ஞாயிறு, 6 ஜனவரி, 2019

ஏன் கொளுத்த வேண்டும் மனுதர்மத்தை?

மனுதர்மம் - அத்யாயம் 5 - சுலோகம் 148: பெண் சுயவிருப்பத்தில் வாழக்கூடாது. சிறுவயதில் தந்தை கட்டுப்பாட்டிலும், பருவ வயதில் கணவன் கட்டுப்பாட்டிலும், கணவன் இறந்தபின் பிள்ளைகள் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும். எப்போதும் தன் விருப்பத்தில் அவள் வாழக்கூடாது.

மனுதர்மம் - அத்யாயம் 5 - சுலோகம் 154: கணவன் மோசமானவனாய், கொடியவனாய் இருந்தாலும், பிற பெண்களோடு உறவு கொண்டு அலைபவனாயினும், நன்னடத்தை, நற்குணம் இல்லாதவனாயினும், பத்தினிப் பெண் என்பவள் அக்கணவனையே தெய்வமாக வழிபட்டு வாழவேண்டும்!

மனுதர்மம் - அத்யாயம் 8 - சுலோகம் 379: கொலைத் தொழில் புரிந்த மற்ற ஜாதிக்காரர்களைத் தூக்கில் போட வேண்டும், பிராமணன் கொலைக்குற்றம் செய்வானேயானால், அவனது தலை மயிரை மொட்டையடித்தலே தண்டனையாகும்.

மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 19: பெண்கள் பெரும்பாலும் விபசாரிகள் என்று அநேக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 35: ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு இவற்றில் ஆணுறுப்பே உயர்ந்தது.

மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 52: மற்றவன் மனைவியிடத்தில் மனைவியில்லாத வேறொருவன் உடலுறவு கொண்டு பிள்ளை பெறலாம்!

மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 60: கணவனை இழந்த பெண்ணை ஒரு ஆண் தன் உடல் முழுக்க நெய்யைப் பூசிக்கொண்டு, இரவில், இருட்டில் உடலுறவு கொண்டு பிள்ளை பெறலாம்!

மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 78: கணவன் சூதாடுகிறவனாய் இருந்தாலும், குடிகாரனாயிருந்தாலும், நோயாளியாக இருந்தாலும், மனைவி அவனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். இல்லையென்றால் அவளுக்கு ஆடை, அலங்காரம், படுக்கை தராமல் விலக்கி வைக்க வேண்டும்.

மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 94: முப்பது வயது ஆண், அழகான 12 வயது பெண்ணையும், இருபத்து நான்கு வயது ஆண் எட்டு வயதுள்ள பெண்ணையும் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

பெண்களை அடிமைப்படுத்தும், இழிவுபடுத்தும் இந்தக் கேடுகெட்ட, ஒழுக்கங்கெட்ட, மோசமான மனுதர்மத்தைக் கொளுத்த வேண்டாமா? கொளுத்துவோம் வாரீர்! வாரீர்!


பிப்ரவரி 7ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மனுதர்ம எரிப்புப் போராட்டம்....


தயாராகட்டும் பட்டியல்!

தயாராகட்டும் பட்டியல்!!

- விடுதலை நாளேடு, 4.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக