திங்கள், 19 ஆகஸ்ட், 2019

சனாதன தர்மத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று பேசிய பேராசிரியப் பெருமக்களுக்கு சில கேள்விகள்

சனாதன தர்மப்படி பார்ப்பனர்  பிச்சை எடுத்துதான் ஜீவனம் நடத்தவேண்டும் - அதைச் செயல்படுத்தத் தயாரா?




மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் பேசிய பார்ப்பனப் பேராசிரியர்கள் சனாதன தர்மம் மீண்டும் செயல் படுத்தப்படவேண்டும் என்று பேசியுள் ளனர். அத்தகையவர்களுக்கு சில வினாக்களை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கையில் விடுத்துள்ளார். அவற் றில் ஒன்று, பிச்சை எடுத்து ஜீவனம் நடத்துவதுதான் பார்ப்பனர் தொழில் -   என்று காஞ்சி சங்கராச்சாரியார் கூறுகிறாரே - அதனை நடைமுறையில் செயல்படுத்த முன்வருவார்களா என்ற வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

அறிக்கை வருமாறு:

"தற்போதைய காலகட்டத்தில் சனாதன தர்மத்தைப் பாதுகாத்து அதன் வழி முறைகளை நிலைநாட்டவேண்டும் என்று பேராசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தி சாரதாம்பாள் சேவா சமிதி'' அறக்கட்டளை (இப்படி ஒன்றின் பெயர் பகிரங்கப்படுத்தப்படுவது இதுவே முதன்முறை. இந்து தமிழ் திசை' ஏடு அண்மைக் காலத்தில் இத்தகைய வைதீக சனாதன, சங்கராச்சாரிய உபதேச தர்மங் களுக்கு நன்றாக விளம்பரம் தந்து வருகிறது) சார்பில் சனாதன தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவது - மீள் பார்வை - முன் னோக்கிய பார்வை'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நேற்று (18.8.2019) மாலை நடை பெற்றது.

ஏற்கெனவே சனாதன தர்மத்தில் உள்ளதாம்!


கருத்தரங்கில் பெங்களூரு இந்திய மேலாண்மை நிறுவன பேராசிரியர் பி.மகாதேவன் பேசியதாவது:

இன்றைய நவீன உலகில் வாழ்வியல் முறையில் தொடங்கி செய்யும் தொழில், உடை, உணவு என நமது தேவைகளில் அனைத்துத் தரப்பு உயிரினங்களுக்கும் ஏற்ற நிலையான வளர்ச்சி அவசியம். அதை நோக்கி நகர வேண்டும் எனப் பேசப்பட்டு, அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆனால், இதற்கான வழிமுறைகள் எல்லாம் ஏற்கெனவேசனாதன தர்மத்தில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. இவைதான் இன்று பல்வேறு வடிவங்களில் விவாதப் பொருட்களாகி வருகின்றன.

தர்மம் என்பது சூழலுக்கு ஏற்றாற்போல மாறாது; உதாரணமாக ராமாயணத்தில் சீதையைப் பிரிவது, வனவாசம் மேற் கொள்வது எல்லாம் அந்தந்த சூழலின் நியதிகளுக்கு ஏற்ப எடுக்கப்பட்ட முடிவு களாகும். அரசன் ராஜதர்மத்தைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், சீதையை இராமன் பிரிய வேண்டியதாகிறது.

எனவே, அனைத்து உயிரினங்களும் ஒரேவிதமான நிலையான சூழலில் வாழ் வதற்கான அம்சங்கள் சனாதன தர்மத்தின் அடிப்படையிலேயே இருக்கிறது. இது குறித்த புரிதலை நாம் அனைத்துத் தரப்பு மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

புதிய தேவைகளை நோக்கி நகர்வதை விட நம்மிடம் இருக்கும் சனாதன தர்மத்தை மீண்டும் நிலைநாட்டவேண்டும்.''

பங்கேற்றவர்கள் யார், யார்?


இதில் பிரம்மா'வின் முகத்தில் பிறந் தாலும்கூட குறிப்பிட்ட வயதுவரை கீழ்ஜாதிக்காரனாகவே இருந்து பிறகு பூணூல் கல்யாணத்திற்குப் பிறகு துவிஜ ஜாதி - இரு பிறப்பாளர்களான பல பார்ப் பனப் பேராசிரியர்கள்; மும்பை அய்.அய்.டி. பேராசிரியர் கே.ராமசுப்பிரமணியன் மற்றும் ஏ.பி.சிவசங்கர், டி.ஹேமமாலினி முதலியோர் உள்பட பலரும் பங்கேற் றனராம்!

பலே, பலே! படமெடுத்தாட பார்ப் பனியப் பாம்பு - சனாதன சதுராட்டத்தைத் தொடங்க ஆயத்தமாகிறது!

இப்போதுதானே அவாளின் முழு பரப்பிரமம்' வெளியாகி வரத் தொடங்கி யுள்ளது.

இல்லாவிட்டால், பேராசிரியர் வேங் கடகிருஷ்ணன் ஜாதி பிராமணன் - நாய் உதாரணங்கள்பற்றியெல்லாம் பேசிட முன்வருவார்களா? அவர்கள் வரட்டும் - வெளிப்படையாக!

சொரணை கெட்ட சோற்றாலடித்த சூத்திர பஞ்சமர்களின் புரியாத நம் பிண் டங்களுக்கு அப்போதாவது புரியுமல்லவா?

நாம் சில கேள்விகளை முன்வைப்பதற்கு முன் இப்படியெல்லாம் பல ரூபத்தில் பலர் பல மேடைகளில், ஊடகங்களில் பீடிகை போடுவதன் உள்நோக்கத்தை நம் மக்கள் புரிந்துகொள்ளத் தவறக்கூடாது.

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் செய்த அரசமைப்புச் சட்டம் (அதில் பல அதிருப்தியான அம்சங்கள் இருக்கின்றன) சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் என்ற முப்பெரும் தத் துவங்கள் உள்ளடக்கியது.

மனுதர்மத்தை அரசமைப்புச் சட்டமாகக் கொண்டுவரத் திட்டமா?


இந்திய அரசியல் சட்டம், இறை யாண்மை,  சமதர்மம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு என்ற அய்ம்பெரும் அணுகுமுறைகளையும் ஆட்சியின் திட்டங்களாகவும், சமுகநீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி இவைகளை மக்களின் அடிப்படை உரிமைகளாகவும் ஆக்கி யுள்ளதால், அதனை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் மனுதர்மத்தையே அரசமைப்புச் சட்டமாக ஆக்கிடச் செய்யும் ஆபத்தான - அபத்தமான - முயற்சியின் தொடக்கமே இது - என்பதை தெரிந்து நாடும், ஆட்சியும், ராஜகுருக்களும் எந்தப் பாதையில் நடைபோடத் தொடங்கியுள்ளனர் என் பதை மக்களுக்கு ஒடுக்கப்பட்டோர், முற் போக்காளர்கள் எடுத்துக் கூறத் தவறக் கூடாது!

'கனவான்களே!' உங்களுக்குச் சில கேள்விகள்


சனாதனத்தைப் புதுப்பிக்க களம் அமைக்கும் கல்வியில் பெரிய கன வான்களே, உங்களுக்கு சில கேள்விகள், பதில் கூறுவீர்களா?

1. வர்ணதர்மப்படி, சனாதன நெறிப்படி, வைதீக வழிப்படி, சத்திரியன், வைசியன், சூத்திரன் செய்யும் தொழில்களை இன்று பிராமணர்களும்'' செய்கிறார்களே; அதைக் கைவிட்டு பழைய முறைக்கே திரும்புவார்களா?

2. இந்து சனாதனப்படி,  கடல் கடக்கக் கூடாதே; வெளிநாட்டில் கணினிப் பொறியாளர், டாக்டர், ஆடிட்டர் மற்றும் ராஜதந்திர உத்தியோகம் பார்க்க கடல் கடந்து  செல்லலாமா?

3. உணவில் காய்கறி, கந்த மூலாதிகளை மட்டும்தான் புசிக்கவேண்டும் - செய்வீர்களா?

4. உடை - பஞ்ச கச்சமும், உச்சிக் குடுமியும்தானே சனாதனம் - அதற்கு மாறுவீர்களா?

5. உங்கள் வீட்டுப் பெண்கள் விதவை களானால் (மன்னிக்கவும் அவர்கள் நன்கு வாழட்டும்; உதாரணத்திற்காக சொல்கி றோம்) பழையபடி மொட்டையடித்து முண்டிதஞ்செய்து'' வெள்ளைச்சேலை களை உடுத்தி, வீட்டிற்குள்ளேயே உட்கார வைப்பீர்களா?

6. அல்லது உடன்கட்டை சதி'யைப் புதுப்பித்து - சதி மாதாக்களாக்க தயாரா வீர்களா?

7. மிலேச்ச  பாஷை இங்கிலீஷ், நீஷ பாஷை' தமிழ்ப் போன்றவைகளை நீக்கி விட்டு, சர்வம் சமஸ்கிருதம் ஜகத்' என்ற முறையிலே வாழ முனைவீர்களா?

8. காலில் செருப்பு, பூட்ஸ், கழுத்தில் டை முதலியவை கட்டுவது சனாதனமா? பழைய பாதரட்சைகளையே அணி வீர்களா?

9. பால்ய விவாகம் - 8 வயதுக்குள்ள உங்கள் பெண்களையெல்லாம் தாரா முகூர்த்தம், கன்னிகாதானம் செய்து பாணிக் கிரகத்தை'' முடிப்பேளா?

10. வெள்ளைக்கார கிறித்துவர்களின் கண்டுபிடிப்பான விமானப் பயணங் களையும், மோட்டார் கார்களின் பயணங்களையும், ரயில் பயணங்களையும் செய்யாமல், கால்நடைப் பயணத்தையோ, புஷ்பக விமானத்தையோ எதிர்பார்ப் பீர்களா?

11. பிராமணனின் தர்மம் பிச்சை எடுப்பதுதான் என்று காஞ்சி மஹா பெரியவா' கூறுகிறார்களே தெய்வத்தின் குரலில்' அதன்படி மாறத் தயாரா?

இதில் ஒரு பகுதியை கேள்வியாகக் கேட்டதற்காகத்தானே தேசபிதா காந்தி அண்ணலின் உயிரை மதவெறி கோட்சே மூலம் பறித்தது?

சனாதனத்தைக் காப்பாற்றத்தானே வாஞ்சிநாதய்யர், ஆஷ் துரையை சுட்டுக் கொன்றார்.

அந்த சனாதன சட்டங்களை, திட்டங் களை செயல்படுத்த முற்பட்டால், அதை நாடும், மக்களும் ஜனநாயக அரசுகளும் ஏற்க முடியுமா?

அருள்கூர்ந்து பதில் கூற முடிந்தால் வரவேற்போம் - வசவுதான் பதில் என்றாலும் தாங்கிக் கொள்ளுவோம் - பகுத்தறிவாளர்களான, சுயமரியாதைக் காரர்களான நாங்கள்!

 

என்ன ஆணவம்?

என்னே விநோதம்!!

இந்த 21 ஆம் நூற்றாண்டிலும்!!!

 

கி.வீரமணி,


தலைவர் திராவிடர் கழகம்


சென்னை

19.8.2019

பூணூல் என்பது கோவணம் கட்டும் இடுப்புக்கயிரே!

#சுவாமிவிவேகானந்தர்.............

சிஷ்யனானவன் குருவினுடைய குடிலுக்கு செல்லும்போது குரு அவனுடைய தகுதியை அறிந்து உளம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய ”முஞ்சா” என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி அவனுக்கு தீட்சை செய்து வேதங்களை போதிபார் இடுப்பில் கட்டிய அந்த முப்புரி கயிற்றில் சிஷ்யன் கோவணம் கட்டிக்கொள்வான் அந்த புல்லிற்கு பதிலாக முப்புரி நூலை அணியும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டது.
#
#வேதங்களிலே பூணூலை பற்றிய குறிப்பு ஓரிடத்திலேயும் இல்லை.
#
கோபிலருடைய கிருஹய சூத்திரங்களிலும் பூணூலுக்கான குறிப்புகள் இல்லை. எனவே இன்றைக்கு #பார்ப்பனர்கள் அணியும் #பூணூல் கோவணம் கட்டிய நூலின் மாற்றமே!
-#சுவாமிவிவேகானந்தர்
(ஆதாரம் : சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள்
நூல் பக்கம் : 26-28.)
#
சாஸ்திர வேத விரோதமாய் தன்னை #உயர்ந்தஜாதியாய் காட்ட #பார்ப்பனர்கள் செய்த #மோசடியே #பூணூல் அணியும் வழக்கம். என்பது இதிலிருந்து புலப்படுகிறது.

- ஆனந் குமார் முகநூல் பதிவு, 19.8.19

வியாழன், 8 ஆகஸ்ட், 2019

பார்ப்பனர்கள் மற்றும் ஏனைய இந்துக்களும் கட்டாயமாக மாட்டுக்கறி உண்ண வேண்டும்

இந்து மத வேத புத்தகத்தில், பார்ப்பணர்கள் மற்றும் ஏனைய இந்துக்களும் கட்டாயமாக மாட்டுக்கறி உண்ண வேண்டும் என்பதற்கான ஆதாரம்.

#வேள்விகளுக்காக_மாட்டை_அறுப்பார்கள்,

ஏற்றுமதிக்காக மாட்டை அறுப்பார்கள்,

யாகம் நடத்துவதற்கும் மாட்டை அறுப்பார்கள்.

இந்து மத வேதத்தில் மாட்டுக் கறி சாப்பிடுவதற்கான வசணங்களாவது.

யாதொரு மனிதன் கிரயத்திற்காவது, இலவசமாகவாவது பசுமாமிசத்தை வாங்கி தேவர் களுக்காவது அல்லது ஆத்மாக்களுக்காவது ஸ்தோத்திரம் செய்த பிறகு அம் மாமிசத்தைச் சாப்பிடுவதில் எத்தகைய பிணியும் கிடையாது.
( மனு : 235 )

நான்கு கால் மிருகங்களில் பசுவும், ஒட்டகம் ஒன்று மட்டும் நீங்கலாக ஒரு பக்கத்தில் மட்டும் பல்லிருக்கக் கூடிய மிருகங்கள் எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
( மனு : 185 )

பிரமச்சாரிகள் விவாகத்திற்கு முன் வேதங்களில் கூறப்பட்டிருக்கும் காணிக்கைகளைச் சேகரித்து புஷ்பங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கம்பளத்தில் உட்கார்ந்து மார்க்கக் கோட்பாட்டின் படி குருவுக்கு ஒரு பசுவை வெகுமதியாக கொடுக்கவேண்டும்.
( மனு : 63 )

சாப்பிடுகிற மனிதன் சாப்பிடப்படுகிற விலங்குள் இவை இரண்டையும் பிரம்மனே படைத்துள்ளான். அதனால் இறைச்சி உண்பது ஒன்றும் பாவச் செயல் அல்ல.
( மனு: 5-30 )

மதச் சடங்குகளில் முறையாக ஈடுபட்டுள்ள ஒருவன் இறைச்சி உண்ணவில்லை எனில், அவன் இறைச்சி உண்ணாத பாவத்திற்காக அடுத்து வரும் 21 பிறப்புகளிலும் பலியிடப்படுகிற விலங்காகவே பிறப்பான். (மனு: 5-35)

நான் மாட்டிறைச்சி உண்பதற்குக் காரணம் அது மென்மையானதாகவும் சுவை மிக்கதாகவும் உள்ளது என்பதனால்தான். சத்பத பிராமணம் மகரிஷி யாக்யவல்கியின் வசணங்கள். (3: 1, 2, 21)

”திருமணத்தின் போதும், மூதாதையர்களுக்கு திவசம் கொடுக்கும் போதும் பசுவைக் கொன்று விருந்து படைக்க வேண்டும்”
அபஸ்தம்ப கிரிசூத்திரம். (1, 3, 10)

பெண்ணின் திருமணத்தின் போது பசுவையும், எருதையும் கொன்று விருந்து படைக்க வேண்டும்.
ரிக் வேதம் (10, 85, 13).

பசு, கன்று, குதிரை, எருமைக் கறியை இந்திரன் விரும்பி சாப்பிடுவான்.
ரிக் வேதம் (6, 17, 1).

வழிபாட்டின் போதோ, திவசத்தின் போதோ தனக்கு வழங்கப்படும் மாட்டிறைச்சியை மறுக்கும் பிராமணன் நரகத்திற்குச் செல்வான்.
வஷிஸ்த தர்ம சூத்திரம் (11, 34).

மாட்டிறைச்சியை சாப்பிடாத ஒரு மனிதன் நல்ல இந்து அல்ல.

விவேகானந்தர் தொகுப்பு : பகுதி:3, பக்கம்: 536.

இது மட்டுமல்ல, பசுவைக் கொன்று யாகம் நடத்த வேண்டும், அப்படி யாகம் நடத்துகையில் அதற்காக சில விஷேச மந்திரங்களும் ஓத வேண்டும்.

23 பசுக்கள் பலியிடப்படுவது வாஜ்பேய யாகம்,
99 பசுக்கள் பலியிடப்படுவது அசுவமேத யாகம் என்று வேத புத்தகங்களில் அழைக்கப்டுகிறது. இதற்கென்று தனி மந்திரங்களும் உண்டு.

இந்த யாகங்களில் ஓத வேண்டிய வேத சுலோகங்கள் யசூர் வேதத்தில் பின்வருமாரு கூறப்பட்டுள்ளது.

பசுவைக் கொல்லும் போது புரோகிதன் சொல்ல வேண்டிய மந்திரம்.

“அத்ரிகோ சமீத்வம் ஸூசமீ சமீத்வம்

சமீத்வ மத்ரிகா அத்ரிகா அத்ரகா உர் இதித்ரிர்ப் ரூயாத் “

(அய்த பஞ்சிகா 5 காண்டம் 7)

இதன் பொருள்: நன்றாக அடித்துக் கொல், கொல், கொல். அடிப்பதை நிறுத்தாதே என்பதாகும்.

பசு கொல்லப்பட்டபிறகு அதன் சதையை அறுத்தெடுக்க வேண்டிய முறை குறித்தும் கூறும் மந்திரமாவது:-

“அந்த ரே வோஷ் மாணம் வாரயத்வா திதி பசுஷ் வேவதத் ப்ராணன் தாதி ஸ்யேன மாஸ்ய வக்ஷ க்ருணுதாத் ப்ரசஸா பாஹூ சலா தோஷ்ணீ கஸ்யபேவாம் ஸாச்சித் ரேஸ்ரோணீ கவவேஷாரூஸ்ரேக பர் ணாஷ்டீ வந்தாஷட்விம் சதி ரஸ்ய வங்கா யஸ்தா அனுஷ்ட யோச்யா வயதாத்; காத்ரம் காத்ரமஸ் யானூனம்.”

(அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)

பொருள் : மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின் கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலிருந்து அம்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். தோளிலிருந்து ஆமையின் வடிவமாக இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தந்த அவயவங்களிலிருந்து இருபத்தாறு துண்டுகளை அறுத்தெடுத்த பின் எல்லாவற்றையும் அறுத்தெடுத்துக் கொள்க என்பதாகும்

“ஸர்வமாயுரேதிய ஏவம் வேத “

பொருள்: எவனொருவன் இதை இவ்வாறு அறிகின்றானோ (இந்த யாகத்தை நடத்துகிறவன்) அவன் நெடு நாள்கள் உயிரோடிருப்பன்.

“வபாயாமா ஹூ`தாயாம் ஸ்வரக்கோ லொக: ப்ராக்யாயத.”

பொருள்: கொழுப்பை சேமித்தால் சுவர்க்க லோகம் கிடைக்கும்.

இவ்வித யாகமானது ரிஷிகளால் கண்டு பிடிக்கப்பட்டது என்று கூறிக்கொள்கிறார்கள்.

அவர்கள் இறந்து போனபின் தேவர்கள் கீழிறங்கி வந்து இந்த யாகவிதியை உபதேசித்தார்கள் என்றும் கீழ்குறித்த மந்திரம் சொல்லுகிறது.

தத் ஸ்வர்க்காஸ்ச லொகானாப்னு வந்தி ப்ராணேஷூ சைவதத் ஸ்வர்க்கேஷூ ப்ராதி திஷ்டம் தோயித ஏதாம் பசோர் விபக்திம் ஸ்ரௌத ரிஷிர் தேவபாகோ விதாஞ்சகார கிரிஜாய பாப்ரவ்யாயா மனு ஷ்ய: ப்ரோவாச (ஜத.. பஞ்சிகா 7 காண்டம் 1).

_____________////___________///_________/////

மேலே நான் குறிப்பிட்டுள்ள இந்த வசணங்கள் அனைத்தும், இந்து மத வேத புத்தகங்களான ரிக் வேதம், மனு, போன்ற அடிப்படை நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட,

இந்து மத மக்கள் மாட்டுக் கறியை தாராளமாக உண்ணலாம் என்பதற்கான சான்றுகள்.

இதைப் பார்த்து விட்டு, இஸ்லாமியப் பெயரில் ஒளிந்துக் கொண்டிருக்கும் காவிப் பன்னி Liyakath Liyakathali,

பன்னி பக்தாள்ஸ் Ramesh Rajiah,

அண்டா பிரியாணியை வெங்காயப் பச்சடியோட ஆட்டைய போட்ட Nagarajan Dpe டவூசர் பாய்ஸ் தூக்கில் தொங்காமல் இருந்தால் சரி.

இப்படிக்கு Ayub Khan மற்றும்

Jafar Rabbi,     Marutha Muthu,   மாணிக்கம் ரஹ்மான்,      Sathish Kumar,     Poornima Mythreyan.

- பகிரி வழியாக

சனி, 27 ஜூலை, 2019

இந்து மதத்தில் திராவிடர் நிலை

05.04.1947 - குடிஅரசிலிருந்து...

இஸ்லாம் என்றால் நாணி கோணி, கோபம் கொள்ளும் திராவிட இந்து (சூத்திர) தோழனே! இந்து மதம் என்றால் என்ன? அதில் உன் நிலை என்ன என்று ஊன்றிப் பார்.

இந்துமதம் என்னும் மாத்திரையில் (மருந்து மாத்திரை) இது ஒரு உரைப்பு. இந்து மதம் என்பது வேதமதமாகும். ஏனெனில் இந்து மதத்திற்கு வேதம்தான் பூர்வாதாரமாகும் என்று சொல்லப் படுகிறது.  ஆனால் அந்த வேதத்தின் தன்மையைப் பற்றிச் சிறிது சிந்திப்போம்.

1. சூத்திரன் சமீபத்தில் இருக்கும்போது வேதம் ஓதக் கூடாது. (அத்.4, சு.99)

2. பாபிகள் அருகில் இருக்கும்போது வேதம் ஓதக் கூடாது. (அத் 4 சு.109)

3. நாய், கழுதை இவைகள் அழும்போது வேதம் ஓதக் கூடாது. (அத் 4, சு.115)

இவைகளிலிருந்து ஒரு இந்து சூத்திரனுக்கும் (திராவிடனுக்கும்) வேதத்திற்கும் உள்ள சம்பந்தமும் சூத்திரன் வேத மதத்தில் மதிக்கப்படும் தன்மையும், இஸ்லாம் என்றால் கோணும் இந்து திராவிடர்கள் தெரிந்து கொள்ளலாம்.

இது மற்றொரு உரைப்பு

பொழுது விடியாமல் இருக்கும்போதும், பொழுதுபோன பின்பும் பிராமணன் சூத்திரனுடன் வழி நடக்கக் கூடாது. (அ.4 சு.140)

பிராமணன் தனக்கு (சூத்திரனுக்கு) விரோதம் செய்தாலும், தான் (சூத்திரன்) பிராமணனுக்கு விரோதம் செய்யக் கூடாது.

நீதி விசாரணை

பிராமணகுலத்தில் பிறந்து கர்மானுஷ்டானமில்லாத பிரா மணர் ஆனாலும் அவன் நீதி விசாரணை செய்யலாம்.

சூத்திரன் ஒருபோதும் நீதி விசாரணையோ, தீர்ப்போ செய்யக் கூடாது. (அ.8, சு.20)

எந்தத் தேசத்தில் நீதி தர்ம விசாரணையைச் சூத்திரன் செய்கிறானோ அந்தத் தேசம் முழுவதும் துன்பத்தில் ஆழ்ந்து போகும் (அ.8 சு. 21)

இதிலிருந்து சூத்திரர்கள் (திராவிடர்கள்) ஏன் நீதி நிர்வாக இலாகா தலைமைக்கு நியமிக்கப்படுவதில்லை என்பதும், சூத்திரர் அல்லாத முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஏன் நியமிக்கப்படுகிறார்கள் என்பதும் நன்றாய் விளங்குகிறதல்லவா?

சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டியது. (அ.8, சு. 270)

சூத்திரன் பிராமணனைப் பெயர் ஜாதி சொல்லி இகழ்ச்சியாகத் திட்டினால் சூத்திரன் வாயில் 10 அங்குலமுள்ள எஃகுவைக் காய்ச்சி எரிய எரிய வைக்க வேண்டியது. (அ. 8 சு.271)

பிராமணனுக்கு நீ இதைச் செய்ய வேண்டுமென்று கட்டளை இடுகிற சூத்திரனுடைய வாயிலும், காதிலும் எண்ணையைக் காய்ச்சி ஊற்ற வேண்டியது. (அ. 8 சு. 272).

பிராமணன், சத்திரியன், வைசியன் ஆகிய மூன்று பேர்களில் யாரையாவது சூத்திரன் அடித்தால் எந்த இடத்தில் அடித்தானோ சூத்திரனுடைய அந்த இடத்தை சேதித்துவிட வேண்டியது. (அ.8. சு. 279)

கையினாலாவது, தடியினாலாவது அடித்தால் சூத்திரனின் கையையும் வெட்டிவிட வேண்டும் (அ.8. சு. 280)

பிராமணனுடைய ஆசனத்தில் உட்கார்ந்த சூத்திரனை இடுப்பில் சூடு போட்டாவது, ஆசன பாகத்தில் சிறிது அறுத்தாவது ஊரைவிட்டு விரட்டி விட வேண்டும். (அ.8 சு. 281)

சூத்திரன் பிராமணன்மீது எச்சிச் துப்பினால் சூத்திரனின் உதட்டை அறுத்துவிட வேண்டும். (அ.8. சு. 282)

இந்த மாத்திரை எப்படி வேலை செய்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டு பிறகு இன்னம் இரண்டு உரைப்பு உரைக்கலாம்.

- விடுதலை நாளேடு, 27.7.19

வெள்ளி, 26 ஜூலை, 2019

கடவுளுக்கு மேலே பார்ப்பனர்கள்!

காஞ்சியில் அத்திவரதர் பற்றி அள்ளி விடுகிறார்கள். அதே காஞ்சியிலே ஸ்தலப் புராண அடிப்படையில் இதோ:

காஞ்சியிலுள்ள பஞ்ச தீர்த்தம் என்னும் குளம்பற்றிய ஸ்தலப் புராணக் கதையில் உள்ளது.

பூர்வம் பிருகு மகரிஷி (பார்ப்பனர்) சத்வப் பிரதாபன் என்ற தேவன் சாபம் நீங்க ஓர் தீர்த்தத்தை அறிய வைகுண்டம் சென்றார்.

அப்போது விஷ்ணு, பாம்பின்மேல் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.

பிருகு வந்ததை அறியாது தூங்கினார். இதைக் கண்டு அந்தப் பிருகு தன்னை விஷ்ணு வரவேற்று மரியாதை செய்யாமல், அவமதித்து விட்டதாக ஆத்திரமடைந்தார். விஷ்ணுவின் வச்சஸ்தலத்தில் (மார்பில்) தன் காலால் உதைத்தார்.

(விஷ்ணுவின் மார்பில் லட்சுமி இருப்பதாக புராணக் கதை - எனவே, பார்ப்பனன் உதைத்த உதை லட்சுமிமேலும் பட்டு இருக்கும்).

இதைக் கண்டு கோபமடைந்த மகாவிஷ்ணுவின் மனைவி சிறீதேவி (லட்சுமி), அந்த பிருகுவைப் பார்த்து, நீர் பிரம்ம தேஜோ பலங்களை இழந்து விடுவீர்' என்று சபித்தார். (அதாவது பார்ப்பனத் தன்மையிழந்த சூத்திரனாக வேண்டும்)

பிருகு ரிஷி (பார்ப்பனர்) காலால் உதைத்ததால் தூக்கம் கலைந்து விஷ்ணு, கண் விழித்து எழுந்தார்.

பிருகுவின் பாதங் களைத் தன் கைகளால் பிடித்து, தண்ணீர் ஊற்றிக் கழுவி, அநேக உபசாரங்களைச் செய்தார்.''

உதைத்தவன் ஒரு பார்ப்பனன் என்ற ஒரே காரணத்தால், விஷ்ணு கடவுளே, உதைத்த காலுக்கு முத்தமிடுவதைக் கவனிக்கவேண்டும்.

9.10.2002 அன்று சென்னை நாரதகான சபாவில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சங்கராச்சாரியார் கடவுளுக்கு மேலே பிராமணன் என்று கூறினாரே (நக்கீரன், 15.11.2002) தெரிந்துகொள்வீர் பார்ப்பனர்களை!

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 20.7.19

வியாழன், 25 ஜூலை, 2019

பைபிளைப் பற்றிய நீங்கள் அறியா உண்மைகள்.*

பைபிள் என்பது இரு பகுதிகளைக் கொண்டது பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு.

*பழைய ஏற்பாடு என்பது யூத மதத்தின் மதநூலான Torah ல்  இருந்து திருடப்பட்டது*.

புதிய ஏற்பாடு என்பது ஏசு என்ற கதாபாத்திரத்தின் காலத்தில் அவருக்கு இருந்ததாக கூறப்படும் சீடர்கள் கூறியதாக கூறப்பட்ட செய்திகளை, சம்பவங்கள் நடந்ததாக கூறப்படும் காலத்தில் இருந்து சுமார் *300-400 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட தொகுப்பு*. அதாவது 42 ஆட்களின் பெயர்களினால் எழுதப்பட்ட 66 - 73 சிறு புத்தகங்களின் தொகுப்பு. பைபிள் 1400 வருடங்களாக தொடர்ந்து மாற்றப்பட்டு கொண்டே வந்திருக்கிறது.
  
      *உதாரணமாக 1642 ஜனவரி 8 தேதி அன்று வரை பூமியின் நான்கு மூலைகளிலும் நான்கு தூண்களை உருவாக்கி அதற்கு பாதுகாவலாக நான்கு தேவதைகளை நியமித்து  தட்டையான பூமியிலிருந்த கர்த்தர்*,  (இந்த நாளில் தான் பூமி உருண்டை வடிவமாக இருக்கிறது அதுதான் சூரியனை சுற்றி வருகிறது என்று சொன்ன விஞ்ஞானி  கலிலியோவை  'கர்த்தருக்கு எதிராக பேசுகிறார்'  என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கிறிசவம் விஷம் கொடுத்து கொன்றது) தற்போது சுமார் 200 ஆண்டுகளாகத்தான் உருண்டை வடிவமான பூமிக்கு மாறி இருக்கிறார்.🧐

*பைபிளில் குறிப்பிடப்படும் இந்த 42  ஆட்களின் பெயர்களில் எழுதப்பட்ட சம்பவங்கள் அனைத்தும் குறிப்பிட்ட ஒருசில ஆட்களால் எழுதப்பட்டவைகள். மாறாக அந்தந்த நபர்கள் அல்ல.* உதாரணத்திற்கு மாற்கு சுவிசேஷம் என்பது மாற்கு என்பவரால் எழுதப்பட்டது அல்ல.. மாறாக அவருடைய பெயரில்  இன்னொருவர் எழுதியது. இவ்வாறு அனைத்து சுவிசேஷங்களும் இரண்டு அல்லது மூன்று ஆட்களினால் எழுதப்பட்டிருக்கிறது என்பது *வார்த்தை பிரவாகம், நடை, சம்பவங்களின் தொகுப்பு, சம்பவங்களின் முக்கியத்துவம்**  ஆகியவைகளின்  மூலம் மிகத் தெளிவாக அறியப்படுகிறது.

*ஜான் சுவிசேஷம் போலி என்பதைக் காண்பிக்கும் ஆதாரம்*.👇

https://youtu.be/AJMd5UiTeys

*மார்க்கு சுவிசேஷம் போலி என்பதைக் காண்பிக்கும் ஆதாரம்.👇*

https://youtu.be/kyfuv46z5pM

*லூக் சுவிசேஷம் போலி என்பதைக் காண்பிக்கும் ஆதாரம்.* 👇

https://youtu.be/X1Aj_KQliAc

    பைபிளில் காணப்படும்அனைத்து சம்பவங்களும் ஏற்கனவே *பாபிலோனிய பகுதிகளில் புழக்கத்தில்  இருந்திருக்கின்ற பல புத்தகங்களில் காணப்படும்  கதைகளும் ஒரு சில சம்பவங்களும் தான்.* அவைகள் தான் மீண்டும் பைபிளில் ஏசு என்ற கற்பனை கதாநாயகன் சொல்வதாக,  செய்ததாக திரிப்பு செய்யப்பட்டுள்ளது.👇

https://youtu.be/8b77JQ50ews

*அத்திமரம் கனி தராததால் ஏசு சாபமிட்டு அத்தி மரம் பட்டுப் போன சம்பவம்   Josephus என்ற மத குரு ஒருவர் செய்ததாக பைபிளுக்கு முந்தைய பாபிலோனிய கதைகளில் இருக்கிறது. ஆதாரம்*👇
https://youtu.be/VBcnRJ73E

ஏசு என்பது ஒரு கற்பனை. அதனால்தான் அவர் பிறந்த தேதியோ, மாதமோ, வருடமோ ஒன்றும் இல்லை என்பது மட்டும் இல்லாமல் அவர் இறந்த  தேதியும்  மாதமும் வருடமும் கூட கிடையாது. *ஏசு என்ற கற்பனை கடவுளை பற்றி உலகின் எந்தப் பகுதியிலும் எந்தவித  வரலாற்று குறிப்போ, அந்த காலத்தைய மற்றும் அதற்கு பின் உருவான உலக  வரலாற்றுப் புத்தகங்களிலோ, அந்த காலத்தைய  பாலஸ்தீன உள்ளூர்  அரசு ஆவணங்களிலோ ஒரு வரி குறிப்பு கூட இல்லை என்பதுதான் உண்மை.*👇

https://youtu.be/TPO3xxHo0ao

*ஏசு கதை என்பது ஒரு ஜோடிக்கப்பட்ட கதை.*👇

https://youtu.be/0Xj

*எகிப்து நாட்டில் சுமார் 4000 வருடங்களுக்கு முந்தைய Horus என்ற கடவுளின் கதையான கன்னிக்கு  பிறத்தல், அதிசயங்களை செய்தல், மலை பிரச்சாரங்கள் செய்தல் மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல், போன்ற கதைகளை அப்படியே ஏசுவும் தாங்கி கொண்டு நடக்கிறார் என்பது அதிகம் வெளி வராத கூடுதல் தகவல்.*

https://youtu.be/ocW8DRVfeMA     ( மலையாளம்)

சுருக்கமாக சொல்வதென்றால்,  கிறிசவம் என்பது நல்ல மனதை மழுங்கடிக்க செய்து மக்களை ஒருவிதமான மன நோயாளியாக மாற்றி சமுதாயத்தில் உலவ விடுவது தான். அதன்  முக்கிய நோக்கம்
மக்களை அதாவது  ஏசுவை நம்பாதவர்களை  நரகத்தில்  எண்ணெயில் வறுத்து எடுத்தல், தீர்ப்பு நாள், பரலோகம், பாவத்திற்காக மரித்தார், என்று  பயமுறுத்தி அதன் மூலம்தசமபாகம் வாங்குவதற்கும் நாடுகளையும், இடப் பகுதிகளையும்  கைப்பற்றுவதற்கும்   உண்மைபோல உருவகப்படுத்தப்படும் ஒரு கதை என்பதே நிதர்சனமான உண்மை.👇

*https://youtu.be/J4pFa6KIZ0E*

https://youtu.be/_PNxPgpz5QA

*பைபிளை  நம்புவதன் மூலம் அது மக்களை முட்டாளாக்குகிறது   என்பதை அமெரிக்க கிறிஸ்தவரே  தெளிவுபடுத்துவதை பாருங்கள்.*👇
https://youtu.be/URr0O9aHW38

     *மனித சமுதாயத்தை, பிற மத வெறுப்பை உருவாக்கி  மனநோயாளிகளாக மாற்றி வரும் கிறிசவத்தை பற்றி உண்மை நிலையை விளக்கிச் சொல்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இந்த சமுதாய கடமையை உங்கள் நண்பருக்கு பகிர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அத்தனை தமிழர்களும் அறிய செய்யுமாறு மிகவும் தாழ்மையோடு வேண்டுகிறோம். உங்களின் மூலம் ஒருவர் தன் தவறை உணர்ந்து உண்மையை அறிந்து அதிலிருந்து மீண்டு வருவார் என்றால் நீங்கள் மனித குலத்திற்கு செய்த மிகப் பெரும் கடமை என்பதை நினைத்து பெருமிதம்  கொள்ளுங்கள்.*🙏🙏🙏