பெரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 பிப்ரவரி, 2024

யார் தேவை? பெரியாரா? பெரியவாளா?


பதிலடிப் பக்கம்

விடுதலை நாளேடு,
Published April 3, 2023

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

மின்சாரம்

யார் தேவை? பெரியாரா? பெரியவாளா?

வைக்கம் நூற்றாண்டு பற்றி ஒரு தனியார்த் தொலைக்காட்சியில் விவாதப் போர் நடைபெற்றது.

வைக்கத்தையும் கடந்து பல்வேறு சர்ச்சைகள் சரமாரியாக வெடித்தன.

சனாதனிகள் பக்கம் நின்று பேசிய ஒருவர் ஸ்மிருதி வேறு, சுருதி வேறு – ஸ்மிருதிகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

சுருதி அதாவது வேதம் அத்தகையது அல்ல என்று பேசினார். வேதம் உன்னதமானது என்ற அர்த்தத்தில் நீட்டி முழங்கினார்.

ஸ்மிருதியானாலும் சுருதியானாலும் ஒரே குட்டை யில் ஊறிய மட்டைகள்தான்.

மனுதர்மம் என்ன கூறுகிறது?

அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான  பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தார்க்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார் (மனுதர்மம் அத்தியாயம் 1, சுலோகம் 87).

மனுதர்மம் அப்படிக் கூறி இருக்கலாம். வேதத்தில் எல்லாம் அப்படிக் கிடையவே கிடையாது என்று தலையில் அடித்து சத்தியம் செய்தாரே ஒரு பிரகஸ்பதி – அவரின் பார்ப்பனீய பாசி படர்ந்த கண்களுக்குப் பதில் இங்கே!

பராஹ்மணோஸ்ய பாஹு ராண்ய க்ருத

ஊருத்தஸ்ய யத் வைஸ்ய பத்ப்யாம் சதத்ரோ அஜாயத

(யஜுர் வேதம் சுலோகம் 11)

இதன் பொருள் என்ன? கடவுள் முகத்தினின்று பிராமணன் பிறந்தான். தோள்களிலிருந்து சத்திரியன் பிறந்தான், தொடைகளினின்று வைசியன் பிறந்தான், பாதங்களிலிருந்து சூத்திரன் பிறந்தான். 

அதர்வண வேதம் அத்தியாயம் 19, சுலோகம் ஆறும் அதே பொருளைத்தான் கூறுகிறது.

தெய்வாதீனம் ஜெகத்சர்வம் 

மந்த்ரா தீனம் து தெய்வதம்

தன்மந்தரம் பிரம்மணா தீனம்

தஸ்மத் பிரம்மணப் பிரபு ஜெயத்

(ரிக் வேதம் 62ஆம் பிரிவு, 10ஆம் சுலோகம்)

“இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர். மந்திரங்கள் பிராம ணர்களுக்குக் கட்டுப்பட்டவை. எனவே பிராமணர் களே நமது கடவுள்” என்கிறது ரிக் வேதம். 

ஸ்மிருதியில் ஏதோ இருக்கலாம். சுருதியில் (வேதத் தில்) அப்படி யெல்லாம் கிடையாது என்று பிதற்றும் சனாதனிகள் இதற்கு என்ன பதில் வைத்துள்ளனர்.

அதை விடுங்கள். ரொம்பக் காலத்திற்கு முன்பு கூடப் போக வேண்டாம்.

மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன “திரு”வாய் மலர்ந்தார்?

9.10.2002 அன்று சென்னை நாரத கான சபையில் “தாம்ப்ராஸ்” எனப்படும் பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில் “அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர் கள்” நூல் வெளியீட்டு விழாவில், அந்த நூலை வெளியிட்டு ஜெயேந்திர சரஸ்வதி என்ன பேசினார்?

“எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர் சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதைப் பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி செய்தாலும் அவர் வசிஷ்டர் சொற்படிதான் நடந்தார். மதுரை நாயக்கர்கள் ஆண்ட போது கோவிந்த தீட்சதர் என்பவர் தான் குரு. அவர் வம்சத்தில் வந்தவர் தான் மறைந்த காஞ்சிப் பெரியவாள். ஆண்டவன் கூட அப்புறம்தான். அந்தணர் தான் முதலில்” (நக்கீரன், 16.11.2002).

மகா மகா பெரியவாள் என்று எரவாணத்தில் தூக்கி வைத்துத் துதிபாடுகிறார்களே மறைந்த காஞ்சி சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி – தீண்டாமை பற்றி காந்தியாரிடம் என்ன சம்பாஷித் தார்?

16.10.1927 அன்று பாலக்காட்டில் மாட்டுக் கொட்ட கையில் சங்கராச்சாரியாரைச் சந்தித்த காந்தியாரிடம் சங்கராச்சாரியார் கூறுகிறார்:

ஹரிஜன ஆலயப் பிரவேசத்தில் சாஸ்திரங்களையும், பழைய வழக்கங்களையும் நம்பி இருப்பவர்கள் நம் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்றே தாம் முடிவுக்கு வர வேண்டியிருக்கிறதென்றும் ஸ்வாமிகள் (சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி) காந்தியடிகளிடம் தெரிவித்தார். (ஆதாரம்: “தமிழ்நாட்டில் காந்தி”, பக். 575-576).

யார் பக்கம் நிற்கிறார் சங்கராச்சாரியார்? யாருடைய மனம் நோகக் கூடாது என்று கவலைப்படுகிறார்?

ஜாதித் திமிரில் இன்னொரு மனிதனைத் தீண்டத் தகாதவன் என்று கருதுபவர் பக்கம் பச்சாத்தாபப் படுகிறார். அந்தத் தீண்டாமை என்னும் கொடூரமான அவமதிப்புக்கு ஆளாகும் ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதை பற்றி, மனத்துன்பம் பற்றி ‘பெரிய வாளுக்கு’ அக்கறையில்லை.

வேத காலத்துக்குப் போக வேண்டியதில்லை. நாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த “மஹா பெரியவாளின்’ யோக்கியதை எந்தத் தரத்தில் இருக்கிறது?

இந்நாட்டுப் பெரும்பான்மை மக்கள் எண்ணத்தில் எழுச்சி ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

சுதந்திர நாட்டில் பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி இருக்கலாமா? அப்படி இருந்தால் நாடு சுதந்திர நாடா? நரக நாடா? (விடுதலை, 15.8.1957) என்று கேட்ட தந்தை பெரியர் எங்கே?

தீண்டாமை க்ஷேமகரமானது (சிறீஜெகத் குருவின் உபதேசங்கள் இரண்டாம் பாகம்) என்று கூறும் சங்க ராச்சாரியார் எங்கே?

பெரியாரா? பெரியவாளா? நாட்டுக்கு யார் தேவை?

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

கிறிஸ்தவம் இஸ்லாம் பற்றி பெரியார் விமர்சிக்கவில்லையா!


 கிருஸ்துவமதத்தலைவர் ஏசு கிருஸ்து 
என்பவர் 2000 ஆண்டுகளுக்கு முன் தகப்பனில்லாமல்,
பரிசுத்த ஆவிக்குப் பிறந்தாராம்.
ஆகவே
அவர் கடவுளுக்கு மகனாம்
(தேவகுமாரனாம்) ஆகவே அவர்
சிலுவையில்
அறையப்பட்டுக்) கொல்லப்பட்டாராம்.
செத்தவர் மறுபடியும் பிழைத்தாராம்.
பல
அற்புதங்களைச் செய்தாராம்.
வியாதிகளைப் பார்வையால்
சவுகரியப்படுத்தினாராம். ஒரு
ரொட்டித் துண்டை ஆயிரக்கணக்கான
பேர்களுக்குக் கொடுத்துப்
பசியாற்றினாராம். குருடர்களுக்கு
கண்ணைக்
கொடுத்தாராம். இப்படி பல
காரியங்கள் செய்தாராம்.
இவற்றையெல்லாம்
நம்பினால் தான் கிருஸ்தவ மதம் இருக்க
முடியும். அறிவைக் கொண்டு
பார்த்தால் தேவனுக்கு, கடவுளுக்குக்
குமாரன் எதற்கு? கடவுள் ஒருவனை
மாத்திரம் குமாரனாக ஆக்குவது ஏன்?
கடவுள் தோன்றி எத்தனையோ காலம்
ஆனபிறகு
அப்போது (2000 வருடங்களுக்கு முன்)
மாத்திரம் எதற்காக மகனை
உண்டாக்கினார்? அதற்கு முந்தின
காலத்தில் ஏன் உண்டாக்கவில்லை?
அப்போதெல்லாம் செத்தவர்கள்
இல்லையா? குருடர்கள் இல்லையா?
பசித்தவர்கள்
இல்லையா? அந்த (கி.பி. 1 – ஆவது)
வருஷம் மாத்திரம் என்ன சிறந்தது?
கடவுள்
செய்யவேண்டியதை – சொல்ல
வேண்டியதை ஒரு மனிதனைக்
கொண்டு மாத்திரம் ஏன்
சொல்ல வேண்டும்? அதுவும் ஒரு
சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன்
சொல்ல
வேண்டும்? அந்தக் காரியங்கள்
இப்போது ஏன் நடப்பதில்லை? இன்று ஏன்
அவர்
வரவில்லை? இப்போது கிருஸ்துவை
ஏற்காதவர்கள், நம்பாதவர்கள்,
வழிபடாதவர்கள்
ஏனிருக்கிறார்கள்? தேவகுமாரனுக்கு
இவ்வளவு தான் சக்தியா? இது
போலத்தானே
இஸ்லாம் மதம் என்பதும்
சொல்லப்படுகிறது? முகம்மது
கடவுளுக்கு (கடவுளால்
அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத்
தூதர் எதற்கு? குரான் கடவுளால்
தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட
செய்தியாம்.கடவுள் மக்களுக்குச்
செய்தி சொல்லவேண்டுமானால் ஒரு
மனிதர் (தூதர்) வாயினால் தான்
சொல்லச்
செய்யவேண்டுமா? கடவுளால் எல்லா
மனிதருக்கும் ஏககாலத்தில்
தெரியும்படிச்
செய்ய முடியாதா? உலகில் மனிதன்
தோன்றி எத்தனையோ இலட்சம்
ஆண்டுகளுக்குப்
பிறகு ஒரு ஊரிலே, யாரோ ஒரு
சிலருக்கு மாத்திரம் சொல்லும் படி ஏன்
சொல்லுகிறார்? மற்றவர்களுக்கு ஏன்
தெரிவிக்கவில்லை? முகமது நபி
என்பதை
ஏற்றுக் கொண்டு, அவரை
நம்பினவர்களுக்குத்தானே குரான்?
மற்றவர்கள் அதை
ஏற்பதில்லையே! மற்றவர்களுக்குப்
பயன்படுவதில்லையே! ஏன்? கடவுள்
சொல்,
அப்படி ஏன் நம்பச் செய்தவர்களுக்கு
மாத்திரம் தெரிய வேண்டும்? இன்னும்
எத்தனை மக்கள் நம்பியாக வேண்டி
இருக்கிறது! இதுதான் கடவுள்
தன்மையா?
இவையெல்லாம் மனிதத் தன்மையா?
மனிதக் கற்பனையா?
தெய்வத்தன்மையா? ஒரு
சர்வசக்தியுள்ள தெய்வம், தெய்வத்தால்
அனுப்பப்பட்ட அவதாரம், அம்சம்,
மகன், குமாரன், தூதர், வேதம் ஏன்
உண்டாக்க வேண்டும்? இருந்தால்
இத்தனை
வேதங்கள், குமாரர், தூதர், வேதம் ஏன்
உண்டாக்க வேண்டும்? இருந்தால்
இத்தனை வேதங்கள், குமாரர், அவதாரம்,
தூதர்கள், சமயங்கள், மதங்கள்,
போதகர்கள் இருக்க வேண்டிய
அவசியமென்ன என்பதைச் சிந்தித்தால்
இவையெல்லாம்
மூட நம்பிக்கை, அதாவது அறிவைக்
கொண்டு சிந்திக்காமல்
கண்முடித்தனமாய்
நம்ப வேண்டியவை ஆகின்றனவா
இல்லையா? இது மனிதர்
என்பவர்களுக்கு ஏற்றதா
என்று கேட்கிறேன். இதற்காகக்
கோபிப்பதில் பயன் என்ன?
மூடநம்பிக்கை ஒழிய வேண்டுமானால்
மக்களிடம் உள்ள இப்படிப்பட்ட
கருத்துக்கள் ஒழியாமல் எப்படி ஒழிய
முடியும்? அறிவுள்ளவர்களே!
பகுத்தறிவாதிகளே!
சிந்தித்துப்பாருங்கள்! இது சந்திர
மண்டலத்திற்கு
மனிதன் போய் வரும் காலம்;
காட்டுமிராண்டிக் காலமல்ல. எனவே
சிந்தித்துப்பாருங்கள்! பின் சந்ததி
மக்களை மடையர்களாக்காதீர்கள்!
--------------14-06-1971 "உண்மை" இதழில்
தந்தை பெரியார் அவர்கள் எழுதிய
தலையங்கம். "பெரியார் களஞ்சியம்" -
தொகுதி: 2 … பக்கம்:57-62

வெள்ளி, 1 ஜூலை, 2022

கூறுவது என்ன? நடப்பது என்ன? (பைபிள் குரான் வேதம்)

 பைபிள்

ஏசு கிறிஸ்து ஒருவன் வலது கன்னத்தில் அடித்தால் இடது கன்னத்தையும் காட்டு என்று தான் கூறியிருக்கிறார் தனது பைபிளில். அந்தப் பைபிளை அன்றாடம் படித்து வருபவர்கள் தான் துப்பாக்கி முதல் அணுக்குண்டு வரை உற்பத்தி செய்து பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றனர்.

குர்ஆன்

முகமது நபி சகல மக்களையும் சமமாகக் கருது என்றுதான் கூறியுள்ளார். அதே குர்ஆனை அன்றாடம்  படித்து வரும் பாகிஸ்தான் மக்கள் தான் மத வெறி கொண்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் அல்லாத மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.

வேதம்

ஹிந்து மத, வேத சாஸ்திரங்களும் சகல ஆத்மாக்களும், கடவுள் அம்சம்தான். ஒரே ஆத்மாதான் எல்லா உடலிலும் இருக்கிறது. ஆகவே அனைவரையும் கடவுளாகத்தான் பாவிக்க வேண்டும் என்று போதிக்கின்றன.

அப்படிப்பட்ட ஹிந்துக்கள் தான் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். மற்றும் இந்து மதத்தைச் சேர்ந்த உயர்ஜாதிப் பார்ப்பனர்கள்தான் உலக உத்தமர் காந்தியாரைக் கொல்லச் செய்தவர்கள்.

 10.4.1948-  குடிஅரசிலிருந்து....          

வெள்ளி, 8 நவம்பர், 2019

இதுதான் மனு (அ)தர்மம்!

10.03.1935, குடிஅரசிலிருந்து...

யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்?

மனு தர்ம சாஸ்திரம் என்பது நமது மதத்திற்கே ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருவதும், அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற சிவில் கிரிமினல் சட்டத் திட்டங்களால் அனுசரிக்கப்பட்டதுமாகும். அதிலுள்ள நீதிகளும், விதிகளும். எந்தவிதமான ஒழுங்கு முறையில் முன்னோர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு மக்கள் அடிமைப் படுத்துவதற்காக அமைக்கப்பட்டு இருக்கின்றன என்பதை யாரும் உணர்ந்துகொள்ளுவது அவசியமாகும். ஆதி திராவிட சமுகம் முதல், சகல அடிமைப்படுத்தப்பட்ட சமுகத்தார்கள் வரை இந்த மனுதர்மத்தை நீதியாகக் கொண்ட இப்படிப்பட்ட கொடுமையான இந்துமதத்தில் இருப்பதைவிட பிற மதத்தில் சேர்ந்து தங்களுக்கு விடுதலையைத் தேடிக் கொள்வது சரியா? பிசகா? என்பதையும் அல்லது இம்மாதிரியான அநீதியான சட்டத் திட்டங்கள் அமைந்துள்ள இந்து மதத்திலேயே அடிமைப்பட்டாகிலும் வாழ வேண்டுமா என்பதையும் கீழ்வரும் மனுதர்ம விதிகளைப் படித்து முடிவு செய்து கொள்ளும்படி கோருகிறோம்.

1.            பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசார மில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது.  - அத்தியாயம் 8, சுலோகம் 20

2.            சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமை உடையதாய் இருக்கும். அ.12, சு.43.

3.            சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றி யாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி. அ.12. சு43.

4.            ஸ்திரீகள் புணர்ச்சி விஷயத்திலும், பிராம ணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன் னால் குற்றமில்லை. அ.8. சு.112.

5.            நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்ய வேண்டிய பிராமணனைச் சத்தியமாகச் சொல்லு கிறேன் என்று சொல்ல செய்யவேண்டும். பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனைப் பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர் போகாமலும் இருந்தால் அவன் சொன்னது சத்தியம் என உணர வேண்டும்.- அ. 8. சு. 113-- 115.

6.            சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும்.  - அ.8. சு. 271.

7.            சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்.  - அ.8  சு.271.

8.            பிராமணனைப் பார்த்து, நீ இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண்ணெய்யைக்  காய்ச்சி ஊற்ற வேண்டும். அ.8  சு.272.

9.            சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்தி லுட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்.   - அ.8  சு.281.

10.          பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமணரல்லாதாரைக் கொன்றவனுக்கு பாவ மில்லை.  -  அ.8.  சு.349.

11.          சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர் போகும் வரையும் தண்டிக்க வேண்டும். பிராமணன் கொலை குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும், எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிடவேண்டும். - அ.8 சு.380

12.          அரசன் சூத்திரனை பிராமணர் முதலிய உயர்ந்த ஜாதிக்கு பணிவிடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும். - அ.8.சு.410.

13.          பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப் பட்டிருக்கிறான். - அ. 8  சு.413

14.          பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான் - அ.8.சு.417.

15.          சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானனாகிய பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது. - அ. 9  சு. 416

16.          பிராமணனால் சூத்திர ஸ்திரீக்குப் பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்குத் தந்தை சொத்தில் பங் கில்லை.  - அ.8  சு. 155.

17.          பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்திரவதை செய்து, கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தம் இஷ்டப்படி கொள்ளையிடலாம். - அ.9  சு.248.

18.          பிராமணன் மூடனானாலும் அவனே மேலானதெய்வம்.  - அ.9  சு. 317

19.          பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட் டிருந்தாலும் பூஜிக்கத்தக்கவர்கள் ஆவர்கள். - அ. 9 சு.319.

20.          பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவனாதலால் அவன் பிராமணனுக்குத் துன்பம் செய்தால் அவனைச் சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும். - அ.9 சு.320.

21.          சூத்திரனுக்கு பிராமணப்பணிவிடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாத விடத்தில் சத்திரியனுக்கும், சத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண்டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன், பிராமணன் கேட்டு கொடுக்காவிட்டால், களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு. - அ.11.  சு.12.

22.          சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும், யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராம ணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம். - அ.11.  சு.13.

23.          யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைத் தண்டிக்கக் கூடாது. - அ.11  சு.20.

24.          பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும். - அ.11  சு.66.

25.          ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும். - அ.11.  சு.131.

25           (அ)       அதுவும் முடியாவிடில் வருண மந்திரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது -

அ.11.  சு.132.

26.          சத்திரியன் இந்நூலில் (மனுதர்ம சாஸ்திரத்தில்) சொல்லப் பட்டபடி ராஜ்யபாரம் பண்ணுவதே தவமாகும். சூத்திரன் பிராமண பணிவிடை செய்வதே தவமாகும். - அ.11  சு.285.

27.          சூத்திரன் பிராமணனுடைய தொழிலை செய்தாலும் சூத்திரனேயாவான். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்யின் பிராமண னேயாவான். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார். - அ.10. சு.75.

28.          பிராமணரல்லாதவன் உயர்குலத்தோரு டைய தொழிலைச் செய்தால் அரசன் அவனது பொருள் முழுவதையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும். - அ.10  சு.96

29.          சூத்திரன் இம்மைக்கும், மோட்சத்திற்கும் பிராமணனையே தொழ வேண்டும். - அ.10. சு.96.

30.          பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும், உடுத்திக் கிழிந்த ஆடையும், கெட்டுப் போன தானியமும் சூத்திரனுடைய ஜீவனத்துக்கு கொடுக்கப்படும். - அ.10. சு.125

31.          சூத்திரன் எவ்வளவு திறமையுடையவனாகயிருந்தாலும் கண்டிப்பாய் பொருள் சேர்க்கக் கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் அது பிராமணனுக்கு துன்பமாய் முடியும். - அ.10.  சு.129.

32.          மனுவால் எந்த வருணத்தாருக்கு இந்த மனுதர்ம சாஸ்திரத்தால் என்ன தர்மம் விதிக்கப் பட்டதோ, அதுவே வேத சம்மதமாகும். ஏனென்றால், அவர் வேதங்களை நன்றாய் உணர்ந்தவர். - அ.2.  சு.7.

இன்னும் இதைப் போன்று ஆயிரக்கணக்கான அநீதியானதும், ஒரு சாராருக்கு நன்மையும், மறுசாராருக்குக் கொடுமையும் செய்வதுமான விதிகள் மனுதர்மத்தில் நிறைந்திருக்கின்றன. சுருங்கச் சொல்லுங்கால் பிராமணன் என்ற வகுப்பாரைத் தவிர, வேறு எந்த வகுப்பாருக்கும் அதில் யாதொரு நன்மையும் இல்லை என்றே கூறலாம். ஆகையால் தோழர்களே! இந்நூலை மனுதர்மம் என்று கூறு வதா? அல்லது மனுஅதர்மம் என்று கூறுவதா? சற்று யோசித்து முடிவு செய்யுங்கள்.

- விடுதலை நாளேடு 8 .11.19

வெள்ளி, 7 டிசம்பர், 2018

இந்து மத ஆராய்ச்சி - பெரியார்

( #95வயது_கிழவர்_சாவதற்கு_ஒருவாரம் #முன்பு_இப்படி_தீப்பொறி_பறக்க_பேச #முடியுமெனில்_அவர்தாம்பெரியார்! )

இந்த ஆகமம்ணா என்ன?
இதுக்கு ஆரு தலைவன்?
எப்ப எழுதினது?
எவன் சொன்னவன்?

நாதியே இல்லே..? நம்பவேண்டியது, அவன் சொல்றத!
என்னடாண்ணா ஆகமம்?
- பூந்துப் பாத்தா,  
இந்துக்களுடைய ஆகமம்ணான்.
இந்துண்ணா என்னடான்னா...
ஒன்னுமில்லே!

இந்து..! இந்துண்ணா என்னா?
யாரக் குறிப்பிடுது அது?
என்ன ஆதாரம் அதுக்கு?
அதுக்கு தலைவன் ஆரு?
அதுக்கு காலம் என்ன?
எவனாவது சொல்ல முடியுமா?

எப்படா ஆச்சு?
அந்த யுகம், இந்த யுகம்? அதிலே!
எவன்டா எழுதினான்?
நாரதன், வசிட்டன், அந்த யக்ஞவல்கியன்
வெங்காயம் இந்தப் பயல்களுக்கு
ஆயுசு என்னடா?
பத்து லட்சம் வருஷம், எட்டு லட்சம் வருஷம், பதினஞ்சி லட்சம் வருஷம்...

அதிலே- இன்னிக்கு சட்டத்திலே...
நமக்கு தீர்ப்பு! இது அரசாங்கத்தோட யோக்கித...இப்ப நமக்கு சட்டப்படி தீர்ப்புண்ணா - அந்த சட்டத்துல உபயோகப்படுத்தற வார்த்தைகள், உபயோகப்படுத்தற ஆள்கள் யாருண்ணா ஒருத்தனுக்கும் தெரியாது.

போன யுகம், அதுக்கு முந்தின யுகம், அவன் ஆரு?
அவன்- நாரதன், அவன்- வசிட்டன், அவன்- யக்ஞன்!
அவன் இவன்கள்லாம் இருந்திருப்பானா?
எங்கே இருந்தான்?
இவன்க இருக்கிறது பத்துயுகம், எட்டுயுகம், பதினஞ்சியுகம் இருக்கான்க....
எங்கே இருக்கறான்?
மேல்லோகத்தில இருக்கறான்!
இங்க வந்து இந்த வேலையெல்லாம்
பண்ணினான்ணா...
எந்த வழியில் வந்தான்?
எந்த வழியில் போனான்?
எந்த ஊருல இருந்தான்?

ஏன் சொல்றேன்னா...நாதியில்ல!
பார்ப்பான் எதச் சொல்றானோ,
அதுதான் கடவுள்.
அதுதான் சட்டம்.
அதன் படிக்குத்தான் நடக்கணும்.
நடக்க வச்சிட்டான்.
அந்த அளவுள வந்துட்டது, இப்போ?
அதத்தான் நாம இப்போ சுயராச்சியம்கறோம்.
இந்த சுதந்திரம்கறதுக்கு
யோக்கியதை என்ன?

( 17/12/1973 அன்று குடந்தையில்
தந்தை பெரியார் பேசியது )
நன்றி; Viduthalaiarasu Viduthalaiarasu

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

நூல்: மானம் மானுடம் பெரியார்!

நூல்:    மானம் மானுடம் பெரியார்!
ஆசிரியர்: சு.அறிவுக்கரசு
வெளியீடு: நாம் தமிழர் பதிப்பகம்,
ஜி-4, சாந்தி அடுக்ககம், 3, ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு,
    ராயப்பேட்டை, சென்னை - 14
பக்கம்: 440            விலை: ரூ.300/-
ஆரியப் பார்ப்பனர்கள் வேதம் கற்றனர்,  வேள்விகள் செய்தனர்; வேள்விகளால் நாம் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்றெல்லாம் கதையளந்தனர். கல்வியறிவில்லாதத் தமிழ் மன்னர்கள் நம்பினர். பார்ப்பனரைப் பணிந்தனர். வேதங்கள் என்றால் என்ன? வேள்விகள் என்றால் என்ன? வேள்வி எனும் சொல் தமிழாக இருந்தாலும் மூலம் சமஸ்கிருதத்தில் யாகம் (யக்ஞம்) என்பதாகும்.
நான்கு மறை என்பார்கள். பார்ப்பனர் தவிர மற்றையோர் தெரிந்துகொள்ளலாகாது என்று மறைத்து வைக்கப்பட்டமையால் மறை எனப்பட்டது. எழுத்து வடிவில் இல்லாததால் மறைப்பதும் வசதியாக இருந்துவிட்டது. 10,522 பாடல்கள் கொண்டது ரிக் வேதம். 1984 பாடல்கள் கொண்டது யஜுர் வேதம். 1875 பாடல்கள் கொண்டது சாமவேதம். அதர்வ வேதத்தில் 5977 பாடல்கள் உள.
ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஆரியப் பார்ப்பனர்கள் சிந்து சமவெளிக்கு வந்து சேர்ந்தபோது சிந்து நதியைக் கண்டு வாயைப் பிளந்து பாடிய பாடல்கள் (ரிக்) கொண்டது ரிக் வேதம். அங்கு வாழ்ந்த திராவிடர்கள் கட்டியிருந்த கோட்டைகளையும் பெரிய வீடுகளையும் கண்டு நாடோடி வாழ்க்கை முறையைக் கொண்டிருந்த ஆரியர்கள் ஆச்சரியத்தில் சொன்னவை ரிக் வேதத்தில் நிறைய. திராவிடர்களை எதிர்க்கவும் முடியாமல், மேலே செல்லவும் முடியாமல் இருந்தவர்கள் இந்திரக் கடவுளை உதவிக்குக் கூப்பிட்ட பாடல்கள் ரிக் வேதம். கையாலாகாதவனுக்குத் துணை கடவுள்தானே!
வேள்வி எனப்படும் யாகச் சடங்குகளின்போது முணுமுணுக்கும் பாடல்களே யஜுர் வேதம். இது வெள்ளை யஜுர் (சுக்ல யஜுர்) என்றும் க்ருஷ்ண யஜுர் (கருப்பு யஜுர்) எனவும் இரண்டு பாகம். சாம வேதம் என்பது பூர்வாச்சிக, உத்தரார்ச்சிக என்று இரு பிரிவுகளாக உள்ளது. இவையும் வேள்விகள் செய்யும்போது சொல்லப்பட வேண்டியவை. மந்திர, தந்திரங்களுக்குப் பயன்படும் பாடல்கள் கொண்டது அதர்வ வேதம். அச்சமும், அறியாமையும் கொண்ட மனிதன் கற்பித்துக் கொண்டவை கடவுள், பேய், பூதம், பாவம், புண்ணியம் போன்றவை. இவற்றைக் கட்டுப்படுத்தும் சக்தி இந்த மந்திரங்களுக்கு உண்டு என்று ஏமாற்றினர் ஆரியர்கள்.
பொது ஆண்டு (கி.பி) 1400இல்தான் சாயனாச்சாரி என்பார் எழுத்து வடிவில் ரிக் வேதத்தை எழுதினார். இதற்கு விளக்கமும் எழுதினார். கேட்பதிலும் மனனம் செய்வதிலும் பொழுதைக் கழித்த ஆரியப் பார்ப்பனர்கள், தம்மையல் லாதவர்கள் வேதத்தைக் கேட்பதையும் மனனம் செய்திட முயற்சிப்பதையும் தடுத்து விட்டனர். வேதம் படிப்பவர் பக்கத்தில் உட்கார்ந்தால் உட்காரும் பகுதியை அறுத்தல், வேதம் படிப்பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றிக் கெடுத்தல் போன்ற கொடுந் தண்டனைகள் உண்டென்று கூறி நடைமுறைப்படுத்தினர். இந்த வேதங்களின் கதைப்படி அண்டத்தில் (யுனிவர்ஸ்) சொர்க்கம், மத்திய ஆகாயம், பூமி எனும் மூன்று மட்டுமே கொண்டதாம். ஒவ்வொன்றுக்கும் பதினொன்று எனும் வீதத்தில் மொத்தம் முப்பத்து மூன்று கடவுள்களாம். பின்னாளில்இது எப்படி 33 கோடியாக வளர்ந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை. இந்த 33 கடவுள்களில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பக்தர்கள். பக்தர்களுக்குள் ஏற்பட்ட போட்டி, பொறாமை, குழுச் சண்டைகள். இவற்றின் பாதிப்புகள் கடவுள்களின் மீதும் பிரதிபலித்த நிலை. இவையெல்லாம் ரிக்வேதப் பாடல்களில் காணக்கிடக்கின்றன.
எந்தக் கடவுளாக இருந்தாலும் அவை மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவையாம். அந்த மந்திரங்கள் பார்ப்பனர்களுக்குக் கட்டுப்பட்டவையாம். ரிக் வேதக் கடவுள்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது சோமதேவன். இதை வாழ்த்திப் பாடும் பாடல்கள் 120க்கும் மேல் இருக்கின்றன. அதிகமாகப் பாடப்பெற்ற தேவன்களில் இந்திரன், வருணனுக்கடுத்து சோமன் மூன்றாவது. சோமதேவன் என்பது சோமபானம்.
சோமக் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகைச் சாராயமே, சோமபானம்! இது அழியாத் தன்மையைத் தருமென்றும் இதைக் குடித்தால் ஒளியை நோக்கிக் கொண்டு செல்லும் என்றும் பாடல்கள் கூறுகின்றன. “சோம பானம் குடித்தோம், ஒளியில் நுழைந்தோம், தேவர்களைக் கண்டோம்’’ என்றே ரிக் வேத மண்டலம் 3 சூக்தம் 48இல் எழுதிவைத்துப் படிப்போரைக் குடிக்கத் தூண்டுகிறது. சோமன் பசுவைத் தருகிறான், குதிரையைத் தருகிறான், புத்திரனைக் கொடுக்கிறான். அவனே போரில் வெற்றியைத் தேடித் தருவான் என்றெல்லாம் சாராயத்தின் சக்தியை ரிக் வேதம் பாடுகிறது. (ரிக் வேத முதல் மண்டலம் சூக்தம் 91)
சோமபானம் தயாரிப்பதை ரிக்வேதம் விவரித்துக் கூறுகிறது. ‘ஸ்ஷ்ப’ எனப்படும் செடியைப் பறித்து இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில், கழுவிச் சுத்தப்படுத்த வேண்டும். இதை ஆஸ்வினம் என்கிறது வேதம். இரண்டாம் நாள் இரவிலும் நீரில் ஊற வைத்து மறுநாள் மதியம் எடுத்துக் கழுவ வேண்டும். இது ஸாஸ்வதம் என்கிறது வேதம். மூன்றாம் இரவிலும் ஊறவைத்து காலையில் எடுத்துச் சுத்தம் செய்ய வேண்டும். இது அய்ந்தரம் என்கிறது வேதம். (சோமச் செடியை முதல்நாள் ஒரு பசுவின் பாலைக் கொண்டும், இரண்டாம் நாள் இரு பசுக்களின் பாலைக் கொண்டும், மூன்றாம் நாள் மூன்று பசுக்களின் பாலைக் கொண்டும் சுத்தம் செய்ய வேண்டுமாம். தற்காலத்தில் ஹஷீஸ், கஞ்சா தயாரிப்பைப் போலப் போதைக்காக சோமச் செடியைப் பயன்படுத்தியுள்ளனர் ஆரியர்கள். அவர்கள் தான் தற்காலத்தில் ஒழுக்கசீலர்களாகக் காட்டிக் கொள்கின்றனர்.
அடுத்து ஆரியர்களின் போதைக்கு உதவியது சுராபானம். சுராபானம் தவிர வேறு எதையும் குடிக்கக் கூடாது எனப் பார்ப்பனர்களுக்குத் தடையே உண்டு. தானியங்களைப் பொடித்துக் கலக்கிப் புளிக்கவைத்துத் தயாரிக்கப்படும் மதுவே சுரா. அரிசியைப் புளிக்கவைத்து மது தயாரிக்கும் பழக்கம் இந்தியப் பழங்குடிகளிடம் இன்றளவும் உண்டு. அரிசியைப் புளிக்கவைத்து விஸ்கி போன்ற உயர்வகை மது தயாரிப்பது ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ளது.
இத்தகைய சுரா பானத்தை அருந்தியோர் சுரர் எனப்பட்டனர். இந்தப் பானத்தை அருந்த மறுத்தோரும் பார்ப்பனர் அருந்துவதைத் தடுத்தோரும்தான் “அசுரர்’’ என்றழைக்கப்பட்டனர். திராவிடர்களை அசுரர் என்றே பார்ப்பன இதிகாசங்கள் கூறும்.
சோம, சுரா போதைகளைப் போதித்த வேதம் யாகங்களைப் பற்றிக் கூறுவதைப் பார்த்தால் மிகவும் கீழ்த்தரமான, காட்டு விலங்காண்டிகளாகவே ஆரியப் பார்ப்பனர் இருந்துள்ளனர். அரசரின் அதிகாரப் பரவலுக்கும் ஆட்சிப் பிரதேசத்தை விரிவுபடுத்துவதற்கும் போருக்கு மாற்றாக வைத்த யாகம் அஸ்வமேதம். சுக்ல யஜுர் வேதம் இதனை விரிவாகக் கூறுகிறது. கறுப்பு நிறக் குதிரையை அவிழ்த்து விடுவார்கள். அது சுதந்தரமாகச் சஞ்சரிக்கும். மேயும், போர்வீரர்கள் நடந்தும், குதிரையிலும் கறுப்புக் குதிரையைப் பின் தொடர்வார்கள். யாராவது அதைப் பிடித்துக் கட்டிவிட்டால், சண்டை மூளும் அல்லது இரு நபர்களுக்கிடையே பலப்பரிட்சை நடக்கும். முடிவில் கறுப்புக் குதிரை கொண்டு வரப்படும்.
அழகான ஒரு வயதுக் குதிரையான அதனை அத்வர்யு, பிரம்மா, உத்காதா, ஹோத்ரு போன்ற புரோகிதர்கள் பின்தொடர்ந்து வருவர். மன்னனும் நானூறுக்கும் மேற்பட்ட இளம் பெண்களும் உடன் வருவர். யாகம் நடக்கும் இடத்திற்கான கிழக்கு வாசல் வழியாக மன்னனின் மனைவி வருவாள். வெட்டிக் கொல்லப்பட்ட கறுப்புக் குதிரையின் மீது தன் மனைவியைக் கணவனான மன்னனே படுக்க வைப்பான். இறந்த குதிரையுடன் அரசி உடலுறவு கொள்வாள். குதிரையின் குறியைத் தன் குறிக்குள் செலுத்திக் கிடப்பாள். மன்னன் பாடல்களைச் சொல்லிக் கொண்டு இருப்பான். பின்னர் புரோகிதர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே அரசியைப் பார்த்து ஆபாசமாகப் பாடுவார்கள். நானூறு பெண்களில் நூறு சத்திரியப் பெண்கள் இதற்குப் பதிலளித்துப் பாடுவார்கள். மற்றொரு புரோகிதனின் பாட்டுக்கு மற்றொரு குழு சூத்திரப் பெண்கள் நூறு பேர் பதில் பாட்டு பாடுவார்கள். இன்னொரு புரோகிதனுக்கு சத்திரியர்களின் ஆசை நாயகிகளாகிய நூறு பெண்களும் பதில் கூறுவார்கள். ஒரு புரோகிதனின் கிண்டல் பாட்டுக்கு நூறு இளவரசிகள் பதிலளித்துப் பாடுவார்கள். புரோகிதன் பாட்டும் சரி, பதில் பாடல்களும் சரி எல்லாமே ஆபாசத்தின் உச்சம். எழுதக் கூசும் சொற்கள். இதுதான் புனித வேதம்.
அசுவமேத யாகத்தைப் பொது ஆண்டு 300இல் சீலவர்மன் என்பான் நடத்தியதற்கு ஆதாரமான பொருள்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. 1958இல் இந்தியத் தொல்பொருள் அலுவலக இணை இயக்குநராக இருந்த டி.என்.ராமச்சந்திரன் கண்டுபிடித்துள்ளார். யாக மேடையைக் கட்டிய செங்கற்களில் சீலவர்மன் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதை இவர் தெரியப்படுத்தியுள்ளார்.
யாகத்தின் அடுத்த கட்டமாக பொன், வெள்ளி, வெண்கலத்தினால் செய்யப்பட்ட மூன்று கத்திகளால் அரசி குதிரையைத் துண்டு துண்டாக வெட்டுகிறாள். ரத்தம், கொழுப்பு முதலியவற்றைப் பிரித்தெடுத்துத் தேவதைகளுக்கு அர்ப்பணிக்கின்ற சடங்கைப் புரோகிதர்கள் செய்கின்றனர். பிறகு மன்னன் தலையில் பொன், காளை மாட்டுத் தோலை வைத்து சடங்குகளைச் செய்கின்றனர். மூன்று நாள்கள் சடங்கு செய்த பிறகுதான் மன்னன் குளிக்கிறான். இந்த யாகத்தை தசரதன் மகன் ராமன் செய்தான் என்கிறது ராமாயணம். இவனது யாகக் குதிரையைப் பிடித்துக் கட்டிய இரு சிறுவர்கள்தான் லவ, குசன்! சீதையின் மகன்கள். ராமனின் துரோகக் கதையை அம்பலப்படுத்தியவர்கள் என்பது வால்மீகி ராமாயணம். நம் காலத்தில் அசுவமேதம் செய்தவன் ஜெயசிம்மன் எனும் ராஜபுதன மன்னன். ஆம், ஜெய்ப்பூர் நகரைக் கட்டிய அதே ஜெயசிம்மன் (பொது ஆண்டு 1734_35)தான்.
பெண்ணையும், ஆணையும் அம்மண கோலத்தில் பந்தலின் மேல் உடலுறவு கொள்ள வைத்து, சம்போகத்தின் போது வழியும் சுக்கில சுரோகிதச் சொட்டுகள் நேராக யாக குண்டத்தில் விழுவதுபோல் அமைத்துப் புரோகிதன் கீழே அமர்வது புண்டரீக யாகம் எனப்படும். அய்காஹி மகாப்ரதம் எனும் இந்த யாகம் சென்ற நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் பார்ப்பனர்கள் நடத்தச் செய்தனர்.
பசுவைக் கொன்று பசுவின் நெய்யை முன்னோர்க்கு அவிஸ் ஆக அளிப்பது கோமேதகம் எனப்படும் யாகம். யாகம் முடிந்த பின் பசு மாட்டிறைச்சியை பங்கு பெற்றவர்கள் அனைவரும் உண்பர்.
புருஷமேதம் என்பது மனிதர்களைக் கொன்று நடத்தப்பட்ட யாகம். இந்த வகைகளை சதபத பிராமணம் விவரிக்கிறது. சுக்லயஜுர் வேத சம்ஹிதை, க்ருஷ்ண யஜுர் வேதத்தின் தைத்ரிய பிராமணம், ரிக்வேத அய்த்ரேய பிராமணம் போன்றவற்றில் புருஷமேத யாகம் பற்றிய விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இந்த யாகத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன் ஆசைப்பட்டதை யெல்லாம் அனுபவிப்பான். யாக நாளன்று ராஜபத்தினி அசுவமேதத்தில் எவ்வாறு குதிரையோடு உறவு கொண்டாளோ அதே மாதிரி இம்மனிதனுடன் உறவு கொள்வாள்.
பிறகு அவன் கழுத்தை அறுத்துக் கொன்றுவிடுவர். இது ஏதோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை இருந்த காட்டுவிலங்காண்டித்தனம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. பொது ஆண்டு 1841இல் வங்காளத்திலும் தமிழ்நாட்டிலும் 240 மனிதர்களை புருஷமேதத்தில் கொன்று தள்ளியிருக்கின்றனர் என்பதை கேம்பிரிட்ஜ் ஷார்ட் ஹிஸ்டரி _ பாகம் 3 _ பக்கம் 564இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசித்திரமான யாகம் ஒன்றும் உண்டு. தன்னைத்தானே பலியாக்கிச் செய்யும் யாகம் ஸர்வமேதம் என ரிக்வேதம் கூறுகிறது. சொர்க்கத்தில் இடம் பிடிப்பதற்காகத் தன்னையே பலியாக்கிக் கொள்வதாம். சொர்க்கம் என்பதே மதங்களின் பித்தலாட்டக் கற்பனை. இதனை நம்பிச் சாகிறார்கள் என்றால்... மதம் என்ன பாடுபடுத்துகிறது பாருங்கள்! ரிக் வேதம் மண்டலம் 10 சூக்தம் 31இல் யாகம் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
ஆடுகளுடன் உடல் உறவு கொள்வதையும், காளை மாட்டுடன் உடல் உறவு கொள்வதையும் ரிக் வேதம் பரிந்துரைப்பதாக  ‘பழமையான பாரதம்’ எனும் நூலில் மலையாள அறிஞர் ஏ.அய்யப்பன் குறித்துள்ளார்.
இப்பழக்கம் இருந்ததால்தான் பிரிட்டிஷார் எழுதித் தந்து இன்றளவும் இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் இந்தியன் பீனல்கோடு எனும் சட்டத்தில் விலங்குப் புணர்ச்சிக்கு என்ன தண்டனை என்று குறிக்கப்பட்டுள்ளது. உடன் பிறந்த அண்ணன் தங்கைக்குள்ளோ, அக்கா தம்பிக்குள்ளோ உடல் உறவு கொள்ளும் ஒழுங்கீனத்தை ரிக் வேதம் பரிந்துரைக்கிறது. எடுத்துக்காட்டாக, எமனின் சகோதரி எமனைத் தன்னுடன் உடலுறவு கொள்ள அழைக்கும் உரையாடல் “இந்தியாவின் ஆத்மா’’ எனும் நூலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. தந்தை தன் மகளைக் கர்ப்பம் அடையச் செய்த கேடு அதர்வ வேதம் கூறுகிறது. குடும்பம், சமூகம், உறவுகள் போன்றவை நாகரிகமடையாத கால வேதங்களை இன்றைக்கும் கட்டி அழலாமா? வேதகாலப் பெருமைகளைப் பேசும் பேர்வழிகளை மனிதர் எனக் கொள்ளலாமா? மனிதகுல எண்ணிக்கையில் சரி பாதி அளவுக்கு இருக்கும் பெண்களுக்கு வேதகாலத்தில் மரியாதையே இல்லாத நிலை, சாதாரண அசையும் பொருட்கள் போலக் கருதப்பட்ட நிலை. பிள்ளை பெற்றுத் தரும் கருவியாக மட்டுமே கருதப்பட்ட நிலை. பெண்கள் அறிவில் குறையுள்ளவர்கள். ஆதலால் அவர்களைப் படிக்க வைக்கக் கூடாது என்றே ரிக்வேதம் மண்டலம் 8 சூக்தம் 33 அறிவிக்கிறது. வேதகால அறிவு இப்பிரபஞ்சம் சொர்க்கம், மத்திய ஆகாயம், பூமி எனும் மூன்றடுக்கு கொண்டது என்கிறது.
இந்திய விடுதலைக்காக வெள்ளையர் மீது வெடிகுண்டு வீசிய வீரர் வங்காளத்து அரவிந்தகோஷ். பிரிட்டிஷாரின் காவல்துறை இவரைக் கைது செய்யத் தேடியதும் பயந்துபோய் பதுங்கிப் புதுச்சேரியில் தங்கித் தப்பித்த மகாவீரர் இவர்! புதுச்சேரியில் இந்துமதச் சாமியார் வேடம் போட்டு வேதப் பெருமைகளைப் பேசிய ஆள். சாதாரண மக்கள் புரிந்துகொள்ள முடியாத அர்த்தங்கள் வேதங்களில் மறை பொருளாக வைக்கப்பட்டுள்ளன என்கிற அபார கருத்தை வெளியிட்ட மேதாவி இவர். அக்கருத்துகளை இவர் புரிந்துகொண்டார் என்பதற்கும் ஆதாரமில்லை. பின் எப்படி கூறினார்? சும்மா பேசுவதுதானே சாமியார்களின் வேலை!
“வேதமென்றும் வேள்வியென்றும்
    விளம்புகின்ற கூட்டந்தனை
விறகொடித்து வருவதுபோல்
    விலாஎலும்பு ஒடித்து வருக’’
என கவிஞர்_கலைஞர் கருணாநிதி 1945இல் எழுதியது போன்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்!
மாறாக, வேதங்கள் பழம்பெரும் இலக்கியங்கள் எனக் கருதிக் கொண்ட பிரிட்டிஷார் பார்ப்பனரைப் பக்கத்தில் இருத்திக் கொண்டனர். பதவிகளில் அமர்த்திப் பயன்படுத்திக் கொண்டனர். ஆயிரம் ஆண்டுக்காலம் படிக்காமல் இருந்துவிட்ட தமிழர் தூர நின்றனர். வந்தேறிய ஆரிய இனத்தவர் வேளாண்மையும் தெரியாததால் உழைத்துப் பிழைக்க வழியில்லாது கையில் தர்ப்பைப் புல்லைப் பிடித்துக் கொண்டு யாகம் என ஏமாற்றி யோகம் பெற்றனர். பார்ப்பனர் அல்லாதார் பெருமூச்சு விட்டனர். யஜனம், யாஜனம் எனும் இரண்டுதான் பார்ப்பனரின் தொழில்கள். யாகம் செய்வது, யாகம் செய்விப்பது என இரண்டே தொழில்கள்தான். அவற்றைப் பொழுது போக்குக்காகச் செய்து கொண்டே, அரசுப் பதவிகளில் அமர்ந்துகொண்டு விட்டனர்.
-உண்மை இதழ், 16-31.12.17