செவ்வாய், 13 நவம்பர், 2018

காயத்ரி மந்திரம் என்னும் அருவருப்பும் ஆபாசமும் அடங்கிய மந்திரம்!

நாம் அனைவரும் காயத்ரி மந்திரம் என்னும் ஒன்றை அவ்வப்போது கேட்டிருப் போம், அந்த காயத்ரி மந்திரம் யாரால் எப்போது உருவாக்கப்பட்டது, இந்த காயத்ரி மந்திரம் பற்றி தற்போது ஊடகங்கள் மற்றும் பார்ப்பனர்கள் விடும் கதை எல்லாம் பொய், இந்த மந்திரம் கொச்சையான பாலியல் சொல்லாகும். முதல் முதலாக ஒரு ஆணும் பெண்ணும் கூடும் போது இந்த மந்திரத்தை உச்சரிப்பார்கள். இப்படி கொச்சையான ஒரு மந்திரத்தைத் தான் அவர்களாகவே வார்த் தைக்கு வார்த்தை புரட்டான விளக்கத்தைக் கொடுத்து தினமும் அனைவரையும் காலையும் மாலையும் சொல்லவைக்கிறார்கள்.

"ஓம் பூர்: புவ: ஸுவ:

தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ: யோந: ப்ரசோதயாத்"

இதில் உள்ள ஒவ்வோர் உச்சரிப்பிற்கு தனித்தனி உச்சரிப்புகள் உள்ளது.

கட்டத்தில் உள்ள சமஸ்கிருத வார்த் தைகள்- மீண்டும் ஒருமுறை விடுதலை குழுவினரால் மத்திய அரசின் சமஸ்கிருத பொருள் விளக்க இணையத்திற்கு சென்று சரிபார்த்த பிறகு பதியப்படுகிறது.

இதன் உண்மையான பொருள் விளக்கம்

ஓ தேவி, இந்த பூமியில் நீ படுத்துக்கொள்வாயாக, பார்ப்பனர்களின் செழுமையான தொடைகளை நினைவில் கொண்டு, காம உணர்வுகள் பொங்க அவர்களைத் தழுவுவது போன்று நினைத்துக்கொண்டு உன் எதிரில் உள்ள ஆணுடன் கூடி உன்னை அவனிடம் இன்பப்படுத்துவாயாக! வேதகாலம் என்று சொல்லப்படும் ஆரியர்களின் வருகைக்குப் பிறகான காலத்தில் அவர்களால் எழுதப்பட்டது அனைத்துமே பெண், பெண்களை அனு பவித்தல், அழகுபடுத்துதல், பலபேருடன் கூடுதல், விலங்குகளுடன் கூடுதல், முறையற்ற உறவுகள் போன்றவை தான் அதிகம் இருந்தது, இது புராண நூல்களில் கொட்டிக்கிடக்கின்றன.

காயத்ரி மந்திரம் என்பது யோனி மந்திரம் ஆகும், இந்த மந்திரத்தைத்தான் இன்று சக்திமிகுந்த மந்திரம் என்று கூறுகின்றனர். இதையே அனைவரையும் கூறவைக்கின்றனர். இதை இன்று பார்ப்பனரல்லாதோர் தங்கள் வீடுகளில் தினமும் கூறி வருவதைக் காண்கிறோம், அதுமட்டுமல்லாமல் காலையில் தங்கள் வீடுகளில் தொடர்ந்து பூசை அறையில் ஒலிக்க விடுகிறார்கள், பலர் மொபைல் போன்களில் ரிங்டோன்களாக வைத்திருக்கின்றனர்.

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்;

கடவுளை பரப்பியவன் அயோக்கியன்

என்றால் -

அதை (கடவுளை) வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று தந்தை பெரியார்  சொன்னதற்கு இது மேலும் ஒரு எடுத்துக்காட்டு அல்லவா!

- விடுதலை ஞாயிறு மலர், 10.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக