திங்கள், 21 டிசம்பர், 2020

கோமாதா' புத்திரர்களுக்கு...


பசு மாமிசத்தை உண்பதால் நமது முன்னோர்களின்

ஆன்மா ஓர் ஆண்டிற்குத்திருப்தி அடைகிறது. பசு

வேதங்களில் புனிதமானது.அதனால்தான் யஜூர் வேதத்

தில் மற்ற இறைச்சிகளை சாப்பிடுவதைவிட பசுவின்

இறைச்சி சாப்பிடுவது தேவர்களின் அருள் கிடைக்க எளி

தான வழி'' என்று கூறப்பட்டுள்ளது. (அர்த்தசாஸ்திரத்தை (அர்த்தசாஸ்திரத்தை மராட்டியில் மொழி பெயர்த்த மராட்டியில் மொழி பெயர்த்த தர்மசாத்திர விகார்'' என்ற தர்மசாத்திர விகார்'' என்ற

நூல், பக்கம் 180). நூல், பக்கம் 180).


கடினமான எலும்பு மற்றும் தட்டையான, வெட்ட முடியாத

குளம்புகளைக் கொண்ட ஒட்டகத்தைத் தவிர பசு, பசுங்கன்று

போன்ற மிருதுவான இறைச்சி சாப்பிடுவது தகுந்ததாகும்.

எந்தப் பசு தேவர்களுக்காகப் பலியிடப்படுகிறதோ,

அந்தப் பசுவை சோமன்விரும்புவான். ஓ! இந்திரனே,

உனக்குப் பலியிடப்பட்ட பசுவினால் நீ மகிழ்ந்திருப்பாய்.

ஆகவே, எங்களுக்கு அளவில்லாத செல்வங்களைத்

தருக!

(ரிக் வேதம், 10-16-92). (ரிக் வேதம், 10-16-92).


கன்னிகாதானம் தரும் பார்ப்பனர் திடமான பசுவைப்

பலியிட வேண்டும். விருந்தில் அனைவரும் மகிழ்ந்து ஆசீர்

வதிப்பார்கள்.(ரிக் வேதம் 10-85-13) (ரிக் வேதம் 10-85-13)


ரிக் வேதத்தில் பசுவை வெட்ட வேண்டும். யார் யாருக்

குப் பசுவின் எந்த பாகத்தின் கறியைத் தரவேண்டும் என்று

குறிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே வசிஷ்டர், துர்வாசர் உள்ளிட்ட

பல முனிவர்களுக்கு இளம்பசுங்கன்றுகளின் மென்மையான கறியின் பாகம் நன்கு சுடப்பட்டு உண்ணக் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு

வேதத்திலும், ஸ்மிருதியிலும் பசு மாமிசம் சாப்பிடுவது பாவம்

என்று எழுதப்படவில்லை.

நான் பசு மாமிசம் சாப்பிடுவேன். அது மிகவும் சுவை

யானது. அதுவே ரிஷிகளுக்குப்படைக்கப்பட வேண்டியது.''

(யக்ஞவல்கியர் சத்யத் (யக்ஞவல்கியர் சத்யத்

பிரமாணம் 3-12-21) பிரமாணம் 3-12-21)


இந்தப் பிரமாணம் என்பது வேதக் கிரியைகள், சுக்ல, யஜூர் வேதத்தோடு தொடர்புடைய வரலாறுகள், தொன்மங்கள் ஆகியவற்றை விளக்கும் ஓர் உரைநடை நூலாகும்.


இந்த நூலில்தான் சோம மற்றும் சுரா பானம் அருந்துபவர்கள்

சுரர்' என்றும், அதை அருந்தாமல் முகம் சுழிப்பவர்கள்

அ''சுரர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்து மதத்தின் வேதங்களும், சாஸ்திரங்களும் இவ்வாறு கூறியிருக்க, கோமாதா என்று கூறி பசுவதைத் தடைச்

சட்டம் கொண்டு வருகிறது மத்திய பி.ஜே.பி. அரசும், பி.ஜே.பி. ஆளும் மாநில

அரசுகளும் என்றால், இவர்களை எந்தப் பட்டியலில் கொண்டு போய் வைப்பது?

(இப்பொழுதுகூட பசு உள்ளிட்ட மாட்டுக்கறி ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருப்பவர்கள் இந்த சங்பரிவார்களே!)

ஹிந்துத்துவா பேசுவோர் தான் சிந்திக்கவேண்டும்.

நேர்மை என்பது சுட்டுப்போட்டாலும் இவர்களுக்கு

வராது என்பது மட்டும் நூறுவிழுக்காடு உண்மை!

- மயிலாடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக