ஞாயிறு, 22 நவம்பர், 2020

பார்ப்பனருக்கு அழும் தானங்கள்!


மத்ஸ்ய புராணத்தில் பிராமணர்களுக்குத் தர வேண்டிய பதினாறு மகாதானங்கள்பற்றி கீழ்வரும் விளக்கம் தருகிறது.
துலா புருஷ தானம்: பிராமணனின் எடைக்கு அல்லது தானம் தருபவனின் எடைக்கு விலை உயர்ந்த உலோகம் கொடுப்பது.
ஹிரண்ய கர்ப்ப தானம்: தங்க ஆபரணம் தருவது.
பிராமந்த தானம்: முட்டை வடிவத்தில் தங்கம் தருவது
கல்பதருதானம்: பிராமணர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யும் முறையில் தங்க மரம் தருவது.
கோஸஹஸ்ர தானம்: ஆயிரம் பசுக்கள் தானம் தருவது.
ஹிரண்ய காமதேனு தானம்: விரும்பியவை தரும் காமதேனு பசு கன்று தங்கத்தில் தருவது.
ஹிரண்ய அஸ்வ தானம்: தங்க குதிரைகள் தருவது.
ஹிரண்ய ஸ்வரத் தானம்: தங்க குதிரைகள் பூட்டிய ரதம் தருவது.
ஹேமஹஸ்தி தானம்: தங்க யானை தானம் தருவது.
பஞ்சலாங்கல தானம்: அய்ந்து கலப்பைகள் மரத்தாலும், காளை மாடுகள் தங்கத்தாலும் தருவது.
தார தானம்: பூமி, மலை வடிவத்தில் தங்கம் தருவது.
விஸ்வ சக்ர தானம்: தங்க சக்கரம் தானம் தருவது.
கல்பலதா தானம்: பூக்களோடு கூடிய பத்து படர்ந்த கொடிகள் தங்கத்தில் செய்து தருவது.
சப்த சாகர தானம்: ஏழு கடல்கள் போன்ற வடிவத்தில் தங்க பாத்திரங்கள் தருவது.
ரத்னதேனு தானம்: ஆபரணங்களைக் கொண்டு செய்யப்பட்ட பசு தருவது.
மகா பூதகாத தானம்: தங்கத்தால் செய்யப்பட்ட 100 விரல்கள் அகலமுள்ள பெரும் தங்கப் பாத்திரத்தில் பால், வெண்ணெய் நிரப்பித்தருவது.
இவ்வாறு மத்ஸ்ய புராணம் கூறுகிறது.
எம்.வி. சுந்தரம் எழுதிய “சாத்திரப் பேய்களும்
ஜாதிக் கதைகளும்'' -
ஒரு மார்க்ஸியப் பார்வை, நூலின் பக்கம் 60-61)
பார்ப்பனர்கள்பற்றி ‘‘பேராசை பெருந்தகையே போற்றி'' என்று அண்ணா சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.
- மயிலாடன்
- விடுதலை நாளேடு, 22.11.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக