ஞாயிறு, 10 மே, 2015

வேத முறைப்படியான திருமணத்தில் தாலி இல்லை!

Parthasarathy Rationalist's photo.
















வேத முறைப்படியான திருமணத்தில் தாலி இல்லை!
தமிழ் நாட்டில் நடைபெறும் வேத முறைப்படியான திருமணத்தில் சொல்லப்படும் மந்திரங்கள் அனைத்தும் யஜுர்வேதிகளின் ஆபஸ்தம்ப கிருஹ்யஸூத்திரத்தில் உள்ள விவாஹ மந்திரங்களே ஆகும்.
இதில் விவாஹம் என்பது 1.வாக்தானம், 2.கந்யாதாநம், 3.வரப்ரேஷனம், 4.பாணிக்ரஹணம், 5.ஸப்தபதி என்று அய்ந்து முக்கியமான பகுதிகளை கொண்டது என உள்ளது.
இதில் ‘’மாங்கல்ய தாரணம்’’ என்கிற பகுதியோ மந்திரமோ கிடையவே கிடையாது. தற்போது சொல்லப்படும் ‘’மாங்கல்யம் தந்துநாநேந’’ என்ற சுலோகம் இடையி
ல் புகுத்தப்பட்டதேயாகும்.
இதை ‘’விவாஹ மந்திரார்த்த போதினி’’ என்கிற நூலில் ‘கீழாத்தூர் ஶ்ரீநிவாஸாச்சாரியார்’ அவர்களும், ‘’திருமணச் சடங்குகளும் சம்பிரதாயங்களும்’’ என்கிற நூலில் ‘வேங்கடவன்’ அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடலங்குடி வெளியீடான ‘’விவாக மந்திரங்கள் எதற்காக?’’ என்கிற நூலில்‘’மாங்கல்ய தாரணம்’’ என்கிற பகுதி குறிப்பிடப்படவேயில்லை. அதே போல் பெரிய சங்கராச்சாரி ‘’விவாஹம்’’ என்கிற நூலில் தாலியை பற்றி குறிப்பிடவே இல்லை.
ஆகையால் மேற்கண்ட ஆதாரங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள ‘’வேதங்களில் தாலி கட்டுதல் இல்லை’’ என்கிற பகுதியை உறுதிப்படுத்துகிறது.
வேதங்களில் இல்லாத தாலியினை பிடித்துக்கொண்டு இந்து மத போலிகள் தொங்கிக் கொண்டிருப்பது வரட்டுப் பிடிவாதமேயாகும்!
-மூலிகை மன்னன் செ.ர.பார்த்தசாரதி
-முகநூலில்,18.4.15


-விடுதலை ஞாயிறு மலர்,26.4.15

1 கருத்து: