வெள்ளி, 7 ஜூன், 2019

வேதங்களின் வண்டவாளம்


“ஏ சேர்க்கை செய்வதற்குத் தகுதியுள்ள வாலிபனே! நீ உனக்கு விவாகம் செய்த பெண்ணை அல்லது நியோக விதவையை நல்ல சந்ததிகளுடையவளாகச் - செய்விப்பாயாக.... ஏ பெண்ணே! நீயும் விவாகம் முடித்துக் கொண்ட அல்லது - நியோகத்தில் சேர்த்துக் கொண்ட புருஷ னைக் கொண்டு பத்துப்பிள்ளைகள் ஈன்றெடுப் பாய்... பதினோராவது புருஷனை நியோகத் தில் பெற்றுக் கொள்வாய்" (ரிக் வேதம் 10, 85; 45) ஒவ்வொரு பெண்ணும் (கலியாண மில்லாமலேயே) பதினொரு புருஷன் வரை யிலடைந்து நியோகத்தில், (வியபிசாரத்தில்) பத்துபிள்ளைகள் வரையில் பெற்றுக் கொள்ளும்படி வேதம் கட்டளையிடுகின்றது. இது போல் ஆடவனும் பதினொரு பெண்களுடன் வியபிசாரத்தின் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாமென்றும் கூறுகின்றது.
எப்படிப் பசுக்கள் தமக்கு வேண்டிய நேரத்தில் தகுந்த மாதிரியாக உயிர்ப் பிராணி களை சந்தோஷப்படுத்துகின்றதோ, அப்படியே நல்ல ஸ்திரிகள் ஒவ்வொரு நேரத்திலும் தங்கள் கணவன்மார்களையும், மற்றவர்களையும் திருப்தி செய்து சந்தோஷப் படுத்துவாளாக" (யஜுர் 17-3) ஆடுமாடுகள் போலவே இடம் நேரம் முதலியவைகள் கூட கவனியாமல், புருஷர்களுடன் மட்டுமின்றி மற்ற ஆடவர் களுடனும் சுகித்திருப்பதற்கு வேதம் இடம் கொடுக்கின்றது.
-விடுதலை நாளேடு, 4.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக