திங்கள், 24 ஏப்ரல், 2017

இதுதான் மனுநீதி


ஆதித்த கரிகாலன் சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராஜராஜனின் தமையனும் சுந்தர சோழரின் மகனுமாவான்
இடைக்காலச் சோழர்களில் பலம் வாய்ந்த அரசர்களில் ஒருவனாக விளங் கியவன் சுந்தர சோழன். இவன் கி.பி 957 முதல் கி.பி. 973 வரை 16 ஆண்டுகள் சோழ நாட்டை ஆண்டான். இவன் முதலாம் பராந்தகச் சோழனின் பேரனும், அரிஞ்சய சோழனின் புதல்வனும் ஆவான். தனது முன்னோர் காலத்தில் இழந்த நிலப்பகுதிகளை மீட்டுச் சோழ நாட்டை வலிமையுள்ள நாடாக மாற்றியவன் இவன். தெற்கே திறை செலுத்த மறுத்துவந்த பாண்டிநாட்டின் மீது படை நடத்தி வெற்றிகண்டான். வடக்கிலும் இராஷ்டிரகூடர்களிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்றும் பொருட்டு அவர்களுடன் போரிட்டு அவற்றை மீண்டும் சோழ நாட்டின் ஆளுகைக்கு உட்படுத்தினான். இவரு டைய மூத்த மகனும் பட்டத்து இளவர சனுமாகிய ஆதித்த கரிகால சோழன் கொலை செய்யப்பட்டார். இக்கொலை குறித்து உடையார் குடி கல்வெட்டு கூறும் செய்தியில்
உடையார் குடி கல்வெட்டுக்களில் ஆதித்த சோழனின் கொலையாளி களின் பெயர்கள் கீழ்க்கண்டவாறு கொடுக்கப் பட்டுள்ளன.
சோமன்

இவன் தம்பி ரவிதாசன் பிரம்மாதி ராஜன் இவன் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவன் இவன் தம்பி பரமேசுவரன் ஆனால் சோழநாட்டுப் பிரஜை இவர்கள். உடன் பிறந்த மலையனு ரானும் இவன் பெயர் மலையனூரன பார்ப்பனச்சேரி ரேவதாச கிரமவித் தனும் இவன் மகனும் இவன் தாய்பெரிய நங்கைச் சாணியும்

இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களும் ராமத்ததம் பேரப்பன் மாரும்

இவர்களுக்கு பிள்ளைக் கொடுத்த மாமன் மாரிடும் இவர்கள் உடன் பிறந்த பெண்களை வேட்டரினவும் இவர்கள் மக்களை வேட்டரினவும் ஆக
இவ்வனைவரும் கொலையில் தொடர்புடையவர்கள் என இக்கல் வெட்டு கூறுகிறது. இவர்களுடைய நிலத்தைப் பறிமுதல் செய்துவிடுமாறு ராஜராஜ சோழன் முன்பு உத்தரவு இட்டதை இந்த கல்வெட்டு சுட்டுகிறது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தை அல்லது நிலத்தின் ஒரு பகு தியை வெண்ணையூருடையார் பரதன் என்னும் விஜய மல்லன் என்பவன் 115 பொன்னுக்கு வாங்கி அதை திருவனந் தீஸ்வரர் பட்டாரகர் கோவில் பார்ப்பனர் களுக்கு உணவு கொடுப்பதற்கு கொடை யாக வழங்கினான் என தெளிவாக இக்கல்வெட்டு கூறும் செய்தியாகும் கொலைசெய்த அனைவரும் பார்ப்பனர் என்பதற்காக ராஜராஜ சோழன் கொலை யாளிகளைத் தண்டிக்கவில்லை என்ற செய்தியும் இதில் அடங்கியுள்ளது. கொன்றவர்கள் அனைவரும் பார்ப்ப னர்களே அவர்களில் பாண்டிய நாட் டைச் சேர்ந்தவர்கள் இருவர் மீதிப்பேர் சோழ நாட்டை சேர்ந்தவர்கள். பாண் டிய மன்னன் தலையைக் கொய்ததற்கு சோழ நாட்டைச் சேர்ந்த பார்ப்பனர்கள் ஏன் சினம் கொள்ளவேண்டும்? பார்ப் பனர்களுக்கு நாட்டுப்பற்றை விட ஜாதிப்பற்று அதிகம் என்பது இங்கு தெரியவரும் மற்றுமொரு செய்தியாகும்.

-விடுதலை ஞா.ம.,22.4.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக