திங்கள், 23 அக்டோபர், 2023

வேதங்களில் பிராமணர்களின் தொழிலும் கடமையும்(சவரம் செய்தல்)


வரலாற்றுச் சுவடுகளிலிருந்து... (அம்பட்டர்-நாவிதர் என்பவரின் விஷயம் - ஒரு வேதியர் எழுதியது)

இருக்கு வேதம் VIII 4 16166, 10 ஜ் 28-9 யசுர்வேதம் III 63 அதர்வண வேதம் VIII 2-17-இல் காணப்படும் பாடல்களில் "ஒரு குரு! நீர் முதன்முறை குடுமி வைத்து உபநயனஞ் செய்யும்போதும் முகத்தையும் சவரம் செய்யும்போதும் பழகியதாயும், பளபளப்புள்ளதாயும், கூர்மையுள்ளதாயும் உள்ள கத்தியைக் கொண்டு ஷவரம் செய்து அவன் முகத்தை அழகும் பிரகாசமும் அடையச் செய்வதோடு அவன் ஆயுள் குறையாமல் வளரும் படிச் செய்வீராக" என்றும், "ஓ பிராமணோத்தமர்களே! முன்னர் அறிவிற் சிறந்த பிராமணராகிய சவிதேவர், சோமன், வருணன், இராஜன் முதலியவர்களுக்குச் ஷவரம் செய்த அக்கத்தியினாலேயே ஷவரம் செய்து அவனுக்குப் பசுக்களும், குதிரைகளும், குடும்பமும் விருத்தியாகும்படிச் செய்வீராக" என்று அதர்வண வேதம் 63-8 பாடலிலும் கூறப்பட்டுள்ளன.

மேற்கூறிய வேதங்களில் உள்ள மந்திரங்களில எல்லாம் வல்ல ஈசவரனே பிராமணர்களைச் சவரம் செய்யும்படிக் கட்டளையிடுகின்றார். இதனால் சவரத் தொழிலாகிய மயிர் சிரைக்குந் தொழில் பிராமணர்களுடைய தொழிலாகின்றது. கடவுளின் திருவருளால் உலகம் தோன்றிய முதல், மக்களுக்குச் செய்ய வேண்டிய தனது கடமையை நாவிதர் அல்லது அம்பட்டர் என்னும் பிராமணர்கள் மட்டும் செய்து வருகின்றார்கள். மற்றும் பிராமணர்கள் அத்தொழிலை விட்டு விட்டமையால் கடவுளின் கட்டளையாகிய வேத விதியைக் கைவிட்டவர்களாகின்றார்கள்.

வேதத்தில் பிராமணர்களுக்கு விதித்துள்ள தொழில்களை எல்லாம் தற்காலப் பிராமணர்கள் இழிவாகக் கருதி அலட்சியப்படுத்தி விட்டுவிட்டார்கள். உண்மைப் பிராமணன் ஒரு மனிதனைத் தன்னைப் போல் பிராமணனாக்க, வேதத்தைப் பிரமாணமாகக் கொண்டு வேத விதிப்படி மந்திரங்களைச் சொல்லி அவன் தலையில் தண்ணீர் தெளித்துத் தனது தலை மேல் வைத்து மயிர் சிரைத்துக் குடுமி வைத்துப் பூணுல் அணியச் செய்து தன்னைப் போல் பிராமணனாகச் செய்கின்றான். மற்றவர்களையும்அவரவர் வருணாசிரமங்களின்படி ஒழுகச் செய்கின்றான். ஆதலால், நாவிதர் அல்லது அம்பட்டர் என்னும் பிராமணர்களே நியாயமான பிராமணராகின்றார்கள்.இப்படி வடமொழி நான்கு வேதங்களிலும் ஒருவனுடைய தலையிலுள்ள சிகையைச் சாஸ்திரீகமாக மந்திரங்களோடு நீக்கி அவரவர் சமயாசாரத்துக்குத் தக்கபடி குடுமிகளை வைக்குந் தொழிலை மிகப் பெருமையாகக் கூறி அது பிராமணர்களுடைய கடமையென்றும் வேதத்திற் கூறப்பட்டிருக்கின்றது.

உலகில் மனிதர்கள் செய்யுந் தொழில்களை எல்லாம் ஒரு மாலையாகக் கோர்ப்போமானால், அம்மாலையின் நடு நாயக மணியாய் விளங்குவது சவரத் தொழில் என்றும், எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானமாகிய நமது தலையிற் கையை வைத்து நமக்கு நல்வாழ்வை அளிப்பவர்கள் குருக்களே ஆவார்கள் என்றும், முடி சார்ந்த மன்னர் முதல் மற்றுமுள்ளோர் தலைகளெல்லாம் அம்பட்டருடைய இடது கையின் கீழ் இருக்கின்றதென்றம், அம்பட்டருடைய இடது கைத் தீட்சைச் சிரசில் பெறாதார் ஒருவருமில்லை என்றும் ஜாதி வரலாற்றில் கூறுகின்றன.

ஆதலால், இக்காலத்திலும் சில வைதிகப் பிராமணர் தங்கள் குழந்தைகளுக்குப் பூணூல் போடு முன்னர் மயிர் சிரைத்துக் குடுமி வைக்கும் போது அம்பட்டருடைய கத்தியை வாங்கித் தாங்கள் மந்திரத்தைச் செல்லிப் பூணூல் போட வேண்டிய காலத்திற் சிறுவன் தலையில் அக் கத்தியை வைத்து எடுத்துக் கொடுக்கின்றார்கள். சில பார்ப்பனர் கத்திக்குப் பதிலாக மா இலையைத் தலையில் வைத்துச் சவரம் செய்யும் பாவனை செய்வார்கள்.

வடமொழி வேதத்தைப் பிரமாணமாகக் கொண்ட வடநாட்டு மயிர் வினைஞர்களாகிய அம்பட்டர் தாங்கள் தான் நியாயமான பிராமணரெனச் சொல்லிப் பூணூல்  அணிந்து சவரத் தொழில் செய்வதோடு, கங்கைக் கரையில் உட்கார்ந்து கங்கையில் நீராடிப் புனிதமடையப் போகின்றவர்கட்குச் சங்கற்பம் பண்ணி வைக்கின்றார்கள். காசி முதலாகிய வடநாட்டுச் சிவாலயங்களிலும், ஜகந்நாதம் முதலான விஷ்ணு கோயில்களிலும் கடவுள் வடிவங்களைத் தொட்டுப் பூசை செய்யும் கருக்களாகவும், பட்டர்களாகவும் விளங்குகின்றார்கள். மேலும் பிராமணர்கள் வீட்டிற் சமையல் செய்பவர்களும், சிற்றுண்டி செய்பவர்களும், விற்பவர்களும் அக் குலத்தினராகவே இருக்கின்றார்கள். வடநாட்டு அம்பட்டர் ஒருவகைப் பிராமணர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டு தமிழ்நாட்டில் வந்து சிற்றுண்டி செய்து விற்றும், சோற்றுக் கடை வைத்தும் மிகுதியாகப் பணம் சம்பாதிக்கின்றார்கள். அவர்களுடைய பலகாரங்களையும், சாப்பாட்டையும் தென்னாட்டு பிராமணர் முதல் எல்லோரும் மிக அருமையாக வாங்கி உண்ணுகிறார்கள்.

தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் சவரத் தொழில் செய்யும் அம்பட்டர் தங்கள் கல்வி, அறிவு, ஒழுக்கம், ஆசாரம் முதலியவைகளைக் கைவிட்டதனால் தங்கள் செல்வநிலை குறைந்தது. தங்கள் முதல் தொழிலும் உயிர்க் காவல் தொழிலுமாகிய மருத்துவம், இரண மருத்துவம் முதலியவைகளைக் கைவிட்டபடியால் பொது ஜனங்கள் மயிர் வினைஞரைக் கேவலமாக நடத்துகின்றார்கள். இது மிகக் கொடுமையான - முட்டாள் தன்மையான செய்கை என்பதை உயர்ந்த ஜாதியார் என்று தங்களை நினைத்துக் கொண்டு ஜாதிபேதம் பாராட்டும் பேதையர்கள் இனிமேலாவது உணர வேண்டும்.

('விடுதலை' - 6.3.1937, பக்கம் 7)

வியாழன், 28 செப்டம்பர், 2023

மனுஷ்மிருதி கூறுவது என்ன?

‘சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும் யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம்.' (அ.11.சு13).

"யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைத் தண்டிக்கக் கூடாது.'
(அ.11.சு20).

'பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும்.' (அ.11.சு66).

‘ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ அதைத்தான் சூத்திரனைக் கொன்றால் செய்யவேண்டும்.' (அ.11.சு131).

"அதுவும் முடியாவிடில் வருணமந்திரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது' (அ.11.சு132).

‘க்ஷத்திரியன் இந்நூலில் சொல்லப்பட்டபடி ராஜ்ய பாரம் செய்வதே தவமாகும். சூத்திரன் பிராமணப் பணிவிடை செய்வதே தவமாகும்.' (அ.11.சு285).

'சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்தாலும் சூத்திரனேயாவான். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்தாலும் பிராமணனேயாவான். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார்.' (அ10.சு75),

'பிராமணரல்லாதவன் உயர்குலத்தோனுடைய தொழிலைச் செய்தால் அரசன் அவனது பொருள் முழுவதையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டைவிட்டுத் துரத்திவிட வேண்டும்? (அ10.சு96)

'சூத்திரன் இம்மைக்கும் மோக்ஷத்திற்கும் பிராமணனையே
தொழவேண்டும்.'(அ.10.சு122).

'பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும் உடுத்திக்கிழிந்த ஆடையும் கெட்டுப்போன தானியங்களும் சூத்திரனுடைய ஜீவனத்துக்குக் கொடுக்க வேண்டும்' (அ.10.சு125),

‘சூத்திரன் எவ்வளவு திறமையுடையவனா யிருந்தாலும் கண்டிப்பாய் பொருள் சேர்க்கக்கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் அது
பிராமணருக்குத் துன்பமாய்
முடியும்.(அ10.சு129)

புதன், 27 செப்டம்பர், 2023

கோரக்ஷணை

கோரக்ஷணை

பசு ரக்ஷணை பற்றி இந் துத்துவா சக்திகள் பெரிதாகப் பேசுகிற காலகட்டம் இது. பசுவை வைத்து மதவாதத்தை வளர்த்துஅதன்மூலம்பார்ப் பனீயத்தையும்,பா.ஜ.க. அரசியலையும் வளர்த்தெடுக் கலாம் என்ற திட்டத்தோடு செயலில் இறங்கியுள்ளார்கள். செத்துப் போன பசுவின் தோலை உரித்த தாழ்த்தப்பட் டவர்களின் உயிரைக் குடிக் கின்றனர்.

மத்தியில் அதிகாரப் பலத் தையும், சில மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தையும் வைத்து இதனைப் போணியாக் கலாம் என்பது அவர்களின் யுக்தி.

இவர்கள் கையில் எடுத்துக் கொண்டிருக்கும் பசுவதை என்பது- அவர்களின் மத வகைப்படியும் - வேத வழிப் படியும் பார்த்தால்கூட, பசு விடயம் ‘‘உதைக்கிறதே’’ என் செய்ய!

யாகத்தில் பசு என்று சொல்லுவது பசு மாட்டைக் குறிப்பிடுவதல்ல - யாகத்தில் பலியிடப்படும் எந்தப் பிரா ணிக்கும் சமஸ்கிருதத்தில் பசு என்றே பெயர் என்று காஞ்சி சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறி தப்பிக்கப் பார்க்கிறார். (‘தெய்வத்தின் குரல்’, பாகம் இரண்டு, பக்கம் 283).

இது உண்மைதானா? யாகத்தில் பசு மாடுகள் கொல் லப்படுவதேயில்லையா? பசுவைக் கொல்லும் யாகம் பற்றிக் குறிப்பிடப்படவில்லையா?

யஜுர் வேதம் என்பது யாகங்களைப்பற்றி விரிவாகப் பேசும் ஒன்றாகும். இதில் 30 வகை யாகங்கள் குறிப் பிடப்பட்டுள்ளன.
கோஸம் யாகம் - என்பது பசு மாடு, காளை மாடு இவை களைக் கொல்லும் யாகமாகும்.

கோ என்றால் பசுதானே!

காம்ய பசு - என்பது தம் எண்ணங்களை ஈடேற்றிக் கொள்ளுவதற்குப் பசுவைப் பலியிடும் யாகம்.

ஏகாதசன பசு விதானம் - பதினொரு பசுக்களைக் கொன்று நடத்தப்படும் யாகம்.

அஷ்டதச பசு விதானம் - பதினெட்டுப் பசுக்களைக் கொன்று நடத்தப்படும் யாகம்.

க்ராமாரண்ய பசுப் ரசம்ஸா - நாட்டிலும், காட்டிலும் உள்ள பசுக்களைக் கொன்று யாகம் செய்தல்.

கவ்ய பசு விதானம் - பசு மாட்டைக் கொன்று நடத் தப்படும் யாகம். ஆதித்ய தேவ தாக பசு - சூரிய தேவனுக்கு உரிய பசு யாகம்.
உண்மைகள் இவ்வாறு இருக்க கோ ரக்ஷணைபற்றி பேசுவோரைப் புரிந்துகொள் வீர்களாக!

சங்கராச்சாரியார்களும் எந்த அளவு பொய்யர்கள் என் பதையும் அந்தப் பொய்யர்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்க!

- மயிலாடன்
27.09.16

திங்கள், 25 செப்டம்பர், 2023

மனுதர்மம் குறித்து அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

'அக்னிஹோத்திரம்!'

மனுதர்மத்தைப்பற்றி திராவிட இயக்கத்தவர்கள் தான் மட்டை ஒன்று கீற்று இரண்டாகக் கிழித்துத் தள்ளுகிறார்கள் என்று எண்ணிடவேண்டாம்.

மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் ஆலோசகர் வட்டத்தில் முதல் இடத்தில் இருந்தவரும், நூறு வயதையும் கடந்து சில ஆண்டுகளுக்குமுன் மறைந்தவருமான அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் ‘நக்கீரன்' இதழுக்கு அளித்த பேட்டி ‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற பெயரில் நூலாக வந்துள்ளதே - அந்நூலில், அந்தப் பூணூல் திருமேனி என்ன சொல்லுகிறார்?

‘‘ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டு விட்டு வந்தார்கள். ஆனால், மநுஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.''

‘‘வேதங்களை எல்லோராலும் படிக்க முடியாது. அஃதை விளங்கிக் கொள்ள அனைவருக்கும் அறிவு குறைவு. அதனால் வேதம் வளர்ந்த கர்மாக்களை கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என ‘எளிமை' என்ற பெயரில் செய்யப்பட்டதுதான் மநுதர்மம்.''

‘‘பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை மநு பிளவாக்கியது. கூடவே இவர்களை தாண்டி ‘சூத்திரர்கள்' என்ற பிரிவினரை உருவாக்கி, அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே  ஆக்கியது மநு. பிராமணனுக்குத் தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மநு சூத்திரனைப்பற்றி இப்படி எழுதியது.''

‘‘சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோபதேசம் பண்ணாதே, சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு, அவனை உதை'' இப்படி போகிறது மநு.

‘‘வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டும் என்றும், பிராமணர்கள் செய்த திட்டம் ‘நன்றாகவே' வேலை செய்தது.'' என்று சொல்லி இருப்பவர் தந்தை பெரியார் அல்ல; ஆசிரியர் வீரமணியல்ல - மூத்த சங்கராச்சாரியாரின் முக்கிய ஆலோசகரான அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்தான். நெற்றியில் நாமம், பூணூல் சகிதமாகக் கடைசிவரை இருந்தவர்தான்.

காஞ்சி சங்கராச்சாரியாருக்காக பாராளுமன்றக் குழுவிடம் தூது போனவர்தான்.

‘துக்ளக்' குருமூர்த்தி கூட்டம் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?

மனுநீதியைக் காப்பாற்றப் போகிறதா? தாத்தாச்சாரியாரைக் காப்பாற்றப் போகிறதா?

குருமூர்த்தியே ஓடாதே நில்! பதில் சொல்!!

 -  மயிலாடன்
26.09.22

புதன், 20 செப்டம்பர், 2023

ஸநாதனதர்மம்


சு. அறிவுக்கரசு 

3

ஸநாதனம் என்றால் நித்தியமான அல்லது புராதன விதி என்று பொருள்படும். ஹிந்து மதத்திற்கு ஆரியமதம் என்ற பெயரும் இடப்பட்டிருக்கிறது. ஏனெனில் ஆரிய மகா ஜாதியாருள் முதலாம் வகுப்பாருக்கு இம்மதம் கொடுக்கப்பட்டது. ஆரிய மகாஜாதியாரின் முதல் குடும்பங்கள் இந்தியா என இப்பொழுது கூறப்படும் நாட்டின் வடபாகத்தில் குடியேறினார்கள். அதற்கு ஆரிய வர்த்தம் என்று பெயர். கிழக்கு மேற்குச் சமுத்திரங்களுக்கும் ஹிமாலயம் விந்தியம் ஆகிய இரண்டு பர்வதங்கட்கும் மத்தியிலுள் பூமியை ஆரிய வர்த்தம் எனக் கூறுவர் பெரியோர். நூல் வடிவில் அல்லாது ஞாபகத்தில் வைத்து வருவதான "சுருதி" நான்கு வேதங்கள். ஸ்மிருதி என்பது தர்ம சாஸ்திரம் - மனுஸ்மிருதி, யாக்ஞவல்கிய ஸ்மிருதி, சங்கலிகிதஸ்மிருதி, பராசரஸ் ஸ்மிருதி - சுருதியும் ஸ்மிருதியும் ஸநாதனத்தின் அஸ்திவாரம். துணையாக 18 புராணங்களும் இரு இதிகாசங்களும்  ஆறு சாஸ்திரங்கள், சாங்கியம், யோகா, மீமாம்சம், வேதாந்தம், நியாசுரணம், விருத்தம், ஜோதிடம், 64 கலைகள் முதலியவை. இவையெல்லாம் மனிதன் மோட்சம் அடையும் வழிகளைக் கூறு கின்றனவாம்.

ஸநாதனத்துக்கு பிரமாணம், சாந்தேக்ய உபநிஷத் தின் வாக்கியமான "ஒன்றேயொன்று இரண்டற்றது" என்பதே. என்றால் அத்வைதமோ ஸநாதனம்? ஸநாதனத்தில் பிரம்மம்/ கடவுள் என்பதாம். புருஷன் என்றும் சொல்வார்கள். பிரகிருதி புருஷனுக்கு எதிரிடையானது. புருஷனிடம் சத்து, சித்து, ஆனந்தம் ஆகிய மூன்றும் விளங்குமாம். பிரகிருதியிடம் சத்துவ, ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களாம்.

இந்துக்களனைவரையும் ஒன்று சேர்ப்பித்து ஒரே மதத்தவராக்கும் முயற்சியாக 1907இல் காசிப் பிரதான ஹிந்து வித்யா சாலைக் கமிட்டியாரால் பிரசுரம் செய்யப்பட்ட "ஸநாதன தர்மம்" என்ற நூலின் அடிப்படையில் எழுதப்படுகிறது.

ஹிந்துமதம் எனப்படுவது ஒரே மதமல்ல. ஆறு மதங்களின் கலவை, இதைச் செய்து ஹிந்து எனப் பெயர் வைத்தவர் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் வில்லியம் ஜோன்ஸ்  - ஆண்டு 1801. சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம், காணபத்யம், ஸ்ரவம் எனும் ஆறு. ஷண்மதம் என்பார்கள். ஒன்றாக்கினாலும் வேறுபாடுகள் நீடித்தன. அவற்றை நீக்குவதற்கான சிறு முயற்சியே ஸனாதனம்.

வேதங்கள் நான்கும் அடிப்படை வேதத்தின் பாகமாக பிராமணங்கள் வைதிக கர்மங்களின் அனுஷ்டான விதிகளைக் கூறும். வேதம், வைதிக செயல்பாடுகள் மனிதர்கள் அனைவர்க்கும் உரியன அல்ல. அவை பார்ப்பனர்க்கு மட்டுமே உரியன. எனவே ஸநாதனம் பார்ப்பனர்க்கே உரியது.

ஸநாதனம் கூறுகிறது: உலகங்களை சிருஷ்டி செய்பவர் பிரம்மா. உலகங்களை பரிபாலனம் செய்து காத்து வருவது விஷ்ணு - காலக் கிரமத்தில் (க்ஷீணித்து) நலிவடைந்து அழியும்போது வயப்படுத்துவது மகாதேவன் அல்லது சிவன், இவையே மும்மூர்த்திகள்.

உலகில் அதர்மம் மேலிட்டு, கெட்டு வரும்போது முழுவதும் கெடாமல் காப்பதற்காக விஷ்ணு அவதாரங்கள் எடுத்ததாம். அவை மீன், ஆமை, பன்றி, நரசிம்மம், குள்ள பார்ப்பனன், பரசுராமன், ராமன், கிருஷ்ணன், புத்தர், கல்கி இது இனிமேல் வரப் போவதாம். சுமார் 2650 ஆண்டுகளுக்கு முன் கபிலவாஸ்து மன்னர் குடும்பத்தில் பிறந்து பவுத்த மதத்தை உருவாக்கியவர் - ஸநாதனத்திற்குச் சவால் விட்டவர். அவரை ஸநாதன அவதாரம் என்பது எவ்வளவு மோசடியானது என்பதை யோசிக்க வேண் டும். ஸநாதனமே பித்தலாட்டம் என்ற முடிவுக்கு வர வேண்டும்.

மரணத்திற்குப் பின் பிரவேசிக்கும் உலகங்கள் மூன்றாம், பூர்வ, புவர், சுவர் என்று அவற்றிற்கு பெயர்களாம். இவை மூன்று தவிர, இன்னும் நான்கு மகாசிவாகங்கள் உண்டாம். புவர் லோகத்துள் பிரேத லோகமும் பிதுர்லோகமும் உண்டாம். சொர்க்கத்தில் இந்திர லோகமும் சூரிய லோகமுமாம்.

இவற்றைப் போய்ப் பார்த்து வந்தவர்கள் யார்? எல்லாம் கப்சா. கற்பனை.

இறப்பை, அதன் பிறகு நடப்பவற்றைச் ஸநாதனம் கீழ்க்கண்டவாறு பளுகுகிறது. உயிர் பிரிந்தவுடன் பிரேத லோகத்தில் வசிக்கிறான். பிறகு பிதுர்ரூபமாகி பிதுர் லோகம் போகிறான்.

ஓர் ஹிந்து ஆயுள் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கர்மங்களில் 10 முக்கியமாம். இதில் ஆறாவது, கைக் குழந்தைக்குச் சோறு ஊட்டுதல், அன்னப்பிராசனம் என்கிறது ஸநாதனம். ஏழாவது சூடாகரணம். தலைமயிரை மழுங்கச் சிரைத்து "குடுமி" வைத்தல். இப்போது புரிகிறதா ஸநாதனம் யாருக் கானது என்று! (குடுமி வைக்கும் பார்ப்பனர்க்கு) பிறகு உபநயனம் - பூணூல் அணிவித்தல்! பார்ப்பனர்க்கான சடங்குதானே - க்ஷத்ரியனோ வைசியனோ இங்கே பூணூல் அணிவதே இல்லையே! இன்னும் சொன்னால் சத்திரியனைப் பரசுராமன் அழித்து விட்டான். எல்லா வர்ணத்தாரும் வணிகம் செய்து வைஸ்யன் ஆகி விட்டான். பார்ப்பனர்  - சூத்திரர் மட்டுமே தற்போது உள்ளனர் என்று நீதிமன்றங்கள், தீர்ப்பு கூறியுள்ளன. எனவே ஸனாதனம் முதல் வர்ணமான பார்ப்பனர்க் கானது. எப்படி எல்லா ஹிந்துக்களுக்குமானது? பொய்தானே? பூணூல் அணிந்த பின் கல்வி, கல் யாணம் என்கிறது ஸநாதனம். பூணூல் போடக் கூடாத சூத்திரர், ஆதி திராவிடர் (பஞ்சமர்) பழங் குடியினர் படிக்கவே கூடாதே! பின் எப்படி அனைத்து ஹிந்துக்களுக்கும் பொருந்தும் ஸநாதனம்? அப்படிப் பேசுவது மோசடிதானே!

பிணத்தை எரிக்கச் சொல்வது ஸநாதனம். நீர்க் கடன் என்கிறது அதர்வன வேதம் - தொடர்ந்து, திதி, திவசம், கருமாதி, சிரார்த்தம் எனப் பார்ப்பனர்க்கு வருமானம் வரும் வழிகள் உண்டு. ஸநாதனிகள் தவிர்த்து பெரும்பான்மை ஹிந்துக்கள் புதைக் கின்றனர். உலகம் முழுக்க எல்லா மதத்தினரும் புதைக்கின்றனர். 5000 ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்ட எகிப்து பிரமிடுகள் மன்னர் பரம்பரையினரின் சமாதிகள் தானே!

எரிக்கப்பட்ட ஜீவன் பிரேதலோகத்தில் இருந்து, பிதுர்லோகத்திற்குச் செல்வதற்கு ஒரு சடங்காம். சபிண்டீகரணக்கிரியை என்கிறது ஸநாதனம். இதைச் செய்யும் பார்ப்பனரைத்தான் கொச்சையாக சவண்டிப் பார்ப்பான் என்கிறோம். பார்ப்பனர்களில் 1886 உட் பிரிவுகள் உள்ளன. திருமண சம்பந்தம் செய்யக் கூடாத தனித்தனிப் பிரிவுகள். இதில் சவண்டிகள் தாழ் நிலைப் பார்ப்பனர்கள். அர்ச்சகர்களும் அப்படியே!

பரிசுத்தமான சுற்றுச்சூழல் தேவை. அதே போல, பரிசுத்தமான உணவும் தேவை, அதற்காக வெள்ளைப் பூண்டு, வெங்காயம் முதலிய சில சரக்குகளை உண்ணக் கூடாது.

தினமும் செய்ய வேண்டிய யக்ஞங்கள் (யாகங்கள்) என ஸநாதனம் சொல்பவை.

1) ரிஷிகளுக்கு/வேதங்களுக்கு

2) தேவர்களுக்கு

3) பிதுர்க்களுக்கு

4) நரர்களுக்கு

5) பூதங்களுக்கு

யக்ஞம் செய்தலும் செய்வித்தலும் பார்ப்பனர்க்கே உரியன. அப்படியானால் ஸநாதனம் பார்ப்பனர்க்குத் தானே! எல்லா ஹிந்துக்களுக்குமானது என்பது மோசடிதானே!

ஸநாதனம் கூறுகிறது. ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனி குணங்கள் இருப்பது போல, பற்பல நாட்டினர்க்கும் தனித்தனி குணங்கள் உண்டு. ஆரிய வம்சத்தாருள் முதலில் பிறந்த வகுப்பினர்க்கு (பார்ப்பனர்) சில குறிப்பிட்ட படி நிலைகள் உண்டு. அவை நான்கு நிலைகள், பிரம்மசாயம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் ஆகியன. கல்வி கற்று முடித்து கல்யாணம் செய்து நல்ல குடும்பி என்று பெயர் பெற வேண்டும். பின்பு வானப் பிரஸ்த வாழ்க்கைக்குப் பின் சன்யாசம் கொள்ள வேண்டும். இதற்கு நேர் விரோதமாக காஞ்சி சங்கர மடத்துச் சங்க ராச்சாரிகள் கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம் வாழாது, சன்னியாசி ஆகிறது ஸநாதன தர்ம விரோதமல்லவா?

அடுத்ததாக, ஸநாதனம் நான்கு வர்ணங்களைப் பேசுகிறது. "குருமார்கள், மந்திரிகள், ஆசிரியர்கள், நூலாசிரியர்கள், கவி போன்றோர்கள் பிராம்மண வருணத்தில் ஜனனம்" ஆகியும் இவர்களும் சத்திரி யர்களும் தத்தம் உயர்வைப் பேசியதால் பெருந்தீங்கு விளைந்துள்ளது. இவர்களிடம் மற்றவர்க்கு போட் டியும் வெறுப்பும் உண்டாகியிருக்கிறது. பூர்வ காலத் தில் இருந்த ஒற்றுமையும் பிரீதியும் போய் விட்டன.

சூத்திர வர்ணத்தவன் உழைப்பு, விசுவாசம், சிசுருஷை இவைகளுக்கு பெயர் பெற்றவனாக உழைத்து விளங்க வேண்டும். வைசியன் பிரயாசை, சாமர்த்தியம், தானம் அமைந்து விளங்க வேண்டும். சத்திரியன் தைர்யம், தயாளம், உறுதி ஆகிய குணங்களை பெற்று நடத்தல் வேண்டும். பிராமணன் பொறுமை, வித்தை, பரிசுத்த, சத்தியம், ஆத்ம தியாகம் இவற்றிற்குப் பெயர் பெற்றவனாக இருத்தல் வேண் டும்" (நூலின் பக்கங்கள் - 155,156)

மனிதர்கள் பிறப்பிலேயே நான்கு வர்ணங்களாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளார்கள் என்பதுவே ஸநாதனம். உலகத்தில் எந்த மதத்திலும் எந்த நாட்டிலும் இல்லாத பேதம் அல்லவா, ஸநாதனம்? ஒழிக்கப்பட வேண்டி யது தானே! சமத்துவத்திற்கு எதிரான தத்துவம் தானே ஸநாதனம்.

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

ஸனாதனம் இதுதான், புரிந்துகொள்ளுங்கள் (3)

பதிலடிப் பக்கம்

ஸனாதனம் இதுதான், புரிந்துகொள்ளுங்கள் (3)

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்

ஆதாரம்: "இந்துமதம் எங்கே போகிறது?''

5

'பட்டேல்... சொன்ன மாதிரி மதங்களின் பிரதிநிதிகளான மடங்கள் மக்கள் சேவைக்கு வரவேண்டும். மடாதிபதிகள் ராஜபோகங்களில் துயில்கிறார்கள். மிதக்கிறார்கள் என்ற தத்துவத்தை தகர்க்க வேண்டும். அதனால் தேஸத்தின் எல்லா மடங்களையும் இதற்காக நாம் வலியுறுத்த வேண்டும்.

எனவே பாரதிய மடங்களின் சபையை நாம் கூட்டவேண்டும். பாரதிய மடங்களின் சபையை கூட்டுவதற்கு முன், அவரவர்கள் மடத்துக்குப்போய் 'புது அரசியல் மூலம் ஸ்வதந்திர தேசமாகப் போகி றோம். இதுவரை இருந்த நிலை வேறு. இனிமேல் நாம் இருக்கப்போகும் நிலை வேறு. ஆகவே நம் மடங்களுக் கும் ஜீவாதார உரிமை பெற முயற்சிக்க வேண்டும்' என்று சொல்லச் சொன்னார். அதன்படி அகில பாரதிய மடங்கள் மாநாட்டை டெல்லியில் கூட்டச் சொன்னார்.

அதற்குப் பட்டபாடு அப்பப்பா - இந்த மாநாட்டைக் கூட்ட குளித்தலை அண்ணாதுரை அய்யங்கார் என்ற உத்தமமான புருஷன் முன் வந்தார். இவர் சங்கராச்சாரி யாரிடம் அபார பக்தி கொண்டவர். மடங்களைப் பார்த்து பேசுவதற்காக மோட்டார் காரில் திருச்சியில் இருந்து புறப்பட்டு உடுப்பி, அதைத் தொடர்ந்துள்ள சிருங்கேரி மடம் ஆகிய மடங்களை நேருக்கு நேராய் போய்ப் பார்த்து விஷயங்களை விக்ஞாபித்தோம். உடுப்பியில் மத்வ சம்ப்ரதாயத்தைச் சேர்ந்த 8 மடங்கள் உள்ளன. இவை தவிர உத்தராதி மடம், சோதன மடம். சுமுதிர்த்த மடம். மந்த்ராலய மடம், எல்லாரையும் சந்தித்தோம்.

மேற்குத்தொடர்ச்சி மலையின் கடைசியில் உள்ள "சுப்ரமண்யம்" என்ற மடத்துக்கும் போனோம்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும்.

சிருங்கேரி மடத்துக்குப் போனபோது, மடாதிபதி நவராத்திரி உற்சவத்துக்கு வெளியே எழுந்தருளியிருந்தார். மாஜி ஜில்லா ஜட்ஜ் ஒருத்தர். இன்னொரு ஹைகோர்ட் ஜட்ஜ் ஒருத்தர் என முக்கியஸ்தர்களுடன் சிருங்கேரி மடாதிபதியை பார்த்தபோது... பெரியவர் சுத்தமான தமிழில் பேசினார்.

பெரியவாளின் கர்மானுஷ்டத்துக்கு நேருக்கு நேராக உதவிசெய்ய முடியாதே என்று சொல்லி விட்டார். 

பின்... அங்கிருந்து பாலேஹி என்னும் மடத்தின் மடாதிபதியை கடும் மழைக்கிடையே பார்த்து, மடங் களின் மாநாட்டுக்கு அழைத்தோம். சகடபுரம், அரி ஹரப்பூர் மடங்களுக்கு அலைந்துவிட்டு.. ஷிமோகா வந்து சங்க மேஸ்வர மடாதிபதி யையும் பார்த்தாச்சு.

அப்படியே மைசூர் போய் வைஷ்ணவ மடமான பரக்கார மடத்தைப் பார்த்து விஷ யத்தை விளக்கிவிட்டு கிழக்கு கருநாட காவில் வீர சைவ மடங்கள், வடக்கு கருநாடகாவில் கோதே, தும்கூர் இப்படியாக பாரதம் முழுதும் சுற்றி பூரிஜெகன்னாத் போனோம்.

அங்குள்ள பல வைஷ்ணவ மடங்களின் பிரதான மடத்தின் தலைவரான கிரிதாரிதாஸ் ராமானுஜர். அவரது வித்வான் துர்பலாச்சாரி மூலம் பல மடங்களை பார்த்தோம். பின் அயோத்திக்குப் போனோம்.

அங்குள்ள மடங்களைப் பார்த்து புது அரசியல் சாசனத்தில் மடங்களுக்கு சுதந்திரம் வேண்டி மகா பெரியவர் எடுத்துவரும் முயற்சிகளை விளக்கினோம்.

பின் இன்றைய பாகிஸ்தான் கராச்சியில் உள்ள சிந்து நகரத்து மடத்தையும் சென்றடைந்தோம்.

செட்டிநாட்டு குன்னக்குடி மடம், திருநெல்வேலி செங்கோல் மடம். முதல்.. சிந்து நகர மடம்வரை எல்லாரையும் நாங்கள் பார்த்தபோது எங்களுக்கு ஆட்சேபனையே தெரிவிக்கவில்லை. சரி...

டெல்லியில் மத மாநாடு நடந்ததா?

- - - - - 

மதஉரிமைகளுக்காக... அவற்றை நிறைவேற்றுவதற் காக கன்னியாகுமரி முதல் கராச்சி வரை அலைந்து... பல்வேறு மடங்களையும் நேரில் அடைந்து, மடாதிபதி களையும் மாநாட்டுக்கு அழைத்த கஷ்டமான காரி யத்தை விளக்கினேன்.

டெல்லியில் இந்துமகாசபை என்ற இடத்தில் மாநாடு நடந்தது.  யார் யார் கலந்து கொண்டனர்? கல், காடு, மலை, வெயில், மழை என கடந்துபோய் நாங்கள் சந்தித்த பாரதத்தின் நூற்றுக்கணக்கான மடங்களில் இருந்து எவரும் கலந்து கொள்ளவில்லை. கராச்சி சிந்துநகர் மடத்தின் பிரதிநிதியை தவிர!

சின்ன வருத்தம்தான். அதற்காக என்ன செய்வது? பேருக்குக் கூடிய அந்த மாநாட்டில்...

'Freedom of relation and maintaining religious institutions...' வேண்டும் என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு கலைந்தோம். எங்கே? கலைவ தற்குக்கூட ஆட்கள் இல்லை.

இதன்பிறகும் சளைக்காமல் மடங்களுக்கான தனியுரிமை குறித்து.... Parliament Bill கொண்டுவர ஏற்பாடு செய்தோம். புது பார்லிமெண்ட் வந்த பிறகு அந்த பில்லை யாரும் கண்டு கொள்ளவில்லை.

ஸ்வதந்த்ரம் பெற்று... பாகிஸ்தான், இந்தியா என தேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்தியாவான நமது தேசத்தில் 'All are  equal... All relegious are equal...' என்று பிரகடனப்படுத்தப்பட்டது. அதாவது Secular State என அரசியலமைப்பு சாசனம் அறிவித்தது. அதாவது எத்தனை மதங்கள், எத்தனை தர்மங் களை பின்பற்றினாலும் இந்த தேசத்தின் பொதுதர்மம் All are equal  என்பதுதான்.

நமது மதாசாரப்படி.. தர்மம் எல்லார்க்கும் ஒன்று தான். அரசனும் தர்மத்துக்கு கட்டுப்படவேண்டும். ஏன் பகவானேகூட தர்மத்துக்கு, தர்ம நெறிமுறைகளுக்கு எதிராக நடந்தால் பகவானையே தண்டிக்கவும் நமது மதக்கலாச்சாரம் கற்றுத் தருகிறது.

இதனைத்தான் 'தர்மவிதிக்கர்மம்' என்கிறோம். அதாவது. தர்மம் எல்லார்க்கும் ஒன்றுதான். யார் தவறு செய்தாலும் அவர்களுக்குத் தண்டனை உண்டு.

இதனை பகவான் சம்பந்தப்பட்ட இரண்டு கதை களைக் காட்டி உங்களுக்கு விளக்குகிறேன். சில அத் யாயங்களுக்கு முன்... மனிதஉடம்பும் கிளித் தலையு மான ரூபம் கொண்ட சுகப்ரம்மம் என்பவர்... பரீட்சித்து என்னும் ராஜாவுக்கு 7 நாட்களில் பாகவதம் போதித்த கதையை சொன்னேன் ஞாபகம் இருக்கிறது.

சுகப்பிரம்மம்... பாகவதத்தை பரீட்சித்து ராஜாவுக்கு சொல்லும்போது... நடந்த உரையாடலை பாருங்கள். பாகவதம் என்றால் அதில் கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறே வரும்.

சுகப்பிரம்மம் பரீட்சித்துவிடம் கதையை விளக்கு கிறார். 

“கோபியர்களோடு பகவான் கிருஷ்ணன் அலாதி ப்ரியம் வைத்திருக்கிறார். கோபியர்களும் கிருஷ்ணர் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார்கள். எப்படியென்றால்... ராத்திரி மையிருட்டு நேரம்... நள்ளிரவுக்கு இன்னும் கொஞ்சநேரம்தான் பாக்கி

அப்போதும்...தங்கள் வீட்டை மறந்து, கணவனை மறந்து, எல்லாவற்றையும் மறந்து மெய்மறந்து கிருஷ் ணனுடன் ஆடிப்பாடிக்கொண்டிருக்கிறார்கள் கோபி யர்கள்.

எல்லாமே இளவட்ட கோபியர்கள். ஒருகட்டத்தில் அதில் ஒரேஒரு கோபிகையை மட்டும் தூக்கிக்கொண்டு கிருஷ்ணன் ஓடிவிடுகிறான். மற்ற கோபிகைகள் எல் லாம் அவளையும் கிருஷ்ணனையும் தேடுகிறார்கள்.

கிருஷ்ணனால் தூக்கிவரப்பட்ட கோபிகையும் 'என்னை விட்டுவிடு கிருஷ்ணா - வீட்டில் எல்லாரும் தேடுவார்கள் என பயப்படுகிறாள். இதுபோல பலசமயம் கிருஷ்ணன் பல கோபியர்களை தூக்கிச் சென்று லீலை கொண்டாடியிருக்கிறான்." என சுகப் பிரம்மம் சொன்னதும்.

பரீட்சித்து கேட்கிறான். 'என்ன ஸ்வாமி இது புரு ஷன் இருக்கும்போது ஒரு பத்தினியுடன் ஆடிப்பாடி அவளை கவர்ந்து கடத்திச்செல்வது. அந்த புருஷ னுக்கு பாவம் இழைப்பதாகாதா?- இதை கிருஷ்ணன் செய்யலாமா? நியாயமா இது... எனக் கேட்கிறான்.

அப்போது சுகப்பிரம்மம் சொல்கிறார்.

"ஆமாம் தப்புதான். பகவானாகிய கிருஷ்ணனா கவே இருந்தாலும் இதுபோல செய்தால் அது தப்புதான். அவனுக்கு இதற்கான தண்டனை உண்டு. நமது தர்மம் அப்படி சொல்லி யிருக்கிறது" என்கிறார்.

இதனை விஸ்தாரமாக விவரிக்கும் இன்னொரு புராணக் காட்சியைப் பார்க்கலாமா?

- - - - -

இந்த காட்சி நிகழும் இடம் இன்றைய பஞ்சாப் மாநிலத்தில் ஓர் இடம். கதையைப் படிக்கும்போதே அந்த ஊரின் பெயர்க்காரணம் உங்களுக்கு விளங்கும்.

அந்த ஊரில் ஜலந்தர்-பிருந்தா என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். நல்ல கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கிடையே ஒரேயொரு விஷ யத்தில் மட்டும் கருத்து வேறு பாடு - என்ன விஷயத்தில் என்றால் கடவுள் விஷயத்தில்,

அப்படி என்ன கருத்து வேறுபாடு?

ப்ருந்தா விஷ்ணுவைத் தவிர வேறு கடவுளே இல்லை என்னும் அளவுக்கு விஷ்ணு பக்தை. அவளது ஆம்படை யான் ஜலந்தருக்கோ சிவன்மீது அபார நாட்டம்.

இந்த விசித்திரமான விஷயத்தை கேள்விப் பட்ட நாரதர், அந்த குடும்பத்தில் சிறிது விளை யாடிப் பார்க்க நினைத்தார். 

ஒருநாள் ஜலந்தர் தனியாக இருக்கும்போது அவனை சந்தித்தார். 

"என்ன ஜலந்தர்? நீயோ சிவனை வழிபாடு செய் கிறாய். உன் மனைவியோ விஷ்ணுவை வழிபடுகிறாள். நீ பின்பற்றும் சிவபக்தியால் சிவனுடைய மனைவி பார்வதிதேவியையே நீ அடையலாமே... எதற்கு இந்த பிருந்தாவுடன் போராடிக் கொண்டிருக்கிறாய். இந்த பிருந்தாவைவிட அந்த பார்வதி எவ்வளவு அழகு தெரியுமோ?" என ஜலந்தரின் மனதில் பற்றவைத்து விடுகிறார் நாரதர்.

6

உடனே ஜலந்தரும்.... 'நான் பார்வதிதேவியை அடைய முடியுமா?- எப்படி? என கேட்கிறான்.

அதற்கு நாரதரே யோசனையும் கொடுக் கிறார்.

“சிவனுக்கு சாமவேதம் என்றால் உயிர். எங்கே சாமவேதம் ஒலித்தாலும் மயங்கி அந்தப்பக்கம் போய் விடுவார். நீ என்ன பண்ணு- சாமவேதம் பாராயணம் செய்பவர் களை பிடித்து நல்ல சத்தமாக சாமவேதம் ஒலிக்கச் செய். அதனைக்கேட்டு சிவ பெருமான் மயங்கியிருக்கும் வேளையில் கைலாயத்துக்கு சென்று காரியத்தை முடித்துவிடு" சிந்திக்கத் தெரியாத ஜட மாகிவிட்ட ஜலந்தரும் நாரதரின் கலகயோசனையை காதுகொடுத்து கேட்டான்.

அப்படியே...சாம கானம் பாட ஏற்பாடு பண்ணினான். இதைக்கேட்டு சிவன் லயித்திருக்க.. அவர் இல்லாத நேரமாய்ப் பார்த்து கைலாயத்துக்குள் காலடி எடுத்து வைத்தான். அங்கே பார்வதிதேவி தனிமை அழகில் தத்தளித்துக் கொண்டிருக்க, நாரதர் கொடுத்த யோச னைப்படி பார்வதியை போய் கட்டிப்பிடித்து விட்டான் ஜலந்தர். பார்வதி... தன்மேல் சிவன் அல்லாத ஒருவன் சில்மிஷம் செய்கிறான் என்பதை அறிந்து 'ஸ்வாமீ...'-என ஏழுகடல் கொந்தளிக்க கத்துகிறாள்.

கைலாயத்தில் இப்படி

- - - - -

ஜலந்தரின் வீட்டுத்தோட்டத்தில்?... கணவனைக் காணாது மனைவி பிருந்தா தனித்துத் தவித்திருக்கிறாள். தனது பரம தெய்வமான விஷ்ணுவிடம் தன் கணவன் எங்கே என வேண்டுகிறாள்.

இதைப்பார்த்த விஷ்ணு... 'நமது பக்தைக்கு நாம் ஏன் சந்தோஷம் தரக்கூடாது? தன் கணவனை காணோமே என பாவம் - தேடிக் கொண்டிருக்கிறாள். நாமே ஜலந்தராக உருவெடுத்து அவளை மகிழ்ச்சிப் படுத்துவோம் என முடிவெடுத்து... கணவன் ஜலந்தர் போலவே உருவம் எடுத்து பிருந்தாவை நெருங்கினார் விஷ்ணு.

'ஆஹா... என் கணவர் வந்துவிட்டார்' என சந் தோஷம் பொங்கிய பிருந்தா... தன் கணவர் ரூபத்தில் வந்திருந்த விஷ்ணுவை கட்டிப்பிடித்துக் கொண்டாடி னாள். இருவரும் தோட்டத்தில் ரொம்ப இஷ்டமாக இழைந்து கொண்டிருக்கும் நேரத்தில்...

நெருக்கமாக இருக்கும் அவர்களுக்கு இடையே வந்து 'பொத்'தென வந்து விழுந்தது ஒருதலை. ரத்தம் கொட்ட கழுத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட அந் தத் தலை, ஜலந்தரின் தலை.

ஆமாம்... சாமவேதத்தால் சிவனை மயக்கிய ஜலந் தர்... பார்வதியை கட்டிப்பிடிக்க இதனால் பார்வதி ஏழு கடல் அதிர சத்தம் போட்டாள் இல்லையா? வேதத்தின் மயக்கத்தை, பார்வதியின் கூக்குரல் கலைக்க, ஓடிப் போய் பார்த்தார் சிவன். தன் மனைவியை இன்னொரு வன் பலாத்காரப்படுத்துவதா? என ஜலந்தரின் தலையை சீவியெறிந்தார்.

அந்த ஜலந்தரின் தலைதான். பிருந்தாவும் ஜலந்தர் போல ரூபம் எடுத்துவந்த விஷ்ணுவும், இழைந்து கொண்டிருந்தபோது இடையில் வந்து விழுந்தது.

பார்த்தாள் பிருந்தா. உடலோடு தன்மீது விழுந்தவன் கணவனா? இல்லை. தலைமட்டும் விழுந்தவன் கண வனா? சந்தேகம் அதிகரிக்க. அப்போது திடுக்கென உடலோடு கூடிய ஜலந்தர் மறைந்து விஷ்ணுவாகிறார். 'நான்தான் பக்தையே... என அறிமுகமும் கொடுக்கிறார்.

இதைக்கேட்டு பொங்கியெழுந்த பிருந்தா.. 'அடப் பாவி உன் பக்தையை இப்படி பண்ணிவிட்டாயே? என் கணவன் ரூபத்தில் வர நீ யார்? தவறு செய்து விட்டாய். பகவானாக இருந்தாலும் தவறு தவறுதான். உனக்குச் சாபமிடுகிறேன். கடவுளாக இருந்தாலும் நீ கல்லாய் போவாயாக' பிருந்தாவின் சாபம்தான் பகவானை சாலக்ராமம் என்ற சிலையாக்கிவிட்டது என்பது புராணம். அதாவது...கடவுளே தர்மத்தை மீறி தவறு செய்திருந்தாலும் தண்டனை உண்டு என்பது தான் இக்கதை சொல்லும் நீதி. 

- - - - -

இப்போது நம் தேசத்தில் சட்ட பூர்வமாக தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் ஆகமரீதியாக இன்னும் அது உயிர் வாழ்ந்து வருகிறது.

ப்ராமண்யத்தின்படி பிராமணன்தான் தெய்வம். இது இப்போதைய நமது தேச தர்மத்துக்கு முரணானது. If you follow Bhraminism, there is Sutra and Punchamas. So, according to constitution, Bhraminism is Anti-law.

அதனால்... மநுதர்மத்தை பின்தொடர்ந்து செல்லும் பிராமணீயம் (நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். நான் சொல்வது கொள்கை தத்துவத்தை) என்பது நமது அரசியல் தர்மத்துக்கு மட்டும் அப்பாற்பட்டது. 

அதனால் All are equal என்ற தர்மம்தான் இப்போது நம் மதத்தை காப்பாற்ற ஒரே வழி.

விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் ஹிந்து தர்மத்தைப் பற்றி பேசிப் புகழ் சேர்த்து விட்டு சென்னை வந்தபோது அவர் ஆற்றிய உரையில் சிலவற்றை உங்களுக்குத் தருகிறேன்.

'இளைஞர்களே... இதை நினைவில் கொள்ளுமாறு இருக்க.. தனிப்பட்ட முறையில் உங்களை கேட்டுக் கொள்கிறேன். இந்திய ஆன்மிகச் சிந்தனைகளால் உலகத்தை நாம் வெல்ல வேண்டும்.

ஆன்மிகச் சிந்தனைகள் என்று நான் கூறியது... உயிருணர்வு அளிக்கக்கூடிய கோட்பாடுகளையே தவிர... நாம் நெஞ்சோடு நெஞ்சாக இறுகப்பிடித்துக் கொண்டிருக்கிற மூட நம்பிக்கைகளை அல்ல.

கண்டகண்ட மூடநம்பிக்கைகளை எல்லாம் மதம் என்ற பெயரில் அனுமதித்துக் கொண்டிருக்கிற மூளையிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க தன்னைத்தானே பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த மூடநம்பிக்கைகளின் பின்னால் ஓடாதீர்கள். அதைவிட நீங்கள் உறுதியான நாஸ்திகர்கள் ஆகி விடுங்கள். இது உங்களுக்கும் நல்லது. உங்கள் இனத் துக்கும் நல்லது...' என்று மதராஸ் ராஜதானியில் பேசி னார் விவேகானந்தர்.

இது-'இளையபாரதமே எழுக' என்று ராமகிருஷ்ணா மடம் விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகளை வெளியிட்டுள்ள புஸ்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(தொடரும்)


திங்கள், 11 செப்டம்பர், 2023

ஸனாதனம் இதுதான், புரிந்துகொள்ளுங்கள் (2)

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

ஸனாதனம் இதுதான், புரிந்துகொள்ளுங்கள் (2)

அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்

ஆதாரம்: "இந்துமதம் எங்கே போகிறது?''

5

ஆடுதுறை பக்கமுள்ள அந்தக் கிராமத்தில் ராத்திரி நேரத்தில் மகா பெரியவர் சங்கராச்சாரியார் ஒரு கூட் டம் ஏற்பாடு செய்திருந்தார் என்பதாக சொன்னேனல் லவா?.

ஆங்காங்கே சின்னச் சின்ன விளக்குகள், தீப்பந் தங்கள். ஏற்றி வைத்திருந்தார்கள் கூட்டம் நடந்த இடம் ஒரு வீடு போல இருந்தது. நான் வெளியே திண்ணை யில் உட்கார்ந்திருந்தேன். 

அவர்கள் என்ன விவாதிக்கப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியும். அதனால் நான் உள்ளே செல்ல வில்லை. 

எனக்கு தெரிந்த விஷயம் - உங்களுக்கு தெரிய வேண்டாமோ?. 

''ஹிந்து' என்ற பெயர் வந்த காரணம் பற்றி விளக்கினேன் இல்லையா?. அந்த ஸனாதன தர்மத்தை.. வர்ணாஸ்ரம மநு தர்மத்தை காப்பாற்றியாக வேண்டும் என்பதற்காகத்தான் அந்தக் கூட்டம்.

ஏன் அப்படி என்ன ஆபத்து வந்தது? மநு தர்மம் வகுத்த மண தர்மத்தைப் பற்றி நாம் முன்பே பார்த் தோம், 

அதாவது. பெண்களுக்கு 8 வயதுக்குள் கல்யாணம் பண்ண வேண்டும். இல்லையென்றால்... அதாவது ருதுவானபின் கல்யாணம் செய்தால்... அவளுடைய 'பஹிஷ்டை'யில் வெளிப்படுவதை அவளுடைய அப்பனே சாப்பிட வேண்டும் என்ற அருவெறுக்கத்தக்க கட்டளையை மநு போட்டிருப்பதை 45, 46ஆவது அத்யாயங்களில் விளக்கமாகப் பார்த்தோம்.

'அஷ்டா வருஷா பலேத் கன்யா.'

8 வயதுக்குள் பெண்ணுக்கு கல்யாணம் நடத்த வேண்டும்... - என்ற இந்த ஸ்மிருதி விதி. இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிவரை நம் தேசத்தில் ரொம்ப சிரத்தையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

அதாவது என்னுடைய இளம்பிராயங்களில் நான் இப்படிப்பட்ட பால்ய விவாஹங்களை நிறையப் பார்த்திருக்கிறேன். 

இப்போதெல்லாம் கல்யாண மஹால்களில் பார்த் தால்.... சின்னக் குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அந்தக் காலத்திலும் குழந்தைகள் விளையாடிக் கொண்டுதான் இருப்பார்கள்.

என்ன?... ஒரே ஒரு வித்யாசம். அந்த குழந்தை களைப் போலவே உள்ள இரண்டு குழந்தைகள்தான் மணமேடையிலும் உட்கார்ந்திருப்பார்கள். இதுபோல எக்கச்சக்க பால்ய விவாஹங்கள் நடந்து கொண்டிருந் தன. அப்போது தான்... இந்த பால்ய விவாஹத்தை யெல்லாம் எதிர்த்து நிறைய போராட்டங்கள் கிளம்பின.

நம் தேசத்தைச் சேர்ந்த சீர்திருத்தவாதிகளே இந்த பால்ய விவாஹ முறையை கடுமையாக எதிர்த்தனர். ஏனென்றால்... பால்யத்திலேயே விவாஹம் செய்து வைத்து. சிலநேரம் அந்தப் பையன் மரணித்து விட்டால் வாழ்க்கை முழுதும் அந்த சிறுமி விதவையாகவே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தை மநு ஸ்மிருதி ஏற்பாடு செய்து வைத்திருந்தது.

இந்தக் கொடுமையையும்... இதன் கொடுமையான விளைவுகளையும் புரிந்து கொண்ட பிரிட்டிஷ்காரர்கள் 1929இல் சட்டம் கொண்டு வந்தார்கள். அதாவது குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கக்கூடாது - அப்படி செய்து வைத்தால்.. தண்டனைதான், ஜெயில் தண்டனைதான். 

இப்போது மகாபெரியவரின் மீட்டிங்குக்கு வரு வோம். இப்படியாக ஏற்கெனவே பிரிட்டிஷ் ஆட்சியில் மநு, வர்ணாஸ்ரம தர்மங்களை சற்று தலை தட்டி வைப்பது போன்ற சட்டங்கள். போடப்பட்டிருந்தன.

நம் தேசம் ஸ்வராஜ்யம் (சுதந்திரம்) அடைய இருந்த அந்த நேரத்தில் பிரிட்டிஷ் நாட்டிலிருந்து Parliamentary deligation ஒன்று நமது தேசத்துக்கு வந்தது. அதாவது நமது தேஸத்துக்கு சுதந்திரம் வழங்குவதற்கு முன்பு அதுபற்றிய விவாதங்கள் நடத்துவதற்காக, எப்படி கொடுக்கலாம் என்று முடிவு பண்ணுவதற்காக பிரிட்டிஷ் பார்லிமெண்ட் உறுப்பினர் கள் அடங்கிய குழு ஒன்று இங்கே வந்தது. அதுதான் Parliamentary deligation. 

இந்த குழு வந்த கால கட்டத்தில்தான் அந்த ஆடுதுறை கூட்டம்,

"ஏற்கனவே பால்ய விவாஹத்துக்கு தடை பண் ணிட்டா.... இன்னும் என்னெல்லாம் நம்ம சம்ப்ரதாயத்து மேல அட்டாக் பண்ணப் போறாளோ.... அதனால். இப்ப வந்திருக்குற அந்த டெலிகேஷன்கிட்ட.. ஸனாதன வர்ணாஸ்ரம தர்மத்துக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாதுன்னு நாம் சொல்லியாகணும்... என்ன சொல் றேள்?என மகாபெரியவர் கேட்க...

சிஷ்யாளோ ஸ்வாமி. இப்படியெல்லாம் அவாளை கேட்கிறது எங்களுக்கு என்னமோ உசிதமா படல. அவா செய்தா செய்யட்டும். சில விஷயங்களை மாத் தறது நல்லதுதானே என்றனர்.

ஆனால்.. சங்கராச்சாரியார் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் வெளியே வந்தார் - உட்கார்ந் திருந்த என்னிடம் 'தாத்தாச்சாரீ நீரும் நானும் தான் மிச்சம்' என்றார்.

என்ன ஸ்வாமீ! என்றேன். 

"நான் சொன்னதை யாரும் ஏத்துக்கல. ஆனா இதை விடக் கூடாது - நம்ம சம்பிரதாயத்தை காப்பாத் தணும். இதுக்காக அந்த பிரிட்டிஷ் டெலிகேஷனுக்கு மெமோரண்டம் கொடுக்கப் போறோம். அதுக்காக உம்மை தான் செலக்ட் பண்ணியிருக்கேன்" என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. 'நீர் இதுக்காக டெல்லி வரை போக வேண்டியிருக்கும்.. அதுக்கு முன்னால். டெலிகேஷனுக்கு நம்ம அபிப்ராயத்தை தந்தியடிக்கணும்... 

அந்த ராத்திரி 11 மணிப் பொழுதில் தந்தி வாசகங் களை தயார் பண்ணினோம். 

- - - - -

ஒன்றா இரண்டா?

6

ஒன்றா? இரண்டா? நூறு தந்திகள். அந்தக் காலத்தில் ஒரு தந்தி அடிக்க வேண்டுமென்றாலே... ரொம்ப கஷ்டம். ஏனென்றால் பெரிய பெரிய நகரங்களில்தான் தந்தி ஆபீஸ் இருக்கும்.

ஒரு தந்தி என்றால் அடித்துவிடலாம். நூறு தந்திகள், ஒரே இடத்திலிருந்து கொடுத்ததாக இருக்கக்கூடாது. தேஸத்தின் பல பகுதிகளிலிருந்தும் அனுப்ப வேண்டும். 

'பாரத தேசத்தின் மதாச்சார கர்மானுஷ்டாங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் - புது அரசியல் மூலம் எங்கள் மத ஸ்வதந்த்ரம் பாதிக்கப்படக்கூடாது' என்பதுதான் தந்தி வாசகம்.

இதை தேசத்தின் பல இடங்களிலிருந்தும் டெல்லிக்கு அனுப்பினோம் - 100 தந்திகள் அதுவும் வெவ்வேறு இடத்திலிருந்து. செலவை மகாபெரியவரே ஏற்றுக்கொண்டார். நான் உதவி செய்தேன்.

தந்தியடித்த பிறகு, மறுபடியும் என்னை அழைத்த பெரியவர் அவாளை நேர்ல பார்த்து நம்ம மத சம்ப்ர தாயத்தை பத்தி பிரஸ்தாபிச்சு ஸனாதன மதத்துக்கு ஸ்வதந்திரம் கேக்கணும் - அதை நீர்தான் பண்ணணும்' என்றார். 

அப்போது 'பார்லிமெண்ட் டெலிகேஷன் மெம்பர் கள் பத்திரிகைக் கார்யாலயங்களுக்கெல்லாம் விஜயம் செய்து.. ஸ்வராஜ்யம் பற்றி தேஸம் என்ன நினைக்கிறது என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்வார்கள். ஏனென்றால், நம் தேசத்தின் சுதந்திர எழுச்சியைப் பத்திரிகைகள் தட்டி எழுப்பியபடி இருந்தன.

அந்த வகையில் சென்னைக்கு வந்தது பார்லி மெண்ட் டெலிகேஷன், அன்று தேசத்தில் மிக முக்கிய பத்திரிகையான 'தி ஹிண்டு ஆங்கிலப் பத்திரிகை ஆபீசுக்கு டெலிகேஷன் வந்திருந்தது.

இதையறிந்த மகா பெரியவர் உடனே என்னை அழைத்து அவர்களைப் போய் பார்க்கச் சொன்னார். நானும் 'ஹிண்டு" பத்திரிகை ஆபிசுக்குப் போனேன்.

அப்போது ஹிண்டுவின் எடிட்டராக இருந்த ஸ்ரீ கே.சீனிவாஸன் என்னை பார்லிமெண்டர் டெலிகேஷ னிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். எப்படியென்றால், இவர் மகாச்சாரியார்களின் பிரதிநிதி என்று.

டெலிகேஷனில் இருந்த சோரன்சன் என்ற பாதிரி யாரும் நானும் பரஸ்பர வணக்கத்தைப் பரிமாறிக் கொண்டோம்.

நான் முதலில் 100 தந்தி விஷயத்தை அவரிடம் ஞாபகப்படுத்தினேன். 'Oh' என ஞாபகப்படுத்திக்கொண்ட சோரன்சன்... 'We meet to night'  என்றார்.

அன்று ராத்திரி பிரபல அட்வகேட் ஒருவரின் வீட்டில் இருந்த சோரன்சனை சந்தித்தேன். பத்துமணி ராத்திரிப் பொழுதில் எனக்கும் சோரன்சனுக்கும் நடந்த ஆங்கில உரையாடலை இங்கே தருகிறேன்.

சோரன்சன்: Welcome. What do you want?

: We live in India: But having not any Rights to follow our religion. We must need freedom to follow our 'Dharma' 

சோரன்சன் : Oh... it is very serious matter... give me a memorandam and meet me in Delhi,  என்றார். 

'நான்' உடனே கும்பகோணம் விரைந்து மஹா பெரியவாளிடம் விஷயத்தைச் சொன்னேன்.

சில அட்வகேட்கள், சம்ப்ரதாயஸ்தர்கள் ஆகி யோரை வைத்துக்கொண்டு. 'வர்ணாஸ்ரம தர்மத்துக்கு சுதந்திரம் வேண்டும்' என்ற மெமோரண்டத்தைத் தயார் பண்ணினோம்.

டெல்லிக்கு போய் நேரில் கொடுக்க இருந்தோம் அதற்குள் அந்த டெலிகேஷன் மெம்பர் அஸ்ஸாம் போய் அங்கே தேஸ நிலைமையை ஆராய்ந்து கொண்டிருந்தார். 

இந்த விஷயம் கேள்விப்பட்டவுடன் மெமோரண் டத்தை அஸ்ஸாமுக்கே ஒரு காப்பி முதலில் அனுப்பி வைத்து விட்டோம்.

பிறகு டெல்லி போனேன். அங்கே வக்கீல் சிவரா வின் வீடு. பகல் 11 மணிக்கு காங்கிரஸ் தலைவர்களான அச்சுத பட்டவர்தன், ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகி யோர் டெலிகேஷனை சந்திக்கக் காத்திருந்தார்கள். 

அவர்கள் பார்த்துவிட்டுப் போனவுடன், நான் சில அட்வகேட்களுடன் டெலிகேஷனை சந்தித்தேன்.

'வர்ணாஸ்ரம மதாச்சாரத்தைப் பின்பற்ற ஜீவாதார உரிமை வேண்டும் என்ற மெமோரண்டத்தை பார்லி மெண்ட்ரி டெலிகேஷனிடம் நேரடியாகவே கொடுத் தோம். வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள். 

இதன்பிறகு ... பிரிட்டிஷ் நாட்டிலிருந்து Cabinet deligation  வந்தது. அந்த குழுவினருக்கும் தந்தியடித் தோம். மெமோரண்டம் கொடுத்தோம்.

அவர்களோ "உங்கள் அரசியல் சாசனத்தை உங்கள் தலைவர்கள்தான் உருவாக்கப் போகி றார்கள். அதனால் உங்கள் தேசத் தலைவர்களையே பாருங்கள்" என சொல்லி விட்டார்கள். 

சரி... என சொல்லிவிட்டு நம் தேஸத் தலைவரான சர்தார் வல்லபாய் பட்டேலை பார்க்கச் சென்றோம்.

அவர்... மெமோரண்டத்தைப் பார்த்துவிட்டு "சனாதன மதத்தைப் பற்றியும் மடங்களைப் பற்றியும் நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். ஆனால்... மடாதி பதிகள் தங்களுடைய ஸ்தாபனத்தின் கீழ் ராஜ போகத்தை அனுபவிக்கிறார்கள். அவரவர்களுக்கும் அவரவர்களு டைய சிஷ்யர்களோடுதான் பழக்கம். வெளி உலகத்தோடு மக்களோடு உறவே இல்லை. மக்களின் பொதுவான பணிக்கோ, மதப்பணிக்கோ அவர்கள் முன் வரவில்லை.

முக்கியமாக... ஹரிஜனங்களுடைய முன்னேற்றத் திட்டத்தில் மதமும் மடாதிபதிகளும் முக்கியத்துவம் காட்டவே இல்லை. முதலில் மக்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்கு பணி செய்ய மதாச்சாரியார் களை வரச்சொல்லுங்கள். என்று கண்டிப்பாக எங்களி டம் கூறினர் பட்டேல்

நான்... பழைய காலத்தில் அப்படி இருக்கலாம். புது பாரததேசம் உருவாவதால் அவர்கள் பொதுப்பணி களை நிறைவேற்றுவார்கள்' என சொல்லிப் பார்த்தேன்.

ம்ஹூம்... பட்டேல் ஒப்புக்கொள்ளவில்லை. 

இதை மகாபெரியவரிடம் சொன்னபோது.. 'ஆமாம் இது முழுவதும் உண்மைதான்' என்றார் அடுத்து... பண்டிட் நேருஜியை பார்த்தேன்.

- - - - - 

7

சனாதன மதானுஷ்டானங்களுக்கு இம்மியளவும் பாதிப்பு வரக்கூடாது - வர்ணாஸ்ரம வரையறைகள் மாறக்கூடாது என பட்டேலிடம் சங்கராச்சாரியாரின் விண்ணப்பத்தை கேட்கப்போய்...

மடாதிபதிகளை திருத்த முடியாது - அவர்களை நம்பி நீங்கள் வராதீர்கள் என கடுமையாகவே சொல்லி என்னை அனுப்பி விட்டதைச் சொன்னேன்.

இதை சங்கராச்சாரியாரிடம் சொன்னபோது. "இதுவும் உண்மைதான்" என ஒத்துக்கொண்டதையும் குறிப்பிட்டேன்.

நேருவின் சீற்றம்

இதன் பிறகுதான் பண்டிட் நேருஜியை இதே விண்ணப்பத்துடன் பார்க்கப் போனேன். அதற்கு முன்னதாக பல ஆச்சார்யார்களிடம் ஆலோசனை பண்ணி.. லௌகீகர்கள் சிலரையும் சேர்த்துக்கொண்டு பிறகு பண்டிட் நேருஜியை பார்க்கப்போனேன்.

என்ன விஷயம் என்றார் நேருஜி - நாங்கள் மெமோரண்டத்தின் சாரத்தை எடுத்துச் சொல்ல ஆரம்பித்ததுமே கொஞ்ச நேரம் கேட்டுவிட்டுப் பிறகு மெமோரண்டத்தையும் பார்த்தார்.

உடனே... நிமிர்ந்தவர் என்னைப் பார்த்து “If you want to talk about religion, you go outside from this nation. We don't allow speciality to any religion. Here all are equal... 

Don't tell me about religion... understand?" என்றார் ரோஜாவின் ராஜா - நான் அதிர்ந்துவிட்டேன்.

அவர் என்ன சொன்னார் என்று புரிகிறதா? 

நீங்கள் மதத்தைப் பற்றி மதத்தின் தனியுரிமையைப் பற்றி பேசவேண்டுமென்றால். இங்கு... பேசாதீர்கள். இங்கு எந்த மதத்திற்கும் தனிப்பட்ட உரிமையோ, ஸ்பெஷாலிட்டியோ கிடையாது. எல்லா மதங்களும் சமம்தான். இங்கு All are equal  தான்.

8
மீண்டும் நீங்கள் மதத்தின் தனியுரிமை சிறப்புரிமை குறித்து பேசவிரும்பினால்.. இந்த நாட்டுக்கு வெளியே எங்கே வேண்டுமானாலும் சொல்லலாம்" என கடுமையாகச் சொல்லி விட்டார் நேரு.

இவ்வளவு நடந்தும் சங்கராச்சாரியார்கள் அலட்டிக் கொள்ளவில்லை. மதத்துக்குத்தான் தனியுரிமை சிறப்புரிமை கிடைக்கவில்லை. மடங்களுக்காவது தனியுரிமை கிடைக்குமா என்று பார்ப்போம் -என சொல்லி களத்தில் இறங்கிவிட்டார்.

(தொடரும்)