புதன், 3 ஏப்ரல், 2019

மனுதர்மம் எரிந்த வரலாறு




1901ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் கூட சூத்திரர்கள் என்ற விவரம் தரப்பட்டு இருந்தது.

1922இல் திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டை ஒட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் இவற்றுக்கு பாதுகாப்பாய் உள்ள இராமாயணத்தையும் மனுஸ்மிருதியையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

1927இல் சென்னையில் கூடிய பார்ப்பனர் அல்லாத இளைஞர்களின் முதல் மாநில மாநாட்டில் ஜே.எஸ்.கண்ணப்பர், அரசு பதிவேடுகளிலிருந்து சூத்திரன் என்ற சொல் நீக்கப்பட வேண்டும் என்று தீர்மானத்தை முன்வைத்தார்.

4.12.1927 அன்று வடார்க்காடு மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் மனுதர்ம சாஸ்திர நூல் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

25.12.1927 அன்று அம்பேத்கர் தலைமையில் மராட்டிய மாநிலத்தில் மகத் நகரில் மனுதர்மம் எரிக்கப்பட்டது.

17.5.1981 அன்று திராவிடர் கழகம் சார்பில் நாடெங்கும் மனுதர்மத்தை திராவிடர் கழகம் எரித்து சாம்பலாக்கியது.

10.3.2017 அன்று திராவிடர் கழக மகளிரணியினரே முற்றிலும் பங்கேற்று தமிழ் நாடெங்கும் மனுதர்ம எரிப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

7.2.2019 அன்று மனுதர்ம எரிப்புப் போராட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியரின் தலைமையில் நடைபெற்றது.

“மனுநீதி போதிப்பது என்ன?” ஆய்வுச் சொற்பொழிவுகள் கி.வீரமணி, பக்கம் 122,

- க.பழனிசாமி, தெ.புதுப்பட்டி

- விடுதலை ஞாயிறு மலர் 23. 3. 2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக