ஞாயிறு, 6 நவம்பர், 2016

இந்துமத சாஸ்திர இதிகாச புராணங்களிலே! நமது நிலை, மதம், தர்மம் என்ன?


இதிகாச (வால்மீகி) இராமாய ணப்படி இராமன் ஆளும் பொழுது சூத்திர ‘சம்பூகன்’ என்ற பக்தன் கட வுளை வேண்டிக் காட்டில் தவம் செய்தான் அவன் வேறு எந்தக் குற்றமும் செய்யவில்லை. அப்பொழுது ஊரில் ஒரு பார்ப்பனச் சிறுவன் இறந்தான் சூத்திர சம்பூகன் கடவுளை வேண்டித் தவம் செய்ததாலேயே தம் பார்ப்பனச் சிறுவன் இறந்தான் என்று பார்ப் பனர்கள் இராமனிடம் சென்று கூறி இந்த அதர்மத்தைப் போக்க வேண்டி னார்கள். உடனே இராமனும் நாரதர் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை ஏற்படுத்தி விசாரிக்கச் செய்தான்.
அந்த நாரதன் குழு (மனுதர்ம சாஸ்திர அத்.8 சுலோக 413 & அத்.9, சு. 355-ல் உள்ளபடி) சூத்திரனுக்குக் கடவுள் பிராமணன்தான்; பிராமணனைக் கடவுளாக வணங்காத சூத்திரனை அரசு கொல்ல வேண்டும்; பிராமணனுக்குத் தாசானுதாசத் தொண்டே சூத்திரனுக் குத் தவம் (மதம்); சூத்திரனுக்குத் தவம் செய்ய உரிமை கிடையாது என்று முடிவைக் கூறிற்று (வால்மீகி இராமா யணம், சத். காண்டம் அத் 76 & 87) இந்த முடிவுப்படியே குற்றமற்ற ‘கடவுள் பக்தன்’ சம்பூகனது தலையை இராமன் தன் கையாலேயே வெட்டிக் கொன்றான் (உத்.கா. சருக் 88) மேலும் இதற்கு முன்பே சகோதரத் துரோகி சுக்ரீ வனுக்கு ஆதரவாகக் குற்றமற்ற வாலியை மரத்தில் மறைந்திருந்து இராமன் கொலை செய்துள்ளான். (கிஷ்கிந்தா காண். சருக் 24)

இப்போர்ப்பட்ட அநியாயக் கொலை காரக் குற்றவாளி இராமனை நாம் வணங்க வேண்டுமாம்; கண்டிக்கக் கூடாதாம்; ஆனால் விபீஷணன் சொன்னபடி நேர்மையான குற்றமற்ற சிவபக்தன் இராவணன் (வால்மீகி யுத்தகாண்டம் சருக் 111) தன் சகோதரி சூர்ப்பநகையை இராம லட்சுமணர் அவமானப்படுத்தியதற்காகவும் தன் இனத் தோழர்களைக் கொன்றதற்காக வும் பழிக்குப் பழி வாங்கவே இராமனது மனைவி சீதையைத் தொட்டுத் தூக்கிச் சென்றான். (ஆரண்ய காண்டம், சருக் 49,54) சீதையின் விருப்பமில்லாது அவளை இராவணன் தொட்டிருந்தால் அவனுக்கு இருந்த சாபங்களின்படி அவனது தலை வெடித்துத் தூள்கள் ஆகி உடல் தீப்பற்றி எரிந்திருக்கும். மற்றப்படி இராவணன் ஒரு தவறும் செய்யவில்லை. இப்படிப்பட்ட குற்ற மற்ற பக்தன் இராவணன் உருவத்தையே இன்றும் வருடந்தோறும் டில்லி “ராம்லீலா’ மய்தானத்தில் கொளுத்து கிறார்கள். இது எப்படி நீதி? தர்மம்? மற்றப்படி ஏதாவது தவறு இராவணன் மீது கூறினால் அது அக்காலத்திய அர சர்கள் எல்லோரும் செய்த மாதிரி தான் இராவணன் மட்டும் செய்யவில்லை.

மேலும் மதத்தைக் குற்றம் கூறக் கூடாது என்பவர்களுக்குச் ‘சூத்திரர்’ என்றால் சாஸ்திரப்படி என்ன என்று தெரியுமா?

1. மனுதர்ம சாஸ்திரப்படி இப்பொ ழுதுள்ளவர்கள் பிராமணரும் (பார்ப் பனர்), சூத்திரருமே (பார்ப்பனரல்லா தார்) ஏனென்றால் பிராமணர்களை வழிபடாததனாலும், உபநயனம் முதலிய சடங்குகளைச் செய்து கொள்ளாத தனாலும் சத்திரியர் முதலிய மற்றச் சாதிகளார் கூட நாளடைவில் சூத்திரத் தன்மை அடைந்து சூத்திரர் ஆகி விட்டார்கள் (மனு அத் 10. சுலோ 43) திராவிடத்தை (தமிழகத்தை) ஆண்ட வர்களும் சூத்திரர்களே (மனு அத் 10, சு.44).
2. சூத்திரர் என்றால் (அதாவது) பஞ்சமர் என்ற பள்ளு, பறை, சக்கிலி போன்ற தாழ்த்தப்பட்டவர்களைவிட உயர்ந்தவர் என நினைத்துக் கொண்டு இருப்பவர்.
(அ) யுத்தத்தில் தோற்று ஓடியவர்.
(ஆ) யுத்தத்தில் கைதியானவர்.
(இ) பிராமணனுக்குப் பக்தியுடன் தொண்டூழியம் செய்பவர்.
(ஈ) (பிராமணனுடைய வைப்பாட்டி, தேவடியாள்) விபசாரி மக்கள்.
(உ) விலைக்கு வாங்கப்பட்ட அடிமை.
(ஊ) ஒருவனால் கொடுக்கப்பட்ட அடிமை.
(எ) தலைமுறை தலைமுறையாகத் தொண்டூழியம் செய்பவர் என்று 7 தன்மைகளில் உள்ளவர் (மனு அத்8 சு. 415).
3. சூத்திரர் உணவைத் தொட்டாலும் பார்த்தாலும் அசுத்தமாகி விடும் (அ.3 சு.251).
4. சூத்திரனைச் சிரார்த்தம் திதி, திவசம் செய்யும் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தவேண்டும் (அ. 3 சு. 242).
5. சூத்திரனுக்குச் சாஸ்திரம் தருமம், விரதம் முதலியவைகளைச் சொல்லலா காது சொல்லிக் கொடுத்தால் விபசார பாபமாகும். (மனு அ.499 & வால்மீகி சுந்.காண். சருக் 28).
6. சூத்திரனிடம் உண்மையை அறியப் பழுக்கக் காய்ச்சிய இரும்பைத் தொட் டால் கைவேகாமலும், நீரில் அமிழ்த்தப் பட்டால் சாகாமலும், அவனது மனைவி மக்கள் தலையில் அடித்தால் துன்பப் படாமலும் இருந்தால் சூத்திரன் சொல்வது உண்மை (மனு அத். 3/115).
7. சூத்திரன் பக்கத்திலிருக்கும் போது வேதம் ஓதக் கூடாது (அ. 4/80)
8. சூத்திரன் பிராமணனைத் திட்டி னால் நாக்கை அறுக்க வேண்டும் (அ. 8/270).
9. பிராமணச் சாதியைச் சொல்லித் திட்டினால் கம்பியைக் காய்ச்சி எரிய எரியச் சூத்திரன் வாயில் வைக்க வேண்டும் (அ 8/271).
10. பிராமணனை எதையாவது ‘செய்’ என்று உபதேசிக்கிற சூத்திரனது காதி லும், வாயிலும், எண்ணெயைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் (அ. 8/272).
11. சூத்திரன் பிராமணனை அடித் தால் கையையும், உதைத்தால் காலையும் வெட்ட வேண்டும் (அ.8/279,280).
12. சூத்திரன் பிராமணனுடன் சரிசமமாக உட்கார்ந்தால் இடுப்பில் சூடு போட்டுக் குண்டியை அறுத்து, ஊரை விட்டுத் துரத்த வேண்டும் (அ. /281).
13. சூத்திரன் சம்பாதித்த சொத்து, தலைவனாகிய பிராமணனுக்கே சொந் தம்; சம்பாதித்த சூத்திரனைச் சேரக் கூடாது; ஏனென்றால் சூத்திரன் சொத்து பிராமணனுக்குத் துன்பம் (அ.
10/129 8/416).
14. பூணூல்  முதலிய (துவிஜர் இரு பிறவியாளர்) பிராமணச் ஜாதிக் குறியை அணிகின்ற சூத்திரனை அரசு வெட்டி விட வேண்டும் (அ 9/224).
15. சூத்திரன் பிராமணத் தொழிலைச் செய்தாலும் அவன் பிராமணன் ஆக மாட்டான்.  பிராமணன் சூத்திர வேலை செய்தாலும் அவன் உயர்ந்த பிராமணச் சாதியே (அ. 10/75).
16. சூத்திரனுக்கு மேல் சாதியாருக்குத் தாசானுதாசத் தொண்டூழியம் செய் வதே மதம் (வால்மீகி இரா உத் கா. சருக் 87).
17. பெண்களையும், பிராமணரல்லா தாரையும் கொன்றால் குறைந்த குற்றம் தான் (மன அ. 11/66).

இனி, பிராமணன் என்றால் என்ன என்று பார்ப்போம்.

1. பிராமணன் உலகிலுள்ள சகல வருணத்தாருடைய பொருள்களையும், தானே தானம் வாங்கப் பிரபு ஆகிறான் (மனு.அத் 1, சுலோ. 100).
2. பிராமணனைக் காப்பாற்ற மற்றவர்களைக் கொலை செய்யலாம் (அ. 8/143).
3. பிராமணனுடைய வர்ணாச்சிரம ஜாதி முறை ஏற்றத் தாழ்வைக் காப்பாற்ற யுத்தம் செய்ய வேண்டும் (அ. 8.348).

4. பிராமணன் மற்றச் ஜாதியார் பெண்களைப் புணர்ந்தால் ‘தர்மம்’ (அ. 8/13) ஆனால் சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனைத் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து, அவனது பொருட்களைக் கொள்ளையிட வேண்டும் (அ 8/374).
5. பிராமணனிடத்தில் சூத்திரப் பெண்ணுக்குப் பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்குப் பிராமண அப்பன் சொத்தில் பாத்தியமில்லை. ஆனால் சூத்திரனிடத்தில் பிராமணப் பெண் ணுக்குப் பிள்ளை பிறந்தால் அப்பிள் ளைக்குச் சூத்திரஅப்பன் சொத்தில் பாத்தியமுண்டு (அ.9/155) இப்படியே மனுவை அடிப்படையாகக் கொண்டு எழுதிய இந்து உரிமைச் சட்டத்திலும் இருந்தது.
6. பிராமணன் என்ன கொலைக் குற்றம் செய்தாலும் அரசு அவனைக் கொல்லக் கூடாது (அ. 8.381).
7. பிராமணன் கூலி கொடுக்காமலே சூத்திரனைவேலை வாங்கலாம். பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரன் படைக்கப்பட்டான் (மனு அ 8/413; பகவத் கீதை அத். 18. சுலோ 41,44,48).
8. பிராமணனுக்குத் தொண்டு செய்தால் மறுபிறவியில் சுகமாக இருக்கலாம் (மனு அ. 8/414).
9. பிராமணன் சந்தேகமின்றிச் சூத்திரன் பொருட்களைக் கைப்பற்ற லாம். ஏனென்றால் சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் சொந்தக்காரனில்லை. (அ. 8/417).
10. பிராமணனுக்குச் சூத்திரன் மனோ வாக்குக் காயங்களால் தொண்டு செய்வதே தர்மம் (அ. 9/335).
11. பிராமணன் எத்தகைய கொடிய குற்றம் செய்தாலும் அவனை மொட்டை அடித்தாலே  போதும் அதே கொலைத் தண்டனைக்கு ஒப்பாகும். அல்லது அவனது பொருட்களைக் கொடுத்து வெளியூருக்கு அனுப்ப வேண்டும் (அ.8/379, 380) பிராமணன் தண்டனையிலி ருந்து விதி விலக்குக்கு உரியவன் (வால்மீகி இரா உத்.கா. சாக் 71).
12. பிராமணன் எதையும் செய்யலாம். ஆனால் மற்றவர்கள் தம் ஜாதித் தொழிலை விட்டு வேறு தொழிலைச் செய்தால் அவர்களை ஊரைவிட்டே துரத்த வேண்டும் (அ. 9/225 & 10/99).
13. பிராமணன் சூத்திரனது பொருட்களைத் தன் பிரியப்படி கொள் ளையிடலாம். ஆனால், பிராமணன் பொருளை எடுத்த சூத்திரனைச் சித்திர வதை செய்து கொல்ல வேண்டும். (அ. 9/248).
14. பிராமணன் ஞானியாயினும் மூடனாயினும் அவனே மேலான தெய்வம் (அ. 9/317).
15. பிராமணன் உண்டு மீந்த உணவு, கிழிந்த ஆடை, சத்தற்ற தானியங்களை சூத்திரனது பிழைப்பிற்குக் கொடுக்க வேண்டும் (அ.10/125).
16. பிராமணன் யாகம் செய்ய மற்றவர்களின் பொருட்களை வலிமை செய்து, களவு செய்து எடுத்துக் கொள்ளலாம் (அ. 11/12,13).
17. திருடி யாகம் செய்யும் பிரா மணனை அரசு தண்டிக்கக் கூடாது (அ. 11/21).
18. பிராமணன் மற்றவர்களைக் கொலை செய்தால் அதற்குத் தண் டனையாக, விரதம் இருந்தால் போதும்; அல்லது வேதப் பிராமணனுக்குப் பசுதானம் கொடுத்தால் போதும் (அ. 11/30).
19. ஜாதிக் கலப்பு (வர்ணசங்கிரமம்) நரகத்துக்குக் கொண்டு போகும் (கீதை அத். 1/44) இந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டனவே புராணங்கள், தொல்காப்பியப் பொருள திகாரப் புறத்திணைச் சூத்திரம் 74, கற்பியல் சூத் 36, புறநானூற்று நெடுஞ்செழியன் பாடல், சிலப்பதிகார மதுரை ஊர் காண்காதை, சீவக சிந்தாமணிப் பதுமையார் இலம்பகப் பாடல் 1294. வச்சணந்திமாலை வெண்பாப் பாட்டியல் வருண எழுத் துக்கள், பாக்களின் நிறங்கள் கலம்பகம் பாடுதல் எல்லாம் இப்படி வசதியுள்ள இடங்களில் சில செயல்படுத்தப்படு கின்றன.
மற்ற இடங்களில் சொல்லவும் செயல்படுத்தவும் முடியவில்லை. அதனாலேயே பொதுவாகத் ‘தர்மம்’ கெட்டு விட்டது. ‘அதர்மம்’ நடக்கிறது என எத்தர்கள் மாய்மாலக் கூச்சல் போடுகின்றனர். இப்படிஒரு மதத்திற் குள்ளேயே ஒருவருக்கு மற்றவரைக் கீழ்மைப்படுத்திக் கேவலப்படுத்தி வைத்திருக்கும் நிலை வேறு மதத்தில் இல்லை. மேற்கண்டவைகள் யாவும் நமது “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கொள்கைக்கு மாறானவை யல்லவா?

இவற்றையெல்லாம் கூறினால், நல்ல நிலையில் இல்லாமல் ஒருவன் தொல்லைப்படும் பொழுது வந்து சிலர் ‘கடவுளை’ நம்பு என்று ஏதாவது கெட்டிக்காரக் கட்டுக்கதையைக் கூறி மழுப்புவார்கள் அவர்களால் ‘கடவுள் பக்தனுக்கும் தொல்லைகள் ஏற்படுகின் றனவே! என்றால் ‘விதி’ என்பார்கள் விதிப்படி நடந்தால் ‘கடவுள்’ என்ன செய்வார் என்றால் மாற்றி மாற்றி எதையாவதுகூறிக் கொண்டே போவார்கள். இப்படிப்பட்ட சாஸ்திர, இதிகாச புராணங்களை மானமுள்ள வர்கள் ஏற்றுக் கொள்ளலாமா? நம் மனம் புண்படாதா? சிந்தியுங்கள்!
-விடுதலை,18.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக