வியாழன், 28 மார்ச், 2019

மனுதரும_சாஸ்திரம் - சூத்திரன் பற்றி!

#மனுதரும_சாஸ்திரம்

அத்தியாயம் 10
சுலோகம் 73

["சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் சூத்திர ஜாதியாகமாட்டான். ஏனென்றால் அவன் ஈனத்தொழிலைச் செய்தாலும் அவன் ஜாதி உயர்ந்தது]" .

பிரமன் நாலு வர்ணங்களை அடிப்படையாகவே கொண்டே மனிதர்களை படைத்தார் என்று இந்து மதம் வேதநூல்கள் நமக்கு கற்ப்பிக்கிறது. [இதில் வர்ணங்கள் என்பதனை ஜாதிகள்  என்று புரிந்துக்கொள்ள வேண்டும்]  இதில் நாலு வகையான மனிதர்களில்... முதல்வகையான மனிதனே உயர்ந்தவனென்று இந்து மதம் சொல்லுகிறது .
பிரமன் மனித இனத்தை படைக்கும்போது , தன்னுடைய நெற்றியிலிருந்து பிராமணர்களை படைத்தார் என்றும்

ஷத்தியர்களை தன்னுடைய தோள்பட்டை  புஜத்திலிருந்து படைத்தார் என்றும்

வைஷியர்களை தன்னுடைய தொடைலிருந்து படைத்தார் என்றும்

சூத்திரனை தன்னுடைய கால் பாதத்திலிருந்து படைத்தார் என்றும், இந்து மத நூல்கள் நமக்கு விரிவாக விளக்கிறது .

இதில் சூத்திரன் என்கிற ஜாதியில்தான் நம் அனைவரையும் பிராமணன் வரிசைப்படுத்துகிறான். இதில்... தேவர் , கவுண்டர் , செட்டியார் , தலித் , நாடார் , அகமுடையார் , வன்னியர் , ரெட்டியார் , கோணார் , நாயுடு  போன்ற எல்லா ஜாதிகளையும் மையப்படுத்தியே பிரமன் சூத்திரன் என்கிற ஜாதியை படைத்து உள்ளான்.
நாம்தான் இங்கு பெருமைக்காக அவரவர் ஒவ்வொரு ஜாதி பெயரை வைத்துக்கொண்டு என் ஜாதிதான் உயர்ந்தது , இல்லை இல்லை என் ஜாதிதான் உயர்ந்ததென மார்தட்டிக்கொள்ளுகிறோம் . ஆனால் நிதர்சனமான உண்மை அவையல்ல. ஏனென்றால் பிராமணன் பார்வையில் பிராமண ஜாதியில் பிறந்தவர்களை தவிர்த்து மற்ற ஜாதியில் பிறந்தவர்கள் அனைவரும் கீழ்ஜாதி என்று சொல்லப்படுகிற சூத்திர ஜாதிதான் .

சூத்திரன் என்றால் யார் ?

சூத்திர ஜாதியில் பிறந்தவர்களை [நம்மை]  இந்து மத நூல்கள் இப்படி வரிசைப்படுத்திக் விளக்குகிறது.

சூத்திரன் தேவடியாள் வம்சத்தில் பிறந்தவன் என்றும்

சூத்திரன் தன்னுடை தாய்யையும் , மனைவியும் அடுத்தவனுக்கு கூட்டிக் கொடுப்பவன் என்றும்

சூத்திரன் போரில் புறமுதுகிட்டு ஓடுபவன் என்றும்

சூத்திரன் , பிராமணன்க்கு அடிமைகள் எனறும்

சூத்திரன் , பிராமண ஜாதியில் பிறந்தவனுக்கு சேவகம் செய்யவேண்டும் . அதேசமயத்தில் சூத்திரன் பிராமணனிடம் தன் செய்த வேலைக்கு கூலி எதிர்பார்க்ககூடாதென்றும்

சூத்திரன் , பிராமண ஜாதியில் பிறந்தவர்கள் திண்ற மிச்ச உணவைதான் திங்கவேண்டும் , மற்றும் பிராமணன் உடுத்தி கிழிந்த ஆடையைதான்  சூத்திரன் உடுத்தவேண்டும் என்று... இந்து மனுதரும சாஸ்திரம் சொல்லுகிறது.

- ரோசா ரோச கட்செவி பதிவில்
28.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக