செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

புரோகிதனான பிரம்மாவின் யோக்கியதை

1. பரமசிவன்- பார்வதி கல்யாணத்தில் பிரம்மா புரோகிதனாக இருந்து விவாக ஓமம் செய்தான். பார்வதி ஓமகுண்டத்தை பிரதட்சணம் வருகையில், இடது கையினால் முந்தானையை தூக்கிப் பிடித்துக் கொண்டு வந்தாள். அப்படி வருகையில் அவளுடைய இடையை ஒட்டிய தொடை பிரம்மா கண்களுக்குப் பட்டது. அதைப் பார்த்தவுடன் பிரம்மா மோகித்ததால் இந்திரியம் ஸ்கலிதமாயிற்று; அதை ஓமகுண்டத்தைச் சுற்றியிருக்கும் கலசத்தில் விட்டான். உடனே அதில் அகஸ்தியன் பிறந்தான்.


2. அதுபோலவே பிரம்மா மறுபடியும் தொடையைப் பார்க்க, மேலும் இந்திரியம் ஸ்கலிதமாயிற்று. அதை விருட்சபச்சை முதலிய அநேக செடிகளில் விட வால்கில்லியாதி முதலிய அநேக ரிஷிகள் பிறந்தார்கள்.


3. அவ்விடம் விட்டு போகும்போது ஒரு சுடலைச்சாம்பலில்  இந்திரியத்தை விட அதில் பூரிச்சிரவனென்கிற இராட்சசன் பிறந்தான்.


4. அவ்விடத்திலுள்ள எலும்புகளை பொறுக்கி ஒன்றாய்ச் சேர்த்து அதிலே இந்திரியத்தை விட சல்லியன் என்ற பராக்கிரமசாலி பிறந்தான்.


5. அவ்விடம் விட்டுப் போகையில், சிறிது இந்திரியம் ஸ்கலிதமாகி கீழே விழ அதை ஒரு பட்சி புசித்து அதன் வயிற்றில் சகுனி பிறந்தான்.


6. பிறகு தடாகத்தில் கொஞ்சம் இந்திரியம் விட அதை மண்டூகம் (தவளை) புசித்து அதன் வயிற்றில் மண்டோதரியென்கிற பெண் பிறந்தாள்.


7. மிகுந்த இந்திரியத்தைக் குளத்தில் தாமரைப் பூவில் விட அதில் பத்மை என்கிற புத்திரி பிறந்தாள்.


8. அந்த புத்திரியான பத்மையின் அழகைக்கண்டு மோகித்து சேர பிரம்மன் கேட்க, அவள் சம்மதிக்க மறுக்க அவளுக்குச் சமாதானமாக வேதவாக்கியத்தை சொல்லுகிறார். பிரம்மா:


“மாதரமுபைத்ய கஸாரமுபைதி புத்ரார்தீத


சகாமார்த்தி நாபத்திரலோகா நாஸ்தீக


ஸர்வம்பரவோ விந்துஹஃ, தஸ்மாத் புத்ரார்த்தம்


மாதரம் ஸுரஞ்சி ரோஹதி”


இதன் பொருள்:-  புத்திரார்த்த நிமித்தம் தாய், தமக்கை, பிள்ளை, யாரோடயினும் கூடலாம் என்பதாகும்.


9. சேர்ந்து கர்ப்பவதியாக்கி திரும்ப இந்திரியத்தை சித்தினலிங்கத்தினால் உறிஞ்சினான்.


10. பின் காம விகாரத்தினால் இந்திரன் உத்தரவுப்படி திலோத்தமை 4 திசையிலும் ஆடியதால் பிரம்மாவுக்கு 4 தலையும் உயரப்பறந்து ஆடி 5-ஆவது தலையும் ஆடி அவன்மீது மோகங்கொண்டு திலோத்தமையைத் தொடர்ந்து போகையில் ஈஸ்வரன் ஒரு தலையை அறுத்து எறிந்தான்.


11. பின் பிரம்மன் காடுகளில் அலைந்து திரிகையில் ஒரு புதரிலிருந்து பெண் கரடியைக் கண்டு அதைக்கூடி அதன் வயிற்றில் ஜம்புவந்தன் என்ற கரடி முகத்தோடு ஒரு புத்திரன் பிறந்தான்.


12. பின் ஊர்வசி என்ற வேசியிடத்தில் சில உடன்படிக்கை செய்து, முன் பத்மையிடத்தில் ஆக்குஷணஞ் செய்த அண்டத்திலுள்ள இந்திரியத்தை ஊர்வசி கர்ப்பத்தில் விட,  அதில் வசிஷ்டன்  பிறந்தான். அப்புத்திரனுக்கு தன் பதவியை கொடுத்து பிரம்மா தபோவனமடைந்தார்.


புரோகிதனான பிர்மாவின் யோக்கியதையே இப்படி என்றால் - இந்தக் காலத்துப் புரோகிதர்களைப் பற்றிப் பேசவும் வேண்டுமா!


-  விடுதலை நாளேடு, 6.2.19


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக