வியாழன், 10 நவம்பர், 2016

‘இந்து லா’ வின் மூலமான மனுதர்ம சாஸ்திரம்


அந்தப் பிரம்மாவானவர் இந்த உல கத்தைக் காப்பாற்றுவதற்காக தன்முகம், தோள், துடை, பாதம் இவைகளினின்று  உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும் மறுமைக்கும் உபயோகமான கருமங் களைத் தனித்தனியாய் பகுத்தார். - (முதல் அத்தியா யம் :சுலோகம் 87 )

பிராம ணனுக்கு ஓதுவித்தல் ஓதல் எக்கியஞ் செய்தல் எக்கியஞ் செய்வித்தல் தானங் கொடுத்தல் தானம் வாங்குதல் ஆகிய இவ்வாறு தொழிலையும் ஏற் படுத்தினார்.
- ( முதல் அத்தியாயம்: சுலோகம் 88 )

சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத் தாருக்கும் பொறாமையின்றி பணிசெய் வதை முக்கியமான தருமமாக ஏற்படுத் தினார். இதனால் அவனுக்கு தான முதலியவையுண்டென்று தோன்று கிறது.
- ( முதல் அத்தியாயம்: சுலோகம் 91 )

பிராமணனுக்கு மங்களத்தையும் க்ஷத்திரியனுக்கு பலத்தையும் வைசியனுக்கு பொருளையும் சூத்திரனுக்குத் தாழ்வை யும் காட்டுகிறதான பெயரை இட வேண்டியது.
- (இரண்டாம் அத்தியாயம்: சுலோகம் 31)
பிராமணனுக்குக் சர்ம்மவென்பதையும் க்ஷத்திரியனுக்கு வர்மம் என்பதையும் வைசியனுக்கு பூதியென்பதையும் சூத்திர னுக்குத் தாசனென்பதையும் தொடர்ப் பேராக இடவேண்டியது.
- (இரண்டாம் அத்தியாயம்: சுலோகம் 32)


பிராமணனுக்குப் பஞ்சி நூலாலும் க்ஷத்திரியனுக்கு க்ஷணப்பை நூலாலும் வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்றுவடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது.
- (இரண்டாம் அத்தியாயம்: சுலோகம் 44)


எவன் சிரார்த்தஞ்செய்து மிகுந்த அந்நமுதலியவற்றை சூத்திரனுக்குப் போடுகிறானோ அந்த மூடன் கால சூத்திரமென்னும் நரகத்தில் தலைகீழாக விழுகிறான்.
- (மூன்றாம் அத்தியாயம்: சுலோகம் 249)

பாலியமாகவிருந்தாலும் யௌவநமாக விருந்தாலும் வார்த்திப மாகவிருந்தாலும் ஸ்திரீகள் தன்றன் வீடுகளிலும் தன்மநம் போனபடி ஒரு காரியத்தையும் செய்யக்கூடாது.
- (அய்ந்தாம் அத்தியாயம்: சுலோகம் 247)
பாலியத்தில் தகப்பன் ஆஞ்ஞையி லும் யௌவநத்தில் கணவன் ஆஞ்ஞையிலும், கணவனிறந்தபின்பு பிள்ளைகள் ஆஞ்ஞையிலும் இருக்க வேண்டியதே யல்லது ஸ்திரீகள் தன்சுவாதீநமாக வொருபோது மிருக்கக் கூடாது.
- (அய்ந்தாம் அத்தியாயம்: சுலோகம் 248)
கணவன் துராசாரமுள்ளவனாக விருந்தாலும் அந்நிய ஸ்திரீலோலனா யிருந்தாலும் நற்குணமில்லாதவனாய் இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீ யானவள் அவனை தெய்வத்தைப் போற் பூசிக்க வேண்டியது.
- (அய்ந்தாம் அத்தியாயம்: சுலோகம் 154)
பிராமணன் சம்பளங் கொடுத் தேனுங் கொடாமலேனும் சூத்திரனி டத்தில் வேலை வாங்கலாம். ஏனெ னில் அவன் பிராமணன் வேலைக் காகவே பிரமனால் சிருஷ்டிக்கப்பட் டிருக்கிறானல்லவா. -
( எட்டாம் அத்தியாயம்: சுலோகம் 413)

பிராமணன் சந்தேகமின்றி மேற் சொன்ன எழுவித தொழிலாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம். யஜமாநனெடுத்துக் கொள்ளத்தக்க பொருளையுடைய அந்தச் சூத்திரர் தன்பொருளுக்குக் கொஞ்சமுஞ் சொந்தக் காரரல்ல.
- (எட்டாம் அத்தியாயம்: சுலோகம் 417)

ஒருவனுக்கு நிலமில்லாமல் வித்துள் ளவனா யிரந்தால் மற்றுமொருவனை யடைந்து உன்னிலத்தில் நான் பயிரிடுகி றேன் அப்பயிர் நம்மிருவருக்கும் பொது வாயிருக்கட்டு மென்று ஏற்பாடு செய்து கொண்டு பயிரிடுகிறாற்போல், ஒருவன் மனையாளிடத்தில் மனையாளில்லாத மற்றொருவன் பிள்ளையையும் உண்டு பண்ணலாம் அந்தவேற்பாடு இல்லா விட்டால் உடையவனைச் சாறுமென்பது பிரத்தியக்ஷமாகவே யிருக்கிறது. ஏனெனில் பீஜத்தைவிட நிலமுயர்ந்ததல்லவா.
- (ஒன்பதாம் அத்தியாயம்: சுலோகம் 52)
விதவையிடத்தில் பெரியோர்களின நுமதி பெற்றுக்கொண்டு புணரப் போகிறவன் தன்தேகமெங்கும் நெய்யைப் பூசிக்கொண்டு இரவில் இருட்டான விடத்தில் அவளைப் புணர்ந்து ஒரே பிள்ளையை யுண்டுபண்ண வேண்டியது இரண்டாம் பிள்ளையை ஒருபோதும் உண்டுபண்ணக் கூடாது.
- (ஒன்பதாம் அத்தியாயம்: சுலோகம் 60)

சூத்திரன் சுவர்க்கத்திற்காவது, ஜீவநத் திற்காகவாவது அல்லது இரண்டிற்குமா வது, பிராமணனையே தொழ வேண்டும். இவன் பிராமணனையடுத்த சூத்திர னென்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே யவனுக்குப் பாக்கியம்.
( பத்தாம் அத்தியாயம்: சுலோகம் 122)

சூத்திரன் பொருள் சம்பாதிக்கத்தக்க வனாயிருந்தாலும் குடும்பத்திற் குபயோக மானதைவிட மிகவுமதிக பொருளைச் சம்பாதிக்கக் கூடாது. அப்படி சம்பாதித் தால் தன்னாலுபசரிக்கத்தக்க பிரா மணாளையே ஹிம்சை செய்ய வேண்டி வரும்.
- (பத்தாம் அத்தியாயம்: சுலோகம் 129)

-விடுதலை ஞா.ம.13.2.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக