வியாழன், 24 டிசம்பர், 2020

சூத்திரனுக்கு மொட்டை

#மொட்டை



உபவீதம்(பூணூல்),உத்தரீயம்(மேலாடை) ஸ்திரீ சூத்திரர்கள் நீக்குக.வேத மந்திரம், சிகை(தலை முடி),யஞ்ஞோபவீதம்(பூணூல்), சூத்திரன் தரித்தால் ராஜாவிற்கும் ராஜ்யத்திற்கும் நாசமுண்டாகும். 

-அகோரசிவாசாரியார் இயற்றிய சைவஷோடசப் பிரகாசிகை எனும் நூலில்!

சூத்திரனின் தலையில் முடி இருத்தல் கூடாது. ஸ்திரீகள் மேலாடை அணிதல் கூடாது.இப்படிப்பட்ட சாதி மத ரீதியான ஒடுக்கு முறைகள்தான் மன்னர் காலங்களில் நடைமுறையில் இருந்துள்ளது என்பதை சைவஷோடசப் பிரகாசிகை போன்ற நூல்கள் அறிவிக்கின்றன.

வைதிக சனாதன நூல்கள் பெண்களையும் சூத்திரனையும் இழிவுபடுத்துகின்றன என்பதற்கு மேலுள்ள நூலும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

குறிப்பு: மேலுள்ள சைவஷோடசப் பிரகாசிகை, ‘காரண ஆகமம்’ எனும் சைவ ஆகம நூலை மேற்கோள்காட்டிக் கூறுகிறது.

-தினகரன் செல்லையா முகநூல் பக்கம்,19.12.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக