வெள்ளி, 7 டிசம்பர், 2018

இந்து மத ஆராய்ச்சி - பெரியார்

( #95வயது_கிழவர்_சாவதற்கு_ஒருவாரம் #முன்பு_இப்படி_தீப்பொறி_பறக்க_பேச #முடியுமெனில்_அவர்தாம்பெரியார்! )

இந்த ஆகமம்ணா என்ன?
இதுக்கு ஆரு தலைவன்?
எப்ப எழுதினது?
எவன் சொன்னவன்?

நாதியே இல்லே..? நம்பவேண்டியது, அவன் சொல்றத!
என்னடாண்ணா ஆகமம்?
- பூந்துப் பாத்தா,  
இந்துக்களுடைய ஆகமம்ணான்.
இந்துண்ணா என்னடான்னா...
ஒன்னுமில்லே!

இந்து..! இந்துண்ணா என்னா?
யாரக் குறிப்பிடுது அது?
என்ன ஆதாரம் அதுக்கு?
அதுக்கு தலைவன் ஆரு?
அதுக்கு காலம் என்ன?
எவனாவது சொல்ல முடியுமா?

எப்படா ஆச்சு?
அந்த யுகம், இந்த யுகம்? அதிலே!
எவன்டா எழுதினான்?
நாரதன், வசிட்டன், அந்த யக்ஞவல்கியன்
வெங்காயம் இந்தப் பயல்களுக்கு
ஆயுசு என்னடா?
பத்து லட்சம் வருஷம், எட்டு லட்சம் வருஷம், பதினஞ்சி லட்சம் வருஷம்...

அதிலே- இன்னிக்கு சட்டத்திலே...
நமக்கு தீர்ப்பு! இது அரசாங்கத்தோட யோக்கித...இப்ப நமக்கு சட்டப்படி தீர்ப்புண்ணா - அந்த சட்டத்துல உபயோகப்படுத்தற வார்த்தைகள், உபயோகப்படுத்தற ஆள்கள் யாருண்ணா ஒருத்தனுக்கும் தெரியாது.

போன யுகம், அதுக்கு முந்தின யுகம், அவன் ஆரு?
அவன்- நாரதன், அவன்- வசிட்டன், அவன்- யக்ஞன்!
அவன் இவன்கள்லாம் இருந்திருப்பானா?
எங்கே இருந்தான்?
இவன்க இருக்கிறது பத்துயுகம், எட்டுயுகம், பதினஞ்சியுகம் இருக்கான்க....
எங்கே இருக்கறான்?
மேல்லோகத்தில இருக்கறான்!
இங்க வந்து இந்த வேலையெல்லாம்
பண்ணினான்ணா...
எந்த வழியில் வந்தான்?
எந்த வழியில் போனான்?
எந்த ஊருல இருந்தான்?

ஏன் சொல்றேன்னா...நாதியில்ல!
பார்ப்பான் எதச் சொல்றானோ,
அதுதான் கடவுள்.
அதுதான் சட்டம்.
அதன் படிக்குத்தான் நடக்கணும்.
நடக்க வச்சிட்டான்.
அந்த அளவுள வந்துட்டது, இப்போ?
அதத்தான் நாம இப்போ சுயராச்சியம்கறோம்.
இந்த சுதந்திரம்கறதுக்கு
யோக்கியதை என்ன?

( 17/12/1973 அன்று குடந்தையில்
தந்தை பெரியார் பேசியது )
நன்றி; Viduthalaiarasu Viduthalaiarasu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக