திங்கள், 10 ஜூன், 2019

தாய்க்கு திவசம் செய்ய புரோகிதன் சொல்லும் மந்திரம்


தாய்க்கு திவசம் செய்யப்போகிறான் ஒரு பாமரன்.
அப்போது புரோகிதன் சொல்லும் மந்திரம் என்னவென்றால்,
என்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதா தனமே ரேதஹா
பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா
அவபத்ய நாம.....
இந்தக் கேடுகெட்ட மந்திரத்துக்கு என்ன பொருள் தெரியுமா? சொல்லவே கூசுகிறது. இருந்தாலும் பாருங்கள்
எங்க அம்மா ராத்திரி வேளைகள்ல யார்கிட்ட படுத்துக்கொண்டு என்னைப் பெற்றாளோ தெரியாது. ஆனால் .... நான் ஒரு உத்தேச நம்பிக்கையில்தான் அவளை என் அப்பாவின் மனைவியாகக் கருதுகிறேன். அவளுக்கு என் சிரார்த்தத்தை செய்கிறேன் ......
இதுதான் அதன் பொருள். நம் தாயை நம் கண்முன்னே நடத்தை கெட்டவள் என சொல்வதுதான் ..... அதையும் நம்மை வைத்தே உச்சரிக்க வைப்பதுதான் இந்த மந்திரத்தின் நோக்கம்.
எல்லாருக்கும் வாழ்க்கை என்பது அவரவர் அம்மா போட்ட பிச்சை. அம்மாவின் புடவையில் கட்டிய தூளியின் கட்டில்தான் சின்னக்குழந்தையில் நாம் தூங்கியிருப்போம். நாம் வளர வளர அதைப் பார்த்து மலர்கிறவள் தாய் மட்டும்தான்.
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக் கேட்டதாய்
என வள்ளுவரே தாய்மையின் உயர்வை ... மகனை வைத்துச் சொல்கிறார். ஆனால் இந்தப் பார்ப்பான் செய்யும் வேலையைப் பார்த்தீர்களா? அவன் சொல்லும் மந்திரம் நம் தாயை எவ்வளவு கேவலப்படுத்துகிறது பாருங்கள். தேவையா நமக்கிந்த திதி, திவசம், தர்ப்பணம்....?.
-சுரேந்திர ராசன் அய்யம்பிள்ளை
முக நூல் பக்கம், 10.6.15

2 கருத்துகள்:

  1. உன்னோட பிளாக் உன்னோட உருட்டு. நீ பாட்டுக்கு அவிழ்த்துவிடு யாரு வந்து கேட்க போறாங்க

    பதிலளிநீக்கு
  2. திதி மந்திரம் : அம்மாவிற்கு திவசம் செய்கின்ற போது சொல்கின்ற ஒரு மந்திரம் இது

    என்மே மாதா ப்ரவது லோபசரதி
    அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ
    பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா
    அவபத்ய நாம....


    பொருள்: “யாருடைய சுக்லத்தினால் நான் பிறவி பெற்றேனோ, அது அம்மாவுக்குத் தான் தெரியும். அந்த நம்பிக்கையில் அவளை என்னுடைய அப்பாவின் மனைவியாகக் கருதுகின்றேன். அப்படிப்பட்ட அந்த அம்மாவிற்கு இந்த ஆஹுதி போய் சேரட்டும்”

    "...ப்ரலுலோப சரதி ..." யாருடைய சுக்லத்தினால் நான் பிறவி பெற்றேனோ அந்த என்னைப் பெற்ற தந்தைக்கு இந்த ஆஹுதி போகவேண்டும் என்பது பொருள். எவ்வளவு அழகான, தெளிவான,குறிப்பான மந்த்ரம்? இதை இவ்வளவு கொச்சைப்படுத்துகிறார்களே?

    அந்தக் குறிப்பிட்ட தன்னைப்பெற்ற தகப்பனுக்கு இந்த ஆகுதி பலிதமாகவேண்டும் என்பதில் இந்த மந்திரம் காட்டும் அக்கரையைக் கண்டு வியக்கவேண்டாமா?

    அப்படிச் சரியானவனுக்குப் போய்ச்சேர்ந்தால் அல்லவோ, இந்த மகனுக்கு பித்ரு கடன் தீரும்?!

    இறந்த தந்தைக்கு திவசம் செய்கின்ற போது சொல்லப்படும் ஒரு மந்திரம்

    யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா
    தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப
    பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா
    ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம
    கிருஸ்ண கிருஸ்ண கிருஸ்ண

    “யாருடைய சுக்லத்தினால் நான் பிறவி பெற்றேனோ அந்த என்னைப் பெற்ற தந்தைக்கு இந்த ஆஹுதி போகவேண்டும். அந்தக் குறிப்பிட்ட தன்னைப்பெற்ற தகப்பனுக்கு இந்த ஆகுதி பலிதமாகவேண்டும்”

    மேலும் இந்த மந்திரத்தைச் சொல்லி கோத்திரத்தையும், பெயரையும் சொல்கிறோம், பல இடங்களில் மறந்து போயிருக்கும். தாத்தா, கொள்ளுத் தாத்தா பெயர் பலருக்குத் தெரியவில்லை, இதனால் பெயரும், கோத்திரமும் கூட தவறாகப் போவதற்கு வாய்பிருக்கிறது, ஆனால் நான் பிறப்பதற்கு யார் காரணமோ அவனுக்கு இந்த ஆகுதி போய்ச் சேரவேண்டும் என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது?

    தர்மரிடம் ஒரு அயோக்கியனைக் காண்பிக்கும்படி கேட்டார்களாம் அவர் - என் கண்ணுக்கு ஒருஅயோக்கியன்கூடத் தென்படவில்லை என்றாராம். துரியோதனனிடம் -ஓரு நல்லவனைக் காண்பிக்கும்படிக் கேட்டார்களாம், அவன் - ஒரு நல்லவன்கூட என் கண்ணுக்குப் புலப்படவில்லை என்றானாம்.

    பதிலளிநீக்கு