வெள்ளி, 5 ஜூலை, 2019

சிரார்த்தப் பித்தலாட்டம் ஒரு பார்ப்பனர் கருத்து



காலஞ்சென்ற திரு. ஏ. ராமச்சந்திர அய்யர் என்பார் - கொச்சி சமஸ்தானத்தில் திவான் பேஷ்காராக இருந்து பென்ஷன் பெற்றும், கவர்மென்ட் வித்தியா இலாகா வில்  வேலை பார்த்தவர். சித்தூரில் கவர் மென்ட் ஸ்கூல் இருந்தபொழுது அவர் அதன் தலைமை உபாத்தியாயராகவும் இருந்தவர். அவர் காலமாவதற்கு முன்பு எழுதி வைத்த உயிலில் அபூர்வமான சில உண்மைகள் எழுதப்பட்டிருக்கின்றன! அவை வருமாறு:

சுயேட்சை பெரிதும் பாராட்டும் பிராம ணர்களின் விஷயமாய், சவுண்டி, ஒத்தன், கொத்தன், காவேரிஸ்நானம், தசதானம் முதலியவைகளுக்காக ஒரு தம்படி கூடச் செலவழிக்கக்கூடாதென்று என்னுடைய வாரிசுகளுக்குத் தெரிவித்துக் கொள்கி றேன். மேலே கண்ட சவுண்டி, ஒத்தன் முதலிய கர்மாக்கள் சம்பந்தமாய் செலவு செய்யப்படும் பணத்தினால் எள்ளளவும் பயனில்லையென்று நான் நிச்சயமாய் நம்புகிறேன். தங்களுடைய சுய நலத்தி னால், பிராமணர்கள் - இறந்து போனவர்கள் சந்ததியாரிடமிருந்து பணத்தை உறிஞ்சுவதற்காகவே அவைகளை ஏற்படுத்தி யிருக்கிறார்களே யொழிய - வேறில்லை. இட்டாருக்கு இட்டபலன் சித்திக் கு மென் னும் முதுமொழி உண்மையே.

ஒருவன் இறந்து போன பிறகு அவனுக் காக மகனொருவன் செய்யும் கிரியைகளால் இறந்து போனவனுக்கு நற்கதி கிடைக்கு மென்று நான் நம்பவே இல்லை. நம்முடைய முன்னோர்களைக் கவுரவப்படுத்தவே ண் டு ம் என்பதையும், அவர்களை மறந்துவிடக் கூடாதென்பதையும் நான் ஒப்புக் கொள்ளு கிறேன். இறந்துபோனவனைக் குறித்து வருஷத்தில் ஒரு நாள் கொண்டாடி அவனு டைய கண்ணியத்திற்குக் குறைவில்லாமல் அவனுடைய சந்ததியாரும் பந்து மித்திரர் களும் நன்னடத்தையுடன் நடந்து கொள் வது போதும். ஒரு பிறவியில் செய்த கன் மங்களுக்கு ஏற்றபடி அடுத்த பிறவி சந்திக் கும், ஆதலின் ஒருவன் சந்தோஷத்துடன் சுகித்திருப்பதற்குக் காரணம், அவனுடைய செய்கைகளேயாகும்.

சாம சுலோகங்களைப் பெரிதாகப் பாராட்டுவது பாவமாகாவிட்டாலும், அது கெட்ட சுபாவமென்றே நினைக்கிறேன். ஆகவே, இதைக் கண்ணுறும் நண்பர்கள் இனி மேலாவது சுயமரியாதை இயக்கத்தின் மீது சீறி விழாமல் அவர்கள் என்ன சொல்லு கிறார்களென்பதைக் கவனித்துப் பார்த்து குருட்டு எண்ணங்களையும், மூடப் பழக் கங்களையும் அடிமைப் புத்தியையும் அடி யோடு அகற்றி, சுயமரியாதை பெற்று மனி தத் தன்மையுடன் கூடிய சுகவாழ்வு வாழ் வாராக!

- குமரன்,

'குடிஅரசு, 19.10.1930

-  விடுதலை ஞாயிறு மலர், 29.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக