வியாழன், 5 செப்டம்பர், 2019

இதுதான் ஆரியர் கலாச்சாரம்



இந்துமதம் தான் ஆத்மார்த்த அரங்கம்; பாரதக் கலாச்சாரத்தின் ஊற்று என்றெல் லாம் கதையளக்கிறார்கள் பார்ப்பனர்கள்.

அவர்களது புராணங்களும் அதில் வரும் தேவர்களும் கடவுள்களும் எவ் வளவு ஆபாசத்தில் நெளியும் புழுக்களாக இருக்கின்றனர் என்பதை அவாளது புராணங்களும் இதிகாசங்களும் கூறுவதை அப்படியே கீழே தருகிறோம்.

யாகத்திலடிக்கும் யோகம்

அஸ்வமேதம், அஜமேதம் போன்ற யாகங்களில் யாககர்த்தாவின் பத்தினியை யாக மிருகத்துடன் புணர வைக்கும் வேலையை யாக கர்த்தாவும் யாகப் புரோகி தர்களும் சேர்ந்து செய்வர்.

பன்றியுடன் சேர்ந்த ...

பூமியை பாய்போலச்சுருட்டிக்கொண்டு கடலில் போய் ஓளித்த இரண்யாஷனைப் பன்றி வேடத்தில் சென்று விஷ்ணு கொல்ல, இப்பன்றியைக்கண்டு பூதேவி மோகித்துக் கலவி செய்ய இதன் பலனாக நரகாசுரன் பிறந்தான்

பிரம ‘லிங்க’ லீலை

பிரம்மன் சரஸ்வதியைப் படைத்தான் அவளழகைக் கண்டு மோகித்து, அவள் பயந்தோடியும் விடாமல் அவளைப் புணர்ந்து தன் மனைவியாக்கிக் கொண் டான், தான் படைத்த மகளையே இவ்வாறு மனைவியாக்கிக் கொண்டதைப் பரிகசித்த முனிவர்களாகிய மரீச புத்திரர் 6 பேரையும் சினந்து, அசுரர்களாகுமாறு சபித்தான். இதே போன்று இந்திரன் வேண்டுகோளின் மீது திலோத்தமையைப் படைத்து அவளையும் மோகித்துக் கூடினான்.

உறிஞ்சும் “சிரிஞ்” (Syringe)

பிரம்மன் இதே போன்று தாமரை மலரிலிருந்து பத்மை என்ற பெண்ணைப் படைத்து அவளைப் புணர முயல அவள் எவ்வளவோ கெஞ்சியும் விடாமல் அவளைப் பலவந்தமாகக் கற்பழிக்க அவள் அதனால் கருக்கொள்ள தேவர்கள் இதை யறிந்து நையாண்டி செய்ய இதைச்ச கிக்காத பிரம்மன் மீண்டும் அவளைப் புணர்ந்து அவள் கருவிலிருந்த தன் விந்துவைத்தான் ஆண்குறி மூலம் உறிஞ்சி இழுத்து விட்டான்

பரகதியல்ல - ஈனகதி!

(தாயை மகன் புணர்ந்தாலும் முக்தி நிச்சயம் என்பதன் மூலம் தாயைப் புணர்பவர்கள்  - ஈன சாதிப் பார்ப்பனர்கள்)

புராணத் தகவல்

பெற்ற தாய் மீது மோகங்கொண்டு அதற்குப் பாதகமாயிருக்கும் தந்தையைக் கொன்று தாயுடன் கலவி செய்து இன்ப வாழ்வு நடத்திய ஒரு பார்ப்பன பையனுக்குப் பரமசிவன் முக்தியளித்ததாகத் திருவிளை யாடல் புராணம் கூறுகிறது.

(பிறர் மனைவிகளுடன் கலவி செய்து அடையும் இன்பமே இன்பம்! இது தான் பார்ப்பனரின் ஒழுக்கம்)

அழகே! ஆபத்தே!!

தாருகா வனத்து ரிஷி பத்தினிகள் அழகிகள் என்பதற்காகப் பரமசிவன் அவர்களை மயக்கிப் புணர்ந்து அவர்கள் கற்பை அழித்தான்.

தாத்தா கூத்து

பிரமனோ தன் பேத்தியாகிய தாட்சா யிணியின் அழகைக் கண்டு மோகித்து வீர்யத்தை விட்டான்.

பரமசிவன் மனைவியாகிய பார்வதி தேவி மீது பிரமன் காமுற்று பரமசிவனைப் போல் 5 தலைகளுடன் சென்று அவளை அணைத்தான். கவுரி கல்யாணத்தில் அவள் தொடை அழகைக் கண்டு காமுற்று விந்தை விட்டான் . அசுவமேத யாகம் செய்யத் தொடங்கி அதற்கு வந்திருந்த தேவ பத்தினிகளைக்கண்டு காமுற்று வீர்யம் விட்டான். விந்தை விட்டனர்; ஆனால் நொந்து கெடவில்லை

இந்திர சபையில் ஊர்வசி நடனமாட பிரமன் அவளைப் பார்த்து மோகித்து வீர்யத்தை வெளியே விட்டான்.

துரோணரின் மனைவி கிருபியின் அழகினை அறிந்த பரமசிவன் அவள் மீது காம வெறிகொண்டு அவளை நிர்வாணமாக நிற்கவைத்துப் பார்த்து வீர்யத்தை விட, அதன் பலனாக அஸ்வத் தாமன் பிறந்தான்.அபலை அகலிகை?

கௌதம முனிவர் மனைவி அகலிகை அழகி எனக் கேள்விப்பட்ட இந்திரன் இரவு நடுசாமத்தில் முனிவரை ஏய்த்து வெளியேறச்செய்து, அம்முனிவர் போல் இந்திரன் வேடம் பூண்டு, அகலிகையை புணர்ந்தான். இதேபோன்று அவரவரின் கணவர்களைப் போன்று நடித்து இந்திரத் துய்மன் மனைவியையும், தேவசன்மன் மனைவியையும், கவி முனிவரின் மனை வியையும், பாரிஷதன் மனைவியையும் கற்பழித்தான்

அக்னிப் பிரவேசம்

அக்னிபகவான் சப்தரிஷிகளின் யாகத் திற்குச் சென்று அந்த ரிஷிகளின் மனை விகள் மீது மையல் கொண்டான், சுதரிசனை என்பவளைப் பலாத்காரத்தினால் மணந்தான், சலந்திரன் மனைவி விருந்தை மீது மகாவிஷ்ணு மோகங் கொண்டு சலந்திரனைச் சூதால் கொன்று அவனைப் போன்று வேடம் பூண்டு விருந்தையைக் கற்பழித்தான்.



அனுசூயாவை அனுபவிக்க எண்ணி ...

அக்னி பகவானின் மருமகளை எமதர்ம பகவான் கண்டு மோகித்து அவள் கணவன் இல்லாத சமயத்தில் அவளைப் புணர்ந்தான். அனுசூயை அழகி என்று கேள்விப்பட்டு அவளைக் கற்பழிக்கவென்று பிரம்மா, விஷ்ணு , சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் புறப்பட்டு சென்று அவளை நிர்வாண மாக்கினர்.

காமக் கட்டாரிகள்

ஆண்கள் மட்டுமா - பெண்களும் ஆணழகில் ஈடுபட்டு கட்டித் தழுவி நீண்ட புணர்ச்சி செய்து தங்கள் காமத்தைத் தீர்த்துக்கொள்ளும் காமக் கட்டாரிகளாக இருக்கிறார்கள்.

ஆசை ... அரை டஜனுக்கு!

திரவுபதி மகாபதிவிரதைகளுள் ஒருத்தி இவளுக்கு 5 கணவர்கள் இவர்கள் போதா தென்று 6வதாகக் கர்ணன் என்பவனையும் மோகித்தாள்.

பொன் கிடைத்தாலும்

கிடைக்காத புதன் கதை

மகா பதிவிரதைகளுள் மற்றொருத்தி தாரை. இவள் தேவகுரு பிரகஸ்பதியின் மனைவி. இவள் தன் கணவன் ஊரில் இல்லாத சமயத்தில் தன் கணவரிடம் படிக்க வந்திருந்த சந்திரன் என்னும் மாணவனை மோகித்து அவனுடன் கலவி செய்து நீண்ட நாள் வரை அவனுக்கு ஆசை நாயகியா யிருந்து புதன் என்ற குழந்தையைப் பெற்றுக்கொண்டு மீண்டும் பிரகஸ்பதியின் மனைவியானாள்.

‘டூப்’ ஆக்ட்(Toop act)

கவி முனிவர் மனைவி முகுந்தைக்கு ருக்மாங்கதன் மீது மோகம் வந்தது. அவனோ இவளைச்சேர மறுத்து விட்டான் அவளுக்கு ருக்மாங்கதன் மீது மட்டற்ற மையல் ஏற்பட்டு அதே விசாரத்திலிருக் கையில் இதையறிந்த இந்திரன் ருக்மாங்கதன் போல வேடம் பூண்டு அவளைப் புணர்ந்து மகிழ்வித்தான் (வாலிபத்தில் 60,000 பெண்களைப் புணர்ந் தும் காமவேகம் தணியாத - கண்ணன்தான் கடவுளா? ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவர். இவன் சிறு பிள்ளையிலே வெண்ணெய் திருடி மத்தாலடிபட்டவன். வளர்ந்து பருவ வயதடைந்தவுடன் பெண் சாயல் எந்த வீட்டில் காணப்பட்டாலும் சரி உடனே திருட்டுத் தனமாக அப் பெண்ணைக் கூடியவர் இவ்வாறாகச் சுமார் 60,000 பெண்களைத் திருட்டுத்தனமாக - அவர்களுடைய  கணவர்களுமறியாமல் - கலவி செய்தவர்.

மதுவுக்கு விலக்கில்லை

தேவர்கள் சுரா-மேகா என்ற பெயரில் உயர்ந்த ரக கள்ளு குடித்தார்கள். தேவர்கள் சுராபானம் - சோமபானம் செய்தனர் (ஆதாரம்: இதிகாசங்கள் - புராணங்கள்)

சூதாடுவார்கள் - (இவர்களைக் கொண்டு தான் பார்ப்பனர்கள் ஒழுக்கம், நீதி புகட்டுகிறார்கள்)

சூதாடிகள்

கிருஷ்ண பரமாத்மாவின் ஆதரவு பெற்றவர்களும் இந்திராதி தேவர்களின் புதல்வர்களுமான தர்மராகியோர் தங்களின் மனைவியுட்பட எல்லாவற் றையும் சூதாட்டத்தில் வைத்துத் தோற்று, அதன் பலனாக, சூதாட்டத்தில் தோற்கப் பட்ட பொருளாகிய திரவுபதியை இராஜ சபையில் வைத்துச் சேலையை அவிழ்த்து மானபங்கம் செய்தனர் சூதாட்டத்தில் வென்றவர்கள்.

(பருவமடையாத சின்னஞ்சிறு சிறுமி களைக்கூட விடாமல் புணருவதா!)

கொலையைக் கற்பிக்கும் சம்பவங்கள் பல - காமவெறியால் விருந்தையின் கணவனை விஷ்ணு கொன்றான்.

பால்ய புணருத்தாரணம்

தக்கபருவமடையாத - ருதுவாகாத--மச்சகந்தி என்னும் பெண்ணைப் பட்டப்பகலில் நடு ஆற்றில் படகில் பராசரமுனி  காமுற்றுக் கற்பழித்து விட்டான்.

இதே போன்று குந்தி பருவமடையாத சிறுமியாயிருக்கையில் சூரியன் காமுற்றுக் கற்பழித்து விட்டான்.

இவ்வாறாக ஆணை ஆண் புணர்வதும் - மிருகப்புணர்ச்சி செய்வதும், மகளைத் தந்தை புணர்வதும் பெற்ற தாயைத் தனயன் புணர்வதும், பிறர் மனைவிகள் மீது மோகங்கொண்டு கற்பழிப்பதும், பிற புருஷர் மீது காமுற்றுக் கூடுவதும், திருட்டு மதுவருந்துதல், சூதாடுதல், கொலை செய்தல், பருவமெய்தாக் கன்னிப்பெண் களைக் கற்பழித்தல், அறிவுக்குப்பொருந் தாத விவாதங்களைக் கூறுதல் ஆகிய திருவிளையாடல்கள். இன்னும் ஆரியர் களுடைய புராண - இதிகாச சாஸ்திரங்களில் மலிந்து கிடப்பதையே நாம் சுட்டிக்காட்டு கிறோம். அந்த நு£ல்களை இன்னும் பார்ப்பனர்கள் தெய்வீக நூல்கள் என்றும் அந்நூல்களின் மொழியாகிய சமஸ் கிருதமே உயர்ந்த மொழி என்றும் கூறு வதை தமிழர்கள் நன்கு அறிந்திருக்கின்றனர்.

எனவே இந்த ஆபாசங்களையெல்லாம் கடவுள் பெயராலும் - மதத்தின் பெயராலும் சாஸ்திரங்களின்  பெயராலும் - நம் மக்களிடையே பரப்பி, தமிழர்கள் என்றும் மடமைப் படுகுழியிலிருந்து மீளா வண்ணம் தடுத்து வைக்கும் - வேலையைப் பார்ப்பனர், சனாதன வெறியர்கள் இன்றும் - செய்து கொண்டுதான் வருகின்றனர்.

- ‘விடுதலை’ (26.9.1971)

- விடுதலை ஞாயிறு மலர், 3. 8 .19