிய மூன்று வடிவங்களில் வழங்கியுள்ளனர். நிலத்தில் இருந்து கிட்டும் நெல் உணவுக்கான அரிசிக்கும் உணவு தொடர்பான இதர செலவுகளுக்கும் பயன்பட்டுள்ளது. பொன், பணம் ஆகியன வட்டிக்கு விடப்பட்டு அவ்வட்டித் தொகையில் இருந்து உணவு வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்திலுள்ள பிரமமதேசம் ஊரிலுள்ள சிதம்பரேஸ்வரர் கோவில் கல்வெட்டொன்று அம்மாவாசைதோறும் பிராமணர்களுக்கு உணவளிப்பதைக் குறிப்பிடுகிறது. இதற்காக இருகழஞ்சுப்பொன் முதலீடாக வைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு உணவளிக்க கோவிலின் கணப்பெருமக்கள் (சபை உறுப்பினர்கள்) ஒத்துக் கொண்டுள்ளனர். (தெ.இ.க.30:142)
வழங்கியோரும் வழங்கியதன் நோக்கமும்
மன்னர்கள், மன்னர் குடும்பத்தினர், அரசு அதிகாரிகள் ஆகியோரும், குடிமக்களும் மேற்கூறிய முறைகளில் பிராமண போஜனத்திற்கான செலவுத் தொகையை வழங்கியுள்ளனர்.
இவர்களள் சிலர் குறிப்பிட்ட நோக்கம் எதுவுமின்றி புண்ணியம் கிட்டும் என்ற நம்பிக்கையில் கொடை வழங்கியுள்ளனர். சிலர் இறந்தோரின் ஆன்ம அமைதிக்காக வழங்கியுள்ளனர். சிலர் குறிப்பிட்ட விழா நாளையும், சிலர் தம் பிறந்த நாளையும் மையமாகக் கொண்டு வழங்கியுள்ளனர். பிராமணர்களுக்கு உணவு வழங்கியதன் அடிப்படை நோக்கம் மறுமை வாழ்வுக்குப் புண்ணியம் கிட்டும் என்பதுதான்.
பிராமணர்களில், வேதம் வல்லோருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற குறிப்பும் சில கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது. சான்றாக ராஜகேசரிவர்மன் என்ற சோழ மன்னனின் 23ஆவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டொன்று கற்றறிந்த, வேதமறிந்த 12 பிராமணர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்த செய்தியைக் கூறுகிறது. இக்கல்வெட்டின்படி பிரம்மாதி ராஜா என்பவன் 200 கழஞ்சு பொன்னை ஊர்ச்சபையிடம் வைப்புத் தொகையாக வழங்கியுள்ளான். இத்தொகையில் இருந்து கிட்டிய வட்டியில் இருந்து உணவு வழங்கப்பட்டுள்ளது. (தெ.இ.க.3:11:1).
நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள குத்தாலத்தில் கிடைத்துள்ள கல்வெட்டில் (கி.பி.992) சாமவேதம், தைத்திரிய சாண்டியோக சாமவேதம் வல்லார்க்கு உணவு வழங்கியதைக் குறிப்பிடுகிறது. (மேலது: 170). வேதக்கல்வியை ஊக்குவிப்பதும் வேதம் வல்லாரைப் பேணுவதும் பிராமணப் போஜனத்தின் நோக்கமாக இருந்துள்ளமை இச்செய்திகளால் புலப்படுகிறது. பல்லவர்களின் செப்புப் பட்டயங்கள் சிலவற்றில்,
பிராமணர்களின் சொத்து கொடிய விஷம். மற்ற விஷம் விஷமல்ல. அந்த விஷம் ஒருவனையே கொல்லும். பிராமணன் சொத்தோ புத்திர பௌத்திரர்களையும் கொல்லும் என்ற காப்புரைத் தொடர் இடம் பெற்றுள்ளது. இத்தொடர் பிராமணர்களுக்குப் பல்லவ மன்னர்களால் வழங்கப்பட்ட பிரம்மதேயக் கொடைச் செப்பேட்டில் இடம் பெற்றுள்ளது. பிராமணரின் சொத்துக்குப் பாதுகாப்பு அரணாக இக்காப்புரையை அமைத்துள்ளனர். இதன் தாக்கம் பிற்காலச் சோழர் காலத்திலும் இருந்துள்ளது. பிராமணருக்கு உரிமையான சொத்தைப் பறிமுதல் செய்தாலும், அச்சொத்தின் பயன்பாடு பிராமணர்களுக்கு மட்டுமே கிட்ட வேண்டும் என்ற நடைமுறை இருந்துள்ளது.
முதலாம் இராஜராஜசோழனின் அண்ணான இரண்டாம் ஆதித்த கரிகாலன் சோழநாட்டின் வட்டாரத் தலைவர்களால் கொலை செய்யப்பட்டான். முதலாம் இராஜராஜன் ஆட்சிக்கு வந்தவுடன் இக்கொலையுடன் தொடர்புடைய பிராமணர்களின் நிலங்களைப் பறிமுதல் செய்து விலைக்கு விற்றான். அதை விலைக்கு வாங்கியவர்கள் அதிலிருந்து வரும் வருவாயைப் பயன்படுத்தி காட்டுமன்னார் கோவிலில் உள்ள சிவன் கோவிலில் நாள்தோறும் பிராமணர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்தனர். (கி.ஸி.ணி.1921:97 பத்தி 31.)
வழங்கப்பட்ட உணவு
பிராமணபோஜனத்தைக் குறிப்பிடும் கல்வெட்டுகளில், வழங்கப்பட்ட உணவு குறித்தும் சில குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. மேலே குறிப்பிட்ட ராஜசேகரவர்மனின் 23ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் 12 பிராமணர்களுக்கான நண்பகல் உணவில் சோறுடன் ஆழாக்கு (அரைக்கால் படி) நெய், அய்ந்து வகைக்கறி, அய்ந்து உழக்குத் தயிர் ஆகியனவும் இரண்டு பாக்கும், வெற்றிலையும் வழங்கப்பட்டுள்ளன. சமையல் செய்வாருக்கும், விறகிடுவாருக்கும் தனியாக ஊதியம் வழங்கப்பட்டுள்ளது (தெ.இ.க.3 பகுதி.1). கோவிலில் உணவுச் சாலை ஒன்றை நிறுவி 25 பிராமணர்களுக்கு உணவளிக்க செம்பியன் மாதேவி, ஏற்பாடு செய்துள்ளார். இதன் பொருட்டு 12 வேலி நிலத்தை வழங்கியுள்ளார். இந்த நிலத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலத்தில் இருந்து ஆண்டுதோறும் 1590 கலம் நெல் கிடைத்துள்ளது. இதில் 937 கலம் ஒரு தூணி (நான்கு மரக்கால்), ஒரு பதக்கு (இரண்டு குறுணி) நெல்லைக் கொண்டு சோறும், காய்கறி, நெய், தயிர், பலவகைக் கறிகள், வெற்றிலைப் பாக்கு ஆகியனவும் நாள்தோறும் வழங்கப்பட்டுள்ளன. விறகும் இக்கணக்கில் அடங்கும். சமையல் செய்பவருக்கு நாள்தோறும் ஒரு குறுணி (இரண்டு நாழி) நெல் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. (தெ.இ.க.வீவீவீ & வீஸ்: 151)
காஞ்சன் தாமோதரன் என்பவன் வேதம் வல்ல பிராமணருக்கு நண்பகல் உணவளிக்க எழுபது கழஞ்சு பொன்னை திருச்சி மாவட்டம் திருவெள்ளரை கோவிலின்மூலபரிஷத்திடம் (சிவன் கோவில் நிருவாகத்தை நடத்தி வந்த சபை) கி.பி.985இல் வழங்கியுள்ளான். இது தவிர தாலம், வட்டில் ஆகிய சமையல் பாத்திரங்களையும் வழங்கியுள்ளான். நாள்தோறும் 18 நாடுறி குத்தல் படியரிசி சமைக்கப்பட்டதுடன், கும்மாயம் (சிறுபயிறு பருப்பிட்டுச் செய்யும் இனிப்புப் பண்டம்) ஆழாக்கு நெய், பழம் 2, காய்கறி, புளிக்கறி, நாழி தயிர், பொறிக்கறி, வெற்றிலை ஆகியனவும் வழங்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள திருவெறும்பியூர் ஆழ்வார் கோவிலில் உள்ள 955ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் வேளாண் வீர நாராயணன் என்ற செம்பியன் வேதிவேளார் என்பவன் 15 பிராமணர்கள் நாள்தோறும் உள்ள, சத்திரம் அமைத்துள்ள செய்தி இடம்பெற்றுள்ளது. இச்சத்திரத்தில் உணவு வழங்க ஆகும் செலவிற்காக இரண்டு வேலி, ஏழு மா அளவுள்ள நிலம் வழங்கியுள்ளான். இச்சத்திரத்தில் இரு நாழி அரிசி, கறிகாய்கறி ஒன்று, புளிக்கறி ஒன்று, புழுக்குக்கறி ஒன்று, நெய் அரைப்படி ஆகியவற்றுடன் வெற்றிலை, பாக்கு இரண்டும் வழங்கப்பட்டுள்ளன. (தெ.இ.க.13: 110).
இதே கோவிலில் உள்ள 985ஆம் ஆண்டுக் கல்வெட்டு திருப்பேர்பாலாசிரியன் என்பவன் நாலு மா நிலம் வழங்கி, பிராமணன் ஒருவனுக்கு நாள்தோறும் இருநாழி அரிசியும், காய்கறி ஒன்றும், நெய் அரைப்படியும், புளிக்கறி, புழுக்குக்கறியுடன் உரிஅளவு தயிரும், இரண்டு வெற்றிலைப் பாக்கும் வழங்க ஒழுங்கு செய்துள்ளான்.(தெ.இ.க.13:138).
இதே கோவிலுக்கு 985ஆம் ஆண்டில் ஆறு மா நிலத்தைக் கொடையாக திருப்பேர் பாப்பானி காரிநக்கன் என்பவன் வழங்கியுள்ளான். இந்நிலத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நில வருவாயைக் கொண்டு வேதம் வல்ல பிராமணன் ஒருவனுக்கு நாள்தோறும் திருவெறும்பியூராழ்வார் கோயிலில் உள்ள சத்திரத்தில் இருநாழி அரிசிச் சோறும், காய்கறி ஒன்றும், நெய் அரைப்படியும், புளிக்கறி புழுக்குக்கறியும், தயிர் உரியும், இரண்டு வெற்றிலைப் பாக்கும் வழங்கியுள்ளான். (தெ.இ.க.13:139-). விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் உள்ள உலகாபுரம் (உலகமாதேவிபுரம்) என்ற கிராமத்தில் உள்ள சிதைவடைந்த சிவன் கோவிலில் கி.பி.988ஆம் ஆண்டுக் காலத்தியக் கல்வெட்டு ஒன்றுள்ளது. கங்கன் அம்பலவன் கண்டராதித்தான் என்ற சோழ அரசு அதிகாரி 56 பிராமணர்களுக்கு உணவளிக்க 19 வேலி நிலம் விலைக்கு வாங்கிக் கொடையாக வழங்கிய செய்தி இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. இந்நிலத்தின் வருவாயைக் கொண்டு சோறுடன் நாலுகறி ஒருமுட்டை அளவு (சிறு கரண்டி அளவு) நெய், நாழி அளவு மோர் ஆகியவற்றுடன், அய்ந்து வெற்றிலையும் பாக்கும் வழங்கியுள்ளனர். (தெ.இ.க.13:61).
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகில் உள்ள ஊர் உடையார் கோயில். இங்குள்ள அனந்தீஸ்வரர் கோவிலில் 985ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்றுள்ளது. உத்தமசந்திரன் என்ற செம்பியன் பல்லவதரையன் மூன்று பிராமணர்களுக்கு இக்கோவிலில் நண்பகல் உணவளிக்க முக்காலே இரண்டு (பரப்பளவு குறிப்பிடப்படவில்லை). நிலம் விலைக்கு வாங்கிக் கொடையாக வழங்கியுள்ளான். இந்நிலத்தின் வருவாயைக் கொண்டு இருநாழி பழவரிசியும் (குத்தி நீண்ட நாட்கள் ஆன அரிசி), ஆழாக்கு பருப்பும், காய்கறி ஒன்றும், புளிக்கறி ஒன்றும், அக்காரலட்டு (இனிப்பு லட்டு) இரண்டும், வாழைப்பழம் இரண்டும், பொரிக்கறி ஒன்றும், தயிர் நாழியும், நான்கு பாக்கும், பத்து வெற்றிலையும் வழங்கப்பட்டுள்ளன.
இவை தவிரஅடுவான் (சமைப்பவன்) ஊதியன் வழங்கவும், விறகு, உப்பு, காயம் ஆகியன வாங்கவும் ஒழுங்கு செய்யப்பட்டது (தெ.இ.க.13:91).
நாள்தோறும் உணவு வழங்க இயலாதவர்கள் சில குறிப்பிட்ட நாட்களில் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். சேலம் நகரில் உள்ள சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் இவ்வுண்மையை வெளிப்படுத்துகின்றன.
மணிக்கிராமம் என்ற பெயரிலான வணிகக் குழுவைச் சேர்ந்த மஞ்சன் மணிய மராத்தான் என்பவன் இக்கோவிலில் அய்ந்து கழஞ்சுப் பொன்னை முதலீடாக வைத்துள்ளான். இதிலிருந்து ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு இருபத்தைந்து அந்தணர்களுக்கு மாசித் திருநாளில் உணவு வழங்கப்பட்டுள்ளது. (கிருட்டிணன் 2001: 130)
செல்வனடிகள் என்பவன் நாற்பது பொன் கொடையாக வழங்கியுள்ளான். இதில் இருந்து கிடைக்கும் வட்டியில் மாசிமகத் திருவிழாவின்போது இருபத்தி அய்ந்து அந்தணர்களுக்கு சோறுடன் மூன்று கறி, அரைப்படி நெய், தயிர், வெற்றிலைப் பாக்கு ஆகியன வழங்கப்பட்டன (மேலது: 131).
திருச்செங்கோடு மலைமேல் நாகர் குன்றுக்கு மேற்கில் உள்ள பாறையில் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டொன் றுள்ளது. இக்கல்வெட்டு இளங்கோனடிகள் என்பவனின் மனைவி மூரிக்காமக்கனார் என்பவள் வழங்கிய கொடையைக் குறிப்பிடுகிறது. இப்பெண் திருச்செங்கோட்டுப் பன்னிரண்டு நாட்டுப் பெருமக்களிடம் இருபது கழஞ்சுப் பொன்னை வழங்கியுள்ளான். இதில் இருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு ஏகாதசி நாளில் இருபது பிராமணர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. (மேலது: 168).
இதுபோல் திருவாதிரைதோறும் இருபது அந்தணர்களுக்கு உணவு வழங்க இருபது கழஞ்சு பொன் வழங்கப்பட்ட செய்தியை இதே பகுதியில் உள்ள 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு குறிப்பிடுகிறது (மேலது: 170). துவாதசி, திருவாதிரை, திருவோணம் ஆகிய விழா நாட்களிலும் பிராமண போஜனம் நடத்தக் கொடை வழங்கப்பட்டதை பத்து, 13ஆம் நூற்றாண்டுக் கால கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.பெரிய அளவில் முதலீடு செய்து அதிக எண்ணிக்கையிலான பிராமணர்களுக்கு நாள்தோறும் உணவு வழங்கும் முறையில் இருந்து ஒன்று, இரண்டு, மூன்று எனக் குறைந்த எண்ணிக்கையிலான பிராமணர்களுக்குக் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் உணவு வழங்கும் முறையானது, அதிகப் பொருள்வளம் இல்லாதோறும் இச்செயலில் ஈடுபட்டதன் வெளிப்பாடாக அமைந்துள்ளது. சில கல்வெட்டுகள் இருபது பிராமணர்களுக்கு உணவு வழங்குவதைக் குறிப்பிட்டாலும் வழங்கும் நாள் ஒருநாள்தான் (தெ.இ.க.13: 243).
பிராமண போஜனத்தின் விளைவு
மறுமை குறித்த நம்பிக்கையின் தூண்டுதலால் மக்கள் கோவில்களை மையமாகக் கொண்டு பல கொடைச் செயல்களை மேற்கொண்டுள்ளனர். கோவிலுக்கு பொன் அணிகலன்கள், உலோகப் படிமங்கள், பாத்திரங்கள் ஆகியனவற்றை வழங்கியுள்ளனர். கோவிலில் சந்திவிளக்கு, நந்தாவிளக்கு எரிக்க கால்நடைகளையும், நிலங்களையும் கொடையாக வழங்கியுள்ளனர். இவ்வரிசையில் பிராமண போஜனமும் இணைகிறது.
இவை அனைத்திலும் காணப்படும் பொதுவான தன்மை குடிமக்களின் உபரிப்பணம் இவற்றில் முதலீடாக இடப்பட்டதுதான். தமிழ்நாட்டிலும் அயல் நாடுகளிலும் செயல்பட்ட தமிழ் வணிகக் குழுக்களும், இவற்றின் உறுப்பினர்களான வணிகர்களும், நெசவாளர், உலோகத் தொழில் புரிவோர் ஆகிய கைவினைஞர்களும், கால்நடை வளர்ப்போர், நிலவுடைமையாளர் ஆகியோரும் தம்மிடம் இருந்த உபரிப் பணத்தை பிராமணர்களுக்கு உணவு வழங்குவதில் முடக்கியுள்ளனர்.
இம்முதலீடு இவ்வுலக வாழ்வுக்குப் பயன் தராத முதலீடாக அமைந்தது. ஆதாயம் எதுவும் தராத இயங்கா முதலீடாக (பீமீணீபீ நீணீஜீவீtணீறீ) இம்முதலீடுகள் அமைந்து சமூக வளர்ச்சிக்குத் துணை புரியாது போய்விட்டது. வருவாய் ஈட்டும் துறைகளில் உபரியை முதலீடு செய்திருந்தால் பொருளியல் வளர்ச்சி மிகுந்திருக்கும். அல்லது நலத்திட்டங்களில் முதலீடு செய்திருந்தால் மக்கள் பயன் பெற்றிருப்பர். பிராமணரை மையமாகக் கொண்டு பிராமண போஜனம் மறுமையைக் கருதியே வழங்கப்பட்டதால் இம்மைக்கு உதவாமல் போய்விட்டன. இதனால் சமூக வளர்ச்சி தடைபட்டுப் போனது.
சான்றாதாரம் தென்னிந்திய கல்வெட்டுகள்.

-  உண்மை இதழ், 1-15.2.18

செவ்வாய், 20 மார்ச், 2018

மனுஸ்மிருதி குறிப்புகள்

*சூத்திரன் தன் தொழிலைவிட்டு உயர்குலத்தோனுடைய தொழிலைச் செய்தால் அவன் பொருள் முழுவதையும் பறித்துக் கொண்டு அரசன் அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும் (மனுநூல் 9:96)._*

_சூத்திரர்கள் முன்னிலையில் பிராமணர் வேதத்தைப் படித்துக் காட்டக்கூடாது (மனுநூல் 4:99)._

_சூத்திரன் மனப்பாடம் செய்யும் நோக்கத்துடன் வேதம் படிப்பதைக் கேட்டால், அவனது காதுகளில் காய்ச்சிய ஈயத்தையும், அரக்கையும் ஊற்றவேண்டும். அவன் வேதம் ஓதினால் ஓதிய நாக்கு துண்டிக்கப்படவேண்டும். வேதத்தில் முழு தேர்ச்சி அடைந்தால், அவனது உடல் துண்டு துண்டாக வெட்டி சிதைக்கப்படவேண்டும் (மனுநூல் 12:4)._

_சூத்திரன் பிராமணனைப் பார்த்து “நீர் இதைச் செய்ய வேண்டும்” என்று உபதேசம் செய்தால் அவன் வாயிலும், காதிலும் எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் (மனுநூல் 8:272)._

_சூத்திரன் பிராமணனுடன் சம ஆசனத்தில் உட்கார்ந்தால், சூத்திரனுடைய இடுப்பில் சூடுபோட வேண்டும்; அல்லது அவனை ஊரைவிட்டுத் துரத்தவேண்டும்; அல்லது அவனது ஆசனத்தில் ஒரு வெட்டுப்புண் ஏற்படுத்தவேண்டும் (மனுநூல் 8:281)._

சங்கராச்சாரியை சந்திக்கச் சென்ற மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் மற்றும் APJ அப்துல் கலாம் போன்றவர்களை தரையில் உட்காரவைத்து பேசியிருக்கிறார் சங்கராச்சாரியார். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் விஜயேந்திரரை சந்தித்தபோது நிற்கவைத்து பேசியிருக்கிறார். அதற்கு காரணம் அவர்கள் சூத்திரர்களாம். ஆனால், சுப்பிரமணிய சாமி என்னும் அரசியல்வாதி அவரை சந்திக்க போனபோது அவரை சரிசமமாக நாற்காலியில் அமரவைத்து பேசினார் சங்கராச்சாரியார். ஏனெனில் சுப்பிரமணிய சாமி பார்ப்பனராம். என்ன கொடுமை சார் இது!

_பிராமணனுடைய தலைமயிர் தாடி, மீசை, கால், கழுத்து, விதை இவைகளைப் பிடித்து இழுத்த சூத்திரனின் கைகளை யோசிக்காமல் வெட்டவேண்டும் (மனுநூல் 8:283)._

_சூத்திரன் பிராமணனை எந்த அங்கத்தினால் தாக்கினானோ அல்லது புண்படுத்தினானோ அந்த அங்கத்தை துண்டிக்கவேண்டும் (மனுநூல் 8:279)._

_சூத்திரன் வருணாசிரமப்படி நடக்காவிட்டால், பிராமணர்கள் ஆயுதமேந்தி அவர்களை தாக்கவேண்டும் (மனுநூல் 8:348)._

_அரசன் சூத்திரனை பிராமணர் போன்ற உயர்சாதியினருக்கு பணிவிடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்கவேண்டும் (மனுநூல் 8:410)._

_சூத்திரனுக்கு கூலி கொடுத்தோ, கொடாமலோ பிராமணர் வேலை வாங்கலாம் (மனுநூல் 8:413)._

_பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால், அடிமையாகிய சூத்திரன் எவ்வித பொருளுக்கும் உரிமையாளனாக மாட்டான் (மனுநூல் 8:417)._

_பிராமணனால் சூத்திர பெண்ணுக்கு பிள்ளை பிறந்தால், அப்பிள்ளைக்கு தந்தையின் சொத்தில் பங்கு இல்லை (மனுநூல் 8:455)._

_சூத்திரன் பிராமணனை கையினாலும் தடியினாலும், அடித்தால் கையையும் , உதைத்தால் காலையும் வெட்டிவிடவேண்டும் (மனுநூல் 9:280)._

_சூத்திரன் பிராமண சாதிக்குறியான பூணுால் முதலியதைத் அணிந்தால் அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிடவேண்டும் (மனுநூல் 9:224)._

_சூத்திரன் பிராமணர் பொருளை அபகரித்தால், சூத்திரனை சித்ரவதை செய்து கொல்லவேண்டும் (மனுநூல் 9:248)_

_சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானாகிய பிராமணனுக்கு சேரவேண்டுமே தவிர சம்பாதித்தவனுக்கு சேராது (மனுநூல் 9:416)._

_பிராமணன் சாப்பிட்டு மீந்த எச்சில் உணவு, உடுத்தி கிழிந்த ஆடை, சாரமற்ற தானியம் இவைகளை பிராமணன் சூத்திரனுக்கு வாழ்வாதாரமாக கொடுக்கவேண்டும் (மனுநூல் 10:125)._

_சூத்திரன் கட்டாயம் பிராமணர்களுக்கு தொண்டூழியம் செய்யவேண்டும் (மனுநூல் 10:122)._

_சூத்திரன் தன்னால் பொருள் திரட்ட முடியும்போதும் அவ்வாறு திரட்டி செல்வம் சேர்க்கக்கூடாது. ஏனெனில், செல்வந்தனான சூத்திரன் பிராமணனுக்கு துன்பம் தருகிறான் (மனுநூல் 10:129)._

_செல்வம் உள்ள சூத்திரன் வீட்டில் சிறிதும் தயங்காமலும், கேளாமலும், பலாத்காரத்தினாலும் கொள்ளையிடலாம் (மனுநூல் 11:13)._

_படைப்புப் பொருட்களில் உயிருடையவை சிறந்தவை; உயிருள்ளவற்றுள் அறிவுள்ளவை சிறந்தவை; அறிவுள்ளவற்றில் மனிதன் சிறந்தவன்; மனிதருள் பிராமணர் சிறந்தவர் (மனுநூல் 1:96)._

_பிராமணனைக் காப்பாற்றும்பொருட்டு பிராமணன் அல்லாதவரை கொல்வது பாவம் அல்ல (மனுநூல் 8:143)._

_அரசன் பூமியிலிருந்து புதையல் கண்டெடுத்தால், அதில் பாதியை பிராமணர்களுக்கு தானம் செய்து மீதியை அரசு கருவூலத்தில் சேர்க்கவேண்டும் (மனுநூல் 8:38)._

_பிராமணன் எத்தகைய கொடிய பாவம் செய்தாலும் அவனைக் கொல்லக்கூடாது; அவன் தலையை மொட்டை அடிப்பதே மரண தண்டனையாகும். பிறருக்கு மரணதண்டனை விதிக்கவேண்டும் (மனுநூல் 8:379)._

_எத்தகைய பாவம் செய்தாலும், பிராமணனை கொல்லாமலும், அவன் பொருளைக் கவர்ந்துகொள்ளாமலும் ஊரைவிட்டு துரத்தவேண்டும் (மனுநூல் 8:380)._

_பிராமணனைக் கொல்வதைவிட உலகத்தில் பெரிய ஒரு பாவம் இல்லை. எனவே, பிராமணனைக் கொல்வதுபற்றி அரசு நினைக்கவேகூடாது (மனுநூல் 8:381)._

_அறிவாளியாக இருந்தாலும் மூடனாக இருந்தாலும் பிராமணனே மேலான தெய்வம் (மனுநூல் 9:317)._

_ஒளியுள்ள தீ மயானத்தில் பிணத்தை எரித்தாலும், நிந்தனை இல்லாமல் எப்படி வேள்வியில் வளர்க்கப்படுகிறதோ அப்படியே பிராமணன் கெட்ட செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் வணங்கத்தக்கவன்; மேலானவன் (மனுநூல் 9:318)._

_பிறப்பினால் உயர்ந்த இடத்திலிருந்து தோன்றியதாலும், உயர்ந்த குலத்தாலும், வேதங்களை பிழையறக் கற்றுணர்ந்த அறிவினாலும், பூணூல் அணிந்துள்ள சிறப்பினாலும் பிராமணன் அனைத்து வருணத்தாருக்கும் தலைவனாக உள்ளான் (மனுநூல் 10:3)._

_சூத்திரனுக்கு பிராமணப் பணிவிடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணன் இல்லாத இடத்தில் க்ஷத்திரியனுக்கோ, க்ஷத்திரியன் இல்லாவிட்டால் வைஷ்யனுக்கோ தொண்டு செய்யவேண்டும். அதிகமான பசுக்களையும், செல்வங்களையும் வைத்திருக்கிறவன் பிராமணன் கேட்டு கொடுக்காவிட்டால் களவு செய்தாவது அல்லது பலாத்காரம் செய்தாவது பிராமணன் எடுத்துக்கொள்ளலாம் (மனுநூல் 11:12)._

_திருடிய பிராமணனை தண்டிக்கக்கூடாது (மனுநூல் 11:20)._

_பெண்களையும் சூத்திரரையும் கொல்வது மிகவும் சிறிய பாவமாகும் (மனுநூல் 11:66)._

_ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்யவேண்டிய பிராயச்சித்தம் எதுவோ அதைத்தான் சூத்திரனைக் கொன்றால் செய்யவேண்டும் (மனுநூல் 11:131)._

என்று  இந்துத்துவத்தின் புனிதநூலாகிய மனுநூல் கூறுகிறது.

திருப்பி அடிக்கவேண்டும் என்னும் கொள்கை உடையவர்களை துன்புறுத்துவதை ஒத்துக்கொள்ளலாம்.

இந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட எல்லா கோயில்களிலும் *"இந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளே வரக்கூடாது"* என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கிறிஸ்தவ தொழுகை இடங்களில் யாரையும் ஏற்றுக்கொள்கிறார்கள். உண்மையான கடவுள் இந்துக்கள் அல்லாதவர்களை புறக்கணிக்குமா?

வேதங்கள், வேதாந்தங்கள், இதிகாசங்கள், உபநிஷத்துகள் எல்லாவற்றையும் மனப்பாடமாக கற்றுத் தேர்ந்தாலும் பிராமணர் அல்லாதவர்கள் பூசாரியாக முடியாது.
நான் சொல்வதை *பகுத்தறிவுள்ள இந்துக்கள்* ஒத்துக்கொள்வார்கள்.