திங்கள், 27 மே, 2024

ரிக் வேதத்தில் திராவிடர்கள் பற்றி...


“பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்” என்ற நூல் பக்கம் 22 என்ன கூறுகிறது? இதை எழுதியவர் பிரபல வரலாற்றாளர் டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார் எம்.ஏ. என்பவர்தான். என்ன எழுதுகிறார்?
“திராவிடர்கள் தங்கள் மீது படையெடுத்து வந்த ஆரியர்களோடு கடும் போர் புரிய வேண்டியிருந்தது. இத்தகைய விஷயம் ரிக் வேதத்திலே அநேக சுலோ கங்களாக இருக்கின்றன” என்று எழுதியிருக்கிறார்.

டாக்டர் ராதா குமுத முகர்ஜி எம்.ஏ. பிஎச்.டி. என்பவரால் எழுதப்பட்ட “இந்து நாகரிகம்” (பக். 69) என்ன விளம்புகிறது?
ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் (சூத்திரர்) என்றும், தஸ்யூக்கள், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கின்றது. ஆரியருக்கும் ஆரியரல்லா தாருக்கும் இருந்து கொண்டிருக்கும் அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைமைக்குக் காரணமாகும்” என்கிறார் பிரபல வரலாற்றாளர் ராதா குமுத முகர்ஜி.

இந்திரனிடம் ஆரியர்கள் எத்தகைய வேண்டு கோளை வைத்தனர்?
எடுத்துக்காட்டுக்கு இதோ ஒன்றிரண்டு:
“கருஞ் சிவப்புக் குதிரைகள் உள்ளவனே! எவ்வளவு எட்டத்தில் இருந்தாலும், அது உனக்கு ஒரு நீண்ட தூரமில்லை. எனவே, இந்திரனே! உன்னுடைய குதிரை களிலே விரைவாக வா.
உனக்காக வேள்வி தொடங்கப்படுகிறது. தீ மூட்டப் படுகிறது. சோமரசம் பிழிவதற்குக் கற்கள் தயாராக வைக்கப்பட்டிருக்கின்றன.

காளையே! இந்திரனே! அழகான மொக வாயை உடையவனே! வீரனே! தலையிலே கவசம் அணிந் துள்ளவனே! வெற்றியாளனே! வேள்வியின் தலை வனே! புயல் போன்ற செயல் உடையவனே! சோமக் குடியனே!
தாசர்கள் உன்னைக் கோபப்படுத்தியபோது, நீ அவர்களை எதிர்த்து நடத்திய வீரச் செயல்கள் இப் போது எங்கே சென்றது?
இந்திரனே! நீ ஒருவனே தனியனாக நின்று விருத் திரனைக் கொன்று, தேவர் களை (ஆரியர் களை) நோக்கி அஞ்சாதீர்கள் என அழுத்தமாய்க் கூறினால், எல்லையற்ற இந்த இரு உலகமும், நீ, பற்றுங்கால் அவை உனக்கு ஓர் கைப்பிடியே.
– (ரிக், 2695-98)

இந்திரனே! (அரக்கர் குலத்தை-தாச இனத்தை) பழமையாகவே தொன்று தொட்டு இங்கே வாழ்ந்து வருபவர்களை வேரோடு அழிக்கவும். முதலில் உள்ள வர்களை கிழித்தெறியவும், நடுவில் உள்ளவர்களை நசுக்கிக் கொல்லவும்.
எவ்வளவு நாட்கள்தான், நீ, மனத்திட்பம் இல்லா தவன் போல், இருப்பாய்? வேள்வியை வெறுக்கின்ற, தெய்வத்தை வணங்காத தாசர்களை, உனது எரியும் ஈட்டிகளைச் செலுத்திக் கொல்லவும்.
– (ரிக், 2710)

கோட்டைகளைத் தூளாக்கியவன். செல்வத்தின் மன்னன். எதிரிகளைச் சிதற அடித்தவன். இந்திரன், தனது மின்னலால், தாசர்களை வெற்றி கொண்டான்.
– (ரிக், 2768)

இந்திரன் விருத்திரனைக் கொன்றான். காடுகளிலே மறைந்திருந்த தாசர்களைக் கொன்றான். இரவிலே ஓட்டிச் சென்று மறைத்து வைக்கப்பட்டிருந்த பசுக் களைக் கண்டுபிடித்தான்.
– (ரிக், 2769)

இந்திரன், தனது மிகுந்த பலத்தால், வேள்வியை வெறுக்கும் தாசர்களையும், தெய்வத்தை நிந்திக்கும் தாசர்களையும் கொன்றான்.
– (ரிக், 2771)”

இத்தோடு முடிந்துவிட்டாலும் விட்டுத் தள்ளலாம். ‘தினமணி’ கட்டுரையாளர் அறிவின் பொக்கிஷம் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறாரே – அந்த ரிக் வேதத்தின் 62ஆவது பிரிவு 10ஆவது சுலோகம் என்ன சொல்லுகிறது?
“தெய்வாதீனம் ஜகத் ஸர்வம்
மந்த்ரா தீனந்து தைவதம்
தன் மந்த்ரம் ப்ராஹ்மணா தீனம்
ப்ராஹ்மனா மம தைவதம்”
இதன் பொருள் என்ன?

“உலகம் தேவர்களுக்குக் கட்டுப்பட்டது, தேவர்கள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். மந்திரங்கள் பிராம்மணர்களுக்குக் கட்டுப்பட்டவை. பிராம்மணர் களே நமது தெய்வம்”.

- பதிலடிப் பக்கம் : 2024லும் வேதத்திற்கு வக்காலத்தா? ‘தினமணி’க்குப் பதிலடி கட்டுரையின் ஒரு பகுதி 
-மின்சாரம் 
விடுதலை நாளேடு, 18.05.24

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக