ஞாயிறு, 23 ஏப்ரல், 2023
கிறிஸ்தவம் இஸ்லாம் பற்றி பெரியார் விமர்சிக்கவில்லையா!
திங்கள், 23 ஜூலை, 2018
கிருத்துவ மதத்திலும் தீட்டு
பெண்களுக்கு மாதவிடாய் உடற்கூறு இயற்கையா? மாதவிடாய் பாவங்களின் பலனா?(கிருஸ்த்துவ பெண்களால் துணிவுடன் தூக்கி குப்பையில் வீசப்பட்ட புனித பைபிள் ? சட்டங்கள்)
--------------------------------------------------------------------------
லேவியராகமம் 15 அதிகாரம்
19 சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
20 அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.
21 அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
22 அவன் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
23 அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
24 ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும்.
25 ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக.
26 அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப்படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும்.
27 அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
28 அவள் தன் உதிர ஊறல் நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாள் எண்ணிக்கொள்வாளாக, அதின்பின்பு சுத்தமாயிருப்பாள்.
29 எட்டாம் நாளிலே இரண்டு காட்டுப்புறக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள்.
30 ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
31 இஸ்ரவேல் புத்திரர் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால் சாகாதபடிக்கு, இப்படி நீங்கள் அவர்கள் தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைக்கக்கடவீர்கள்
- A மாணிக்கவேலு மாணிக்கம் - முகநூல் பதிவு, 22.7.18
சனி, 21 ஜூலை, 2018
உறவு கொள்வது எந்த முறையில் - பழைய ஏற்பாடு
என் அன்பிற்கினிய கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் கூமுட்டைகளே நலமா.... உங்களிடம் சில கேள்விகளை கேட்கிறேன்...
லேவியராகமம் 18 மற்றும் 20 அதிகாரங்களில் யார் யாரெல்லாம் யாருடன் சயனிப்பது(உறவு கொள்வது) பாவம் என்று கூறப்பட்டுள்ளது..
ஒரு ஆண் தன் அம்மா தன் அப்பாவின் இரண்டாம் மனைவி மற்றும் அவருடைய மகள்கள் மற்றும் தன் சகோதரி தன் சகோதரன் மனைவி தன் மகள் மகளின் மகள் தன் மகனின் மகள் மகளின் மகள் தன் சகோதரனின் மகள் .. ஆகியோருடன் சயனிப்பது பாவம் என்று கூறுகிறது...
இப்போ இத யாரெல்லாம் மீறிருக்காங்கன்னு பாக்கலாம்..
1)ஆதியாகமம் 20:12 ஆப்ரஹாமுக்கு சாராய் தங்கை முறை...
2)ஆதியாகமம் 19:31,36
லோத்தின் இரு மகள்களும் லோத்துடன் உறவு கொள்ளல்(இது அந்த அப்பாவிற்கு தெரியாது பரவாயில்லை இருக்கட்டும்)
3)ஆதியாகமம் 24:47
ரெபேக்காள் ஈசாக்கிற்கு மகள் முறை..
4)ஆதியாகமம்38:8
யூதா மகன் ஓனான் தன் அண்ணன் மனைவியுடன் உறவு கொள்ளல்
5)யூதா தன் மறுகளுடன் உறவு கொள்ளல் (இது மறுமகள் என அவனுக்கு தெரியாதாம்.. ஆனால் மருமகளுக்கு தெரியும் அல்லாவா... பரவாயில்லை)
இதில் நான் கேட்பது இவர்களெல்லாம் விதி மீறினார்கள் தானே... அவர்களுக்கு உங்கள் தேவன் or யெகோவா or பிதா என்ன விதமான தன்டனைகளை கொடுத்தார் என்று அறிய விரும்புகிறேன்...
இந்த மாதிரி கேவலங்கள் நிறைந்ததுதான் உங்கள் கிறிஸ்தவம்...
யாராவது ஆதியாகமத்தையெல்லாம் இப்போ யாரும் பெரிதாக எடுத்துகொள்வதில்லை என்று கூறுபவர்களுக்கு ...
:அப்படியெனில் பழைய ஏற்பாடை எரித்துவிட்டு அதன் வீடியோவை கீழே பதிவிடவும் என்று கமிட்டி சார்பாக தாழ்மையுடன் கேட்டுகொள்ளபடுகிறது...
-ஸ்கிப்பர் - ஆறாம் அறிவு முகநூல் பதிவு, 21.7.18