செவ்வாய், 23 மார்ச், 2021

ஒழுக்கக் கேடான திருமண மந்திரங்கள்

இந்து மதத்தில் ஒழுக்கக்கேட்டிற்கு இரு எடுத்துக் காட்டுகளைக் குற்றக் கூண்டில் நிறுத்தினார் திராவிடர் கழகத் தலைவர். அதற்குச் சாட்சியமாக மறைந்த காஞ்சி சங்கராச்சாரியாரின் ஆலோசகரும், ஒரு நூற்றாண்டை எட்டிப் பிடித்தவருமான அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரை சாட்சிக்கு அழைத்தார்.

இந்து மதம் எங்கே போகிறது?' என்ற அவரின் நூலிலிருந்தே அதையும் எடுத்துக்காட்டினார் (பக்கம் 151-153).

திருமணத்தில் வாத்யார்கள் ஓதும் முரண்பாடான மந்த்ரங்களுக்கு மேலும் உதாரணம் சொல்கிறேன் என போன அத்யாயத்தில் சொல்லியிருந்தேனல்லவா!

அத்தகைய ஒரு மந்த்ரத்தைப் பாருங்கள்.

தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வ

யஸ்ஸாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ

யான ஊரு உஷதி விஸ்ரயாதை

யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்''

இது வேதத்தில் சொல்லப்பட்ட மந்த்ரம். இதை கல் யாண மேடையிலே பெண்ணையும், மாப்பிள்ளையையும் உட்கார்த்தி வைத்து சத்தமாக சொல்கிறார் வாத்யார். இந்த மந்த்ரத்தின் அர்த்தம் புரிந்தால், அந்த வாத்யாரை நீங்கள் வாத்சாயணர் என்றுதான் அழைப்பீர்கள்.

அப்படி என்ன சொல்கிறது இந்த மந்த்ரம்? நான் அவனை கட்டிப் பிடிப்பேன். அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை சரியாகப் பொருந்தச் செய்யுமாறு... தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்....

இந்த மந்த்ரத்தின் அர்த்தத்தை இதைவிட நாகரீகமாக சொல்ல முடியாது. விளக்கமாக நான் சொல்லியிருப்பேன் என்றால்... என் மீதும் என் வயதின் மீதும் உங்களுக்கு இருக்கும் மரியாதை போய்விடும். அப்படிப்பட்ட மந்த்ரம் அது.

என் இஷ்டமித்ரர் ஒருவரது மகளின் கல்யாணம் சமீபத்தில் நடந்தது. அந்த பெண் மகாபுத்திசாலி. சமஸ்கிருதம் பயின்றவள் அவள் மணமேடையிலே உட்கார்ந்திருக்கும் போது

வாத்யார் இந்த மந்த்ரத்தை உரக்கச் சொல்ல....

ஸ்வாமீ....  நிறுத்துங்கோ என்றாள் அவள். வாத்யார் வாயடைத்து விட்டார்.

இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமோ?..... பொண்ணும் மாப்ளையும் துணியில்லாம செய்யுற காரியத்தை.....  நீங்க பல பேர் முன்னாடி சொல்றேளே....

வாத்யார் அதன்பிறகு அந்த மந்த்ரத்தை சொல்ல வில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால், வாத்யார்கள் சடங்குகள் என்ற பெயரில் என்ன அர்த்தம் என்றே தெரியாமல்... பல மந்த்ரங்களை உச்சரித்து வருகிறார்கள் என்பதை சுட்டிக் காட்டத்தான்.

இதுபோல் இன்னொரு மந்த்ரம்

விஷ்ணுர் யோனி கர்ப்பயது தொஷ்டா ரூபானி பீமிசது

ஆரிஞ்சது ப்ரஜாபதி

தாதா கர்ப்பந்தாது.... இதன் அர்த்தம்... இன்னும் ஆபாசம்....!

விஷ்ணுர் யோனி கர்ப்பயது...' எனத் தொடங்கும் இந்த மந்த்ரத்தின் அர்த்தம்தான் என்ன?

பெண்ணானவளின் அந்தரங்க பாகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. யோனி, மத்யமம், உபஸ்தம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கிறது.

அதாவது, விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய தேவதைகள் இம்மூன்று பாகங்களிலும் உட்கார்ந்திருக் கிறார்கள். இவர்கள்தான்... ஆணும், பெண்ணும் தேக ஸம்பந்தம் - உடலுறவு கொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்கிறார்கள். அதாவது.... நாம் தேக ஸம்பந்தம் கொள்வதை கூட விஷ்ணு உள்ளிட்ட தேவதைகள் அருகில் இருந்து, இன்னும் சொல்லப்போனால் அந்த இடத்திலேயே இருந்து கவனிக்கிறார்கள்.''

இவ்வாறு ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதியுள்ளார்.
- தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் உரையின் ஒரு பகுதி
- விடுதலை நாளேடு, 23. 3 .2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக