ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

புருஜ் புருஷஜ்ஞ-மனிதர்களைக் கொன்று யாகம்


இதைப் படிக்கும் பொழுதே இது என்ன புதுச் சொல்? புரியவில் லையே என்ற குழப்பம் வரத்தான் செய்யும். இது ஒரு சமஸ்கிருத சொல். இதன் பொருள்: மனித னைக் கொன்று நடத்தப் படும் யாகம் என்பதாகும்.
மனுசனைக் கொன்று யாகமா? இது என்னடா கொடுமை என்று திகைக்க வேண்டாம். ஆரியப் பார்ப்பனக் கலாச்சாரத்தில் காட்டு விலங்காண்டித்தனம் என்பது சர்வ சாதாரணம்.
மனிதனையே கொன்று யாகம் நடத்திய கூட்டம் தான் - பசுவதை பற்றிக் கண்ணீர்  வடிக் கிறது.
மனிதர்களைக் கொன்று யாகம் நடத் தியதற்கு ஏதாவது ஆதா ரம் உண்டா? என்ற கேள்வி எழலாம்.   ஆதார மின்றி என்றைக்காவது விடுதலை எழுதிய துண்டா?
யஜுர் வேதம் என் பதே முழுக்க முழுக்க யாகம் பற்றிய தாண்ட வம்தான். யஜூர் வேதம் என்னென்ன யாகங்கள் - எந்தெந்த உயிர்களைக் கொன்று நடத்தப்பட வேண்டும் என்பதற்கு ஒரு நீண்ட பட்டிய லேயே தந்துள்ளது. இதில் 30 வகை யாகங்கள் தரப்பட்டுள்ளன. அதில் 11ஆவது இடத்தில் இடம் பெற்றிருப்பதுதான் மனிதர்களைக் கொன்று நடத்தும் புருஷ ஜ்ஞ யாகமாகும்.
அரிச்சந்திரன் என்கிற  அரசன் புத்திரப் பேறில் லாது வருந்திக் கொண் டிருக்கும்போது வருண தேவனின் கட்டளைக் கிணங்கி அஜீகர்த்த முனிவரின் புத்திரனான சுன:சேபன் என்பவனை விலைக்கு வாங்கி அவ னைக் கொன்று நர மேத யாகம் பண்ணத் தொடங்கியது ரிக் வேதத் தில் விரிவாக எழுதப் பட்டுள்ளது.
பசுவைக் கொல் லுவதா என்று பதை பதைக்கும் பார்ப்பனக் கூட்டம் யஜுர் வேதத் தில் கூறப்படும் கோண வம் என்னும் யாகத்தில் பசு மாடு, காளை மாடு இவைகளைக் கொல்லும் யாகம் என்று கூறப்பட் டுள்ளதே!
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஒரே கலாச்சாரம் பேசும் இந்துத்துவவாதிகளுக்கு ஒரு கேள்வி உண்டு.  வங்காளத்துப் பார்ப்பனர் களுக்கு முக்கிய உணவு மீன்தானே இன்றைக் கும்? பார்ப்பனர்களுக் குள் கூட ஒரே கலாச் சாரம் - இல்லையே!
சிவன் கோயில் படையல்களை வைஷ் ணவன் சாப்பிடுவ துண்டா, சொல்லுங்கள் பார்க்கலாம். கால ஓட்டத் தில் எத்தனையோ கலாச் சாரங்கள் இருந்த இடம் தெரியாமல் புதையுண்டு போயின என்பதுதானே உண்மை. எத்தனைப் பார்ப்பனர்கள் உச்சிக் குடுமியோடு அலை கிறார்கள் - சொல்லட்டும் - பார்க்கலாம்.
- மயிலாடன்
-விடுதலை,16.3.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக