ஞாயிறு, 4 நவம்பர், 2018

கிழித்தெறிக கீதையை!

இன்றைக்கும்கூட கீதையை தேசிய நூலாகக் கொண்டு வரவேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

வெளியுறவு அமைச்சராக இருக்கும் சுஷ்மா சுவராஜ் வெளிப்படையாகவே சொல்லுகிறார் (8.12.2014 டில்லியில்)

ஒரு மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கக் கூடியவர் (அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பச்சையாகவே சொல்லுகிறார்)

“பகவத் கீதையை தேசிய தர்ம சாஸ்திரமாக அறிவிக்க வேண்டும்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் களுக்கு பகவத்கீதை மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தது. அனைத்துப் பிரிவு மக்களும் பின்பற்ற வேண்டிய அம்சங்கள் கீதையில் உள்ளன” (தீக்கதிர் 13.9.2017 - நீதிபதி எஸ்.என்.சிறீவத்ஜா).

“ராஜஸ்தான் மாநிலத்தில் 211 மாடு களுக்குப் பகவத் கீதையை 211 பூசாரிகள் படித்துக் காட்டினர்” என்பது இன்னொரு செய்தி.

நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது? அந்தக் கீதைதான் பெண்களும், வைஸ்யர் களும், சூத்திரர்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள். (அத்தியாயம் 9, சுலோகம் 32) என்கிறது - ஆன்மீக அரசியலின் நோக்கம் இன்னுமா புரியவில்லை?

ஒரு ஜாதியான் மற்றொரு ஜாதியினுடைய தர்மத்தை எவ்வளவு ஒழுங்காக நடத்தி னாலும், அது நன்மையைப் பயக்காது.

தன் தொழிலைச் செய்யாவிடினும் அவ்வளவு குற்றமில்லை. ஆனால் பிற ஜாதியானின் தொழிலைச் செய்யக்கூடாது (‘கீதை’ அத்தியாயம் 3, சுலோகம் 35)

- தகவல்: க.பழநிசாமி

தெ.புதுப்பட்டி

- விடுதலை ஞாயிறுமலர், 27.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக