ஆரியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆரியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 செப்டம்பர், 2019

இதுதான் ஆரியர் கலாச்சாரம்



இந்துமதம் தான் ஆத்மார்த்த அரங்கம்; பாரதக் கலாச்சாரத்தின் ஊற்று என்றெல் லாம் கதையளக்கிறார்கள் பார்ப்பனர்கள்.

அவர்களது புராணங்களும் அதில் வரும் தேவர்களும் கடவுள்களும் எவ் வளவு ஆபாசத்தில் நெளியும் புழுக்களாக இருக்கின்றனர் என்பதை அவாளது புராணங்களும் இதிகாசங்களும் கூறுவதை அப்படியே கீழே தருகிறோம்.

யாகத்திலடிக்கும் யோகம்

அஸ்வமேதம், அஜமேதம் போன்ற யாகங்களில் யாககர்த்தாவின் பத்தினியை யாக மிருகத்துடன் புணர வைக்கும் வேலையை யாக கர்த்தாவும் யாகப் புரோகி தர்களும் சேர்ந்து செய்வர்.

பன்றியுடன் சேர்ந்த ...

பூமியை பாய்போலச்சுருட்டிக்கொண்டு கடலில் போய் ஓளித்த இரண்யாஷனைப் பன்றி வேடத்தில் சென்று விஷ்ணு கொல்ல, இப்பன்றியைக்கண்டு பூதேவி மோகித்துக் கலவி செய்ய இதன் பலனாக நரகாசுரன் பிறந்தான்

பிரம ‘லிங்க’ லீலை

பிரம்மன் சரஸ்வதியைப் படைத்தான் அவளழகைக் கண்டு மோகித்து, அவள் பயந்தோடியும் விடாமல் அவளைப் புணர்ந்து தன் மனைவியாக்கிக் கொண் டான், தான் படைத்த மகளையே இவ்வாறு மனைவியாக்கிக் கொண்டதைப் பரிகசித்த முனிவர்களாகிய மரீச புத்திரர் 6 பேரையும் சினந்து, அசுரர்களாகுமாறு சபித்தான். இதே போன்று இந்திரன் வேண்டுகோளின் மீது திலோத்தமையைப் படைத்து அவளையும் மோகித்துக் கூடினான்.

உறிஞ்சும் “சிரிஞ்” (Syringe)

பிரம்மன் இதே போன்று தாமரை மலரிலிருந்து பத்மை என்ற பெண்ணைப் படைத்து அவளைப் புணர முயல அவள் எவ்வளவோ கெஞ்சியும் விடாமல் அவளைப் பலவந்தமாகக் கற்பழிக்க அவள் அதனால் கருக்கொள்ள தேவர்கள் இதை யறிந்து நையாண்டி செய்ய இதைச்ச கிக்காத பிரம்மன் மீண்டும் அவளைப் புணர்ந்து அவள் கருவிலிருந்த தன் விந்துவைத்தான் ஆண்குறி மூலம் உறிஞ்சி இழுத்து விட்டான்

பரகதியல்ல - ஈனகதி!

(தாயை மகன் புணர்ந்தாலும் முக்தி நிச்சயம் என்பதன் மூலம் தாயைப் புணர்பவர்கள்  - ஈன சாதிப் பார்ப்பனர்கள்)

புராணத் தகவல்

பெற்ற தாய் மீது மோகங்கொண்டு அதற்குப் பாதகமாயிருக்கும் தந்தையைக் கொன்று தாயுடன் கலவி செய்து இன்ப வாழ்வு நடத்திய ஒரு பார்ப்பன பையனுக்குப் பரமசிவன் முக்தியளித்ததாகத் திருவிளை யாடல் புராணம் கூறுகிறது.

(பிறர் மனைவிகளுடன் கலவி செய்து அடையும் இன்பமே இன்பம்! இது தான் பார்ப்பனரின் ஒழுக்கம்)

அழகே! ஆபத்தே!!

தாருகா வனத்து ரிஷி பத்தினிகள் அழகிகள் என்பதற்காகப் பரமசிவன் அவர்களை மயக்கிப் புணர்ந்து அவர்கள் கற்பை அழித்தான்.

தாத்தா கூத்து

பிரமனோ தன் பேத்தியாகிய தாட்சா யிணியின் அழகைக் கண்டு மோகித்து வீர்யத்தை விட்டான்.

பரமசிவன் மனைவியாகிய பார்வதி தேவி மீது பிரமன் காமுற்று பரமசிவனைப் போல் 5 தலைகளுடன் சென்று அவளை அணைத்தான். கவுரி கல்யாணத்தில் அவள் தொடை அழகைக் கண்டு காமுற்று விந்தை விட்டான் . அசுவமேத யாகம் செய்யத் தொடங்கி அதற்கு வந்திருந்த தேவ பத்தினிகளைக்கண்டு காமுற்று வீர்யம் விட்டான். விந்தை விட்டனர்; ஆனால் நொந்து கெடவில்லை

இந்திர சபையில் ஊர்வசி நடனமாட பிரமன் அவளைப் பார்த்து மோகித்து வீர்யத்தை வெளியே விட்டான்.

துரோணரின் மனைவி கிருபியின் அழகினை அறிந்த பரமசிவன் அவள் மீது காம வெறிகொண்டு அவளை நிர்வாணமாக நிற்கவைத்துப் பார்த்து வீர்யத்தை விட, அதன் பலனாக அஸ்வத் தாமன் பிறந்தான்.அபலை அகலிகை?

கௌதம முனிவர் மனைவி அகலிகை அழகி எனக் கேள்விப்பட்ட இந்திரன் இரவு நடுசாமத்தில் முனிவரை ஏய்த்து வெளியேறச்செய்து, அம்முனிவர் போல் இந்திரன் வேடம் பூண்டு, அகலிகையை புணர்ந்தான். இதேபோன்று அவரவரின் கணவர்களைப் போன்று நடித்து இந்திரத் துய்மன் மனைவியையும், தேவசன்மன் மனைவியையும், கவி முனிவரின் மனை வியையும், பாரிஷதன் மனைவியையும் கற்பழித்தான்

அக்னிப் பிரவேசம்

அக்னிபகவான் சப்தரிஷிகளின் யாகத் திற்குச் சென்று அந்த ரிஷிகளின் மனை விகள் மீது மையல் கொண்டான், சுதரிசனை என்பவளைப் பலாத்காரத்தினால் மணந்தான், சலந்திரன் மனைவி விருந்தை மீது மகாவிஷ்ணு மோகங் கொண்டு சலந்திரனைச் சூதால் கொன்று அவனைப் போன்று வேடம் பூண்டு விருந்தையைக் கற்பழித்தான்.



அனுசூயாவை அனுபவிக்க எண்ணி ...

அக்னி பகவானின் மருமகளை எமதர்ம பகவான் கண்டு மோகித்து அவள் கணவன் இல்லாத சமயத்தில் அவளைப் புணர்ந்தான். அனுசூயை அழகி என்று கேள்விப்பட்டு அவளைக் கற்பழிக்கவென்று பிரம்மா, விஷ்ணு , சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் புறப்பட்டு சென்று அவளை நிர்வாண மாக்கினர்.

காமக் கட்டாரிகள்

ஆண்கள் மட்டுமா - பெண்களும் ஆணழகில் ஈடுபட்டு கட்டித் தழுவி நீண்ட புணர்ச்சி செய்து தங்கள் காமத்தைத் தீர்த்துக்கொள்ளும் காமக் கட்டாரிகளாக இருக்கிறார்கள்.

ஆசை ... அரை டஜனுக்கு!

திரவுபதி மகாபதிவிரதைகளுள் ஒருத்தி இவளுக்கு 5 கணவர்கள் இவர்கள் போதா தென்று 6வதாகக் கர்ணன் என்பவனையும் மோகித்தாள்.

பொன் கிடைத்தாலும்

கிடைக்காத புதன் கதை

மகா பதிவிரதைகளுள் மற்றொருத்தி தாரை. இவள் தேவகுரு பிரகஸ்பதியின் மனைவி. இவள் தன் கணவன் ஊரில் இல்லாத சமயத்தில் தன் கணவரிடம் படிக்க வந்திருந்த சந்திரன் என்னும் மாணவனை மோகித்து அவனுடன் கலவி செய்து நீண்ட நாள் வரை அவனுக்கு ஆசை நாயகியா யிருந்து புதன் என்ற குழந்தையைப் பெற்றுக்கொண்டு மீண்டும் பிரகஸ்பதியின் மனைவியானாள்.

‘டூப்’ ஆக்ட்(Toop act)

கவி முனிவர் மனைவி முகுந்தைக்கு ருக்மாங்கதன் மீது மோகம் வந்தது. அவனோ இவளைச்சேர மறுத்து விட்டான் அவளுக்கு ருக்மாங்கதன் மீது மட்டற்ற மையல் ஏற்பட்டு அதே விசாரத்திலிருக் கையில் இதையறிந்த இந்திரன் ருக்மாங்கதன் போல வேடம் பூண்டு அவளைப் புணர்ந்து மகிழ்வித்தான் (வாலிபத்தில் 60,000 பெண்களைப் புணர்ந் தும் காமவேகம் தணியாத - கண்ணன்தான் கடவுளா? ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவர். இவன் சிறு பிள்ளையிலே வெண்ணெய் திருடி மத்தாலடிபட்டவன். வளர்ந்து பருவ வயதடைந்தவுடன் பெண் சாயல் எந்த வீட்டில் காணப்பட்டாலும் சரி உடனே திருட்டுத் தனமாக அப் பெண்ணைக் கூடியவர் இவ்வாறாகச் சுமார் 60,000 பெண்களைத் திருட்டுத்தனமாக - அவர்களுடைய  கணவர்களுமறியாமல் - கலவி செய்தவர்.

மதுவுக்கு விலக்கில்லை

தேவர்கள் சுரா-மேகா என்ற பெயரில் உயர்ந்த ரக கள்ளு குடித்தார்கள். தேவர்கள் சுராபானம் - சோமபானம் செய்தனர் (ஆதாரம்: இதிகாசங்கள் - புராணங்கள்)

சூதாடுவார்கள் - (இவர்களைக் கொண்டு தான் பார்ப்பனர்கள் ஒழுக்கம், நீதி புகட்டுகிறார்கள்)

சூதாடிகள்

கிருஷ்ண பரமாத்மாவின் ஆதரவு பெற்றவர்களும் இந்திராதி தேவர்களின் புதல்வர்களுமான தர்மராகியோர் தங்களின் மனைவியுட்பட எல்லாவற் றையும் சூதாட்டத்தில் வைத்துத் தோற்று, அதன் பலனாக, சூதாட்டத்தில் தோற்கப் பட்ட பொருளாகிய திரவுபதியை இராஜ சபையில் வைத்துச் சேலையை அவிழ்த்து மானபங்கம் செய்தனர் சூதாட்டத்தில் வென்றவர்கள்.

(பருவமடையாத சின்னஞ்சிறு சிறுமி களைக்கூட விடாமல் புணருவதா!)

கொலையைக் கற்பிக்கும் சம்பவங்கள் பல - காமவெறியால் விருந்தையின் கணவனை விஷ்ணு கொன்றான்.

பால்ய புணருத்தாரணம்

தக்கபருவமடையாத - ருதுவாகாத--மச்சகந்தி என்னும் பெண்ணைப் பட்டப்பகலில் நடு ஆற்றில் படகில் பராசரமுனி  காமுற்றுக் கற்பழித்து விட்டான்.

இதே போன்று குந்தி பருவமடையாத சிறுமியாயிருக்கையில் சூரியன் காமுற்றுக் கற்பழித்து விட்டான்.

இவ்வாறாக ஆணை ஆண் புணர்வதும் - மிருகப்புணர்ச்சி செய்வதும், மகளைத் தந்தை புணர்வதும் பெற்ற தாயைத் தனயன் புணர்வதும், பிறர் மனைவிகள் மீது மோகங்கொண்டு கற்பழிப்பதும், பிற புருஷர் மீது காமுற்றுக் கூடுவதும், திருட்டு மதுவருந்துதல், சூதாடுதல், கொலை செய்தல், பருவமெய்தாக் கன்னிப்பெண் களைக் கற்பழித்தல், அறிவுக்குப்பொருந் தாத விவாதங்களைக் கூறுதல் ஆகிய திருவிளையாடல்கள். இன்னும் ஆரியர் களுடைய புராண - இதிகாச சாஸ்திரங்களில் மலிந்து கிடப்பதையே நாம் சுட்டிக்காட்டு கிறோம். அந்த நு£ல்களை இன்னும் பார்ப்பனர்கள் தெய்வீக நூல்கள் என்றும் அந்நூல்களின் மொழியாகிய சமஸ் கிருதமே உயர்ந்த மொழி என்றும் கூறு வதை தமிழர்கள் நன்கு அறிந்திருக்கின்றனர்.

எனவே இந்த ஆபாசங்களையெல்லாம் கடவுள் பெயராலும் - மதத்தின் பெயராலும் சாஸ்திரங்களின்  பெயராலும் - நம் மக்களிடையே பரப்பி, தமிழர்கள் என்றும் மடமைப் படுகுழியிலிருந்து மீளா வண்ணம் தடுத்து வைக்கும் - வேலையைப் பார்ப்பனர், சனாதன வெறியர்கள் இன்றும் - செய்து கொண்டுதான் வருகின்றனர்.

- ‘விடுதலை’ (26.9.1971)

- விடுதலை ஞாயிறு மலர், 3. 8 .19

செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

ஆரிய விவாகம் பற்றி அண்ணல் அம்பேத்கர் என்ன சொல்லுகிறார்?



(டாக்டர் பி.ஆர். அம் பேத்கர் எழுதிய ‘காங்கிரசும் காந்தியும் தீண்டத்தகாதவர் களுக்குச் செய்ததென்ன?’ என்ற நூலின் பக்கம். 205-206).

The Aryans took pride if his wife was in the keeping of a Deva and was impregnated by him. The mention is in the Mahabharata and in the Harivamsha of sons born to Arya women from Indra, Yama, Nasatya, Agni, Vayu and other Devas is so frequent that one is astounded to note the scale on which such illicit intercourse between the Devas and the Arya women was going on.
In course of time the relations between the Devas and the Aryans became stabilized and appears to have taken the form of feudalism. The Devas exacted two boons from the Aryans.
The first boon was the Yajna which were periodic feasts given by the Aryans to the Devas in return for the protection of the Devas in their fight against the Rakshasas.
The second boon claimed by the Devas against the Aryans was the prior right to enjoy Aryan woman. This was systematized at a very early date. There is a mention of it in the Rig- Veda in X. 85.40. According to it - the first right over an Arya female was that of Soma, second of Gandharva, third of  Agni and lastly of the Aryan. Every Aryan woman was hypothecated to some Deva who had a right to enjoy her first on becoming puber. 
(Dr. Babasaheb Ambedkar: Writings and Speeches
- Vol. IV, p. 302)

இதன் தமிழாக்கம் வருமாறு:

“ஆரியர்கள், தங்கள் மனைவியரைத் தேவர்கள் வைத்துக் கொள்வதையும், தேவர்களால் கர்ப்பமாக்கப் படுவதையும் தங்களுக்குக் கிடைத்த கவுரவமாகக் கருதினார்கள். இந்திரன், யமன், நசத்யா(Nasatya) அக்னி, வாயு முதலிய தேவர்கள் மூலம் ஆரியப் பெண்கள் பிள்ளைகளைப் பெற்றனர் என்ற குறிப்பை மகாபாரதத்திலும் ஹரிவம்சத்திலும் காணலாம்.

தேவர்களுக்கும் ஆரியப் பெண்களுக்குமிடையே முறைகேடான உடலுறவு அடிக்கடி நிகழ்ந்தது. நாளடைவில் தேவர்களுக்கும், ஆரியர்களுக்கும் இடையே உறவு வலுப்பட்டது. அது நிலப்பிரபுத்துவமாக வடிவம் பெற்றது. தேவர்கள் ஆரியர்களிடமிருந்து இரண்டு வரங்களைப் பெற்றார்கள்.

ராட்சசர்களுக்கு எதிராகத் தேவர்கள் போர்செய்து, ஆரியர்களைப் பாதுகாத்ததற்காக, ஆரியர்கள் தேவர் களுக்கு அவ்வப்போது யக்ஞம் நடத்தி விருந்து படைக்க வேண்டும் என்பது முதல் வரம்.

ஆரியப் பெண்களை அனுபவிக்கும் முதல் உரிமை தங்களுக்கு வேண்டும் என்று தேவர்கள் ஆரியர்களைக் கேட்டார்கள். இது இரண்டாவது வரம். மிகப் பழங்காலத்திலேயே இது நடைமுறைக்கு வந்துவிட்டது. ரிக்வேதத்தில் (X-85-40) இதுபற்றிய குறிப்பு காணப்படுகிறது.

அதன்படி ஓர் ஆரியப் பெண்ணை அனுபவிக்கும் முதல் உரிமை சோமனுக்கு; இரண்டாவது உரிமை கந்தர் வனுக்கு; மூன்றாவது அக்கினிக்கு; கடைசி உரிமை ஆரி யனுக்கு. ஒவ்வொரு ஆரியப் பெண்ணும் பூப்படைந்தவுடன் யாராவது ஒரு தேவனிடம் அவன் அனுபவிப்பதற்காக ஒப்படைக்கப்படுவாள்”.

(நூல்: டாக்டர் அம்பேத்கர் எழுத்துக்களும் பச்சுக்களும்- தொகுதி - 4 பக்கம் 302)

மேற்கண்டவாறு அம்பேத்கர் அவர்கள் குறித்துள்ள மைக்கு ஏற்ப, ஆரியப் பெண்களுக்கு வழமையாக இருந்ததை மந்திரங்களாக்கி, இதரர்களுக்கு குறிப்பாக, “சூத்திரர்களுக்கும்“ திருமண காலத்தில் புரோகிதர் கூறுகிறார்.

“சோம ப்ரதமோ

விவிதே கந்தர்வோ

விவித உத்தர:

த்ருத்யோ அக்நிஷ்டேபதி

துரியஸ்தே மனுஷ்யஜா:”

ஆரியப் பண்பாடும் ஒழுக்கமும் இவ்வளவு மோசமாக இருப்பதைத் தமிழர்களோ தன்மானமுள்ள எவருமோ ஏற்க முடியுமா? அதை ஒழிப்பதற்கே சுயமரியாதைத் திருமணத்தைத் தந்தை பெரியார் அவர்கள் தோற்றுவித்தார்!

(கி.வீரமணி அவர்கள் எழுதிய “சுயமரியாதைத் திருமணம் - தத்துவமும், வரலாறும் “- எனும் நூலிலிருந்து)

-  விடுதலை நாளேடு, 6.2.19

வியாழன், 26 ஏப்ரல், 2018

ஆபாசம் + அருவருப்பே = ஆரியம்

குருமூர்த்தியாரே ஓடாதே நில்! ஆபாசம் + அருவருப்பே = ஆரியம்


*மின்சாரம்

ஒழுக்கத்தைப் பற்றியும், பாலியல் வன்புணர்வு குறித்தும் இந்துத்துவாவாதிகளா பேசுவது?

உங்கள் வேதங்களும், சாஸ்திரங்களும், இதிகாசங்களும், புராணங்களும், ஆபாசக் கழிசடைச் சாக்கடைகள் அல்லாமல் வேறு என்னவாம்? உங்கள் கடவுள்களின் யோக்கியதை தான் என்ன?
கற்பழிக்காத கடவுள் உண்டா என்று கலைஞர் பெருமான் ஒரு முறை விடுத்த வினாவுக்கு இதுவரை விடையுண்டா?

"அபுத்ரா குர்வனுஜ்ஞாதாதேவரம்

புத்ரகாம்யயா:

ஸபிண்டம்வா ஸகோத்ரம்

வாக்ருதாப்யக்தம் ருதரவிராத்" (யாக்ஞவல்கியர்)

பொருள்: தனது நாயகன் இறந்துவிட்டால் அல்லது புத்திரனை உண்டு பண்ணத் தகுதியில்லாவிட்டால், புத்திரப் பேற்றை விரும்புகிற ஸ்திரீயானவள் பெரியோர்களின் அனுமதியைப் பெற்று ருதுகாலத்தில் உடம்பில் நெய்யைப் பூசித் தன் கணவனது சகோதரன் அல்லது அந்தக் குலத்தில் யாரையேனும் புணர்ந்து கொள்ளலாம். இவ்விதம் "அசர்ப் பஸம்பவாத" கருத்தரிக்கிறவரைக்கும் செய்து கொள்ளலாம். இதனால், கற்புக்கு அழிவில்லையென்றும், ஸ்மிருதி கூறுகின்றது.

இதுதான் குருமூர்த்திகள் கூறும் கற்பின் இலட்சணமா?

இன்னும் உண்டு, இன்னும் உண்டு இவாளின் ஆபாசப் பெருங்கடல்.

புத்திரகாமேஷ்டியாகம் என்ற ஒன்றை நடத்துவார்களே ஆரியர்கள் - தசரதன்கூட அதை நடத்திதான் இராமன் உள்ளிட்ட புத்திரர்களைப் பெற்றானாம்!

முற்காலங்களில் யஜமானனுக்கும், (யாகஞ் செய்வோ னுக்கு) பலபேர் பத்தினிகள் இருந்தனர். அசுவமேத யாகம் செய்யும்போது, பத்தினிகள் எல்லோரும் கைகளில் பானேஜனம் வைத்துக் கொண்டு குதிரையின் பக்கத்தில் வருகிறார்கள். பிறகு கீழ்க் குறித்திருக்கிற மந்திரத்தைச் சொல்லி, ஒன்பதுதரம் குதிரையைச் சுற்றி வரல் வேண்டும்.

அதன் விவரம்:- மந்திரத்தின் முதற்பகுதி சொன்னவுடன், ஒருதரம் வலமாகவும், பிறகு ஒன்றும் சொல்லாமல் இரண்டு தடவைகளும் இடமாகச் சுற்றிவரல் வேண்டும். நான்காவது முறை மந்திரத்தில் இரண்டாவது பகுதியைச் சொல்லிக் கொண்டு ஒருதரமும், மவுனமாக இரண்டு தடவைகளும் இடமாகச் சுற்றிவரல் வேண்டும். அடுத்த படியாக மந்திரத் தின் மூன்றாம் பகுதியைச் சொல்லிக் கொண்டு ஒருதரம் மவுனமாகவும், பின் இரண்டு தரமும் வலம் வரல் வேண்டும். இதற்கு மந்திரம்:-

1. "கணானாம் த்வா: கணபதிம் ஹவாமஹே" (வஸோமம்)

2. "பரியாணாம் த்வா: ப்ரியபதிம் ஹவாமஹே" (வஸோமம்)

3. "நிதீனாம் த்வா நிதிபதிம் ஹவாமஹே" (வஸோமம)

பொருள்: ஓ குதிரையே! கணங்களின் தலைவனும், விருப்பத்தை நிறைவேற்றுந் தலைவனும், பொருட்களின் தலைவனுமாகிய உன்னை அழைக்கிறோம்.. நீ எனது பர்த்தாவாக (கணவனாக) இருக்கவேண்டும்.

(மனைவிகளுள் தலைவியை மஹிஷியென்பர்; அவளுக்குத்தான் குதிரை நாயகனாக வரவேண்டுமாம்) பிறகு, பானேஜனத்தால் யஜமானனும், பத்தினிகளும் பிராண சோதனம் (அங்கங்களைத் தொடுதல்) செய்யக் கடவர். பிறகு மஹிஷியானவள் குதிரையை நெருங்கி, அதனுடன் சேர்ந்து படுத்துக்கொண்டு கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

"ஆஹமஜானி கர்ப்பத மாத்வ மஜாஸி கர்ப்பதம்"

பொருள்: ஓ குதிரையே! கர்ப்பத்தை உண்டு பண்ணுகிற வீரியத்தை இழுத்து யோனியில் க்ஷேபிக்கிறேன் (க்ஷேபித் தல் - இடுதல்) அதைப்போல் நீயும் செய்யவேண்டும். இம்மந்திரம் சொல்லி முடிந்ததும், ஒருதுணியைப் போட்டு குதிரையையும், மஹிஷியையும் மூடிவிட்டு அத்வர்யு சொல்லவேண்டிய மந்திரம்.

2. "ஸ்வர்க்கே லோகே ப்ரோணு வாதாம்"

பொருள்: ஓ குதிரையே! மஹிஷியே! நீவிரிருவரும் இந்த யாக பூமியில் இவ்வுடையினால் உடல் முழுவதும் மறைத்துக் கொள்ளுங்கள்.
இதன் பின்னர் மஹிஷி சொல்ல வேண்டிய மந்திரம்:

"வருஷா வாஹி ரேதோதைரெ தோ ததாது"

பொருள்: சுக்கிலத்தைத் தன்னுள் வைத்துக் கொண்டி ருக்கிற குதிரை, அதை என்னிடத்தில் வைக்கட்டும். இதன் பிறகு யஜமானன் குதிரையும், பத்தினியும் படுத்திருக்கும் இடத்திற்குச் சென்று குதிரையைத் தொட்டுக்கொண்டு கீழ்க்குறித்த மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

"உத்ஸக்த்யா அவகுதம் தேஹி ஸமஞ்ஜிம் சாரயா

வ்ருஷன் ய: ஸ்த்திரீணாம் ஜீவபோஜன"

பொருள்: புணர்ச்சி வேளையில் என் மனைவியாகிய இவளிடத்தில் (மஹிஷி) நான் செய்யும் காரியங்களை எனக்குப் பதிலாக நீ செய்யவேண்டும்.

எழுதுவதற்கே கூசக்கூடிய இந்தக் காட்டுமிராண்டிக் கலாச்சாரத்துக்குச் சொந்தக்காரர்கள்தாம் ஆரியப் பார்ப் பனர்கள்.

இத்தகையவர்கள் வெறுக்கத்தக்கவர்களா இல்லையா?

இவர்கள் இன்றைக்குத் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடும் இராமன் இருக்கிறானே - அவனே இத்தகைய யாகத்தில் பிறந்தவன்தான்.

ஆதாரம் தேவைப்படுவோர் மறைந்த திண்டுக்கல் பிரபல மார்க்சிஸ்டு தலைவர் தோழர் ஏ. பாலசுப்பிரமணியம்  அவர்களின் தந்தையார் அமிர்தலிங்க அய்யர் அவர்களால் எழுதப்பட்ட ராமாயண விமர்சகா என்ற நூலைப் படித்துக் கொள்ளலாம்.

பார்ப்பனர்களால் படைக்கப்பட்ட வேதாகமங்களின் தராதரங்கள் எத்தகையவை தெரியுமா?

"ஸ்தயச்: சின்னசிர: க்ருபாணம பயம்

ஹஸ்தைர் வரம் பிப்ரதீம்

கோராஸ்யம் சிரஸர்ஸ்ரஜா

ஹுருசிராமுன் முக்த கேசாவ லீம்:

ஸ்யாமாங்கீம் க்ருதமேகலாம்

சவகரைர் தேவீம் பஜேகாளிகாம்"

(மந்த்ர மஹோததி)

பொருள்: அப்போது அறுத்தெடுத்த தலை, வால், அபயம், வரம், இவைகளையுடைய கைகளும், கழுத்தில் மாலையாக விளங்குகின்ற தலைகளின் வரிசையும், அவிழ்த்துவிட்ட கூந்தலும், கடைவாயினின்றும் ஒழுகு கின்ற இரத்தப் பெருக்கும், சலங்களைத் தோடாக உடைய காதுகளும், சலத்தினது கைகளின் வரிசையே ஒட்டி யாணமாக அணிந்திரா நின்ற இடையையும் உடைய காளிகா தேவியை நான் வழிபடுகிறேன். பின்னும் தேவியின் உருவத்தை வருணிப்பது:

"அஸ்மின்பீடே யாஜேத் தேவீம்

சிவரூப சவஸ்திதாம்:

மஹாகால ரதாஸக்தாம்

சிவாபிர்திக்ஷுவேஷ்டிதாம்"

பொருள்: சவ ரூபமாயிருக்கிற சிவனுடைய உடலை மிதித்துக் கொண்டிருப்பவளும், மஹா காலனுடைய சம்போகத்தில் விருப்பமுடையவளும், பெண் நரிகளால் சூழப் பெற்றவளுமான தேவியை பீடத்தின் கண் ஆவா கித்துப் பூசிக்க வேண்டும். இங்ஙனம் பூஜித்தபின் மந்திரம் செபிக்கும் முறை:

"ஸுத்ருசோ மதனாவஸம்

பஸ்யன் ய: ப்ரஜபேன் மனும்

அயுதம் ஸோசி ராதேவ

வாக்பதே: ஸமதாமியாத்"

பொருள்: ஒரு அழகிய பெண்ணின் குறியைப் பார்த்துக் கொண்டு பத்தாயிரம் மந்திரசெபம் பண்ணுகிறவன் தேவ குருவுக்குச் சமனாவான்.

குருமூர்த்தி கூட்டமே இவை போதுமா - இன்னும் வேண்டுமா?

வேஸ்யா தரிசனம் புண்யம்

ஸ்பர்ஸனம் பாப நாஸம்

சம்பனம் சர்வ தீர்த்தானாம்

மைதுனம் மோக்ஷ சாதனம்

வேசிகளைப் பார்த்தாலே புண்ணியம் - தொட்டாலே பாவம் நாசமாகும் - முத்தம் கொடுத்தால் சகலப்புண்ணிய தீர்த்தங்களிலும் நீரோடியதற்குச் சமமான புண்ணியம் - உடலுறவு கொண்டால் மோட்சத்தை அடையும்வழி.

மோட்சத்துக்கான மோக வழியைப் பார்த்தீர்களா?

இந்த வெட்கங் கெட்ட இந்துத்துவாவாதிகள்தான் ஒழுக்கம் பொதுச் சொத்து, பக்தித் தனிச் சொத்து என்று சொன்னபடி வாழ்ந்து காட்டிய தலைவர் தந்தை பெரியாரால் தான் ஒழுக்கம் கெட்டு நாசமாகிப் போய் விட்டது என்று நாக்கில் நரம்பின்றிப் பேசுகின்றனர்.

ஒழுக்கம் என்று எதுவும் தேவையில்லை, மிருகத்தோடு கூடப் புணரலாம் (அசுவமேதயாகம்) என்று எழுதி வைத்துள்ள அசிங்கங்கள் அறிவுலக ஆசானாம் அய்யா பெரியாரை அனாவசியமாக வம்புக்கிழுக்கலாமா?

காளிதாசனின் படைப்புகள் உள்ளிட்ட பழைய சமஸ் கிருத இலக்கியங்களில் "மதனோத்சவம்" பற்றி பல இடங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.

In Ancient Sanskrit Literature, including all work of ‘Kalidasa’ there are frequent references, to MADANOTSAVA, a day on which every men or women could ask another even a stranger for sexual bliss a sort of “Free Love Day” 

- Chidanda Dass Gupta Lust for life:

- "Illustrated Weekly of India", May3-9, 1987  P39

"இந்த மதன உற்சவ நாளில் எந்த ஆண் மகனும் அல்லது பெண் மகளும் அயலார் உட்பட எவரையும் புணர்ச்சி இன்பத்திற்காக அழைப்பு விடுக்கலாம். இது ஒரு வகையான "சுதந்திரமான" காதல் நாளாகும். (சிரானந்த தாஸ் குப்தா, "இல்லஸ்ட்ரேட் வீக்லி" 3-9 மே  1987 பக்கம் 39).

இந்தப் பார்ப்பன இந்துத்துவ பாரம்பரிய மரபணுதான் நடந்து வரும் பாலியல் சீண்டல்களுக்குக் காரணமே தவிர  - இவ்வாபாசங்களை அழித்தொழிக்கும் தந்தை பெரியாரோ, அவர் கண்ட பகுத்தறிவு ஒழுகலாறான இயக்கமோ, கண்ணீர்த் துளிகளோ அல்ல என்பதைக் குருமூர்த்திகள் உணரட்டும்!

அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்கிறார்களே ஆரிய குலத்தார் - அதன் தன்மை என்ன? அந்தக் காலத்திலேயே கூட்டுறவு சொசைட்டியா என்று தந்தை பெரியார் கேட்டதுதான் நினைவிற்கு வருகிறது.

அய்ந்து கணவன் போதாது என்று ஆறாவதாக கர்ணன் மீது ஆசைப்பட்டதற்குத் துரோபதை கூறிய காரணமும், விளக்கமும் என்ன தெரியுமா? தருமன் - சதா வேதாந்தம் படிப்பவன், பீமனோ உடல் பெரியவன், எப்பொழுதும் சாப் பிட்டுக் கொண்டே கிடப்பவன், அர்ச்சுனனோ அவனுக்கு ஏகப்பட்ட மனைவிகள், ஆற்று மணலை எண்ணினாலும் அர்ச்சுனன் மனைவியை எண்ண முடியாது. நான்காவது, அய்ந்தாவது நகுலனும், சகாதேவனும் எனது பிள்ளைகள் மாதிரி - எனவே கர்ணன்மீது ஆசை கொண்டேன் என்கிறார்.

இந்த ஆபாச ஆரியக் கலாச்சார ஒழுக்கக் குன்றுகள்தான் தந்தை பெரியாராலும், அவர்தம் சீர்திருத்த இயக்கத்தாலும் கலாச்சார சீரழிவு ஏற்பட்டது என்று கொஞ்சம்கூடக் கூசாமல் எழுதுகின்றனர். இன்னும் இருக்கிறது - குருமூர்த்தியாரே ஓடாதே நில்!

-விடுதலை நாளேடு, 26.4.18