ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

வேதகாலத்திலோ... வேத மந்த்ரத்திலோ இந்த தாலி என்ற சடங்கே இல்லை.

தாலி அகற்றும் நிகழ்வைக் கொச்சைப்படுத்தும் தலை இல்லா ஆசாமிகளே!
இதற்கு உங்கள் பதில் என்ன?

1) வேதகாலத்திலோ, அதற்குப்பின் இதிகாச காலங்களிலோ, கடவுளுக்கு நடந்த கல்யாணங் களிலோகூட தாலி கட்டுவது என்ற சடங்கு இருந்ததில்லை.
சடங்குகளின் கதை! - இந்துமதம் எங்கே போகிறது? 2ஆம் பாகம், பக்கம் 41ல் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதுகிறார்
திருமணம் என்றாலே நம் எல்லோரின் நினைவிற்கு வருவது?... அல்ல... அல்ல... வரவைக்கப்பட்டிருப்பது
மாங்கல்யம் தந்துநாநேந மமஜீவந ஹேதுநா
கண்ட்டே பத்நாமி ஸூபகே ஸஞ்ஜீவ ஸநத... ஸதம்...
டி.வி., சினிமா, ரேடியோ, கீடியோ என எல்லாவற்றிலும் கல்யாணம் என்றாலே... இந்த சுலோகம்தான்  ஒலிக்கிறது. இதை வைத்து தாலி கட்றான் என அடையாளப்படுத்துகிறார்கள்.
இந்த சுலோகத்துக்கு வயது என்ன- என்று பார்த்தால் வேதகாலத்திலோ... வேத மந்த்ரத்திலோ இந்த தாலி என்ற சடங்கே இல்லை. மாங்கல்ய தாரணம் அதாவது தாலி கட்டுவதற்கென்று வேதத்தில் மந்த்ரமே இல்லை. அது குறிப்பிடப்படவே இல்லை.
2)  இவர் மட்டுமல்ல
Encyclopedia of Puranic Beliefs and Practices by Sadashiv A.  Dange
R.G. Bhandarkar Formerly Professor and Head of the Dept of sanskrit bombay university
‘Marriage’ என்ற தலைப்பிலும்
‘Ritual Details’ என்ற தலைப்பில்.
ஏழு அடி - சப்தபதி பற்றிதான் சொல்லப்பட் டுள்ளதே தவிர (சிவபார்வதி, கல்யாணம் துவங்கி) எங்கேயும் தாலி கிடையாது (பக்கம் 997-998)
Ritual Details: details about the rituals of marriage obtain, with local touches. As per the Vedic tradition. all gods are believed to be present at the altar at the marriage. The bride is said to take seven steps\(saptapadi) stepping in seven circles specially drawn….
… Further details of the practices at marriage are available from the description of the marriage of siva and parvati. ..
..Then followed the ritual of wearing the sacred thread; and both, the bride and the bride-groom had to undergo it..
..The father of the bride gave various gifts to the bride groom..
..The brahma describes the marriage of parvati as svayamvara (marriage by her own choice’, which is described in chapter36…
இவற்றில் தாலி பற்றி எங்கும் கிடையாதே.
3) தமிழர்களின் திருமணச் சடங்கிலும் கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்கு முன்பு, தாலி கட்டும் பழக்கமே கிடையாது.
பிற்காலத்தில் புகுத்தப்பட்டது. (- டாக்டர் மா. ராசமாணிக்கனார்  தமிழர் திருமணத்தில் தாலி என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.)
எனவே, இது இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறது என்று கூறுவது, ஒன்று அறியாமையால் அல்லது திட்டமிட்ட விஷமத்தால்தான் -
எனவே, தாலியை பெண்ணடிமைச் சின்னமாக கருதி விரும்பி அகற்றிக் கொள்ள தாமே முன் வருபவர்களின் உரிமையை எவரே தடுக்க முடியும்?
ஏன் விதண்டாவாதத்தில் ஈடுபட்டு விளம்பர நாடகம் ஆடுகிறீர்கள்?
-விடுதலை,11.4.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக