வியாழன், 28 செப்டம்பர், 2023

மனுஷ்மிருதி கூறுவது என்ன?

‘சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும் யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம்.' (அ.11.சு13).

"யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைத் தண்டிக்கக் கூடாது.'
(அ.11.சு20).

'பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும்.' (அ.11.சு66).

‘ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ அதைத்தான் சூத்திரனைக் கொன்றால் செய்யவேண்டும்.' (அ.11.சு131).

"அதுவும் முடியாவிடில் வருணமந்திரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது' (அ.11.சு132).

‘க்ஷத்திரியன் இந்நூலில் சொல்லப்பட்டபடி ராஜ்ய பாரம் செய்வதே தவமாகும். சூத்திரன் பிராமணப் பணிவிடை செய்வதே தவமாகும்.' (அ.11.சு285).

'சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்தாலும் சூத்திரனேயாவான். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்தாலும் பிராமணனேயாவான். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார்.' (அ10.சு75),

'பிராமணரல்லாதவன் உயர்குலத்தோனுடைய தொழிலைச் செய்தால் அரசன் அவனது பொருள் முழுவதையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டைவிட்டுத் துரத்திவிட வேண்டும்? (அ10.சு96)

'சூத்திரன் இம்மைக்கும் மோக்ஷத்திற்கும் பிராமணனையே
தொழவேண்டும்.'(அ.10.சு122).

'பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும் உடுத்திக்கிழிந்த ஆடையும் கெட்டுப்போன தானியங்களும் சூத்திரனுடைய ஜீவனத்துக்குக் கொடுக்க வேண்டும்' (அ.10.சு125),

‘சூத்திரன் எவ்வளவு திறமையுடையவனா யிருந்தாலும் கண்டிப்பாய் பொருள் சேர்க்கக்கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் அது
பிராமணருக்குத் துன்பமாய்
முடியும்.(அ10.சு129)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக