வெள்ளி, 9 டிசம்பர், 2022

அட, பஞ்சப் பாண்டவப் புத்திரர்களே! (பதிலடிப் பக்கம்)

 பதிலடிப் பக்கம்

அட, பஞ்சப் பாண்டவப் புத்திரர்களே!

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

தொகுப்பு: மின்சாரம்

‘துக்ளக்'கில் ஒன்னரைப் பக்க நாளேடு என்னும் ஒரு பகுதி  - சகட்டு மேனிக்குப் பொய்ப் புழுக்கைகளை அவிழ்த்துக் கொட்டுவதுதான் அதன் பிழைப்பு.

மனுநீதி காத்த மாவீரன் - ஆ.ராசாவுக்கு வீரமணி பட்டம் என்பது அதன் தலைப்பு அது - எழுதிய பகுதி இதோ: (‘துக்ளக்', 9.10.2022)

"ஹிந்துக்களைப் கேவலப்படுத்திப் பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவுக்கு பெரியார் திடலில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், ‘மனுநீதி காத்த மாவீரன்' என்ற பட்டத்தை வழங்கி வீரமணி பேசியதாவது:

மனுதர்மம்

"மனுதர்மத்தில் சூத்திரர்கள் எப்படியெல்லாம் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதை எடுத்துக் கூறிய ஒரே காரணத்துக்காக ஆ.ராசாவை ஒட்டு மொத்த ஹிந்துக்களும் சேர்ந்து கொண்டு அரசியலிலிருந்தே ஒழித்துக் கட்டப் பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட அநீதி உலகத்தில் எந்த நாட்டிலும் நடக்காது.

பெரியார்

"பெரியார் இருந்திருந்தால், ஹிந்துக்களுக்கு இவ் வளவு சொரணை வந்திருக்குமா? ராசா என்ன தன்னு டைய கருத்தையா சொன்னார்? வர்ணாசிரமத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று பெரியார் சொன்ன தைத் தானே திருப்பிச் சென்னார்?

வகை

"மனுதர்மப்படி ஹிந்துக்கள் எத்தனை வகைன்னு ஹிந்துக்களுக்கே தெரியாது, சூத்திர ஹிந்துக்கள் வேறு, பார்ப்பன ஹிந்துக்கள் வேறு, பா.ஜ.க. ஹிந் துக்கள் வேறு மதச்சார்பற்ற ஹிந்துக்கள் வேறு, மானம் கெட்ட ஹிந்துக்கள் வேறு, ரோஷம் கெட்ட ஹிந்துக் கள் வேறு.

மானம் கெட்ட ஹிந்துக்களைப் பற்றி ராசா பேசி னால், ரோஷம் கெட்ட ஹிந்துக்களுக்கு ஏன் ரோஷம் வருகிறது? சூத்திர ஹிந்துக்களுக்கு சொரணை இல்லை என்று ராசா சொன்னால், பார்ப்பன ஹிந் துக்கள் ஏன் சம்பந்தம் இல்லாமல் தலையிடுகிறார்கள்.

பட்டம்

"நீ ஹிந்துவாக இருக்கும் வரை உனக்கு புத்தி கிடையாது, மூளை கிடையாது, அறிவு கிடையாது, இதை நானோ ராசாவோ சொல்லவில்லை. மனுநீதி கூறுகிறது. வேறு மதத்துக்கு மாறினால் இவை எல்லாமே உடனடியாக வந்துவிடும். எங்களுக்கே அப்படித்தான் வந்தது. இதைத்தான் சுருக்கமாகச் சொன்னார் ராசா. அவரைப் பாராட்ட வக்கில்லாத மோடி அரசு, அவருக்கு எதிராக போராட்டம் நடத்து கிறது. பெரியார் இருந்திருந்தால் ராசாவுக்கு எந்த பட்டத்தை வழங்கியிருப்பாரோ, அதைத்தான் திராவி டர் கழகம் வழங்குகிறது." இதுதான் துக்ளக் கிறுக்கல்கள்.

2022ஆம் ஆண்டில் நம் கண்ணுக்கு எதிரே நடந்த நிகழ்ச்சியைப் பற்றி - இப்படி எல்லாம் அண்டப்புழுகு - ஆகாய புழுகுகளை அவிழ்த்துக் கொட்டுகிறார்கள் என்றால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த அவிட்டுத் திரிகள் எவ்வளவு சாக்கடைக் கும்பியை நனைத்து எழுதிக் குவித்திருப்பார்கள்.

திராவிடர் கழகத் தலைவர் சொல்லாததை எல்லாம், எப்படியோ  எடிட்டர் ஆன ஆடிட்டர் உளறிக் கொட்டியுள்ளார்.

மானங்கெட்ட ஹிந்துக்கள், ரோஷம் கெட்ட ஹிந்துக்கள் என்று ஆ.இராசா சொல்லாததை எல்லாம் குருமூர்த்தி அய்யர் ‘வாள்' ஆவேசமாக அவிழ்த்துக் கொட்டியுள்ளார்.

‘நீ ஹிந்துவாக இருக்கும் வரை உனக்கு புத்தி கிடையாது, மூளை கிடையாது' - இவையும் இராசா சொல்லாத குருமூர்த்தி குருக்கள் வாய் உதிர்த்தவை தான்.

குருமூர்த்திகளுக்கு அப்படி என்ன ஹிந்துக்கள் மீது ஆறாத துவேஷம்? இராசாவின் பெயரைச் சொல்லி இப்படியெல்லாம் ஹிந்துக்களைத் திட்டித் தீர்த்துள்ளார்.

ஆ.இராசா சொன்னது மனுதர்மத்திலிருந்து - அத்தியாயம் 8, சுலோகம் 415, 417லிருந்து.

யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குல வழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன் - இவன்தான் ஏழு வித தொழிலாளியாகிய சூத்திரன் - இவனிடமிருந்து பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம், யஜமான் எடுத்துக் கொள்ளத்தக்க பொருளையுடைய அந்தச் சூத்திரன் தன் பொருளுக்குக் கொஞ்சமும் சொந்தக்காரனல்ல.

அறிவு நாணயம் இருந்தால், ஒழுக்கத்தில் கொஞ்சமேனும் அக்கறை இருந்தால் ஆ.இராசா கூறிய ஆதாரப்பூர்வமான எடுத்துக்காட்டுகள் எல்லாம் பொய்யென்று செல்ல முன்வரட்டுமே பார்க்கலாம்.

பார்ப்பனர் அல்லாதரை சூத்திரர்கள் என்பார்கள் - சூத்திரன் என்றால் தேவடியாள் மக்கள் என்பார்கள், அதைக் கேட்டுக் கொண்டு பேன் குத்திக் கொண்டு இருக்க வேண்டுமா?

அட பஞ்சப் பாண்டவப்புத்திரர்களே, அறிவு நாணயமிருந்தால் ஆதாரத்தோடு மறுத்து எழுது - அல்லது சலாம் போட்டு ஓடிவிடு!

அட, துக்ளக் கூட்டமே

ஆ.இராசா சொல்லாதவற்றை எல்லாம் சொன்ன தாகக் கதைகட்டும் திரவுபதையின் பிள்ளைகளே! நீங்கள் வேண்டுமானால் அபாண்டங்களை அள்ளி வீசலாம்.

நாங்கள் நினைத்தால் உங்கள் புராண இதிகாச கழிசடைகளை வண்டி வண்டியாகக் கொட்ட முடியும். எடுத்துக்காட்டுக்கு இங்கே:

(ஆதாரம்: மத விசாரணை, ஆசிரியர் சுவாமி சிவானந்த ஸரஸ்வதி, பக். 133-138)

விஷ்ணுவின் சதி.

ஒரு காலத்தில் 'நாரத முனிவர் இமயமலையில் கடுந்தவமியற்றிக் கொண்டிருந்தார். இந்திரன் இதைப் பார்த்து பயங்கொண்டு தவத்தைக் கெடுத்துவரும்படி காமனைப் பலதரம் ஏவியும் கோரிய பலன் கைகூட வில்லை. ஆனால் நாரதருக்குத்தான் "தபஸ்வி" என்கிற செருக்கு ஏற்பட்டது. பின்னர் இதைக்குறித்த முழு விவரத்தை யும் சிவபெருமானிடம் தெரிவித்தார். சிவபெருமான் இதற்குச் செவிசாய்த்து பின் நாரதரே! என்னிடம் கூறிய மாதிரி விஷ்ணுவினிடம் கூற வேண்டாம் என்று உபதேசித்தார். பிறகு நாரதர் பிரம லோகம் சென்று பிரமனிடமும் தெரிவித்தார். பிறகு விஷ்ணு வினிடம் சென்று கதை முழுவதும் தெரி வித்துவிட்டு விஷ்ணுவை வணங்கி விடை பெற்றுப் பிரயாணமானார். நாரதர் சென்று கொண்டிருக்கும் வழியில் பெண்களாலும் ஆண்களாலும் நிறையப் பெற்ற இரு நகரங்கள் விஷ்ணுவினால் உண்டாக்கப் பெற்றன. அந்நகரங்களுக்கு அரசனான ‘சீலநிதி' என்பானின் மகள் ஸ்ரீமதி என்பவளுக்கு 'சுயம் வரம்' ஏற்பாடாயிருந்தது. இதற்காகப் பல தேசத்து மன்னர் களும் வந்திருந்தார்கள். நாரதர் இக்கன்னிகைமீது காதல்கொண்டு அவள் தன்னை விரும்புதற்கேற்ற அழகைப்பெற எண்ணி விஷ்ணுவினிடம் திரும்பி வந்து விஷயத்தைத் தெரிவித்து தங்களின் உருவத்தை அடியேனுக்கு அளித்தருளவேண்டும் எனப் பிரார்த் திக்க விஷ்ணு செய்த சதியாவது:-

நாரதமுனிவரின் இத்தகைய வார்த்தையைக்கேட்டு மது சூதனன் (விஷ்ணு) நகைத்தவராய் பரமசிவனு டைய பிரபுத்தன்மையையும் நினைத்து தயவுடன் மறுமொழி பகர்ந்தார். (சு-30)

"முனிவரே; உமது விருப்பத்திற்குரிய இடம் எதுவோ அங்கு செல்வீராக, உமது விருப்பத்தை நான் நிறைவேற்றுவேன். ஏனென்றால் நோயுற்றவனுக்கு வைத்தியன்போன்று நீர் எனக்கு மிகவும் பிரியமுடை யவர் (சு-32)

இவ்வாறு கூறி அந்நாரதருக்கு குரங்கின் முகத் தையும் தனது ஸ்வரூபத்தையும் (சதுர்புஜம் முதலியன) அளித்து மறைந்தருளினார். (சு-32)

சிவபுராணம் ருத்ரஸம்ஹிதா சிருஷ்டி கண்டம்.

அத்தியாயம் 3, சுலோகம் 30-31-32).

சகோதரர்களே! விஷ்ணுவின் சதியைப்பார்த்தீர் களா இவ்வஞ்சகனான விஷ்ணுவின் இனிய மொழி களில் மயங்கிய நாரதர் "அவசரக்கோலம் அள்ளித் தெளி" என்னும் பழமொழிக்கிணங்க ஸ்ரீமதியின் சுயம்வர மண்டபத்தை அடைந்தார் பாவம்! கண்ணாடி யில் தனது முகத்தை முதலில் பார்த்துவிட்டுப் பின்னர் சுயம்வரத்திற்குச் சென்றிருக்கலாகாதா ஓய் நாரதரே! "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்னும் பழமொழி உம்மைப்பற்றி தான் எழுந்தது போலும்.

வாசகர்களே! பின்னர் நடந்ததையும் கேளுங்கள்.

"அழகிய இலக்கணங்களையுடைய அவள் (ஸ்ரீமதி) அச்சுயம்வர மண்டபத்தின் நடுவில் பொன்னி னாலாக்கப் பெற்ற மாலை ஒன்றைக் கையிலேந்தி இலட்சுமிதேவியைப்போல் தோன்றினாள். (சு-45)

விஷ்ணுவின் சரீரமும் குரங்கின் முகமும் உடைய நாரதமுனியைக் கண்ணுற்றுக் கோபங்கொண்டாள். (சு-46)

தன் பார்வையை அந் நாரதனிடத்திலிருந்து திருப்பி சந்தோஷத்தோடு (மற்றொருவனிடம் சென்றாள். (சு-47)

அச்சமயம் அரசவுருவோடு விஷ்ணுவானவர் அங்கு வந்தார். ஆனால் அவளால் மட்டும் விஷ்ணு காணப்பட்டார் வேறு யாரும் பார்க்கவில்லை. (சு-49)

பின்னர் விஷ்ணுவைக் கண்டு மனம் மகிழ்ந்து அக்கட்டழகி அம்மாலையை அவன் கழுத்தில் சாற்றினாள். (சு-50)

(சிவபுராணம் ருத்ரஸம்ஹிதா சிருஷ்டி கண்டம் 

(அத்தியாயம் 3)

வாசகர்களே! விஷ்ணுவானவர் தன்னை நம்பின பக்தசிரோமணியான நாரதமுனியையே இவ்வாறு சதியால் ஏமாற்றினாரென்றால் அத்தகையார் அசுரர் களை ஏமாற்றிக் கொலை செய்தது ஆச்சரியமல்ல. இவ்வாறு ஜனங்களை ஏமாற்றித் துன்புறுத்துவதனாற் போலும் விஷ்ணுவிற்கு "ஜனார்த்தனன்" என்னும் பெயர் வந்தது. (ஜனார்த்தனன் ஜனங்களைத் துன் புறுத்துகிறவன்).

பிறகு அப்பெண்னைத் தூக்கிச் செல்லத் தலைப் பட்டார். அச்சமயம் நாரதர் மிகவும் துக்கித்து தன்னைச் சதிசெய்த அவ்விஷ்ணுவைப் பலவாறு தூற்றி சாபங்கொடுத்தார்,

"அரியே! நீ மிகக்கொடியவன். உலகத்தை வஞ்சிப்பவன். பிறனுடைய ஆனந்தத்தைப் பொறாதவன், துர்ப்புத்தி அழுக்கு படிந்த மனத்தினன். (சு-6)

பண்டு மோகினி வடிவெடுத்து அவர் ஏமாற்றி வாருணியைப் பருகும் செய்தாய். அமிர்தத்தை அவர்களுக்கு கொடுக்கவில்லை (வாருணி-கள்) (சு-7)

ஏமாற்று வித்தையில் உனக்குப் பிரியம் அதிகம். நீ நன்னடத்தையுடைபவனல்லாதிருந்தும் பிரபுவினால் சுவதந்திரனாகச் செய்யப்பட்டிருக்கிறாய் (பிரபு-பரமசிவன்) (சு-9)

அரியே! அதை (உன் வஞ்சனையை) அறிந்த நான் இப்போது உன்னைச் சிக்ஷிக்கின்றேன். ஏனென்றால் இனிமேல் நீ இத்தகைய குற்றத்தைச் செய்யலாகாது. (சு-12)

மாயையால் மயக்குற்ற முனியானவர் இவ்வாறு மொழிந்து சினத்தினால் வெறுப்புற்று தனது பிரம தேஜஸை வெளிப்படுத்திக் கொண்டு விஷ்ணுவைச் சபித்தார். (சு-14)

பெண்ணின் பொருட்டு என்னைத் துன்புறச் செய்தாய். எந்த வுருவுடன் என்னை வஞ்சித்தனையோ அவ்வுருவோடு துக்கத்தை அனுபவிக்கும் மனுஷனா கக் கடவாய். அன்றியும் எந்தப் பிராணியினுடைய முகத்தை எனக்குக் கொடுத்தாயோ அவை அப்போது உனக்கு உதவி செய்யட்டும். (சு-16)

பிறருக்குத் துன்பத்தைத் தரும் நீ பெண்ணைப் பிரிந்து துன் புறுவாயாக, அறியாமையினால் மயங்கிய திரிவாயாக. மனுஷனைப் போன்று (சு-17)

(ருத்ரஸம்ஹிதா சிருஷ்டி கண்டம்.)

அத்தியாயம் 4.

வாசகர்களே! இத்தகைய இழிதன்மையையுடைய விஷ்ணுவை இறைவனாக ஏற்றிப் போற்றுவதனால் அடையும் பயன் யாது? "யதா ராஜா ததா ப்ரஜா' இம்மூதுரையின் அர்த்தப்படிக்குள்ள பிரயோஜனம் தான்,

பிரமதேவனின் மற்றொரு விளையாட்டும் 

காமதேவனுடைய பிறப்பும்,

பிரமதேவர் தனது புத்திரனான நாரதமுனிவரிடம் கூறுகின்றார்:-

ஓ முனியே பிரமதேவனாகிய நான் எப்போது எனது மனதிலிருந்து மரீசி, அத்ரி, புலஹன், புலஸ்தி யன், அங்கிரஸ் க்ரது, வஸிஷ்டன், நாரதன், தக்ஷன், பிருகு என்னும் புத்திரர்களைத் தோற்றிவித்தேனோ அப்போது என் மனதினின்றும் அழகிய பெண் ஒருத்தியும் தோன்றினாள் (சு.18-19)

அவள் சந்த்யா, திவக்ஷாந்தா சாயம்சந்த்யா, ஜபந் திகா முதலிய பெயர்களால் அறியப்படுபவள். முனி களின் மனதையும் மயக்குபவள் (சு-20)

அவளுக்கொப்பாக மற்றொரு அழகி சுவர்க்கம், பூமி, பாதாளம் என்னும் மூவுலகங்களிலும் மூன்று காலங்களிலும் இல்லை. எல்லாக் குணங்களும் நிறைந்தவள். (சு-21)

அவளைக் கண்டதும் எழுந்து நான் என் மனதில் ஏதோ எண்ணினேன், தக்ஷன் முதலிய எனது புத்திசர் களும் யோசனை செய்யத் தொடங்கினார்கள் (சு-22)

 முனிசிரேஷ்டரே! இவ்வாறு எண்ணமிட்டுக் கொண்டிருந்த பிரதமதேவனாகிய என் மனதினின்றும் "காமதேவன்" என்னும் கட்டழகன் பிறந்தான். (சு-23)

நான் அவனுக்கு கட்டளையிட்டதாவது:- ஓ மகனே! நீ உன் உருவத்துடன் ஐந்து வகைப் பூக்களால் ஆக்கப்பெற்ற அம்புகளைத் தாங்கியவனாய் ஆண்களையும் பெண்களையும் மயக்கி "சனாதன சிருஷ்டி"யைச் செய்ய வேண்டும். (சு-37)

நான், வாசுதேவன், புருஷோத்தமனான தானு இம்மூவரும் உன் வயப்படுவார்கள் என்றால் மற்ற உயிர்களைக் குறித்துக் கூறுவானேன். (சு-39)

வாசுதேவன் = விஷ்ணு, தாணு = பரமசிவன்.

(சிவபுராணம் ருத்ரஸம்ஹிதா ஸ்தீகண்டம் அத்தியாயம் 2).

வாசகர்களே! இக்கதையைக் கவனியுங்கள். சிருஷ்டி கர்த்தாவாகிய பிரமதேவன் தான் பெற்ற பெண்ணின்மீது தனக்குற்ற மிருக விருப்பத்தைத் தனது புத்திரனுக்குக் கூறுகிறார். அப்புத்திரன் யாரென்றால் அச்சமயம் தன்னுடன் இருந்தவர்களும் தன்னைப் போன்ற படிற்றொழுக்கத்தினர்களுமான பல பிள்ளைகளுள் ஒருவன். ஆனால் பல்லாண்டு களுக்குமுன் நடந்த இவ்வற்புதம் தமது அரும் புதல்வன் மறந்துபோயிருந்தால் என்செய்வது. மூவுல கங்களுக்கும் "வார்த்தாவிதரணம்" செய்பவரல்லவோ தனது புதல்வரான நாரதர் ஆகையால் நினைப் பூட்டுகிறார் போலும். இப்பிரமதேவனின் அறிவே அறிவு. இவரைக் கடவுளாகக் கூறும் புராணங்களின் பெருமைக்கும் அவைகளைப் படித்து ஆனந்தமுறும் பக்தசிரோமணிகளின் பாக்கியத்திற்கும் ஒப்பும் இணையும் உண்டோ.

எடுத்துக்காட்டுக்குத்தான் இவை. சீண்டினால் உங்கள் ‘ஹிந்து'வின் குப்பை வண்டி பூமிக்கும் வானுக்குமாகக் கொட்டிக் கிடக்கும் நிலை ஏற்படும்!

நீங்கள் கிறுக்குவது பொய்யில் பிறந்த பித்தலாட்டமே! நாங்கள் எழுதுவதோ நீங்கள் எழுதிக் குவித்த ஆதாரங்களின் அடிப்படையில்!

வாழை இலைகள் முள் செடியோடு மோத ஆசைப்பட வேண்டாம்! எச்சரிக்கை!!