செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

ஆரிய விவாகம் பற்றி அண்ணல் அம்பேத்கர் என்ன சொல்லுகிறார்?



(டாக்டர் பி.ஆர். அம் பேத்கர் எழுதிய ‘காங்கிரசும் காந்தியும் தீண்டத்தகாதவர் களுக்குச் செய்ததென்ன?’ என்ற நூலின் பக்கம். 205-206).

The Aryans took pride if his wife was in the keeping of a Deva and was impregnated by him. The mention is in the Mahabharata and in the Harivamsha of sons born to Arya women from Indra, Yama, Nasatya, Agni, Vayu and other Devas is so frequent that one is astounded to note the scale on which such illicit intercourse between the Devas and the Arya women was going on.
In course of time the relations between the Devas and the Aryans became stabilized and appears to have taken the form of feudalism. The Devas exacted two boons from the Aryans.
The first boon was the Yajna which were periodic feasts given by the Aryans to the Devas in return for the protection of the Devas in their fight against the Rakshasas.
The second boon claimed by the Devas against the Aryans was the prior right to enjoy Aryan woman. This was systematized at a very early date. There is a mention of it in the Rig- Veda in X. 85.40. According to it - the first right over an Arya female was that of Soma, second of Gandharva, third of  Agni and lastly of the Aryan. Every Aryan woman was hypothecated to some Deva who had a right to enjoy her first on becoming puber. 
(Dr. Babasaheb Ambedkar: Writings and Speeches
- Vol. IV, p. 302)

இதன் தமிழாக்கம் வருமாறு:

“ஆரியர்கள், தங்கள் மனைவியரைத் தேவர்கள் வைத்துக் கொள்வதையும், தேவர்களால் கர்ப்பமாக்கப் படுவதையும் தங்களுக்குக் கிடைத்த கவுரவமாகக் கருதினார்கள். இந்திரன், யமன், நசத்யா(Nasatya) அக்னி, வாயு முதலிய தேவர்கள் மூலம் ஆரியப் பெண்கள் பிள்ளைகளைப் பெற்றனர் என்ற குறிப்பை மகாபாரதத்திலும் ஹரிவம்சத்திலும் காணலாம்.

தேவர்களுக்கும் ஆரியப் பெண்களுக்குமிடையே முறைகேடான உடலுறவு அடிக்கடி நிகழ்ந்தது. நாளடைவில் தேவர்களுக்கும், ஆரியர்களுக்கும் இடையே உறவு வலுப்பட்டது. அது நிலப்பிரபுத்துவமாக வடிவம் பெற்றது. தேவர்கள் ஆரியர்களிடமிருந்து இரண்டு வரங்களைப் பெற்றார்கள்.

ராட்சசர்களுக்கு எதிராகத் தேவர்கள் போர்செய்து, ஆரியர்களைப் பாதுகாத்ததற்காக, ஆரியர்கள் தேவர் களுக்கு அவ்வப்போது யக்ஞம் நடத்தி விருந்து படைக்க வேண்டும் என்பது முதல் வரம்.

ஆரியப் பெண்களை அனுபவிக்கும் முதல் உரிமை தங்களுக்கு வேண்டும் என்று தேவர்கள் ஆரியர்களைக் கேட்டார்கள். இது இரண்டாவது வரம். மிகப் பழங்காலத்திலேயே இது நடைமுறைக்கு வந்துவிட்டது. ரிக்வேதத்தில் (X-85-40) இதுபற்றிய குறிப்பு காணப்படுகிறது.

அதன்படி ஓர் ஆரியப் பெண்ணை அனுபவிக்கும் முதல் உரிமை சோமனுக்கு; இரண்டாவது உரிமை கந்தர் வனுக்கு; மூன்றாவது அக்கினிக்கு; கடைசி உரிமை ஆரி யனுக்கு. ஒவ்வொரு ஆரியப் பெண்ணும் பூப்படைந்தவுடன் யாராவது ஒரு தேவனிடம் அவன் அனுபவிப்பதற்காக ஒப்படைக்கப்படுவாள்”.

(நூல்: டாக்டர் அம்பேத்கர் எழுத்துக்களும் பச்சுக்களும்- தொகுதி - 4 பக்கம் 302)

மேற்கண்டவாறு அம்பேத்கர் அவர்கள் குறித்துள்ள மைக்கு ஏற்ப, ஆரியப் பெண்களுக்கு வழமையாக இருந்ததை மந்திரங்களாக்கி, இதரர்களுக்கு குறிப்பாக, “சூத்திரர்களுக்கும்“ திருமண காலத்தில் புரோகிதர் கூறுகிறார்.

“சோம ப்ரதமோ

விவிதே கந்தர்வோ

விவித உத்தர:

த்ருத்யோ அக்நிஷ்டேபதி

துரியஸ்தே மனுஷ்யஜா:”

ஆரியப் பண்பாடும் ஒழுக்கமும் இவ்வளவு மோசமாக இருப்பதைத் தமிழர்களோ தன்மானமுள்ள எவருமோ ஏற்க முடியுமா? அதை ஒழிப்பதற்கே சுயமரியாதைத் திருமணத்தைத் தந்தை பெரியார் அவர்கள் தோற்றுவித்தார்!

(கி.வீரமணி அவர்கள் எழுதிய “சுயமரியாதைத் திருமணம் - தத்துவமும், வரலாறும் “- எனும் நூலிலிருந்து)

-  விடுதலை நாளேடு, 6.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக