ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

சமணரும்மனிதரன்றோ? - நாத்திகப்பதி


சமணர்களின் மீது சமணத் துறவி ஆச்சாரிய துளசிமீது  சனாதன இந்துமத வெறியர்கள் இன்று இந்த இருபதாம் நூற்றாண்டில் பாய்கிறார்கள். இவர்களது கொலை வெறிப் பாய்ச்சல் இன்று மட் டுமா? எத்தனையோ நூற்றாண்டுகளாக இதே பாய்ச்சலில்தான் இந்துமதவெறி பிடித்த பார்ப்பனர்கள் ஈடுபட்டிருக்கி றார்கள். இதை வரலாற்றுப் பூர்வமாக படம் பிடித்துக் காட்டுகிறார் கட்டுரை ஆசிரியர் - படியுங்கள்!
ஆச்சாரிய துளசி அக்னிப் பரீட்சை என்ற நூலை எழுதி வெளியிட்டார். அதை எதிர்த்து இந்த மத வெறி பிடித்த சனாதனக் கூட்டம் ராஜஸ்தானில் வன்முறையில் ஈடுபட்டனர்.
ஆச்சாரிய துளசியையும் அவரது சீடர்களையும் கொல்லவும் அவர்களது இருப்பிடங்களைத் தீயிட்டுக் கொளுத்த வும் வெறிபிடித்துத் திரிந்தனர்.
அத்தகு மதவெறியாளர்களை அடக்க தடியடி பிரயோகமும் நடந்தது. அதோடு பலர் கைதும் செய்யபபடடனர்.
மதம் மக்களை ஒருக்காலும் இணைக் கப்பாடுபடாது என்பதற்கு இதுவும் ஒரு அத்தாட்சி அல்லவா?
கண்ட இடத்தில் கழுத்தை அறு
சமணர்களை வாழ விடக் கூடாது! ஒழித் துக் கட்டியே ஆக வேண்டுமென்று எப்படி இன்றைய மதவெறியர்களுக்கு துணிவு வந்தது?
காட்டுமிராண்டிக் காலத்தில் எழுதி வைத்த இதிகாசங்களும் புராணங்களும் சமண ஒழிப்பை கடவுட் சேவையாகவும் சமயச் சேவையாகவும் அல்லவா வரு ணித்து இருக்கின்றன!
சமணர்களைக் கண்டவிடத்தில் கழுத்தை அறுத்துப் போட வேண்டும் என்று எவ் வளவு துணிச்சலாக அன்றே தொண்ட ரடிப் பொடியாழ்வார்- பாடியிருக்கிறார் கேளுங்கள்:=
வெறுப்போடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரி யனகள் பேசில்
போவதே நோயதாகி
குறிப்பெனக்கடையு மாகில்
கூடுமேல், தலையை ஆங்கே
அறுப்பதே கருமங்கண்டாய்
அரங்கமா நகருள்ளானே
உசுப்பிவிட்டு ஒழித்தனர்
மேலும் சமணரையும் சாக்கியரையும் எவ்வளவு இழிவாகவும், கொடூரமாகவும் ஏசிப்பாடி மக்களை அவர்கள் பால் உசுப்பி ஒழித்திருக்கிறார்கள் என்பதையும் கேளுங்கள்:
தருக்கச்  சமணரும் சாக்கியப் பேய் களும் தாள்சடையோன் சொற்கற்ற சோம் பரும் குனிய வாதரும் - நான் மறையும் நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீள் நிலத்தே பொற்கற்பகம் - எம் இராமானுசமுனி போந்த பின்னே என்று இரமாநுஜ நூற்றந் தாதி - பாட்டு 99இலும்)
துவரித்த உடையவர்க்கும் தூய்மையில்லாச் சமணர்க்கும் அவர்கட்கு அங்கு அருளில்லா அருளானை - தன்னடைந்த எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம்மனைக்கும் அமரர்க்கும் பிரானாரைக் கண்டதும் தென்னரங்கத்தே.
(என்று திருமங்கையாழ்வார் 6-ஆம் திரு மொழி - கைம்மானம் பாட்டு 8லும்)
பொங்கு போதியும், பிண்டியும் உடைப்புத்தர்
நோன்பியர் பள்ளியுள்ளுறை
தங்கள் தேவரும் தாங்களுமேயாக என்நெஞ்ச மென்பாய்!
எங்கும் வானவர் தானவர்
நிறைந்தேத்தும் வேங்
கடம் மேவி நின்றருள்
அங்கணாயகற்கு இன்று
அடிமைத் தொழில் பூண்டாயே.
(என்று திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி இரண்டாம் பத்து - பாட்டு 1லும்)
(போதி - அரசு; பிண்டி அசோகம்  புத்தர் - பவுத்தர் நோன்பியர் - ஆர்ஹதர்)
இலிங்கத் திட்ட புராணத் தீரும் சமணரும்
சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்
களும் மற்று நுந்
தெய்வ முமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி
வீசும் திருக்குரு கூரதனுள்
பொலிந்து நின்ற பிரான்
கண்டீர் ஒன்றும் பொய்யில்லை
போற்றுமினே.
(என்று நம்மாழ்வார் நான்காம் பத்து - பத்தாவது திருவாய் மொழி பாட்டு 5லும்)
சுட்டுத் தீய்க்க வேண்டாமா?
இவ்வாறெல்லாம் பாடி வைத்து இன் றுள்ளோரையும் அவைகளையே ஆதார மாகக் கொண்டு ஆடித் திரியும்படி ஊக்கு வித்திருக்கிறார்களே, அந்த ஆழ்வார்களை இன்று காண  இயலாமற் போனாலும் அவர்கள் இயற்றிய ஆட்சேபகரமான நூல்களை சுட்டுத் தீய்க்க வேண்டாமா? அல்லது குறைந்தபட்சம் தடையாவது செய்திருக்க வேண்டாமா? அன்றே அப்ப டிச் செய்யத் தவறிவிட்டாலும் இன்றா கிலும் செய்து முடிக்க வேண்டாமா?
உலகில் எங்கெங்கு நோக்கினும் முடி யாட்சி மறைந்து குடியாட்சி மலர்ந்துள்ள இக்காலத்திலுமா?
கடும் புலிவாழும் காடே நன்று
ஜனநாயகத்தின் மாட்சி மேலோங்கி யிருக்கிற இக்காலத்திலுமா?
எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், வாய்ச் சுதந்திரம், தொழில் செய் சுதந்திரம் அனைத்தும் அடுக்கடுக்காக அத்தனை மனிதரும் எவ்விதப் பாகுபாடுமின்றி அனுப விக்கலாமென்று அடிப்படை உரிமையாக வழங்கப்பட்டிருக்கிற இக்காலத்திலுமா?
இம்மாதிரி வன்முறைகள், எதுவா யினும் செய்தல் ஏற்புடைத்து, அவை களை ஆண்டவனே ஆமோதிப்பின் எழு மின்! சமணர்களை ஒழிமின்! என இதிகாச புராண காட்டுமிராண்டிச் செயல்கள் தாரளாமாக நடக்கின்றனவென்றால், கடும் புலி வாழும் காடே நன்றல்லவா? என்றுதானே எண்ணத் தோன்றுகிறது!
புத்தரை நினையுங்கள்
இன்னும் இப்படியெல்லாம் நடை பெறுகின்றன என்றால், இன்றைய ஆட்சி உண்மையிலேயே எல்லோராலும் அங்கீ கரிக்கப்பட்ட மதச் சார்பற்ற ஆட்சிதானா என்று சந்தேகிக்கச் செய்கிறதல்லவா?
அன்று இரண்டாயிரத்து அய்ந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே அசல் காட்டு மிராண்டித்தனம்  மண்டிக் கிடந்த அந்த நாளிலே இந்தியாவில் நாத்திகக் கருத்துக் களை சாத்வீகமாகவும், நாகரிகமாகவும் போதித்த புத்த பிரானை என்ன பாடு படுத்தியிருப்பார்கள்? அவர்களுக்கெல் லாம், புத்தரும் எவ்வளவு தொல்லைகளுக் கிடையே ஈடு கொடுத்திருப்பார் என்ப தைச் சற்று நினைத்துப் பாருங்கள்.
சைவக் கூட்டத்தின் பசப்பல்
தமிழகத்தில் அன்பே சிவம்என்று பசப் பிய சைவத் திருக்கூட்டத்தார்கள் எண்ணா யிரம் சமணர்களை ஈவிரக்கமின்றி கழு வேற்றிக் கொன்றார்கள் மதுரையில். அதே மதுரையில்தான் அன்று அவர்கள் செய் தவை தெய்வத்திருப்பணி என மதித்து, அவர்களது செயல்களைப் போற்றி இன் றும் ஆண்டுதோறும்  விழா கொண்டாடித் திரிகிறார்கள் என்றால் இந்த நாடு உருப்படுமா?
புத்த சமணக் கோயில்களை எல்லாம் இடித்துத் தள்ளி, கொள்ளையடித்த வர லாறுகள் எல்லாம் தேவார,  திருவாசக, நாலாயிரத் திவ்ய பிரபந்தம் ஆகிய நூல் களில் எல்லாம் மண்டிக் கிடக்கின்றனவே. உதாரணத்திற்கு திருமங்கையாழ்வாரின் அட்டகாசச் செயலைச் சற்று நோக்குங்கள்.
அவர்கள்தான் வாழப் பிறந்தவர்களா?
நாகப்பட்டணத்தில் பொன்னாற்செய்த ஒரு புத்த விக்ரஹமிருக்கிறது. அதைக் கொண்டு வந்து சின்னா பின்னமாக்கிக் கோயிலுக்குக் கோபுரம் முதலானவை கட்டலாம் என்று திருமங்கையாழ்வாரி டம் பரிஜனங்கள் யோசனை கூற, அவ் வாறே ஆழ்வாரும் நாகப்பட்டணத்திற் குப் போய்,
ஈயத்தாலாகாதோ? இரும்பினாலா காதோ? பூபயத்தால் மிக்கதொரு பூதத் தாலாகாதோ? தேயத்தே பித்தளை நற் செம்புகளாலாகாதோ! மாயப் பொன் வேணுமோ! மதித்துன்னைப் பண்ணு கைக்கே என்று அந்தப் பிம்பம் ஊளை யிடும்படி அபகரித்துக் கொண்டு வந்து பங்கப்படுத்தி, திருமதில்கள் கைங்கர்யத் துக்கு அர்ச்சிக்கும்படி உருக்கிப் பொன் னாக்கி அந்த திரவியத்தைக் கொண்டு திருமதில்கள் முதலாகிய சிகரபர்யந்த மாகப் பண்ணவேணும் என்று உபக்ர மித்து திருமதில்கள் கட்டுவித்தும் கொண்டு வந்தார்.
என்னும் பக்கம் 207ல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் டி. கோபால் நாயகரது 1925ஆம் வருட பதிப்பு. திருமங்கை யாழ்வார் வைபவம் என்ற தலைப்பில் காணப் படுவதைப் படிக்க சைவர்களும் வைண வர்களுந்தான் வாழப் பிறந்த மனிதர்களா? சமணர்கள், பவுத்தர்கள் ஆகியோர்களெல்லாம் சாகடிக்கப்பட வேண்டியவர்கள்தாமா?
இதுதான் அவர்கள் தொழும் கடவுளர் களின் விருப்பம் என்றால் சிவனும், விஷ்ணுவும் கடவுள்கள்தாமோ? கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை; கட வுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி; கட வுளைப் பரப்புபவன் அயோக்கியன் என்று தந்தை பெரியார் கூறுவதில் எவ் வளவு ஆழந்த உண்மை ஜொலிக்கின்றது பார்த்தீர்களா?
பசுத்தோல் போர்த்திய புலி!
இனியாகிலும் தெய்வத் திருச்சபை என்னும் பசுத்தோல் போர்த்திக் கொண்டு ஒரு மதத்தார் பிற மதத்தார் மேல் புலி போல் பாய்ந்து பற்பல இடையூறுகளும், வன்முறைச் செயல்களும், கொலைகளும் செய்யும் ஸ்தாபனங்களைத் தடை செய்ய ஆட்சி முனையுமா?
மனிதாபிமானத்தை ஓம்பாத மதம் ஒரு மதமா? அது இந்நாட்டிற்குத் தேவை தானா என்பதை ஒவ்வொரு குடிமகனும் நன்கு சிந்தித்து அமைதிக்கும் நல்வாழ்விற் கும் பாடுபடுவார்களாக.
-விடுதலை ஞா.ம.1.3.14

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

பசுவதை பாடுவோரே.. உங்கள் வேதங்களின் பசுவதை பாரீர்!

- இரா.கண்ணிமை

பார்ப்பனர்களின் முன்னோர்கள் ஆடு, மாடு மாத்திரமல்லாமல் - பன்றி, கழுதை, குதிரை, எருமை, மனிதன் வரை சாப்பிட்டதாக இவர்களே உண்டாக்கி வைத்திருக்கும் வேத, சாஸ்திர, மத ஆதாரங்களை மறந்துவிட்டு வக்கணை பேசுகிறார்கள் - என்று தந்தை பெரியார் புகன்றார்.
ஆம் ஆரியர்கள் சொல்லி வைத்த இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் - என்னும் நான்கு வேதங்களில் யாகம் என்ற பெயரால் உயிர் பலி செய்யப் பட்டிருக்கிறது.
இதோ... ஆதாரம்
இருக்கு வேதம்
இருக்கு வேதத்தில் யாகச் செயல்களை உறுதிப் படுத்தும் சுலோகம்:
யஞ்ஞேனவை தேவா; ஊர்த்தவம் ஸ்வர்க்கம், லோக மாயம் ஸ்தே பிபயுரஸ்மின், நேத் ருஷ்டவா மனுஷியாக ரிஷ்யஸ் சரனுப் (ஜத்ரேயப்ராஹ்)
மணம் த்விதீய பஞ்சிகா பிரதம காண்டம்
விளக்கம்: தேவர்கள் யாகஞ்செய்து சொர்க்கத்தையடைந்தார்கள். ஆகவே மனிதர்களும், ரிஷிகளும் யாகம் செய்யக்கடமைப் பட்டவர்கள்.
யாகத்திற்குரிய - உயிர்களை தூண்களில் பிணைத்துக்கட்டி மந்திரத்தைச் சொன்ன பிறகு, தலைமைப் புரோகிதனான (பார்ப்பனர்) அத்வாயுவின் கட்டளைப் பெற்றவுடன், யாகப்பசுவை, சமித்ரசாலா என்னும் பசுவை கொலைபுரியும் இடத்திற்குக் கொண்டு போய், பசுவைக் கொல்லும் சமிநா என்னும் புரோகிதன், முஷ்டி எனும் குறுந்தடியால் பசுவின் கழுத்தில் அடித்துக்கொலை செய்வான்.
பிறகு சுரா, இடர் ஸீனு, ஸவதீதி எனும் மரப்பலகையில் - பசுவைக்கிடத்தி தோலை உரித்து சதையை அரிந்து எடுத்து நெருப்பிலிட்டு - மீதி மாமிசத்தைப் புரோகிதர்கள் அனைவரும் பங்குபோட்டு எடுத்துக் கொள்வர். யாகப்பசுவை மந்திரம் சொல்லிக் கொன்றபின் அதை அறுத்தெடுக்கும் முறை மந்திரம்
இதோ:-
அந்தரே வோஷ்மாணம் வாரியத் வாதிதி
பசுஷ் வேதத் புராணான், ததாதி ஸ்யேனமஸ் யவக்ஷ;
க்குருணுதாத் ப்ரத்ஸா பாஹீசலா தோஷணீ கஸ்ய
லேவாம், ஸாச்சிந்ரே ஸ்ரோணீக வஷோரூஸ்
ரேகர்ணாஷ்டி வந்தா ஷட்விம்சதி ரஷ்யவங்காயஸ்தா
அனுஷ்டயோச்ய வயதாத்; காத்ரம் காத்தமஸ்
யானூனம். (ஐந்தேய பஞ்சிக 3 - காண்டம் 6)
இதன் பொருள்:
மார்பிலிருந்து பருந்தின் வடிவில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின் காலிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் காலிலிருந்து அம்பு வடிவாக இரண்டு துண்டுகளும்,  தோளிலிருந்து ஆமை வடிவமாக இரண்டு துண்டுகளும் அறுத்தெடுக்க வேண்டும். இவ்வாறே அந்தந்த அவயவங்களிலிருந்து இருபத்தாறு துண்டுகள் அறுத்தெடுத்துக் கொள்க என்பதாகும்.
புலால் உண்போரை, புலையர், தீண்டாதார் என்னும் பொய்க் குருக்களான - கள்ளக்குருக்கள் (ஆரியப் புரோகிதர்கள்) பசுக்களைக் கொன்று யாகம் செய்து, மந்திரம் சொல்லி அனைவரும் பங்கிட்டு இறைச்சியை புசிக்கும்போது தீட்டு எப்படி மறைந்ததென்பதை கேட்பார் இல்லையே!
மச்ச புராணத்தில் சொல்லியபடி யாகத்தில் பசுவை மட்டும் அல்ல; ஆடு, மாடு, குதிரை, பாம்பு மனிதன் ஆகிய அனைத்தையும் யாகம் செய்வதே முறையாய்க் காண்கிறது.
யசுர் வேதம்
யசுர் வேதத்தைப் படித்தவன் தான் அதர்வர்யு என்னும் யாக புரோகித பதவிக்கு ஏற்றவனாம். இப் பதவியை ஏற்றவனே புரோகிதர்க்கெல்லாம் தலைவன்.
யசுர் வேதம், கிருஷ்ண யசுர் வேதம், சுக்கில யசுர் வேதம் எனப் பெயர் கொண்டது. கிருஷ்ண யசுர் வேதத்தில் விவரித்துள்ள யாகக் கொலைகளுக்கு கணக்கேயில்லை. சில யாகங்களில், நாய், தித்திரி என்னும் பறவை, வெள்ளை கொக்கு, கருந்தவளை முதலிய பிராணிகளையும் கொன்று யாகபலி செலுத்த வேண்டும். பிராஹ்ம தேவனுக்கு பிராஹ்மனரையும் யாகம் செய்ய வேண்டும் (தைத்திரீயம் 3ஆம் காண்டம், 4ஆம் அத்தியாயம்)
கிருஷ்ண யசுர் வேத தைத்தரீய ஆரண்யம் என்னும் நூல்,  பத்து அதிகாரங்களையுடையது. இதன் ஆறாம் அத்தியாயம் பித்ருமேதம் என்பதை விளக்கிக் காட்டுகிறது. பிராமணர், சத்திரியர், வைசியர் இறந்தால் இவர்களை எரிக்கும் முறை இதில் உள்ளது.
கிருஷ்ண யசுர் வேதத்தில் முப்பது யாகங்கள் அடங்கியிருக்கின்றன. அவற்றில் சில:
ஸௌத்ராமணி- மதுவருந்தும் யாகம், சுராக்ரஹாமந்திரம் - லாகிரியருந்தும் யாகம்,
ஐந்த்ரபர  - இந்திரனுக்கு காட்டு புலி யாகம்
கோஸவம் - பசு, காளை யாகம், வத்ஸோபகரணம்- இளங்கன்று யாகம்
நஷ்த்ரேஷ்டி - தேவதை யாகம்,
புருஷயஜ்ரு - நரயாகம்,
வைஷ்ண பசு - விஷ்ணுவுக்கு ஆட்டுப்பலி,
அஸ்வமேதம் - குதிரை பலி யாகம்,
ரிஷிபாலம் பனவிதானம் - எருது யாகம் அஸ்வ, மனுஸ்ய அஜகோ - குதிரை, மனிதன், ஆடு, மாடு யாகம்.
சுக்கில யசுர் வேதம்
யசுர் வேதத்தில் - சுக்கில யசுர் வேதம் நாற்பது அதிகாரங்களைக் கொண்டது. யாகக் கொலை விளக்கத்திற்கு இது கிருஷ்ண யசுர் வேதத்திற்கு இணையானது.
இதில் அஸ்வலீலா பாஷாணம் என்பது மிக அருவருப்பான செயல் ஆகும். அஸ்வ மேத யாகத் திற்கு இருபத்தொரு தூண்கள் நட்டு, நடுவிலுள்ள தூணில் பதினேழு பசுக்களைக் கட்ட வேண்டும். மற்ற தூண்களில், தூண் ஒன்றுக்கு பதினைந்து பசுக்கள் வீதம், முன்னூறு பசுக்களைக் கட்ட வேண்டும். இத்துடன் காட்டுப் பசுக்கள் இருநூற்றறுபதும் சேர்த்து யாகம் செய்ய வேண்டும். இந்த யாகத்தில், அன்னம், எலி, மான், யானை, தவளை, அட்டை முதலியவை களும் பலியிடப்படுகின்றன.
ஸாமவேதம்
ஸாமம் என்பதற்கு சங்காரம் என்று பொருளாம். இந்த வேதத்தில் யாகக் கொலைகள் அதிகமாக விளக்குகிறது. முப்பத்தேழு  யாக சடங்குகள் உள்ளன. இதில் வைசியனையும், யாக பலி செய்ய - கூறப்பட்டுள்ளது.
அதர்வண வேதம்
அதர்வணம் என்பதற்கு அழித்தல் என்பது பொருள் இந்த வேதத்தில் தேவர்களுக்குரிய சில மந்திரங்களும் - பகைவர்களைக் கொல்ல உள்ள மந்திரங்களுமாக - பல கற்பனையாகவும் சொல்லப் பட்டுள்ளது.
இதில் ப்ராஹ்பாணம் கோபதம் எனப்படும் யாகம் செய்த பசுவைப் பங்கிடும்முறை சொல்லப்பட்டிருக் கிறது. (கோபசுப் பிராஹ் மணம், பிரபாடகம், 3ஆம் காண்டம் 10).
பிராமணரை மற்றவர்கள் நம்பும் வகையில் வேதம் கடவுளால் ஆக்கப்பட்டது என்று பார்ப்பனர் கள் சொன்னாலும் - அது உண்மையே அல்ல.
வேதங்களை ரிஷகளே உண்டாக்கினார்கள் அவர்கள் கூறியது எதுவோ அதுவே தேவதை என்பதாம்.  சுலோகம்: யஸ்ய வாக்கியம் ஸதிஷி: யாதேனோச் யதேஸா தேவதாய தக்ஷா பரிமாணம் தச்சந்த..
பல ரிஷிகள் பல காலங்களில் பாடியதே வேதம். வேதங்களை ரிஷிகளே உண்டாக்கியிருக்க, அவை களைக் கடவுள் உண்டாக்கினார் என்பது புனைந் துரை. நிகண்டில், பிராமணர்களையும், ப்ரஹ்மா என்று குறித்துக் காட்டக் கூடிய சொல்லும் இருப்பதால்தான் பிராமணர்களாகிய ப்ரஹ்மாக்கள், தங்களை சிருஷ்டி கர்த்தாவாகிய பிர்மாவுக்குச் சமமாக்கி அவர் வாயி னின்று கோத்ரம் வந்ததாய் மாறாகச் சொல்லப்பட் டிருக்கிறது.
கீழ்க்காணும் சுலோகத்தில் பவபூதி என்னும் கவி தன்னையே ப்ரஹ்மாவென்று சொல்லிக் கொள்கிறார். இதைக் கூர்ந்து பார்க்கவும். இதனால் பிராமணர்கள், பரஹ்மாக்களாய் அழைக்கப்பட்டு - ரிஷிகளால் வேதம் வெளிப்பட்டது உண்மை என்றும் கடவுளால் இந்த  வேதம் உண்டாக்கப்படவில்லை என்பதும் தெளிவாகிறது. இதை ஆழ்ந்து ஆராய்ந்து அறிய முடியாத பார்ப்பனரல்லாத மற்றவர்கள் ப்ரஹ்மா வென்ற தவறான பொருளை குறியாய்க் கொண்டு கடவுளால் உண்டாக்கப்பட்டதே வேதம் என்று பொய் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
சுலோகம்:
யாம் ப்ரஹ்மா  ணமியம் தேவி வாக்வஸ்யே,
வான்ய வர்த்தத உத்தரம் ராம சரிதம்  தத்பரணீதம் ப்ரக்ஷ்தோ இது உண்மையானாலும், வேதம் முகத்தி லிருந்து வந்ததென்பதை - விளக்கச் சிதைவு வார்த்தையேயன்றி உண்மையல்ல.
இவற்றுள் ஆஸ்வலாயனரால் செய்யப்பட்ட சிரௌத சூத்திரங்களில் - பதினேழு வகை யாகம் செய்யும் விதிமுறைக் கூறுகிறது.
இவற்றில் அக்கினி ஹோத்திரம் ஒன்று.
இதை செய்யாமல் - ஒருவன் விடுபட்டால் (திருமணம் முடிந்த மறுநாளிலிருந்து) அவர் தானாகவே சூத்திர னாகி விடுவானாம். இதனால் பிரம்மாவின் பாதத்தி லிருந்து பிறந்த சூத்திரனின் தாழ்ந்த நிலையை, பிராமணரும் அடையலாம் என்பதை விளக்குகிறது. இது உண்மையென்றால் வேதமென்பதும் துதிதோத் திர ஒழுக்கம் இது என்பதும் அறியாமல், பல துறை களில் பிழைப்புத் தொழில் அலுவலில் சிக்குண்டு,  ஈடுபட்டிருக்கும் பார்ப்பனரில் நூற்றுக்கு எத்தனை பேர் இதைக் கைக் கொண்டு நடப்போர் உண்டு என்பதை எடை போட்டால் - மிகைக் குறைவாக இருப்பர்.
அக்கினி  தோத்திரத்தை மேற்சொன்னவாறு தொடர்ந்து செய்து, சூத்திரர் ஆகா பிராமணர் எத்தனை பேர் உண்டு? இவ்வித யாகங்களை செய்து ஒருவன் முக்திசேர உள்ள இடுக்கமான வழியை கவனிக்கவும். இப்படி செய்துஒருவன் முக்தி சேர முடியுமென்றால் - இது சூரியனை ஏணிப்படியிட்டு ஏறிப் பிடித்து சிமிளியில் அடைத்த கதையை யொக்குமென்பது பொருத்தமல்லவா?
அஸ்வமேத யாகம்
அஸ்வமேத யாகத்தின் அருவருப்பை இங்கு எழுதவே கூடாது. இதை எழுத கைக் கூசும் மிக அசிங்கமான செயல். சுருக்கிச் சொன்னால் அஸ்வம் - குதிரை, மேதம் - சேர்க்கை குதிரையுடன் சேர்தல் என்று பொருள்.
அஸ்வமேத யாகத்தில், யாகப் பசுவாகிய குதி ரையை, எஜமான் மனைவியாகிய மஹிஷியோடு, இயற்கைக்கு மாறான வகையில் புணர்ச்சி செய்ய விடுதலாம். இதைப் போன்ற மற்ற பௌண்ட ரீகம் முதலிய அருவருப்பான பல யாகங்கள் வேதத்தில் இருக்கின்றன.
இவ்வித யாக பலிகளை நம்புகிறீர்களா? இதைச் செய்வோர் இன்று எத்தனை பேர் இருக்கிறார்கள். யாக பலியால் முக்தி சேர்வோர் எத்தனை பேர் உண்டு? சொல்ல முடியுமா? இதெல்லாம் கள்ளக் குருக்களான பார்ப்பனரின் வஞ்சிப்பான போதனை என்று அறிந்து கொள்ள வேண்டிய அவசியமாகும்.
புலால் தின்போரை சூத்திரர் தீண்டாதார் என்று சொல்லும் பார்ப்பனர்கள் மறைமுகமாய் விருந்தின ருக்கு பசு, எருது, மாமிசத்தை நெய்யில் பொரித்துத் தேனிட்டு புசிக்கக் கொடுப்பதும் யாகப் பலிகளில் கொன்ற உயிர்களின் இறைச்சியை பங்கு போட்டுக் கொண்டு சாப்பிடுவதும் - வேத  இரகசிய விதி முறைகள் உண்டு. இதை அறியாதோர் எத்தனையோ பேர் இருக்கிறார்களே!
மற்றோரை இழிகுலத்தோர் என்று இகழ்ச்சியாய் பேசி  - கள்ளக்குருக்கள் (பார்ப்பனர்கள்) வேதம் சொல்லி, யாக பலியின் இறைச்சியைப் புசிக்கும்போது தீட்டில்லை என்பதுதானே? இப்போது தீட்டு எவ்வகையில் மறைந்து போனது என்பதை விளக்கிச் சொல்வார் இல்லையே! இதெல்லாம் அடங்கியதே யாகமாகும் என்று யாரும் இதை மறக்க முடியாதே!
நான்கு வேதங்களிலும், அதன் துணைவேதம் நான் கிலும் (ஆயுள் வேதம், அழுத்தவேதம், தனுர்வேதம், காந்தருவ வேதம்) உள்ள முப்பத்திரண்டிலும் அடங்கியதே வேத உபதேச ரகசியங்களும், யாகப் பலிகளுமாம். இந்த வேதத்தை பிராமணர் தவிர, மற்ற சத்ரியர், வைசியர், சூத்திரர்கள் ஆகியோர் தொடவும், படிக்கவும் கூடாது. இதனை அன்றே ஞானிகளும், சித்தர்களும், முனிவர்களும், இவ்வேதங்கள் அனைத் தையும் உண்மையற்றதென்று கூறியிருக்கிறார்கள்.
இன்பமாய் நால்வேதம் வந்தவாறு
மெழுதினார் வேதவியாசர் சாத்தான் போல
அன்பாகப் பலவிதத்தில் கட்டிப் போட்டா
ரதனாலே மானிடர்கள் கெட்டுப் போறார்
முன்போல சித்தரெல்லாங் கொஞ்சங் கொஞ்சம்
மூடினதைத் திறந்து விட்டார் முடுகி நானும்
அன்பாகத் திறந்து விட்டேன் வெளிச்சமாக
அரனார் உத்தாரப் படியறிவித்தேனே!
அகஸ்தியர் ஞானப்பாடல் - 13
குலம்குலம் என்ப தெல்லாம்
குடுமியும் பூணு நூலுஞ்
சிலந்தியு நூலும் போலச்
சிறப்புடன் பிறப்ப துண்டோ
நலந்ததரு நாலு வேதம்
நான்முகன் படைத்த துண்டோ
பலன்தரா பொருளு முண்டோ
பாச்சலூர் கிராமத் தாரே!
- பாச்சலூர் பத்து 6ஆம் பாடல்
சாத்திரத்தைச் சுட்டுசதுர்மறையைப் பொய்யாக்கி சூத்திரம் கண்டு சுகம் பெறுவதெக் காலம் - என்று ஏங்கித் தவிக்கும் காலம் இப்பொழுது வந்து விட்டதே! என்ற பாடல் களைப் பார்த்த - படித்த பிறகுமா - வேதத்தை நம்புகிறீர்கள்?
-விடுதலை,11.4.15

வேதகாலத்திலோ... வேத மந்த்ரத்திலோ இந்த தாலி என்ற சடங்கே இல்லை.

தாலி அகற்றும் நிகழ்வைக் கொச்சைப்படுத்தும் தலை இல்லா ஆசாமிகளே!
இதற்கு உங்கள் பதில் என்ன?

1) வேதகாலத்திலோ, அதற்குப்பின் இதிகாச காலங்களிலோ, கடவுளுக்கு நடந்த கல்யாணங் களிலோகூட தாலி கட்டுவது என்ற சடங்கு இருந்ததில்லை.
சடங்குகளின் கதை! - இந்துமதம் எங்கே போகிறது? 2ஆம் பாகம், பக்கம் 41ல் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதுகிறார்
திருமணம் என்றாலே நம் எல்லோரின் நினைவிற்கு வருவது?... அல்ல... அல்ல... வரவைக்கப்பட்டிருப்பது
மாங்கல்யம் தந்துநாநேந மமஜீவந ஹேதுநா
கண்ட்டே பத்நாமி ஸூபகே ஸஞ்ஜீவ ஸநத... ஸதம்...
டி.வி., சினிமா, ரேடியோ, கீடியோ என எல்லாவற்றிலும் கல்யாணம் என்றாலே... இந்த சுலோகம்தான்  ஒலிக்கிறது. இதை வைத்து தாலி கட்றான் என அடையாளப்படுத்துகிறார்கள்.
இந்த சுலோகத்துக்கு வயது என்ன- என்று பார்த்தால் வேதகாலத்திலோ... வேத மந்த்ரத்திலோ இந்த தாலி என்ற சடங்கே இல்லை. மாங்கல்ய தாரணம் அதாவது தாலி கட்டுவதற்கென்று வேதத்தில் மந்த்ரமே இல்லை. அது குறிப்பிடப்படவே இல்லை.
2)  இவர் மட்டுமல்ல
Encyclopedia of Puranic Beliefs and Practices by Sadashiv A.  Dange
R.G. Bhandarkar Formerly Professor and Head of the Dept of sanskrit bombay university
‘Marriage’ என்ற தலைப்பிலும்
‘Ritual Details’ என்ற தலைப்பில்.
ஏழு அடி - சப்தபதி பற்றிதான் சொல்லப்பட் டுள்ளதே தவிர (சிவபார்வதி, கல்யாணம் துவங்கி) எங்கேயும் தாலி கிடையாது (பக்கம் 997-998)
Ritual Details: details about the rituals of marriage obtain, with local touches. As per the Vedic tradition. all gods are believed to be present at the altar at the marriage. The bride is said to take seven steps\(saptapadi) stepping in seven circles specially drawn….
… Further details of the practices at marriage are available from the description of the marriage of siva and parvati. ..
..Then followed the ritual of wearing the sacred thread; and both, the bride and the bride-groom had to undergo it..
..The father of the bride gave various gifts to the bride groom..
..The brahma describes the marriage of parvati as svayamvara (marriage by her own choice’, which is described in chapter36…
இவற்றில் தாலி பற்றி எங்கும் கிடையாதே.
3) தமிழர்களின் திருமணச் சடங்கிலும் கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்கு முன்பு, தாலி கட்டும் பழக்கமே கிடையாது.
பிற்காலத்தில் புகுத்தப்பட்டது. (- டாக்டர் மா. ராசமாணிக்கனார்  தமிழர் திருமணத்தில் தாலி என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.)
எனவே, இது இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறது என்று கூறுவது, ஒன்று அறியாமையால் அல்லது திட்டமிட்ட விஷமத்தால்தான் -
எனவே, தாலியை பெண்ணடிமைச் சின்னமாக கருதி விரும்பி அகற்றிக் கொள்ள தாமே முன் வருபவர்களின் உரிமையை எவரே தடுக்க முடியும்?
ஏன் விதண்டாவாதத்தில் ஈடுபட்டு விளம்பர நாடகம் ஆடுகிறீர்கள்?
-விடுதலை,11.4.15

சனி, 5 செப்டம்பர், 2015

பார்ப்பு என்பதற்கு இருபிறப்பு என்ற பொருள் தப்பு


மஞ்சை வசந்தன்

கோழிக்குஞ்சு - கோழிப்பார்ப்பு என்று தலைப்பிட்டு வய்.மு.கும்பலிங் கன் அவர்கள் எழுதிய செய்திகள் முற்றிலும் தவறானவை. ஆதார மற்றவை. அவரைத் தொலைபேசி வழி தொடர்புகொண்டு, கோழிக் குட்டியும் கிடையாது, கோழிக்குஞ்சும் கிடையாது. அதன்பெயர் கோழிப்பார்ப்பு என்று எழுதியுள்ளீர்களே அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டேன்.
ஆதாரம் இல்லை. அப்படி நினைத்து எழுதினேன் என்றார். ஆயிரக்கணக் கான அறிஞர்கள் படிக்கும் தின மணியில் இப்படியொரு பொறுப்பற்ற பிதற்றல் வருத்தமளிக்கிறது.
முட்டையிட்டு வருவது குஞ்சு. ஈன்று பெறுவது குட்டி. விலங்கின் குட் டிக்கும், பறவையின் குஞ்சுக்கும் பார்ப்பு என்பது வழங்கப்பட்டிருக்கிறது. பார்ப்பு என்பதற்கு இளமை என்பதே பொருள்.
இளம் பிள்ளையை பார்ப்பா என் போம். பார்ப்பா என்பதே பாப்பா என்றா னது. கோர்ப்பு கோப்பு ஆனது போல.
“தன் பார்ப்புத் தின்னும் அன்பின் முதலை”
- (அய்ங்-41)
“பார்ப்புடை மந்திய மலையிறந்தோரே”
- (குறு-278)
பார்ப்பனர் என்ற சொல் ஆரியர் களுக்குத் தமிழகத்தில் மட்டுமே வழங் கப்படுவதாகும். மற்றப் பகுதிகளில் இவ்வழக்கு இல்லை.
தமிழகத்தில் தமிழர்க்குரிய தொழில் பெயரான பார்ப்பனர் என்ற சொல் ஆரியர்களால் பறித்துக் கொள்ளப் பட்டது.
அக்காலத்தில் அரசர் மற்றும் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த இளம் வாரிசுகளுக்கு, ஆலோசனை கூற, தோழமை கொள்ள, உதவ, துணை நிற்க இளம் தோழர்கள் (தமிழர்கள்) அமர்த் தப்பட்டனர். அவர்களே பார்ப்பனர் கள். அத்தொழில் பார்ப்புத் தொழில் ஆகும்.
பார்ப்புத் தொழிலுக்குரிய பணிகளை தொல்காப்பியம் தெளிவாகக் குறிக்கிறது.
“காமநிலை யுரைத்தல் தேர்தல்நிலை யுரைத்தலும்
கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும்,
ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும்,
செலவுறு கிளவியும், செலவழுங்கு கிளவியும்
அன்னவை பிறவும் பார்ப்புக் குரிய”  - (கற்பு-36)
ஆரியர்கள் தமிழகத்துள் நுழைந்து பரவியதும், அவர்களின் நிறமும், தோற் றமும், அரசு மற்றும் செல்வந்த குடும் பத்து இளைஞர்களைக் கவர, பார்ப்புத் தொழிலுக்கு அவர்களை (ஆரியர்களை) அமர்த்த, அத்தொழில் முழுவதும் ஆரியர் வசமாகி, அதன்பின் அத்தொழி லின் பெயர் அந்த இனத்திற்கே ஆனது.
கூர்க்கர் என்ற இனப்பெயர், வாயில் காப்போரின் தொழிற்பெயராய் ஆனது போல, பார்ப்பு என்ற தொழில் பெயர் ஆரியர் இனத்தின் பெயராய் ஆனது.
உண்மை இப்படியிருக்க பார்ப்பனர் இரு பிறப்பாளர். கோழிக்குஞ்சு இரு பிறப்புடையது. எனவே இரண்டிற்கு பார்ப்பு என்ற பெயர் வந்தது என்பது பிழை. பார்ப்பிற்கு இரு பிறப்பு என்ற பொருள் கிடையாது. பார்ப்பு என்றால் இளமை என்பது மட்டுமே பொருள்.
குறிப்பு: தப்பைச் சுட்டிக் காட்டி ‘தினமணி’க்கு உரிய நேரத்தில் இம் மறுப்பு அனுப்பப்பட்டும்; தினமணியில் இது வெளியிடப்படவில்லை. இதுதான் இ(தி)னமணியின் யோக்கியதை!
-விடுதலை ஞா.ம.22.8.15

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

புருஜ் புருஷஜ்ஞ-மனிதர்களைக் கொன்று யாகம்


இதைப் படிக்கும் பொழுதே இது என்ன புதுச் சொல்? புரியவில் லையே என்ற குழப்பம் வரத்தான் செய்யும். இது ஒரு சமஸ்கிருத சொல். இதன் பொருள்: மனித னைக் கொன்று நடத்தப் படும் யாகம் என்பதாகும்.
மனுசனைக் கொன்று யாகமா? இது என்னடா கொடுமை என்று திகைக்க வேண்டாம். ஆரியப் பார்ப்பனக் கலாச்சாரத்தில் காட்டு விலங்காண்டித்தனம் என்பது சர்வ சாதாரணம்.
மனிதனையே கொன்று யாகம் நடத்திய கூட்டம் தான் - பசுவதை பற்றிக் கண்ணீர்  வடிக் கிறது.
மனிதர்களைக் கொன்று யாகம் நடத் தியதற்கு ஏதாவது ஆதா ரம் உண்டா? என்ற கேள்வி எழலாம்.   ஆதார மின்றி என்றைக்காவது விடுதலை எழுதிய துண்டா?
யஜுர் வேதம் என் பதே முழுக்க முழுக்க யாகம் பற்றிய தாண்ட வம்தான். யஜூர் வேதம் என்னென்ன யாகங்கள் - எந்தெந்த உயிர்களைக் கொன்று நடத்தப்பட வேண்டும் என்பதற்கு ஒரு நீண்ட பட்டிய லேயே தந்துள்ளது. இதில் 30 வகை யாகங்கள் தரப்பட்டுள்ளன. அதில் 11ஆவது இடத்தில் இடம் பெற்றிருப்பதுதான் மனிதர்களைக் கொன்று நடத்தும் புருஷ ஜ்ஞ யாகமாகும்.
அரிச்சந்திரன் என்கிற  அரசன் புத்திரப் பேறில் லாது வருந்திக் கொண் டிருக்கும்போது வருண தேவனின் கட்டளைக் கிணங்கி அஜீகர்த்த முனிவரின் புத்திரனான சுன:சேபன் என்பவனை விலைக்கு வாங்கி அவ னைக் கொன்று நர மேத யாகம் பண்ணத் தொடங்கியது ரிக் வேதத் தில் விரிவாக எழுதப் பட்டுள்ளது.
பசுவைக் கொல் லுவதா என்று பதை பதைக்கும் பார்ப்பனக் கூட்டம் யஜுர் வேதத் தில் கூறப்படும் கோண வம் என்னும் யாகத்தில் பசு மாடு, காளை மாடு இவைகளைக் கொல்லும் யாகம் என்று கூறப்பட் டுள்ளதே!
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஒரே கலாச்சாரம் பேசும் இந்துத்துவவாதிகளுக்கு ஒரு கேள்வி உண்டு.  வங்காளத்துப் பார்ப்பனர் களுக்கு முக்கிய உணவு மீன்தானே இன்றைக் கும்? பார்ப்பனர்களுக் குள் கூட ஒரே கலாச் சாரம் - இல்லையே!
சிவன் கோயில் படையல்களை வைஷ் ணவன் சாப்பிடுவ துண்டா, சொல்லுங்கள் பார்க்கலாம். கால ஓட்டத் தில் எத்தனையோ கலாச் சாரங்கள் இருந்த இடம் தெரியாமல் புதையுண்டு போயின என்பதுதானே உண்மை. எத்தனைப் பார்ப்பனர்கள் உச்சிக் குடுமியோடு அலை கிறார்கள் - சொல்லட்டும் - பார்க்கலாம்.
- மயிலாடன்
-விடுதலை,16.3.15

ஞாயிறு, 10 மே, 2015

வேத முறைப்படியான திருமணத்தில் தாலி இல்லை!

Parthasarathy Rationalist's photo.
















வேத முறைப்படியான திருமணத்தில் தாலி இல்லை!
தமிழ் நாட்டில் நடைபெறும் வேத முறைப்படியான திருமணத்தில் சொல்லப்படும் மந்திரங்கள் அனைத்தும் யஜுர்வேதிகளின் ஆபஸ்தம்ப கிருஹ்யஸூத்திரத்தில் உள்ள விவாஹ மந்திரங்களே ஆகும்.
இதில் விவாஹம் என்பது 1.வாக்தானம், 2.கந்யாதாநம், 3.வரப்ரேஷனம், 4.பாணிக்ரஹணம், 5.ஸப்தபதி என்று அய்ந்து முக்கியமான பகுதிகளை கொண்டது என உள்ளது.
இதில் ‘’மாங்கல்ய தாரணம்’’ என்கிற பகுதியோ மந்திரமோ கிடையவே கிடையாது. தற்போது சொல்லப்படும் ‘’மாங்கல்யம் தந்துநாநேந’’ என்ற சுலோகம் இடையி
ல் புகுத்தப்பட்டதேயாகும்.
இதை ‘’விவாஹ மந்திரார்த்த போதினி’’ என்கிற நூலில் ‘கீழாத்தூர் ஶ்ரீநிவாஸாச்சாரியார்’ அவர்களும், ‘’திருமணச் சடங்குகளும் சம்பிரதாயங்களும்’’ என்கிற நூலில் ‘வேங்கடவன்’ அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடலங்குடி வெளியீடான ‘’விவாக மந்திரங்கள் எதற்காக?’’ என்கிற நூலில்‘’மாங்கல்ய தாரணம்’’ என்கிற பகுதி குறிப்பிடப்படவேயில்லை. அதே போல் பெரிய சங்கராச்சாரி ‘’விவாஹம்’’ என்கிற நூலில் தாலியை பற்றி குறிப்பிடவே இல்லை.
ஆகையால் மேற்கண்ட ஆதாரங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள ‘’வேதங்களில் தாலி கட்டுதல் இல்லை’’ என்கிற பகுதியை உறுதிப்படுத்துகிறது.
வேதங்களில் இல்லாத தாலியினை பிடித்துக்கொண்டு இந்து மத போலிகள் தொங்கிக் கொண்டிருப்பது வரட்டுப் பிடிவாதமேயாகும்!
-மூலிகை மன்னன் செ.ர.பார்த்தசாரதி
-முகநூலில்,18.4.15


-விடுதலை ஞாயிறு மலர்,26.4.15