சனி, 17 ஏப்ரல், 2021

வேதங்கள் - பேதங்கள் -1


சு.அறிவுக்கரசு

 யஜூர்வேதம் இருவகை கிருஷ்ண (கறுப்பு) யஜூர், சுக்ல (வெள்ளை) யஜூர் என இரண்டு. கிருஷ்ண யஜூர் வேதத்திற்கு 101 சாகைகள் என்று சிலரும் 86 சாகைகள் மட்டுமே எனச் சிலரும் கூறுகின்றனர். இவர்கள் எதிலும் பிளவுபட்டப் புளுகுதான் என்பதற்கு இதுகூட உதாரணம் தான். (தமிழ்நாட்டில் பஞ்சாங்கம் என்பது கூட இரண்டுதான். சுத்த வாக்யப் பஞ்சாங்கம், எண்கணிதப் பஞ்சாங்கம் என இரண்டுக்கும் காலக் கணக்கிலேயே வேறுபாடு உண்டு. இதைச் சரி செய்து ஒன்றாக்க வேண்டும் என்று கவி சுப்ர மணிய பாரதி கூட எழுதினார். இன்றளவும் இரண்டுதான்) சுக்ல யஜூர் வேதத்திற்கு 17 சாகைகள் இருந்தன. வட இந்தியாவில் இந்த வேதம்தான். சாம வேதத்தில் மூன்றே சாகைகள் குஜராத், மகாராஷ்ட்ரா, கருநாடகத்தில் மட்டுமே இவ்வேதமாம். (பின் என்ன பாரத மாதா? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரதம் ஒரு நாடு. நீர் அதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர் என்ற பாட்டு ஏன்? எந்த விஷயத் திலும் ஒரே மாதிரி இல்லையே!) அதர்வண வேதத்திற்கு ஒன்பதே சாகைகளாம். 400 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து எங்கோ போய்விட்ட வேதமாம். காஞ்சிபுரம் மடாதிபதி எதையோ கொடுத்து, அதுதான் அதர் வண வேதம் எனக் கொண்டாடுகின்றனர். இது மந்த்ர தந்த்ரங்கள், பில்லிசூன்யம், செய்வினை வைத்தல் போன்ற சமூகக் கேடான செயல்களைக் கற்றுத்தருவதாம். ஆகவே மலையாள மலப்புரம் மாவட்டப் பார்ப்பனர்கள் மத்தியில் பழக்கப்படுத்தப்படுகிறதாம்.

வேதங்களின் மூலம் உலகை அறிந்தவர்கள் எனப்படும் சிலர் தெரிவித்தவை உப அங்கங்கள் எனப்படுகின்றன. இவற்றையே இந்தியத் தத்துவங்கள் எனச்சிலர் கூறு கின்றனர். அவை, சாங்க்யம், யோகம், மீமாம்சம், வேதாந் தம், நியாயம், வைசேஷிகம் என ஆறு தலைப்புகளில் உள்ளன. கபிலர் என்பாரின் கருத்தே சாங்க்யம் எனப்படு கிறது. கடவுளைப் பற்றியே சாங்க்யம் பேசவில்லை. அதே போல, கடவுளைப் பற்றிப் பேசாத பவுத்தம் சார்ந்தவர் எனவும் கூறலாம். சாக்கிய முனி என்பவர் புத்தர்.

யோகம் என்பது உடற்பயிற்சி முறையே - இதனை பதஞ்சலி என்பவர் கூறியதாகவும் வியாசன் உள்பட பலர் விரிவுரை எழுதியுள்ளதாகவும் கூறுகின்றனர். நான்கு பாகங்களாக 194 சூத்திரங்களாக உள்ளதாம்.

மீமாம்சம் என்பது இரண்டு வகை - பூர்வ மீமாம்சம், உத்திர மீமாம்சம். பூர்வ மீமாம்சம் என்பது ஜைமினியினு டையது. இது 12 காண்டங்கள், 60 அத்தியாயங்கள் கொண்டது.

வேதாந்தம் என்பது வேதங்களின் முடிவு எனப்பொருள் படும். இதை எழுதியது வியாசன். நான்கு அத்தியாயங்கள், ஒவ்வொன்றிலும் நான்கு பாதங்கள், ஒவ்வொன்றிலும் அனேக சூத்திரங்கள் என்றுள்ளன. மொத்தம் 5 லட்சத்து 58 ஆயிரத்து 191 சூத்திரங்களாம். (ஒன்றும் விளங்காம«லே இருப்பதன் பெயர் வேதாந்தம் என்றார் கவிஞர் கண்ண தாசன்), இதற்கு (ஆதி) சங்கரனும் ராமானுஜனும் உரை எழுதியுள்ளனராம். எல்லாம் அறிந்த பிறகு பிரம்மத்தை அறிய வேண்டும் என்கிறது வேதாந்தம். (அதாதோ பிரம்ம ஜிக்ஞாயச) “சாதாரண சப்த விசேஷரத்” (சாதாரண சப்தத்தின்படி வைசுவாநரன் என்பது பரமாத்மா (கடவுள்)வின் பெயராம். மனிதர்கள் ஜீவாத்மா, கடவுள் பரமாத்மா. அதனை வைசுவாநரன் என்கிறது வேதாந்தம்.

கவுதமன் என்பார் கூறியது நியாயம். இந்நூல் 537 சூத்திரங்கள் கொண்டது. பிரமாணம், பிரமேயம், சம்சயம், பிரயோஜனம், உதாரணம், சித்தாந்தம், அவயவம், தர்க்கம், நிர்ணயம், வாதம், ஜல்பம், விதண்டாவாதம், ஹேத்வபாஸம், தந்திரம், ஜோதி, நிக்ரஹஸ்தானம் என்கிற 16 வழிகளைக் கைக்கொண்டு உண்மை, பொய்யை அறிய வேண்டுமாம். வழக்கு மன்றங்களை நியாயஸ்தலம் என்றுதான் சொல் கிறார்கள்.

வைசேஷிகம் என்றால், உலகப் பொருள்களை எல்லாம் பிரித்து, ஆய்ந்து, குணங்களை அறிவிப்பதாம். கணாத முனிவரால் 373 சூத்திரங்களில் எழுதப்பட்டது.

ரிக் வேதத்திலிருந்து ஆயுர்வேதம், யஜூர்வேதத்திலி ருந்து தனுர் (வில்) வேதம், சாமவேதத்திலிருந்து கானம் (இசை) அதர்வணத்திலிருந்து அர்த்தவேதம் போன்றவை யும் உண்டாம்.

வேதத்தை நன்றாக அறிந்து கொள்ள பிரதி சாக்கியத்தை அறிவது அவசியமாம். அதைவேதவியாகரணம் என்கிறார் கள். இலக்கணம்தான் வியாகரணம் என்பர். ரிக்வேத சாக்கியம் பார்ஷத சூத்திரம் என்று பெயர். எழுதியவன் சவுனக ரிஷியாம். சுக்லயாஜூர் வேதத்தின் பிரதிசாக்கியம் எழுதியது காத்தியாயனன். சாம வேதத்திற்கான பிரதிசாக் கியம் புஷ்ப சூத்தரிம். இதை எழுதியவர் புஷ்ப ரிஷி, அதர்வணத்திற்கு பிரதி சாக்கியம் இல்லையாம்.

“அக்னி மிளே புரோகிதம் யக்ஞஸ்ய தேவமிருத் விஜம்“ என்பது ரிக்வேதத்தின் முதல் வரியாம். இதன் பொருள், புரோகிதனான நான் யக்ஞதேவ அக்னியை நமஸ்கரிக் கிறேன் என்பதாம். ஆரியர் சடங்கில் நெருப்புக்குத்தான் முதலிடம். எதையும் பொசுக்கும் அல்லவா?

முதல் வரியை பதம்பதமாகப் பிரித்துச் சொல்ல வேண் டுமாம். அக்னிம் ஈனே, புர.ஹிதம் யக்ஞஸ்ய, தேவம், ரிக்விஜம் எனக் கூறவேண்டுமாம். சவுனக ரிஷி என்பான் கூற்றுப்படி இளமையுடன் பலம் உள்ளவர்களால்தான் வேதம் படிக்க முடியுமாம். தமிழ் போல் அல்லாது சமஸ் கிருதத்தை அடிவயிற்றிலிருந்து உச்சரிக்க வேண்டும். பிரம்மசாரியாய் மித வாழ்க்கை உள்ளவனுக்கு வலு இருப்ப தால் அவனால்தான் வேதமந்த்ரங்களை ஓதவும் சொல்ல வும் முடியுமாம்.

வேதம் படித்துப் பண்டிதைகளாகப் பெண்கள் 24 பேர் வேதகாலத்தில் இருந்தார்களாம். பிறகு ஏன் பிற்காலப் பெண்கள் படிக்கத் தடை செய்யப்பட்டனர் என்ற கேள்வி எழுகிறது. பதில் சொல்ல ஆள் இல்லை.

ஆரியர்களின் வாழ்க்கையில் செய்தே தீரவேண்டிய சடங்குகள் (ஸம்ஸ்காரங்கள்) மொத்தம் 16 ஆகும். கர்ப்ப தானம், பும்சவனம், சீமந்தம், ஜாதகர்மம், நாமகரணம், சூடா கர்ணம், நிஷ்கிரமணம், அன்னப்பிராசனம், கர்ணபேதம், உபநயனம், வேதாரம்பம், சமாவர்த்தனம், விவாஹம், வானப்பிரஸ்தம், சன்னியாஸம், அந்தியேஷ்டி ஆகியவை யாம். இவை பார்ப்பனர்க்கு மட்டுமே உரியவை.

மேலை நாட்டுக்காரர் ஒருவர் (வில்லியம் ஆர்ச்சர்) கூறியவாறு வேதங்கள் இந்தியர்களின் கலாச்சாரக் காட்டு மிராண்டித் தனத்தின் அடையாளம் “என்று சரியாய்த்தான் சொல்லியிருக்கிறார் என்பதை இவர்களின் யக்ஞங்கள் (யாகங்கள்) ஸம்ஸ்காரங்கள் மூலம் நிரூபணமாகின்றது. பார்ப்பனர்களே ஒத்துக்கொண்டவாறு,” ரிக் வேதத்தின் முக்கியத்வம் பல காலங்களுக்கு முன்பே ஓரம் கட்டப்பட்டு விட்டதாம். சம்ஹிதை என்ற பெயரில் துக்கடா மந்திரங் களின் தொகுப்பு மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறது என்கிறார்கள்.

இதிஹாசங்களும் புராணங்களும் பார்ப்பனரல்லாத மக்கள் தெரிந்து கொள்வதற்காக எழுதப்பட்டன என்கிறார் கள். ஆனால் அவை, ஒரு குறிப்பிட்ட அளவு ரிக் வேதத்தின் வைதீக மதம், தத்துவங்கள், கலாச்சாரம் ஆகியவைகளை அழித்துவிட்டன என்கிற கருத்தும் உள்ளது. (வடுவூர் நாராயணன் எழுதிய “வேதங்களும் உபநிஷதங்களும்“ நூல் - பக்கம் 55) ரிக் வேத மொழியான (பழைய) ஸம்ஸ் கிருதம் எளிதில் புரிந்து கொள்ள முடியாத சொற்களைக் கொண்டதாம். ஆரியரல்லாத மக்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லையாம். கர்மாக்களிலும் கடவுளிட மும் பற்றில்லாதவர்கள் இதிஹாஸக்காரர்களின் ரிக் வேதத் துடன் உள்ள தொடர்பை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லையாம். அதே சமயம், இதிஹாஸக்காரர்களின் விளக்கங்களை ஏற்க ரிக்வேதம் தயாரில்லையாம். வேதங் களின் அடிப்படை நோக்கம் அறியாமை இருளை அகற்று வதாம். ரிக்வேதக் கடவுள்கள் எல்லாமே சுத்த சுயம் பிரகாச மானவையாம். ரிக் வேதத்திற்கான விளக்கங்கள் வேதத் தின் அறிவுசார்ந்த விளக்கங்களை அழித்துவிடுகின்றன வாம் (எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்பது இது தானோ?)

ரிக் வேதத்தின் ஏழாம்பகுதி புருஷசூக்தம். அதன்படி பிரபஞ்சம் முழுமைக்கும் ஒரே கடவுள். பரம புருஷன் என்றும் பெயராம். அதற்கு ஆயிரம் தலைகள். (ஸகஸ்ர சீருஷ புருஷ) இதற்குத்தான் யாகங்களில் உயிர்ப்பலி தரப்படுகிறது. மக்களின் மொழியில் வேதம் இல்லாததால், பரவவில்லை. அதே வேளையில் கவுதம புத்தர் மக்களின் மொழியான பாலி மொழியில் பேசியதால் மக்கள் கூட்டம் அவர் பின்னால் சென்றதாம். புத்தர் கடவுள் என்பதை மறுக்கவுமில்லை, ஆதரிக்கவுமில்லை. என்றாலும் மக்கள் அவரைப் பின்பற்றினர். வேதத்தைப் படிக்கவில்லை. புறக் கணித்தனர். அதைவிட முக்கியமான காரணி என்ன வென்றால், ரிக் வேதப்பாடல்களில் கருத்து ஒற்றுமை இல்லை, பல ரிஷிகள், பல்வேறு காலங்களில் எழுதியவை கதம்பமாகக் கட்டப்பட்டுக் காட்சி அளிப்பதால் முரண் பாடுகளின் மொத்த உருவமாக உள்ளது என்று பார்ப்பனர் சப்பைக்கட்டு கட்டுகின்றனர்.

ரிக் வேதத்தில் 8 அஷ்டகங்கள், 10 மண்டலங்கள், 64 அத்யாயங்கள், 85 அனுவாகங்கள், 1017 சூக்தங்கள், 2024 வர்க்கங்கள் 10647 ரிக்குகள், (பாடல்கள்) உள்ளன. கடவுளை அறிமுகப்படுத்துபவை ‘ருக்‘. பல ருக்குகளைக் கொண்டது சூக்தம். ஒரு சூக்தத்தில் ஒரு தேவனோ அல்லது பல தேவர் களோ இருக்குமாம். இந்த சூக்தங்களுக்கு ஒரு ரிஷியாம். அவருக்குத்தான் சூக்தத்தின் பொருள் தெரியுமாம்.

ஆனால் அவன் சொல்லமாட்டானாம். ஒரு ஈசன் உண்டு என்று எல்லா ரிஷிகளும் சொல்கிறார்கள். (பதிரேக ஆசித்) ஒருவனே தேவன். அவன்தான் பரபிரம்மம் என்கிறது ரிக்வேதம் “ஒருவனே தேவன்” என்று திருமூலன் கூடச் சொல்லியிருக்கிறான், யார் அந்தத் தேவன்? எது அந் தத் தேவன்? மும்மூர்த்திகள் என்கிறார்களே, அவையா? சிவனா? விஷ்ணுவா? பிரம்மனா? எவன்? ஒன்று மட்டும் தெரிகிறது. சிவன் எனும் கடவுள் ரிக்வேதகாலத்தில் இல் லவே இல்லை, அது புதுச்சரக்கு என்பது. ரிக் வேதம் முழு வதும் அக்னியும் இந்திரனும் மட்டுமே பேசப்படுகின்றன. அக்னி என்றால் நெருப்பு. இந்திரன் என்றால் தேவர்களின் தலைவன். தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுக்கப்படுபவன். அதனால் அடிக்கடி மாறுபவன், ஆனால் எவன் இந்திரனாக வந்தாலும், அவனுக்கு மனைவியாக இந்திராணி இருப் பாள். எவ்வளவு ஒழுக்கம் பாருங்கள். புகழ் பெற்ற ரிக்வேத கால ஒழுக்கம் பாருங்கள்.

 (தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக