வெள்ளி, 23 ஏப்ரல், 2021

சாமி கைவல்யம்

Unmaionline -> 2019 -> ஆகஸ்ட் 16-31 2019

பசு_புனிதமா?! மற்றும் வேத விளக்கம்



யஜூர் வேதத்திற்கு இரு கிளைகள்(சாகை) உண்டு.இந்தக் கிளைகளில் ஸம்ஹிதை, ப்ராம்மணம், ஆரண்யம் என மூன்று பிரிவுகள் உண்டு. உதாரணத்திற்கு,ரிக்வேத ஸம்ஹிதையை மட்டும் நூலாக வெளியிட்டு, அதற்கு "ரிக் வேதம்" என்று பெயர் கொடுத்து விடுகிறார்கள். ஏனென்றால் ஸம்ஹிதைதான் ஒரு சாகைக்கு ஆதாரமாக, உயிர் நாடியாக இருப்பது.ஸம்ஹிதை என்றால் ஒழுங்குபடுத்திச் சேர்த்த மந்திரங்கள் என்று பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு வேதத்திலும் பல சாகைகள் இருக்கிறது மட்டும் இல்லாமல், யஜுர் வேதம் தனக்குள்ளேயே நிரம்ப மாறுபாடுகள் உள்ள இரண்டு தனி வேதங்களாகவே பிரிந்திருக்கிறது.
யஜூர் வேதத்தின் இரு சாகைகளுக்கு கிருஷ்ண யஜூர்வேதம் என்றும் (கருப்பு), சுக்ல யஜூர் வேதம் என்றும் பெயர்(வெளுப்பு). ‘யஜ்' என்றால் வழிபடுவது - இதிலிருந்தே யஜுர், யக்ஞம் வந்திருக்கின்றன. யஜுர்  அல்லது யஜுஸ் என்றாலே யக்ஞம் சம்பந்தமான வழிபாட்டுக் காரிய முறைகளை விவரிப்பது என்று பொருள்.இதில் கிருஷ்ண சாகையைச் சார்ந்ததுதான் தைத்திரீய ஸம்ஹிதை.

கர்மயோகத்தை நன்றாக அமைத்துக் கொடுத்திருப்பது யஜுர் வேதம் என்பர். ஸோம யாகம், வாஜபேயம், ராஜஸூயம், அச்வமேதம் முதலான அநேக யக்ஞங்களைப் பற்றியும், பலவிதமான யாகங்களைப் பற்றியும் விரிவாக நமக்குத் தெரிவிப்பது கிருஷ்ண யஜுஸில் உள்ள தைத்ரீய ஸம்ஹிதைதான்.

“இன்றைக்கு அதிகம் பேர் அநுஸரிப்பது யஜுர் வேதத்தைத்தான். யஜுர் வேதிகள் தான் மெஜாரிட்டி. வடக்கே இருப்பவர்களில் பெரும்பாலோர் சுக்ல யஜுர் வேதிகளாகவும், தெற்கத்திக்காரர்களில் பெரும்பாலோர் கிருஷ்ண யஜுர் வேதிகளாகவும் இருக்கிறார்கள். உபாகர்மா (ஆவணி அவிட்டம்) என்று கவர்மென்டில் லீவ் விடுவதானால்கூட ரிக்வேதிகளுக்கோ, ஸாம வேதிகளுக்கோ என்றைக்கு உபாகர்மமோ அன்றைக்கு விடுவதில்லை; யஜுர் உபாகர்மாவுக்குத்தான் லீவ் விடுகிறார்கள். யஜுர்வேதிகள் மெஜாரிட்டியாக இருப்பதாலேயே இப்படியிருக்கிறது” எனக் குறிப்பிடுகிறார் காஞ்சி மகாப் பெரியவா.

எந்த சித்தாந்தமானாலும் அதற்கு ஸூத்ரம், பாஷ்யம், வார்த்திகம் என்ற மூன்று இருக்கவேண்டுமென்பது வடகத்து மரபு.
ஸூத்ரம் என்பது சித்தாந்தத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்வது. பாஷ்யம் என்பது அதற்கு விரிவுரை. இந்த விரிவுரையையும் விஸ்தரித்து விளக்குவதுதான் வார்த்திகம்.
ஆதி சங்கரர் பிரம்ம சூத்ரத்திற்கு பாஷ்யம் எழுதினார்.இவை பத்து உபநிடத பாஷ்யங்களாக தொகுக்கப் பட்டது.
ஆதி சங்கரரின் சீடர்களுள் ஸுரேச்வரர் என்றொருவர் உண்டு, இவர் சங்கரரின் பத்து பாஷ்யங்களில் இரண்டிற்கு மட்டும்  வார்த்திகம் எழுதினார். அந்த இரண்டு, தைத்ரீய உபநிஷத்தும், பிருஹதாரண்ய உபநிஷத்தும் ஆகும். இவற்றில் தைத்திரீயம் கிருஷ்ண யஜுஸைச் சேர்ந்தது; பிருஹதாரண்யகம் சுக்ல யஜுஸைச் சேரந்தது.ஆனால் இரண்டுமே யஜுர் வேதம்தான்.

இவ்வளவு விளக்கம் தேவைதானா?,விசயத்திற்கு வருவோமே!
இந்த கிருஷ்ண யஜுர் வேதம் - தைத்திரீய ஸம்ஹிதை முதற்காண்டம் - மூன்றாம் பிரபாடகம் 1 ஆவது அநுவாகம் முதல் 11ஆவது அநுவாகம் வரை முழுக்க முழுக்க பசுவை சோம யாகத்தில் பலியிடும் முறையினை தெளிவாக விளக்குகிறது.(குறிப்பாக 8 முதல் 10 வரை உள்ள சில பகுதிகளை இணைத்துள்ளேன்).
பசுவை கயிற்றால் கட்டுதல்,தண்ணீர் குடிப்பித்தல்,நீர் தெளித்தல்,வலது பின்னங்காலில் நெய் தடவுதல்,கண்ணில்-செவியில்-இதயத்தில்-தொப்புளில்-கால்களில்-வயிற்றில் நீர் விடல்,வபை எனும் ஈரல் சவ்வை பிளந்தெடுத்தல்,வபையில் நெய் தடவுதல்,மாமிச ரசத்தை ஒமம் செய்தல், பசுவின் அங்கங்களை வேக வைத்தல், குடல் பதினொரு துண்டுகளாக்கி ஓமம் செய்தல் என அதற்கான மந்திரங்களுடன் விளக்கப் பட்டுள்ளது. தினமும் ஆடு வெட்டும் பாய்க்கு கூடத் தெரிந்திருக்காது இந்த வரிசைக் கிரமங்கள். அந்த அளவிற்கு சின்ன சின்ன விசயங்கள் துல்லியமாக விளக்கப்பட்டுள்ளன, இப்போது வாங்கும் கார் மற்றும் எந்திர உபகரணங்களுக்கு கொடுப்பார்களே user manual, அது போன்றவை இந்த மந்திரங்கள்.

ஒரு பிராமணன் என்பவன் ரிஷிகளுக்கு பிரம்மச்சர்யம் எனும் வேதப்பியசத்தாலும், தேவர்களுக்கு யாகத்தாலும், பித்ருக்களுக்கு ப்ரஜையாலும் கடமைப்பட்டவனாகிறான்.எவன் ஒருவன் புத்ரனைப் பெற்றானோ, யாகத்தைச் செய்தானோ, பிரம்ச்சாரியாக குருகுலத்தில் வாசம் செய்தானோ அவனே இக்கடன்களிலிருந்து விடுபட்டவனாகிறான்
எனக் குறிப்பிடுகிறது தைத்திரீய ஸம்ஹிதை.பசு என்பது தேவர்களுக்கு பிரியமானது, ஆகவேதான் அது யாகங்களில் பலியிடப்படுகிறது. வாஜபேய யாகத்திற்கு 23 பசுக்கள் மற்றும் அசுவமேதா யாகத்திற்கு 100 பசுக்கள் மட்டுமே பலியிடப் படுகின்றன எனும் தகவலை காஞ்சி மகாப் பெரியவா தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம் பக்கம் 355 ல் குறிப்பிடுகிறார்(இணைப்பில் இந்தப் பக்கம் உண்டு). 

100 பசுக்களைப் பலியிட்டு அசுவமேத யாகம் செய்பவன்  சர்வ பாவங்களையும் போக்கிக் கொள்கிறானாம். 400 விதமான யாகங்களை புரோகிதர்கள் செய்திருக்கிறார்கள் என்பதையும் காஞ்சி மகாப் பெரியவர் விளக்குகிறார்.இதை கருத்தில் கொண்டால், எவ்வளவு பசுக்கள் கொல்லப்பட்டிருக்கும் என்பதற்கு அளவே இல்லை.பசுவை பலியிட்டதற்கான ஆதாரமாக யஜுர் வேத தைத்திரீய ஸம்ஹிதையில் உள்ள ஒரு சில பக்கங்களை மட்டும் இணைத்துள்ளேன். டி.என்.ஜா அவர்கள் எழுதிய “பசுவின் புனிதம்” நூலில் இன்னும் நிறைய ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன.

தைத்திரீய ஸம்ஹிதை ஆர்.ராமச்சந்திர சாஸ்திரி அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு 1920 ல் வெளிவந்த நூல் ஆகும். இந்த நூலில் பலியிடப்படுவது பசு என்பது தெளிவாகவே குறிப்பிடப் பட்டுள்ளது. இன்னொரு தைத்திரீய ஸம்ஹிதை நூல் காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமிகளால் மொழிபெயர்க்கப் பட்டு 1939 ல் வெளிவந்த நூல்.இந்த நூலில் பசு என்பது கடா என்று மாற்றம் செய்யப் பட்டுள்ளது. இரண்டு நூல்களின் சில பக்கங்களை இணைத்துள்ளேன். ஒரு விசயம் எப்படி மடைமாற்றம் செய்யப் படுகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

ஆனால் யாகத்தில் பசு என்பது பலியிடப்படும் எந்த மிருகமாகவும் இருக்கலாம் எனக் குறிப்பிடுகிறார் காஞ்சி மகாப் பெரியவர்.
எந்தெந்த மிருகங்கள் உண்பதற்கு உகந்தவை எந்தெந்த மிருகங்கள் பறவைகள் மீன் வகைகள் கூடாதவை என்பன ஆபஸ்தம்ப தர்மசூத்ரம் நூலில் உள்ளன.

இனிமேலும் நாங்கள் யாகங்களில் பசுவை பலியிட்டதில்லை, பசுவை உண்டதில்லை, மாமிசம் தீட்டு என்பதை யாராவது சொன்னால் அது எவ்வளவு பெரிய பொய்யாக இருக்கும் என்பதை, இந்தப் பதிவைப் படித்த பிறகாவது அவரவர் மனசாட்சியைக் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.
- ஆறாம் அறிவு குழு, தினகரன் செல்லையா முகநூல் பதிவு
23.4.20

வியாழன், 22 ஏப்ரல், 2021

ந.சி.கந்தையாபிள்ளை வேதம் பற்றி



ந.சி. கந்தையா பிள்ளை வரலாறு அறிந்த பெருமக்களால் வானளாவப் புகழப்பட்டவர்; தமிழ், ஆங்கிலப் புலமை மிக்கவர்!

பத்துப்பாட்டு வசனம், பரிபாடல் வசனம், கலித்தொகை வசனம், கலிங்கத்துப் பரணி வசனம் தொடங்கி பல்வேறு ஆய்வு நூல்களை யாத்தவர். பிறந்தது யாழ்பாணத்தைச் சேர்ந்த கந்தரோடை (1893-1967).

தமிழ்க்கடல் மறைமலை அடிகளால் கவரப்பட்டவர். மலேசியாவில் பணியாற்றி தமிழ்நாடும் வந்து தங்கி பல நூல்களை எழுதியவர்.

‘ஆரிய வேதங்கள்' எனும் 64 பக்கங்களைக் கொண்ட நூல் முத்தமிழ் நிலையத்தால் 1947 இல் பதிப்பிக்கப்பட்டது.

அந்நூலிலிருந்து இதோ:

(பக்கம் 45-47)

‘‘வேதகால ஆரியர் இறைச்சி வகைகளைத் தாராளமாகப் புசித்தார்கள். அவர்களின் உணவில் இறைச்சி வகையே முதன்மையாயிருந்ததென்பதைப் பற்றி ஒருவரும் ஆச்சரியமுற வேண்டியதில்லை. வெள்ளாடு. செம்மறியாடு, பசுக்கள், எருமை கள் யாகங்களிற் கொல்லப்பட்டன. அக்கினி, பசுக்களைப் புசிப்பவன் என்று வேதம் கூறுகின்றது. பாரத்துவாசர் தனக்கு உணவு வேண்டுமென்று இந்திரனைத் துதித்தார். அவன் உணவில் பசு முதன்மையுடையது. முக்கியமான விருந்து வந்தால், பெரியமாடு அல்லது பெரிய ஆட்டைக் கொல்லும்படி சதபதத் பிரமாணங் கூறுகின்றது. அரசன் அல்லது பெருமகன் ஒருவன் விருந்தாக வந்தால், பெரிய எருதை அல்லது மலட்டுப் பசுவைக் கொல்லவேண்டுமெனவும் அந்நூல் கூறியுள்ளது.

இந்திரனுக்கு எருதுகள் பலி யிடப்பட்டன. சமைக்கப்பட்ட மாட்டு இறைச்சியில் இந்திர னுக்கு மகிழ்ச்சி உண்டு. எரு மைகளும் அவனுக்குப் பலியி டப்பட்டன. அவைகளின் இறைச்சியைச் சமைத்து இந்திரனுக்குப் படைத்தபின், வழிபடுவோர் அதனை உண்டனர். சில சமயங்களில் முந்நூறு எருமைகளுக்குமேல் பலியிடப்பட்டன. ஒருவர் இறந்தால் உடலைக் கொளுத்துவதன் முன் பசுவைக் கொன்று அதன் இறைச்சியால் அது மூடப்பட்டது. குதிரைகளும் யாகத்திற்குக் கொல்லப்பட்டன. அதன் இறைச்சியை வறுத்தும் அவித்தும் கடவுளுக்குப் படைத்தபின், அடியவர் அதனை உண்டு சோம இரசத்தையும் பருகினர். இறைச்சியை விற்பனை செய்யும் கடைகளும் இருந்தன. பாரதம், நாளொன்றுக்கு 2000 பசுக்களைக் கொன்று பலருக்கு விருந்து அளித்து வந்த இரந்தி தேவரைப் பற்றிக் கூறுகின்றது! புத்தர் தோன்றித் கொல்லாமையைக் கடியும் வரையில் ஊன் உணவு கொள்ளும் வழக்கு, வடநாட்டவர் எல்லோரிடையும் இருந்து வந்தது. வேதகால ஆரியர், மாட்டு மாமிசம் உண்ணுதல் இழிவு என்று கருதவில்லை. இருக்கு வேத காலத்தின் கடைப்பகுதியில் பசு, எருதுகளைப் பலியிடுவதைப் பற்றி வெறுப்பு உண்டாயிருந்தது.

ஆரியர் இவ்வாறு செய்யும் யாகங்களுக்கு அசுரர் எதிராக இருந்து வந்தனர். அவர்கள் அவ்வகை யாகங்களை வலிமையால் தடை செய்ய முயன்று வந்தார்கள். யூபத்தில் மிருகங்கள் கட்டப்பட்டதும், அசுரர் அதனை நோக்கி வந்தார்கள். ஆரியர் யாகச்சாலையைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக மதில்போல நெருப்பை வளர்த்து, அசுரரை அணுக முடியாமற் செய்தனர். இராவணனாதியோரும். ஆரிய முனிவர்கள் செய்யும் யாகங்களை அழித்து வந்தார்கள் என இராமாயணத்திற் படிக்கிறோம்.''

கோமாதா புத்திரர்கள் இதற்கு என்ன பதில் சொல்வார்களாம்?

 - மயிலாடன்

சனி, 17 ஏப்ரல், 2021

வேதங்கள் - பேதங்கள் -1


சு.அறிவுக்கரசு

 யஜூர்வேதம் இருவகை கிருஷ்ண (கறுப்பு) யஜூர், சுக்ல (வெள்ளை) யஜூர் என இரண்டு. கிருஷ்ண யஜூர் வேதத்திற்கு 101 சாகைகள் என்று சிலரும் 86 சாகைகள் மட்டுமே எனச் சிலரும் கூறுகின்றனர். இவர்கள் எதிலும் பிளவுபட்டப் புளுகுதான் என்பதற்கு இதுகூட உதாரணம் தான். (தமிழ்நாட்டில் பஞ்சாங்கம் என்பது கூட இரண்டுதான். சுத்த வாக்யப் பஞ்சாங்கம், எண்கணிதப் பஞ்சாங்கம் என இரண்டுக்கும் காலக் கணக்கிலேயே வேறுபாடு உண்டு. இதைச் சரி செய்து ஒன்றாக்க வேண்டும் என்று கவி சுப்ர மணிய பாரதி கூட எழுதினார். இன்றளவும் இரண்டுதான்) சுக்ல யஜூர் வேதத்திற்கு 17 சாகைகள் இருந்தன. வட இந்தியாவில் இந்த வேதம்தான். சாம வேதத்தில் மூன்றே சாகைகள் குஜராத், மகாராஷ்ட்ரா, கருநாடகத்தில் மட்டுமே இவ்வேதமாம். (பின் என்ன பாரத மாதா? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரதம் ஒரு நாடு. நீர் அதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர் என்ற பாட்டு ஏன்? எந்த விஷயத் திலும் ஒரே மாதிரி இல்லையே!) அதர்வண வேதத்திற்கு ஒன்பதே சாகைகளாம். 400 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து எங்கோ போய்விட்ட வேதமாம். காஞ்சிபுரம் மடாதிபதி எதையோ கொடுத்து, அதுதான் அதர் வண வேதம் எனக் கொண்டாடுகின்றனர். இது மந்த்ர தந்த்ரங்கள், பில்லிசூன்யம், செய்வினை வைத்தல் போன்ற சமூகக் கேடான செயல்களைக் கற்றுத்தருவதாம். ஆகவே மலையாள மலப்புரம் மாவட்டப் பார்ப்பனர்கள் மத்தியில் பழக்கப்படுத்தப்படுகிறதாம்.

வேதங்களின் மூலம் உலகை அறிந்தவர்கள் எனப்படும் சிலர் தெரிவித்தவை உப அங்கங்கள் எனப்படுகின்றன. இவற்றையே இந்தியத் தத்துவங்கள் எனச்சிலர் கூறு கின்றனர். அவை, சாங்க்யம், யோகம், மீமாம்சம், வேதாந் தம், நியாயம், வைசேஷிகம் என ஆறு தலைப்புகளில் உள்ளன. கபிலர் என்பாரின் கருத்தே சாங்க்யம் எனப்படு கிறது. கடவுளைப் பற்றியே சாங்க்யம் பேசவில்லை. அதே போல, கடவுளைப் பற்றிப் பேசாத பவுத்தம் சார்ந்தவர் எனவும் கூறலாம். சாக்கிய முனி என்பவர் புத்தர்.

யோகம் என்பது உடற்பயிற்சி முறையே - இதனை பதஞ்சலி என்பவர் கூறியதாகவும் வியாசன் உள்பட பலர் விரிவுரை எழுதியுள்ளதாகவும் கூறுகின்றனர். நான்கு பாகங்களாக 194 சூத்திரங்களாக உள்ளதாம்.

மீமாம்சம் என்பது இரண்டு வகை - பூர்வ மீமாம்சம், உத்திர மீமாம்சம். பூர்வ மீமாம்சம் என்பது ஜைமினியினு டையது. இது 12 காண்டங்கள், 60 அத்தியாயங்கள் கொண்டது.

வேதாந்தம் என்பது வேதங்களின் முடிவு எனப்பொருள் படும். இதை எழுதியது வியாசன். நான்கு அத்தியாயங்கள், ஒவ்வொன்றிலும் நான்கு பாதங்கள், ஒவ்வொன்றிலும் அனேக சூத்திரங்கள் என்றுள்ளன. மொத்தம் 5 லட்சத்து 58 ஆயிரத்து 191 சூத்திரங்களாம். (ஒன்றும் விளங்காம«லே இருப்பதன் பெயர் வேதாந்தம் என்றார் கவிஞர் கண்ண தாசன்), இதற்கு (ஆதி) சங்கரனும் ராமானுஜனும் உரை எழுதியுள்ளனராம். எல்லாம் அறிந்த பிறகு பிரம்மத்தை அறிய வேண்டும் என்கிறது வேதாந்தம். (அதாதோ பிரம்ம ஜிக்ஞாயச) “சாதாரண சப்த விசேஷரத்” (சாதாரண சப்தத்தின்படி வைசுவாநரன் என்பது பரமாத்மா (கடவுள்)வின் பெயராம். மனிதர்கள் ஜீவாத்மா, கடவுள் பரமாத்மா. அதனை வைசுவாநரன் என்கிறது வேதாந்தம்.

கவுதமன் என்பார் கூறியது நியாயம். இந்நூல் 537 சூத்திரங்கள் கொண்டது. பிரமாணம், பிரமேயம், சம்சயம், பிரயோஜனம், உதாரணம், சித்தாந்தம், அவயவம், தர்க்கம், நிர்ணயம், வாதம், ஜல்பம், விதண்டாவாதம், ஹேத்வபாஸம், தந்திரம், ஜோதி, நிக்ரஹஸ்தானம் என்கிற 16 வழிகளைக் கைக்கொண்டு உண்மை, பொய்யை அறிய வேண்டுமாம். வழக்கு மன்றங்களை நியாயஸ்தலம் என்றுதான் சொல் கிறார்கள்.

வைசேஷிகம் என்றால், உலகப் பொருள்களை எல்லாம் பிரித்து, ஆய்ந்து, குணங்களை அறிவிப்பதாம். கணாத முனிவரால் 373 சூத்திரங்களில் எழுதப்பட்டது.

ரிக் வேதத்திலிருந்து ஆயுர்வேதம், யஜூர்வேதத்திலி ருந்து தனுர் (வில்) வேதம், சாமவேதத்திலிருந்து கானம் (இசை) அதர்வணத்திலிருந்து அர்த்தவேதம் போன்றவை யும் உண்டாம்.

வேதத்தை நன்றாக அறிந்து கொள்ள பிரதி சாக்கியத்தை அறிவது அவசியமாம். அதைவேதவியாகரணம் என்கிறார் கள். இலக்கணம்தான் வியாகரணம் என்பர். ரிக்வேத சாக்கியம் பார்ஷத சூத்திரம் என்று பெயர். எழுதியவன் சவுனக ரிஷியாம். சுக்லயாஜூர் வேதத்தின் பிரதிசாக்கியம் எழுதியது காத்தியாயனன். சாம வேதத்திற்கான பிரதிசாக் கியம் புஷ்ப சூத்தரிம். இதை எழுதியவர் புஷ்ப ரிஷி, அதர்வணத்திற்கு பிரதி சாக்கியம் இல்லையாம்.

“அக்னி மிளே புரோகிதம் யக்ஞஸ்ய தேவமிருத் விஜம்“ என்பது ரிக்வேதத்தின் முதல் வரியாம். இதன் பொருள், புரோகிதனான நான் யக்ஞதேவ அக்னியை நமஸ்கரிக் கிறேன் என்பதாம். ஆரியர் சடங்கில் நெருப்புக்குத்தான் முதலிடம். எதையும் பொசுக்கும் அல்லவா?

முதல் வரியை பதம்பதமாகப் பிரித்துச் சொல்ல வேண் டுமாம். அக்னிம் ஈனே, புர.ஹிதம் யக்ஞஸ்ய, தேவம், ரிக்விஜம் எனக் கூறவேண்டுமாம். சவுனக ரிஷி என்பான் கூற்றுப்படி இளமையுடன் பலம் உள்ளவர்களால்தான் வேதம் படிக்க முடியுமாம். தமிழ் போல் அல்லாது சமஸ் கிருதத்தை அடிவயிற்றிலிருந்து உச்சரிக்க வேண்டும். பிரம்மசாரியாய் மித வாழ்க்கை உள்ளவனுக்கு வலு இருப்ப தால் அவனால்தான் வேதமந்த்ரங்களை ஓதவும் சொல்ல வும் முடியுமாம்.

வேதம் படித்துப் பண்டிதைகளாகப் பெண்கள் 24 பேர் வேதகாலத்தில் இருந்தார்களாம். பிறகு ஏன் பிற்காலப் பெண்கள் படிக்கத் தடை செய்யப்பட்டனர் என்ற கேள்வி எழுகிறது. பதில் சொல்ல ஆள் இல்லை.

ஆரியர்களின் வாழ்க்கையில் செய்தே தீரவேண்டிய சடங்குகள் (ஸம்ஸ்காரங்கள்) மொத்தம் 16 ஆகும். கர்ப்ப தானம், பும்சவனம், சீமந்தம், ஜாதகர்மம், நாமகரணம், சூடா கர்ணம், நிஷ்கிரமணம், அன்னப்பிராசனம், கர்ணபேதம், உபநயனம், வேதாரம்பம், சமாவர்த்தனம், விவாஹம், வானப்பிரஸ்தம், சன்னியாஸம், அந்தியேஷ்டி ஆகியவை யாம். இவை பார்ப்பனர்க்கு மட்டுமே உரியவை.

மேலை நாட்டுக்காரர் ஒருவர் (வில்லியம் ஆர்ச்சர்) கூறியவாறு வேதங்கள் இந்தியர்களின் கலாச்சாரக் காட்டு மிராண்டித் தனத்தின் அடையாளம் “என்று சரியாய்த்தான் சொல்லியிருக்கிறார் என்பதை இவர்களின் யக்ஞங்கள் (யாகங்கள்) ஸம்ஸ்காரங்கள் மூலம் நிரூபணமாகின்றது. பார்ப்பனர்களே ஒத்துக்கொண்டவாறு,” ரிக் வேதத்தின் முக்கியத்வம் பல காலங்களுக்கு முன்பே ஓரம் கட்டப்பட்டு விட்டதாம். சம்ஹிதை என்ற பெயரில் துக்கடா மந்திரங் களின் தொகுப்பு மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறது என்கிறார்கள்.

இதிஹாசங்களும் புராணங்களும் பார்ப்பனரல்லாத மக்கள் தெரிந்து கொள்வதற்காக எழுதப்பட்டன என்கிறார் கள். ஆனால் அவை, ஒரு குறிப்பிட்ட அளவு ரிக் வேதத்தின் வைதீக மதம், தத்துவங்கள், கலாச்சாரம் ஆகியவைகளை அழித்துவிட்டன என்கிற கருத்தும் உள்ளது. (வடுவூர் நாராயணன் எழுதிய “வேதங்களும் உபநிஷதங்களும்“ நூல் - பக்கம் 55) ரிக் வேத மொழியான (பழைய) ஸம்ஸ் கிருதம் எளிதில் புரிந்து கொள்ள முடியாத சொற்களைக் கொண்டதாம். ஆரியரல்லாத மக்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லையாம். கர்மாக்களிலும் கடவுளிட மும் பற்றில்லாதவர்கள் இதிஹாஸக்காரர்களின் ரிக் வேதத் துடன் உள்ள தொடர்பை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லையாம். அதே சமயம், இதிஹாஸக்காரர்களின் விளக்கங்களை ஏற்க ரிக்வேதம் தயாரில்லையாம். வேதங் களின் அடிப்படை நோக்கம் அறியாமை இருளை அகற்று வதாம். ரிக்வேதக் கடவுள்கள் எல்லாமே சுத்த சுயம் பிரகாச மானவையாம். ரிக் வேதத்திற்கான விளக்கங்கள் வேதத் தின் அறிவுசார்ந்த விளக்கங்களை அழித்துவிடுகின்றன வாம் (எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்பது இது தானோ?)

ரிக் வேதத்தின் ஏழாம்பகுதி புருஷசூக்தம். அதன்படி பிரபஞ்சம் முழுமைக்கும் ஒரே கடவுள். பரம புருஷன் என்றும் பெயராம். அதற்கு ஆயிரம் தலைகள். (ஸகஸ்ர சீருஷ புருஷ) இதற்குத்தான் யாகங்களில் உயிர்ப்பலி தரப்படுகிறது. மக்களின் மொழியில் வேதம் இல்லாததால், பரவவில்லை. அதே வேளையில் கவுதம புத்தர் மக்களின் மொழியான பாலி மொழியில் பேசியதால் மக்கள் கூட்டம் அவர் பின்னால் சென்றதாம். புத்தர் கடவுள் என்பதை மறுக்கவுமில்லை, ஆதரிக்கவுமில்லை. என்றாலும் மக்கள் அவரைப் பின்பற்றினர். வேதத்தைப் படிக்கவில்லை. புறக் கணித்தனர். அதைவிட முக்கியமான காரணி என்ன வென்றால், ரிக் வேதப்பாடல்களில் கருத்து ஒற்றுமை இல்லை, பல ரிஷிகள், பல்வேறு காலங்களில் எழுதியவை கதம்பமாகக் கட்டப்பட்டுக் காட்சி அளிப்பதால் முரண் பாடுகளின் மொத்த உருவமாக உள்ளது என்று பார்ப்பனர் சப்பைக்கட்டு கட்டுகின்றனர்.

ரிக் வேதத்தில் 8 அஷ்டகங்கள், 10 மண்டலங்கள், 64 அத்யாயங்கள், 85 அனுவாகங்கள், 1017 சூக்தங்கள், 2024 வர்க்கங்கள் 10647 ரிக்குகள், (பாடல்கள்) உள்ளன. கடவுளை அறிமுகப்படுத்துபவை ‘ருக்‘. பல ருக்குகளைக் கொண்டது சூக்தம். ஒரு சூக்தத்தில் ஒரு தேவனோ அல்லது பல தேவர் களோ இருக்குமாம். இந்த சூக்தங்களுக்கு ஒரு ரிஷியாம். அவருக்குத்தான் சூக்தத்தின் பொருள் தெரியுமாம்.

ஆனால் அவன் சொல்லமாட்டானாம். ஒரு ஈசன் உண்டு என்று எல்லா ரிஷிகளும் சொல்கிறார்கள். (பதிரேக ஆசித்) ஒருவனே தேவன். அவன்தான் பரபிரம்மம் என்கிறது ரிக்வேதம் “ஒருவனே தேவன்” என்று திருமூலன் கூடச் சொல்லியிருக்கிறான், யார் அந்தத் தேவன்? எது அந் தத் தேவன்? மும்மூர்த்திகள் என்கிறார்களே, அவையா? சிவனா? விஷ்ணுவா? பிரம்மனா? எவன்? ஒன்று மட்டும் தெரிகிறது. சிவன் எனும் கடவுள் ரிக்வேதகாலத்தில் இல் லவே இல்லை, அது புதுச்சரக்கு என்பது. ரிக் வேதம் முழு வதும் அக்னியும் இந்திரனும் மட்டுமே பேசப்படுகின்றன. அக்னி என்றால் நெருப்பு. இந்திரன் என்றால் தேவர்களின் தலைவன். தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுக்கப்படுபவன். அதனால் அடிக்கடி மாறுபவன், ஆனால் எவன் இந்திரனாக வந்தாலும், அவனுக்கு மனைவியாக இந்திராணி இருப் பாள். எவ்வளவு ஒழுக்கம் பாருங்கள். புகழ் பெற்ற ரிக்வேத கால ஒழுக்கம் பாருங்கள்.

 (தொடரும்)