
(இந்து மதத்திற்கு ஆதாரமான வேதங்கள் (ஸ்ருதிகள்), தர்ம சாஸ்திரங்கள் (ஸ்மிருதிகள்), கீதை ஆகியன குறித்து அண்ணல் அம்பேத்கர் தெரிவித்துள்ள கருத்துகளை இங்கே தந்துள்ளோம். மூலம் Dr. Babasaheb Ambedkar Writings and Speeches -Vol. 3 பக்கங்கள் 77-81)
இந்து மதத்தை மனித நேயம் கொண்டதெனக் கூறமுடியாது. அதன் காரணமாகவே, இந்து மதம் மக்களின் வாழ்வில் ஊடுருவிய போதும். மனிதத்தன்மை கொண்ட சாதாரண மக்களின் உள்ளுறை வாழ்வை ஒளிமயமானதாக அது ஆக்குவதில்லை. அது எதனையாவது செய்வதாக இருப்பின், மக்களின் வாழ்வை செயலற்றதாகவே ஆக்குகிறது எனக் கூறலாம். சாதாரண மக்களின் ஆன்மாக்களுக்கான உணவோ, துயரங்களுக்கான ஆறுதலோ, பொதுவான மனித பலவீனத்தைப் போக்க உதவியோ எதுவும் இந்து மதத்தில் இல்லை. பிறக்கவும், பயனற்ற ஒரு சில போராட்டத்துக்குப் பின் இறக்கவும், சிந்தனை அற்ற இயற்கை ஆற்றல்களை மனிதர்கள் நேருக்கு நேர் சந்திக்கும்படி இந்து மதம் மனிதர்களை இருளில் விட்டுவிடுகிறது. மிகக் கொடிய ஒரு மதத்தினை விடக் கொடுமை நிறைந்ததாக, இந்து மதம் மக்களை கடவுளுடன் தொடர்பற்றவர்களாகச் செய்து விடுகிறது. இதுவே இந்து மதத்தின் தத்துவமாகும். அது உயர்ஜாதி மனிதர்களின் சொர்க்கமாகவும், சாதாரண மக்களின் நரகமாகவும் இருப்பதாகும்.
தர்மசாஸ்திரத்தை முதலில் எழுதிய கவுதமர், பவுதாயனா போன்றோருக்கு ரிஷி என்ற அந்தஸ்து எப்போதும் அளிக்கப்பட்டு இருக்கவில்லை. ஆனால் மனுவும், யாக்ஞவல்கியரும் ரிஷிகள் எனவே கருதப் பட்டனர். ஸ்மிருதிகளின் அந்தஸ்து ஸ்ருதிகளின் அந்தஸ்துக்கு சமமானதாக ஆக்கப் பட்டதென்பதே இதன் பொருளாகும். இழந்துபோன ஸ்ருதியை நினைவிலிருந்து பெறப்பட்ட ஆவணமே ஸ்மிருதி என்று கருதப் பட்டது. ஸ்ருதியிலிருந்து மாறுபட்ட ஒன்று என்று ஸ்மிருதி கருதப்படுவதற்கு மாறாக, ஸ்ருதியும் ஸ்மிருதியும் ஒன்றே என்பது போலவும், ஒன்றிலிருந்து மற்றது வேறுபடுத்திக் காண இயலாதது என்றும் கருதப்பட்டது.
ஒருவர் ஸ்மிருதி, அல்லது வேதங்கள் அல்லது பகவத் கீதையை ஏற்றுக் கொள்கிறாரா என்பது ஒரு பெரிய விஷயமல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது.
ஸ்மிருதிகள் கூறுவதில் இருந்து அடிப்படை யாக மாறுபட்ட எதனையாவது வேதங்கள் தெரிவிக்கின்றனவா? ஸ்மிருதியின் கட்டளைகளி லிருந்து கீதை எந்த விதத்திலும் மாறுபட்டதைக் கூறுகிறதா? ஒரு சில எடுத்துக் காட்டுகள் இதனை தெளிவு படுத்தும்.
புருஷசூக்தா என்றறியப்படும் பகுதியில் சதுர்வர்ணக் கோட்பாட்டை வேதங்கள் கூறுகின்றன என்பது மறுக்க இயலாத ஒன்று. இந்த புருஷசூக்தா இரண்டு அடிப்படைக் கொள்கைகளை அங்கீகரித்துள்ளது. சமூகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது சரியானது என அது அங்கீகரிக்கிறது. இந்த நான்கு பிரிவு மக்களுக்கும் இடையே உள்ள உறவு அவர்கள் சமமற்றவர்கள் என்பதையும் அது அங்கீகரிக்கிறது.
மனுஸ்மிருதியைச் சுருக்கமாகக் கூறுவதே கீதை. வேதங்களும், கீதையும் பொதுக் கோட்பாட்டைப் பற்றி விளக்கும்போது, மனுஸ்மிருதி அந்தக் கோட்பாட்டினைப் பற்றிய விவரங்களை விவரித்துக்கூறுகிறது
பகவத் கீதை கூறுவதும் கருத்து வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டதே ஆகும். கிருஷ்ணர் கூறியதாக பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளதை சுருக்கமாகக் கீழ்க்கண்ட நான்கு வகையாகப் பிரித்துக் கூறலாம்.
(1) நான்கு ஜாதிகளான பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று சமூகத்தை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கும் ஏற்பாட்டை நானே உருவாக்கினேன். அவர்களது குல ஆற்றல்களுக்கு ஏற்ப அவர்களுக்கான பல்வேறு தொழில்களை நானே நிர்ணயித்துள்ளேன் இந்த சதுர்வர்ணத்தை உருவாக்கியவனே நான்தான் – கீதை -IV-13
(2) மற்றொரு வர்ணத்தினரின் தொழிலைச் செய்வது ஒருவருக்கு எளிதாக இருப்பினும், அவரவர் வர்ணத்துக்கான தொழில்களை, அவற்றை அவரால் திறம்படச் செய்ய இயலாத போதும், செய்வதே மிகவும் சிறந்தது. தனது வர்ணத்துத் தொழிலைச் செய்வதனால் இறப்பு நேர்ந்தாலும் அதனைச் செய்வதிலேயே மகிழ்ச்சி உள்ளது; ஆனால் மற்றொரு வர்ணத்தின் தொழிலைச் செய்ய முற்படுவது ஆபத்து நிறைந்தது – கீதை IIIசெ 35
13) தங்களது தொழிலின் மேல் பெரு விருப்பம் கொண்ட கல்வியறிவற்றவர்களின் நம்பிக்கையை, கல்வி கற்றறிந்தவர்கள் கெடுக்கக் கூடாது. கல்வி கற்றவர் தனது வர்ணத் தொழிலையே செய்வதுடன். மற்றவர்களையும் அவ்வாறே செய்ய வைக்க வேண்டும் கல்வி கற்ற ஒரு மனிதன் தனது தொழிலுடன் ஓட்டுதல் கொண்டவனாக இருக்கக் கூடாது. ஆனால், தங்களது தொழிலுடன் ஒட்டுதல் கொண்ட கல்வி அறிவற்ற, மந்த புத்தியுள்ள மக்களை
அவர்களது தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில்களை மேற்கொள்ளும் தவறான பாதையைக் காட்டி கற்றறிந்தவர்கள் கெடுக்கக் கூடாது. கீதை II 1.26.29
(4) ஓ, அர்ஜூனா கடமைகள் தொழில்கள் என்னும் இம் மதம் (சதுர்வர்ண மதம்) எப்போ தெல்லாம் கீழ்நிலையை அடைகிறதோ, அப்போ தெல்லாம் நானே பிறந்து, அதன் அழிவுக்குக் காரணமானவர்களைத் தண்டித்து, அதனை மீண்டும் நிலைநாட்டுவேன். – கீதை (V -7,8.
கீதையின் நிலைப்பாடு இதுதான் இதற்கும் மனுஸ்மிருதிக்கும் இடையே என்ன வேறுபாடு உள்ளது? மனுஸ்மிருதியைச் சுருக்கமாகக் கூறுவதே கீதை – மனுஸ்மிருதியை விட்டுவிட்டு ஓடி கீதையில் அடைக்கலம் தேட விரும்புபவர்கள் ஒன்று கீதையைப் பற்றி அறியாதவர்களாக இருக்க வேண்டும். அல்லது மனுஸ்மிருதியைப் போலவே உள்ள கீதையின் மய்யக் கருத்தைக் கொள்ளாமல் புறந்தள்ளத் தயாராக இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.
இந்து மதத் தத்துவத்தைப் பற்றி விளக்குவதற்கு நான் எடுத்துக் கொண்ட மனுஸ்மிருதியில் உள்ளவற்றை வேதங்களும், கீதையும் கூறுவன வற்றுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் அவற்றில் ஒருவர் என்ன வேறுபாட்டைக் காண முடியும்? வேதங்களும், கீதையும் பொதுக் கோட்பாட்டைப் பற்றி விளக்கும்போது. மனுஸ்மிருதி அந்தக் கோட்பாட்டினைப் பற்றிய விவரங்களை விவரித்துக் கூறுகிறது. ஆனால், ஸ்மிருதிகள். வேதங்கள் பசுவத் கீதை ஆகிய அனைத்தின் மய்யக் கருத்துமே. ஒரே நூலால் ஒரே மாதிரி நெய்யப்பட்ட ஒரே மாதிரியான துணியின் பகுதிகளாகவே உள்ளவையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக