புதன், 28 பிப்ரவரி, 2018

ஆரியத்தின் அடிக்கற்கள்!(வேதம், புராணம்)

ரிக் வேதம் - வேதகாலத்தில் எழுதப்பட்டதுஎன்றுசொல் லப்படும், இந்த நூல் பார்ப் பனர்களின் வாழ்வியல் சூத்திரம் என்று கூறப்பட்டுள்ளது. இதில் யாகங்கள் முதல் பார்ப்பனர்கள் அன்றாடம் கடைபிடிக்க வேண்டியவைகள் என அனைத்தும் உள்ளன. இது இன்றுவரை பார்ப்பனர்களால் அடிபிறழாமல் கடைபிடிக் கப்பட்டு வருகிறது என்று கூறுகின்றனர்.

கருட புராணம் - பாவ புண் ணியங்கள் குறித்தும், பார்ப் பனர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கவேண்டிய தண்டனை கள் குறித்தும் எழுதியுள்ளதாக கூறுகின்றனர்.

உபநிடதங்கள்

பல்வேறு உபநிடதங்கள் பார்ப்பனர்களின் வாழ்விய லில்பிறருடன்எப்படிஇருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள் ளது. இந்த உபநிடதங்கள் அவரவர் கோத்திரங்களுக்காக தனித்தனியாக உருவாக்கப் பட்டுள்ளன.

அதில் ஈசா வாஸ்ய உப நிடதம், கேன உபநிடதம், கடோபநிடதம், பிரச்ன உப நிடதம், முண்டக உபநிடதம், மாண்டூக்யஉபநிடதம்,அய்த ரேய உபநிடதம், தைத்திரீய உபநிடதம், பிரகதாரண்யக உபநிடதம், சாந்தோக்யம் போன்றவைகள் பிரபலமான வைகளாகும்.

இவற்றுடன் 24 சாமானிய வேதாந்த உபநிடதங்கள், 20 யோக உபநிடதங்கள், 17 சன்னியாச உபநிடதங்கள், 14 வைணவ உபநிடதங்கள்,14 சைவ உபநிடதங்கள், 9 சாக்த உபநிடதங்கள்.

இவற்றைத் தவிர சுவேதாச் வதரம், கவுஷீதகீயம், நர சிம்மபூர்வதாபனீயம், மகோ பநிஷத், கலிஸந்தரணம், கைவல்யம், மைத்ராயணீயம் போன்றவைகள் உள்ளன.

இந்த உபநிடதங்களின் சட்டதிட்டங்கள் அனைத்தை யும் பார்ப்பனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். பார்ப்ப னர்களைத் தவிர வேறு எவருக்கும் உபநிடதங்கள் பயன்படாது.

பிரம்ம சூத்திரம்

உபநிடதங்களை சுருக்கி அனைத்துப் பார்ப் பனர்களுக்கும் பொதுவான விதிகளை கொண்ட நூலாக உருவானது பிரம்ம சூத்திரம்.

இதர புராணங்கள், சிவ புராணம், விஷ்ணுபுராணம், கந்த புராணம் போன்ற பெயர்களில் வரும் புராணக் கதைகள், இதிகாசம் எனப்படும் ராமாயணம்,மகாபாரதம், கீதைபோன்றவைகள்பொது மக்களைதங்கள்கட்டுப்பாட் டிற்குள்வைக்ககடவுளர்கள் பெயரால் பல்வேறு காலகட் டத்தில் எழுதப்பட்டவையாகும்.

ஆகக் கூட்டிக் கழித்தால் இந்தச் சமாச்சாரங்கள் எல் லாம் ஆரிய - பார்ப்பனக் கூடாரத்தின் அடிக்கற்களும், பாதுகாப்புச் சுற்றுச் சுவர் களுமே!

இவை மட்டும் போதுமா? இவர்களைத் தவிர மற்ற வர்களைக்கீழ்மக்கள்என்று கூறி அவர்களை அடிமைப் படுத்துவதே இவற்றின் உயி ரான அடிநாதமாகும்.

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 24.2.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக